search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jacto---jio"

    • தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றித் தாருங்கள் என்று வலியுறுத்துகிறோம்.
    • அடுத்த மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.

    சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி அலுவலகம் முன்பு மறியல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததோடு கல்லூரி சாலையில் நூற்றுக்கும் மேலான போலீசார் குவிக்கப்பட்டனர். பள்ளிக் கல்வி துறையின் அலுவலக வளாக கதவுகள் பூட்டப்பட்டு தடுப்பு வேலிகள் போடப்பட்டது.


    ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், மாயவன், அன்பரசு ஆகியோர் தலைமையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அங்கு திரண்டனர். போலீசார் முன் எச்சரிக்கையாக அவர்களை ஒன்று சேர விடாமல் உடனடியாக கைது செய்து பஸ்சில் ஏற்றினர்.

    மறியலில் ஈடுபட வந்த ஒவ்வொருவரும் தனித்தனியாக கைது செய்யப்பட்டதால் மறியல் போராட்டத்தில் அவர்களால் ஈடுபட முடியவில்லை. மறியலுக்கு முன்பே 200 பேர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.


    போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறியதாவது:-

    போராட்டம் நடத்தக்கூட அரசு அனுமதி மறுக்கிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றித் தாருங்கள் என்று வலியுறுத்துகிறோம்.

    பாராளுமன்ற தேர்தலில் அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை நிச்சயமாக வீசும் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இல்லை. அடுத்த மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிப்ரவரி 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்
    • 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்

    புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலியாக இருக்கும் 30 சதவீதத்திற்கும் மேலான இடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ குழு போராட்டம் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூட்டம், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைபாளர்கள் அ.மாயவன், ஆ. செல்வம், ச.மயில் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.

    இந்த ஆலோசனைக்கு பிறகு, பிப்ரவரி 15ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால்பிப்ரவரி 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

    விருதுநகரில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 8-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
    விருதுநகர்:

    ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22-ந்தேதி முதல் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். 4-வது நாளாக நேற்று முன்தினம் வேலை நிறுத்தத்தை தொடர்ந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலிலும் ஈடுபட்டனர்.

    இதில் மறியலில் ஈடுபட்டதாக 1,959 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் மாலை ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை போலீசார் கைது செய்யப்போவதாக தெரிவித்தவுடன் மற்றவர்கள் திருமண மண்டபத்தை விட்டு வெளியேற மறுத்து நள்ளிரவு வரை அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன்பின்னர் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 35 பேர் தவிர மற்றவர்கள் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினர். வருவாய்துறை அலுவலர், மாநில செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் ராமநாதன் உள்பட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 35 பேரும் நேற்று விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி வருகிற (அடுத்த மாதம்) 8-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
    ஜாக்டோ-ஜியோஅமைப்பினரின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பெரும்பாலான அரசு பணிகள் முடங்கின. இதன் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
    ராமநாதபுரம்:

    தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்றவற்றை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அடங்கிய ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மாநிலம் முழுவதும் நேற்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    அதன்படி மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா தலைநகரங்களிலும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிவபாலன், முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    பரமக்குடியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் சாமிஅய்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். ராமேசுவரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொருளாளர் புதுராஜா முன்னிலை வகித்தார்.

    கீழக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக தமிழாசிரியர் கழக அமைப்பாளர் குமாரவேல் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் ராமு முன்னிலை வகித்தார். திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய தாலுகாக்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டதால் மாவட்டத்திலுள்ள ஆயிரத்து 244 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் செயல்படாமல், பள்ளிகள் பூட்டிக் கிடந்தன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.

    இதேபோல் மாவட்டத்திலுள்ள 64 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அந்த பள்ளிகளிலும் கல்வி பணி பாதிக்கப்பட்டது. மாவட்ட காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தலைவர் துரைராஜ், செயலாளர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் முழுமையாக போராட்டத்தில் கலந்து கொண்டதால் தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம் உள்ளிட்டவைகள் பூட்டப்பட்டிருந்தன. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் இந்த அலுவலகங்களை நாடி வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    மாவட்டத்தில் 9 இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டதால் ஒட்டுமொத்தமாக அரசு பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. அரசு தரப்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 36 துறைகளில் பணியாற்றிவரும் 15 ஆயிரத்து 748 பேரில், 11 ஆயிரத்து 182 பேர் பணியில் ஈடுபட்டதாகவும், 281 பேர் விடுமுறையில் உள்ளதாகவும், 4 ஆயிரத்து 285 பேர் மட்டும் எவ்வித விடுமுறை அறிவிப்புமின்றி வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மக்களின் அரசு சார்ந்த பணிகள், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டன.

