search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ponneri"

    • விவசாய பாசனத்திற்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
    • விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    பொன்னேரி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் தலைமையில் நடைபெற்றது. நேர்முக உதவியாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட பொன்னேரி கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    வண்ண மீன் வளர்ப்பு, மீஞ்சூர், பழவேற்காடு, தாங்கல் பெரும்புலம், வெள்ளக்குளம் பள்ளிபாளையம் பகுதி சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆறு ஏரி குளங்களில் விடுவதால் நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், மெரட்டுர் ஏரியில் இருந்து விவசாய பாசனத்திற்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    பொன்னேரியில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் ரூ.3 லட்சம் மற்றும் 25 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே சக்திநகரை சேர்ந்தவர் சந்துருகுமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இவர் குடும்பத்துடன் சென்னையில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று இருந்தார். இந்தநிலையில் சந்துருகுமாரின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்தார்.

    இதுபற்றி சந்துருகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது 25 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    சந்துரு வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்டு மர்ம கும்பல் நகை-பணத்தை சுருட்டி சென்று உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதுபற்றி பொன்னேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    நேற்று பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம் கிராமத்தில் நடராஜன் என்பவர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை போனது. பொன்னேரி பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    பொன்னேரி அருகே திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வேண்பாக்கத்தைச் சேர்ந்தவர் கணேஷ். சென்னை துறைமுகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சசிகலா (28). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது. தற்போது சசிகலா கர்ப்பமாக இருந்தார்.

    கணவர் வேலைக்கு சென்றதும் வீட்டில் தனியாக இருந்த சசிகலா திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பொன்னேரி அருகே கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    பொன்னேரியை அடுத்த மாலிவாக்கத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகள் நந்தினி (19). ரெட்ஹில்ஸ் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் தனது தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்ப வில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் பொன்னேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் நந்தினியை தேடி வருகின்றனர்.

    பொன்னேரி அருகே கத்தியை காட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த ஏலியம்பேட்டையை சேர்ந்தவர் பூபாலன் (வயது 28). இவர் பொன்னேரி புதுவாயல் சாலையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பதாக பொன்னேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் அங்கு சென்று பூபாலனை பிடித்து சிறையில் அடைத்தார். கைதான பூபாலன் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன.

    பொன்னேரி அருகே டிராக்டரில் மணல் கடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் காட்டாவூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசை கண்டதும் டிராக்டரை விட்டு விட்டு 2 பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    டிராக்டரில் மணல் கடத்தி வந்து இருப்பது தெரியவந்தது. மணலுடன் டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய அரசூர், காட்டாலூரை சேர்ந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பொன்னேரி அருகே சமையல் செய்யும் போது சேலையில் தீப்பிடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த விடதண்டலம் கிராமத்தைச்சேர்ந்தவர் மூர்த்தி. கூலித்தொழிலாளி .

    இவரது மனைவி தங்கம் (36) வீட்டில் மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் சமையல் செய்த போது சேலையில் தீப்பிடித்து உடலில் பரவியது.

    உடல் கருகிய நிலையில் அவரை பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்குசிகிச்சைபலனின்றி தங்கம் இறந்துவிட்டார். இது குறித்து பொன்னேரி போலிசார் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரியில் பஸ் சக்கரத்தில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த காட்டாவூரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் தனசேகர் (வயது 13). பொன்னேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று காலை அவர் பள்ளிக்கு அரசு பஸ்சில் சென்றார். பொன்னேரி தேரடி பகுதியில் நின்று புறப்பட்டபோது தனசேகர் ஓடும் பஸ்சில் தாவி ஏறினார்.

    இதில் நிலைதடுமாறிய தனசேகர் கீழே விழுந்தார். பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இரவில் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொன்னேரி பஸ்நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி பஸ் நிலையத்தில் இருந்து செங்குன்றம், பழவேற்காடு, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளுக்கு தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களும், 10-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் பொன்னேரி பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் செல்லவில்லை.

    இதனால் சென்னை புறநகர் பகுதிகளுக்கு வேலைக்கு சென்று திரும்பிய பயணிகள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதி அடைந்தனர். ஆத்திரம் அடைந்த பயணிகள் பஸ் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு பொன்னேரி போலீசார், போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி இரவு நேரத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் பொன்னேரி பஸ் நிலையத்தில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பயணிகள் கூறும்போது, ‘பஸ் சரியாக குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதில்லை. அதிகாரிகளை கேட்டால் சரியாக பதில் கிடையாது. நிறுத்தப்பட்ட பஸ்கள் குறித்து அறிவிப்பு பலகையில் குறிப்பிடுவது கிடையாது. மேலும் பஸ்களை மாற்றி இயக்கப்படுகின்றன’ என்றனர்.

    பொன்னேரி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.10 கோடி மதிப்பிலான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர்.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த நாலூர் ஏரிக்கரையில் பழைய குடோன் உள்ளது.

    இங்கிருந்து கடந்த சில நாட்களாக திடீரென பூச்சிகொல்லி மருந்து வாசனை வீசியது. இதனால் அப்பகுதி மக்கள் மூச்சுவிட முடியாமலும், உடல் நல பாதிப்பாலும் அவதிப்பட்டனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் நந்தகுமாருக்கு தகவல் கொடுத்தனர். அவரது தலைமையில் அதிகாரிகள் குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அங்கு குவியல் குவியலாக ஏராளமான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் அதன் மீது புதிதாக லேபிள் ஒட்டி மறு விற்பனைக்காக சந்தைக்கு அனுப்புவதும் தெரிய வந்தது.

    இதையடுத்து குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.10 கோடி மதிப்பிலான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை பறிமுதல் செய்தனர். குடோனுக்கும் சீல் வைத்தனர்.

    இது தொடர்பாக குடோன் மேற்பார்வையாளர் ஜஸ்வந்த் சிங், காவலாளி ரஹீமின் ஆகியோரை மீஞ்சூர் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான குடோன் உரிமையாளர் ராகுல் சஞ்சயை தேடி வருகின்றனர்.

    மதுகுடிக்க வராததால் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    பொன்னேரியை அடுத்த ஆலாடு நெல்லூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன். ஜே.சி.பி. ஆபரேட்டர். இவரை நண்பர்கள் பொன்னேரியைச் சேர்ந்த கோவிந்தராஜ் திருவாயர் பாடியை சேர்ந்த நாகராஜ் ஆகியோர் மது குடிக்க அழைத்தனர்.

    இதற்கு அருண் பாண்டியன் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து அருண் பாண்டியனை தாக்கினர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குபதிவு செய்து கோவிந்தராஜ், நாகராஜை கைது செய்தனர்.

    பொன்னேரியில் மணப்பெண் திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த கள்ளூர் புதுகுப்பம் சின்னம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பவுத்ரா (23). இவர் ஆந்திரா தடா அருகில் உள்ள செல்போன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கும், உறவினர் ஒருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. அதன்படி நேற்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் பவுத்ராவின் பெற்றோர்கள் சென்னைக்கு துணி மற்றும் பொருட்கள் வாங்க சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பவுத்ராவை காணவில்லை.

    இது குறித்து திருப்பாலை வனம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மணப்பெண் காணாமல் போனதால் இரு வீட்டாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ×