search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "24 people"

    • தலைமறைவாக இருந்த மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
    • பின்னர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி ஆனந்தம் பாளையத்தை சேர்ந்தவர் கோபால் (58). இவர் அதே பகுதியில் பால் சொசைட்டி செயலாளராக உள்ளார். இவரது மகன் மோகன சுந்தரம் எலக்ட்ரீசியன் படித்து முடித்துள்ளார்.

    இந்நிலையில் கோபாலு க்கு பவானி சிங்கம் பேட்டை பகுதியை சேர்ந்த மூர்த்தி (45) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் பூனாச்சி துணை மின் நிலையத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் மூர்த்தி தனக்கு மின் வாரியத்தில் தலைமை அதிகாரிகள் பழக்கம் உள்ளது என கோபாலிடம் கூறியுள்ளார். பணம் கொடுத்தால் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய கோபால் தனது மகன் மோகனசுந்தரத்துக்கு தொழில்நுட்ப உதவியாளர் பணிக்காக கோபாலிடம் முதற்கட்டமாக ரூ.7 லட்சம் வழங்கியுள்ளார்.

    பின்னர் மேலும் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார். வேலை உறுதியாகி விட்டதாக கூறி மேலும் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு தபாலில் பணி நியமன ஆணையை அனுப்பியுள்ளார்.

    இந்த பணி நியமன ஆணையுடன் மோகன சுந்தரம் மின்வாரிய அலுவல கத்தில் பணியில் சேர சென்றபோது அவை போலி என தெரிய வந்தது.

    அதிர்ச்சியடைந்த தந்தையும், மகனும் மூர்த்தியை தொடர்பு கொண்டபோது அவர் முறையாக பதிலளி க்காமல் தலைமறை வாகி விட்டார்.

    இதேப்போல் அந்தியூர் பிரம்மதேசத்தை சேர்ந்த விஜயகுமார், வெற்றிவேல் ஆகியோரிடமும் மின்வாரி யத்தில் வேலை வாங்கி தருவதாக தலா ரூ.4 லட்சம் மூர்த்தி பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது.

    இது குறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

    இதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் அந்தியூர், பவானி உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த 24 பேரிடம் ரூ.1 கோடியே 25 லட்சம் பெற்றுக்கொண்டு போலி நியமன ஆணைகளை வழங்கி மூர்த்தி ஏமாற்றியது தெரியவந்தது.

    2 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த மூர்த்தி யை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்ப ட்டார்.

    இந்த மோசடியில் மூர்த்திக்கு மூளையாக மற்றொருவர் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. அவர் தற்போது தலை மறைவாக உள்ளார்.

    அவரை பிடி க்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் பிடிப்ப ட்டால் இந்த மோசடியில் மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தெரியவரும்.

    அன்னமங்கலத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 24 பேர் காயமடைந்தனர்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதற்காக பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காளைகள் அழைத்துவரப்பட்டிருந்தன. கால்நடை டாக்டர்களின் பரிசோதனைக்கு பிறகு தகுதியான 281 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன.

    அதேபோல பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 257 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களை 2 குழுக்களாக பிரித்து மாடுகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர்.

    இதில் சில காளைகள் மாடு பிடி வீரர்களை கொம்பால் குத்தி தூக்கி வீசி பிடிபடாமல் பந்தய எல்லைக்கோட்டை சென்றடைந்தன. சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. சில காளைகள் நீண்டநேரம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இதில் காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரர்களான தொண்டமாந்துறையை சேர்ந்த ஆண்டனிசாமி (வயது 50), பூலாம்பாடி பாஸ்கர்(21), லால்குடி சதீஷ் (30), ஜெஸ்டின்ராஜ் (27), தம்மம்பட்டி கருப்பண்ணன்(53) உள்பட 12 பேரும், பார்வையாளர்களான அன்னமங்கலம் ராபின் (23), அரசலூர் அரவிந்த்(19) உள்பட 12 பேர் என மொத்தம் 24 பேர் காயமடைந்தனர். அவர்களை மருத்துவக்குழுவினர் உடனடியாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் சில்வர் பாத்திரம், பிளாஸ்டிக் நாற்காலி, சைக்கிள், கியாஸ் அடுப்பு, வேட்டி மற்றும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட அனைத்து காளைகளுக்கும் பரிசு, அதன் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரும்பாவூர் போலீசார் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சேதுராமன், கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் செல்வராஜ், தாசில்தார் பாரதிவளவன் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். 
    ×