    கடலாடி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் முருகேஸ்வரி தலைமை தாங்கினார். துணை தாசில்தார் செந்தில்வேல்முருகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் முனியசாமி, செயலாளர் ஆனந்தராஜ், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணை தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இணை செயலாளர் குருசாமி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட துணை செயலாளர் தாமஸ் இமானுவேல் ஜேம்ஸ், தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் பாலமுருகன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கண்ணகி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் வட்டார தலைவர் முத்துவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    மானாமதுரை யூனியன் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மானாமதுரை பகுதி ஒருங்கிணைப்பாளர் ஜீவா முன்னிலை வகித்தார். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோஅமைப் பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    அங்கன்வாடி பணிக்கு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இதில் மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களை மூடக்கூடாது.

    புதிதாக தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கூடாது. மாண்டிச்சோரி ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.

    மாவட்டம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், நாகேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில், ஜாக்டோ-ஜியோவின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக் குமார், முத்துசாமி, ரவிச்சந்திரன், மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சங்கர், இளங்கோவன், ஜோசப் சேவியர், மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அன்பரசு, பிரபாகர், ராஜா, செல்வக்குமார், தமிழரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான பணிகளில் ஈடுபட வேண்டியதிருப்பதால், ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைக்கும்படி முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #DMK #MKStalin #JactoJio #GajaCyclone
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பல்வேறு நியாயமான நடைமுறைக்கேற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தியும், அப்போராட்டங்களை அ.தி.மு.க. அரசு காதில் போட்டுக் கொள்ளவோ கண்டு கொள்ளவோ செய்யாமல் முற்றிலும் அலட்சியப்படுத்தியதன் விளைவாக, வருகின்ற டிசம்பர் 4-ந் தேதியிலிருந்து காலவரையற்றப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

    ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் அறவழிப் போராட்டம் முழுக்க முழுக்க நியாயமானது என்றாலும், கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான பணிகளில் ஈடுபட வேண்டியதிருப்பதால், வருகிற டிசம்பர் 4-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


    அ.தி.மு.க. அரசு யாருடையை கோரிக்கைகளையும் அழைத்துப் பேசி நிறைவேற்றும் அரசு அல்ல. போராடினாலும் இந்த அரசு திருந்தப் போவதில்லை. அடிப்படையிலேயே இந்த அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரான அரசு. ஆகவே எத்தனை முறை போராடினாலும் எந்தவகைப் போராட்டமானாலும் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைத்திடப் போவதில்லை; மாறாக மனித சக்தி விரயம் தான் ஏற்படும். இது போன்ற பிரச்சனைகள் அனைத்திற்கும் ஆட்சிமாற்றம் ஒன்றே ஜனநாயக வழி என்பதை மனதில் நிறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், சூழ்நிலைகளின் பின்னணியில் நான் விடுக்கும் இந்த அன்பான வேண்டுகோளை கனிவுடன் ஆராய்ந்து பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    அதே நேரத்தில், கழக ஆட்சி அமைந்திடும் நல் வாய்ப்பு செயலாக்கம் பெற்றதும், இதுமாதிரி எவ்வித போராட்டங்களும் நடத்தாமலேயே ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் நியாயமான கோரிக்கைகள் குறித்துக் கலந்துபேசி நிறைவேற்றித் தரப்படும் என்பதையும் தி.மு.க.வின் சார்பில் உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #MKStalin #JactoJio #GajaCyclone
    போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஈரோட்டில் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan #JactoJio
    ஈரோடு:

    ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இன்று மதியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 18-ந் தேதி அகில இந்திய அளவில் லாரிகள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 13 லட்சம் லாரிகள் ஓடாத நிலை ஏற்படுவதால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே உடனடியாக மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

    ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 2 நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. அவர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை. போராட்டக்காரர்களை அழைத்து பேச வேண்டும்.


