search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "preparation work"

    • கட்சி தலைவர்களுக்கான பிரசார வாகனங்கள் பெரும்பாலும் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தான் செய்யப்பட்டு வருகின்றன.
    • அரசியல் கட்சி தலைவர்களுக்கு, அவர்கள் விரும்பும் வகையில், அவர்கள் கேட்க கூடிய அனைத்து வசதிகளுடன் செய்து கொடுக்கிறோம்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

    கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்வற்றை மும்முரமாக செய்து வருகின்றன. வேட்பாளர் தேர்வு முடிந்ததும், வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரசாரத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள். வீதி, வீதியாக சென்று மக்களிடம் ஓட்டு சேகரிப்பார்கள்.

    இதற்காக அவர்களுக்கு பிரத்யேக பிரசார வாகனங்களும் தயார் செய்யப்படும். அந்த வாகனங்களில் சென்று தான் அவர்கள் பிரசாரம் செய்வார்கள்.

    அரசியல் கட்சி தலைவர்களுக்கான பிரசார வாகனங்கள் பெரும்பாலும் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தான் செய்யப்பட்டு வருகின்றன. இங்கிருந்து தான் பலருக்கும் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.

    இவர்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், கேரள முன்னாள் முதல்-மந்திரி கருணாகரன், போன்றவர்களுக்கும் பிரசார வாகனங்கள் தயார் செய்து கொடுத்துள்ளனர்.

    அந்த வகையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தலைவர்களுக்கான பிரசார வாகனம் தயாரிக்கும் பணிகள் கோவையில் தொடங்கிவிட்டது. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தலைவர்களுக்கான பிரசார வாகனம் பிரத்யேக வசதிகளுடன் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அந்த பிரசார வாகனம் தயாரிக்கும் நிறுவத்தின் உரிமையாளரான முகமது ரியாஸ் கூறியதாவது:-

    நாங்கள் 55 வருடங்களுக்கு மேலாக பிரசார வாகனங்கள் தயார் செய்து கொடுக்கும் பணியை செய்து வருகிறோம். பல முக்கிய தலைவர்களுக்கும் நாங்கள் பிரசார வாகனத்தை தயாரித்து கொடுத்துள்ளோம். 95 சதவீதம் நாங்கள் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு பிரசார வாகனங்களை தயார் செய்து கொடுக்கிறோம்.

    தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களை சேர்ந்த தலைவர்களுக்கு பிரசார வாகனம் தயாரித்து கொடுத்துள்ளோம்.

    அரசியல் கட்சி தலைவர்களுக்கு, அவர்கள் விரும்பும் வகையில், அவர்கள் கேட்க கூடிய அனைத்து வசதிகளுடன் செய்து கொடுக்கிறோம்.

    முன்பெல்லாம் அரசியல் தலைவர்கள், வீட்டில் இருப்பது போன்ற அனைத்து வசதிகளும் பிரசார வாகனத்திலும் இருக்க வேண்டும் என விரும்பினர். அதற்கு ஏற்ப பிரசார வாகனங்களில் படுக்கை, அமருவதற்கு ஷோபா, கழிப்பறை, எல்.இ.டி வி, மற்றும் விளக்குகள் உள்ளிட்ட சகல வசதிகளுடன் தயாரிக்கப்பட்டு வந்தது.

    ஆனால் தற்போது தலைவர்கள் நவீன வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்களை விரும்புவதில்லை.

    அவர்கள் பெரும்பாலும் சுழலும் இருக்கை, திறந்த கூரை, கால்களை அகலமாக நீட்டிக்கொள்வதற்கு வசதியான படிகள், தலைவர்களுடன் வரக்கூடிய பாதுகாவலர்கள், முக்கிய நிர்வாகிகள் நிற்பதற்கு வசதியாக அகலமான படிக்கட்டுகள், பொதுமக்களை பார்க்கும் வகையில் 360 டிகிரி கோணத்தில் சுழலும் சி.சி.டி.வி கேமிராக்கள் இருக்கும் வகையில் அமைத்து தரும்படி தெரிவிக்கின்றனர். அதற்கு ஏற்ப நாங்களும் வாகனங்களை தயாரித்து வருகிறோம்.

    கூடுதல் வசதிகள் அவர்கள் விருப்பப்பட்டு கேட்டால் அதனையும் செய்து கொடுத்து வருகிறோம்.

    1. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வேட்டி-சேலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    • இந்த பணி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையின் போது ஏழை எளியோருக்கு வழங்க அரசு சார்பில் இலவச சேலை -வேட்டி தயாரிக்கப்படுகிறது.

    மொத்தம் 1.68 கோடி வேட்டி, 1.68 கோடி சேலை தயாரிக்கும் பணி தமிழகம் முழுவதும் 228 விசைத்தறி சங்கங்களில் 60 ஆயிரம் விசைத்தறிகளில் நடந்து வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பு செயலாளர் தங்கவேல் கூறியதாவது:

    இலவச வேட்டி-சேலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. தற்போதைய நிலையில் 30 லட்சம் வேட்டிகள், 65 லட்சம் சேலைகள் மட்டும் தயாரிக்க வேண்டியுள்ளது.

