search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் வரும் 20-ம் தேதி 108 ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு
    X

    வேலூரில் வரும் 20-ம் தேதி 108 ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

    108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு முகாம் வரும் 20-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு முகாம் வரும் 20-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது.

    இதில் தேர்வு செய்யப்படுவோர் தமிழகத்தின் எந்த பகுதியிலும் பணி நியமனம் செய்யடுவார்கள். 12 மணி நேரம் ஷிப்ட் முறையில் பணிபுரிய வேண்டும். இரவு மற்றும் பகல் ஷிப்ட் என மாறும். இதில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும்.

    டிரைவர் பணியிடத்துக்கு ஆண்கள் மட்டும் பங்கேற்கலாம் இதற்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 23 வயதுக்கு மேல் 35 வயதுக்கு மிகாமலும், உயரம்162.5 செ.மீக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

    டிரைவிங் லைசென்ஸ், பேட்ஜ் உரிமம் பெற்று குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் எழுத்து தேர்வு, தொழில் நுட்பத்தேர்வு மனிதவள நேர்காணல், கண் பார்வை, சாலை விதிகள் சம்பந்தப்பட்ட தேர்வு ஆகியன நடத்தப்படும்.

    மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இ.எம்.டி. பிரிவினருக்கு பி.எஸ்.சி. நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.பாம், டி.எம்.எல்.டி. அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகள் பங்கேற்கலாம். வயது வரம்பு 20 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

    இ.எம்.டி. டிரெய்னி பிரிவுக்கு ஓராண்டு டெக்னீசியன் கோர்ஸ் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்திருக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×