    அவர்கள் கோரிக்கையை கேட்டு தீர்வு ஏற்படுத்தி போராட்டங்கள் நிகழாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்.

    காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை நன்மை தரவில்லை. தற்போது சட்ட ரீதியாக காவிரி மேலாண்மை வாரியம் என்கிற ஒரு வடிவம் கிடைத்துள்ளது. இதற்கு உச்சநீதிமன்றம் ஒரு கோட்பாட்டை தந்துள்ளது. காவிரி நதி நீரை பயன்படுத்தும் 4 மாநிலங்களும் அந்த கோட்பாட்டை சரியாக பின்பற்ற வேண்டும். அந்த வகையில் கர்நாடக அரசு ஆணைய உறுப்பினரை இன்னும் நியமிக்கவில்லை.

    மீண்டும் கர்நாடக அரசின் சட்டத்துக்கு சவால்விடும் இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல. மத்திய அரசு இதை வேடிக்கை பார்க்காமல் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக அரசும் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

    பசுமை வழிச்சாலை அமைப்பில் உள்ள உடனடி பாதகங்கள் என்ன? என்பதை மக்களுக்கு புரிய வைத்து மக்கள் விரும்பினால் மட்டுமே அமைக்க வேண்டும். எந்த அரசாக இருந்தாலும் மக்களுக்கு அநீதியான திட்டங்கள் திணிக்கப்பட்டால் போராட்டம் நடைபெறும். வாக்களித்த மக்களை அலட்சியப்படுத்த எந்த உரிமையும் அரசுக்கு கிடையாது.

    இவ்வாறு ஜி.கே. வாசன் கூறினார். #TamilMaanilaCongress #GKVasan #JactoJio
    அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்பவர்களுடன் துணை போகக் கூடாது என்று சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
    சென்னை:

    சட்டப்பேரவையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டம் குறித்து பேசியதாவது:-

    2017-18ஆம் ஆண்டில், மாநில அரசு பெற்ற மொத்த வரி வருவாய் 93,795 கோடி ரூபாயாகும். இதில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சம்பள செலவு மட்டும் 45,006 கோடி ரூபாயாகும். இது தவிர, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு அரசு வழங்கும் ஓய்வூதியத் தொகை 20,397 கோடி ரூபாய் என மொத்தம் 65,403 கோடி ரூபாய் நிர்வாகத்தை நடத்தும் அரசு ஊழியர்களுக்காக சம்பளமாகவும், ஓய்வூதியமாகவும் வழங்கப்படுகிறது. அதாவது, மொத்த வரி வருவாயில் சுமார் 70 சதவீதம் இவ்வாறு செலவு செய்யப்படுகிறது.

    பொது மக்களுக்கான நலத்திட்டங்களை, தொலை நோக்குத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தான் அரசு இருக்கிறது. அதை நிறைவேற்றத்தான் அரசு ஊழியர்கள் இருக்கின்றனர். அவ்வாறு இருக்கும்போது, அரசின் வருவாயில், நிர்வாகச் செலவு என்பது மிக அதிகமாக இருந்தால், திட்டங்களுக்கு நிதி ஒதுக்க இயலாது. இதை பொறுப்புணர்வுள்ள அரசு ஊழியர்களாகிய அனைவரும் நன்கு அறிவார்கள்.

    அரசு ஊழியர்கள் இந்த உணர்வுடன் செயல்பட்டால் தான் ஒரு நல்லாட்சியை வழங்கி பொது மக்களுக்கு நாம் அனைவரும் ஒன்று கூடி நன்மை செய்யமுடியும். ஊதிய உயர்வு வழங்கப்பட்ட பின்பு அதில் முரண்பாடுகள் ஏதேனும் இருப்பினும் அதையும் சரிசெய்ய அம்மாவின் அரசு ஒரு குழுவையும் அமைத்துள்ளது.

    இக்குழு பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களிடமிருந்து குறைகளைக் கேட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவும் விரைவில் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. இதை அனைத்து அரசு ஊழியர்களும், ஊழியர் சங்கங்களும் நன்கு அறிவர்.