    இந்த பணிகளும் 15 நாட்களுக்குள் முடிந்து விடும். இதன் பிறகு விசைத்தறிகளுக்கு வேலை இல்லாத நிலை ஏற்படும்.

    எனவே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சீருடை தயாரிப்பு பணியை முன்னதாகவே திட்டமிட்டு வழங்க வேண்டும். 96 லட்சம் மீட்டர் கேஸ்மெட் துணிகள் மட்டுமே விசைத்தறிக்கு வழங்கப்படும். மீதி 3 கோடி மீட்டர் துணி தானியங்கி தறிகளுக்கு வழங்கப்படுகிறது.

    பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான நீல நிற துணிகள் வெளியே ஆர்டர் போட்டு அரசு வாங்குகிறது. இது போன்றவற்றை விசைத்தறிகளுக்கே வழங்கினால் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலை கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடையம் அருகே சிவசைலம் கோவிலில் வருகிற 23-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • கொடிமரம் பல்வேறு முன் ஆயத்த பணிகளை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    கடையம்:

    கடையம் அருகே அமைந்துள்ள சிவசைலம் பரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைலநாதர் சாமி கோவில் பழமையும், புராண வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகும். அத்திரி மகரிஷி, கோரக்கர் போன்ற சித்தர்கள், முனிவர்களாலும் வழிபடப்பட்ட ஆலயமாகும். இங்கு உள்ள நந்தி சிலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    பாண்டிய மன்னர்கள் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட கோவிலாகும். மேலும் இது மேற்கே பார்த்த சிவாலயமாகும். இங்கு நடக்கும் பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நிலையில் கோவிலுக்கான கும்பாபிஷேகம் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

    வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேகபூஜைகள் தொடங்குகிறது. 20-ந் தேதி (திங்கட்கிழமை) கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் சாந்தி மற்றும் முதல் கால யாக பூஜைகள் நடக்கிறது. 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று இரண்டாம் கால யாகபூஜை, மூன்றாம் கால யாக பூஜை நடைபெறுகிறது .

    22-ந் தேதி (புதன்கிழமை) 4-ம் கால யாக பூஜைகள், 5-ம் கால யாக பூஜைகள் நடைபெறுகிறது. 23 - ந்தேதி (வியாழக்கிழமை) ஆறாம் கால யாக பூஜைகளும், விமான மகா கும்பாபிஷேகம் மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் மற்றும் பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது .

    இதற்கான முன்னேற்பாடாக இங்கு உள்ள வாகனங்கள் மற்றும் கொடிமரம் பல்வேறு முன் ஆயத்த பணிகளை பணியாளர்கள் செய்து வருகின்றனர். யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கும்பாபிஷேகத்தை பிள்ளையார்பட்டி சர்வசாதகம் சிவஸ்ரீ பிச்சை குருக்கள் மற்றும் கோவில் ஸ்தானிகர் நாறும்பூநாதன் பட்டர் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர்.

    புதுவையில் ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதிக்குள் அடங்கி உள்ள 23 சட்டசபை தொகுதிகளின் ஓட்டுகள் லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக், மகளிர் பாலிடெக்னிக் ஆகிய இரு இடங்களில் எண்ணப்படுகிறது.

    காரைக்கால் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 தொகுதிகளுக்கான ஓட்டுகளும், மாகியில் ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி, ஏனாமில் மினி சிவில் ஸ்டே‌ஷனிலுள்ள கருத்தரங்கு கூடம் ஆகியவற்றில் தலா ஒரு தொகுதிகளுக்கான ஓட்டுகளும் எண்ணப்படுகிறது.

    தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக்கில் தனி அறையில் எண்ணப்படுகிறது.

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில் 15 இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

    ஓட்டு எண்ணிக்கை அறைகள், டேபிள்கள் அமைப்பது, விளக்கு வசதி உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 23-ந்தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகளும் அடுத்து மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படுகிறது.

    ஒவ்வொரு தொகுதியிலும் 5 விவிபாட் எந்திரங்களில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படுகிறது. இதனால் ஓட்டு எண்ணிக்கை முடிவதற்கு 24 மணி நேரமாகும் என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடும் வெயிலின் காரணமாகவும், ஓட்டு எண்ணிக்கை கால தாமதத்தை கருத்தில் கொண்டும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அறைகளில் முழுவதுமாக ஏ.சி. வசதி செய்ய தேர்தல் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ஓட்டு எண்ணிக்கை அறைகளில் ஏ.சி. பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    ஓட்டு எண்ணிக்கையை மேற்பார்வையிடவும், முறைகேடுகளை தடுக்கவும் 12 பேர் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    ×