search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BSNL Employees"

    3-வது நாளாக நேற்று பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. இதில் கடலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    15 சதவீதம் ஊதிய நிர்ணய பலனுடன் 3-வது ஊதியமாற்றத்தை அமல்படுத்த வேண்டும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும், அரசு விதிகளின்படி மட்டுமே நிறுவனத்திடம் இருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும், பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கடந்த 18-ந் தேதி மு தல் தொடர் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதன்படி கடலூரில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊழியர் அன்பழகன் தொடக்க உரையாற்றினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சேகர், ஒப்பந்த ஊழியர்கள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ஆனந்தன், தனியார் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகி குருராமலிங்கம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள்.

    போராட்டம் நடத்திவரும் எங்களை நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால் எங்களது போராட்டம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமாக நடைபெற வாய்ப்பு உள்ளது. அப்படி போராட்டம் நடந்தால் பி.எஸ்.என்.எல். சேவைகள் முற்றிலும் பாதிக்கப்படும் என பி.எஸ்.என்.எல். ஊழியர் ஒருவர் தெரிவித்தார். 
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், 4-ஜி சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், கூட்டமைப்பினர் 3 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    அதன்படி 2-வது நாளான நேற்று பெரம்பலூர் மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க கிளை செயலாளர் ஜெகநாதன் தலைமையில், ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகுமார் தலைமையில் மாவட்ட பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். #BSNLemployees
    சேலம்:

    பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதிய பங்களிப்பை முறைப்படுத்த வேண்டும். 3-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல்-க்கு 4-ஜி அலைக்கற்றை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகுமார் தலைமையில் மாவட்ட பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது.

    இது குறித்து ஒருங்கிணைப்பாளர் பாலகுமார் கூறியதாவது:-

    அடுத்த மாதம் 14-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப்படுகிறது. 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தக் கட்டமாக ஊழியர்களை திரட்டி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். பி.எஸ்.என்.எல். கோபுரங்களில் தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது.

    போராட்டத்தில் மாநில உதவி தலைவர் வெங்கட் ராமன், நிர்வாகி காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #BSNLemployees
    திண்டுக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். #BSNLEmployees
    திண்டுக்கல்:

    சம்பள உயர்வு, பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி சேவை, ஓய்வூதியர்களுக்கு நிதி ஆதாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தலைவர் அருளானந்தம், கன்வீன் ஆரோக்கியம் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    2017-ம் ஆண்டுக்கு பின் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பள உயர்வை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். #BSNLEmployees
    ×