    தமிழ்நாட்டில் உள்ள மொத்த அரசு ஊழியர்கள்-12 லட்சம் பேர். ஓய்வூதியம் பெறுவோர் 7.42 லட்சம் பேர். மொத்தமாக இந்த 19.42 லட்சம் குடும்பங்களுக்கு அரசின் வரி வருவாயில் செலவிடப்படும் தொகை 70 சதவீதம் ஆகும். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உட்பட மொத்தமாக உள்ள 2 கோடி குடும்பங்களுக்கும் சேர்த்து, மாநில அரசின் வரி வருவாயில் மக்கள் நல திட்டத்திற்கும், வளர்ச்சித் திட்டத்திற்கும் செலவிடப்படும் தொகை 6 சதவீதம் மட்டுமே என்பதை அரசு ஊழியர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள் என்றே கருதுகிறேன்.


    இந்த அளவு சம்பள உயர்வையும், பிற சலுகைகளையும் வழங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, மக்களின் நலன் கருதி அரசு ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு, பொறுப்புணர்வோடு கடமை ஆற்றுவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.

    சிறப்பான அரசு நிர்வாகத்தை வழங்க வேண்டியது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட நமது அனைவரின் கடமை என்பதை உணர்ந்து, மாநில அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, கோரிக்கைளை முன்நிறுத்தி அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்பவர்களுடன் துணை போகக் கூடாது என்று நான் வேண்டுகோளும் விடுக்கிறேன்.

    தற்போதுள்ள சூழ்நிலையில் எந்தெந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும், எவை நிறைவேற்ற முடியாது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். நிதி நிலைக்கு உட்பட்டு, நிறைவேற்றப்படக்கூடிய கோரிக்கைகளை இந்த அரசு என்றும் தயக்கம் காட்டாமல் செயல்படுத்தும் என்பதையும் கடந்த ஓராண்டு காலமாக இந்த அரசு எடுத்த நல்ல பல நடவடிக்கைகள் மூலம் நீங்கள் அறிவீர்கள்.

    ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி, 1.1.2006 அன்று பெற்ற மாதாந்திர சராசரி ஊதியம் மற்றும் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை ஏற்றபின் 1.1.2016 அன்றைய மாதாந்திர சராசரி ஊதியம் மற்றும் ஆறாவது ஊதியக் குழு அமல்படுத்திய பின்னும், ஏழாவது ஊதியக் குழு அமல்படுத்திய பின்னும் ஏற்பட்டுள்ள சராசரி சம்பள உயர்வு எவ்வளவு என்பதை நான் குறிப்பாக சில பல உதாரணங்களை நான் சபைக்கு எடுத்துச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

    அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையிலும், 1.1.2016 முதல் புதிய ஊதியத்தை அமல்படுத்தி நிலுவைத் தொகை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சார்ந்த 1,176 பேர், 21.2.2018 அன்று, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் ஊர்வலமாக சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் தலைமைச் செயலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட போது, அவர்கள் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், அவ்வமைப்பினர் 24.2.2018 வரை அவர்களது மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

    பின்னர், இவ்வமைப்பினர் மீண்டும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 8.5.2018 அன்று அரசு விருந்தினர் மாளிகை அருகே ஒன்று கூடி தலைமைச் செயலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த முற்பட்டபோது, காவல் துறையினர் அவர்களை தடுத்து, கைது செய்தனர். மேலும், இப்போராட்டத்தில் பங்கு பெறுவதற்காக மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து சென்னைக்கு வந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 7,546 பேர் ஆங்காங்கே கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

    இருப்பினும் இவ்வமைப்பினர், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் 150 பேர், நேற்று (11.6.2018) எழிலகம் வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    தற்போது, ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமையில் 108 பேர், எழிலகம் வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நான் இங்கே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி, தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறியுள்ளேன். எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்த்து, தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஆக்கபூர்வமாக செயல்பட்டு, மக்கள் நலனுக்காக சிறப்பான நிர்வாகத்தை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நான் அன்போடு அவர்களை கேட்டுக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார். #TNAssembly #OPanneerSelvam #JactoJio
    ×