என் மலர்
நீங்கள் தேடியது "Ganesha Chaturthi festival"
- விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது.
- விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம்.
பொன்னேரி:
விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். பின்னர் இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் தொடங்கி நடந்து வருகின்றன. பொன்னேரி பகுதியில் கிருஷ்ணாபுரம் வெள்ளோடை ஆண்டார்குப்பம், ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது.
பல்வேறு வடிவங்களில் 3 அடி முதல் 15 அடி வரை பல வண்ணங்களில் பலமுக விநாயகர், சிங்க முக விநாயகர், யானை முக விநாயகர், எருது விநாயகர், எலி அன்னம் விநாயகர், விளக்கு விநாயகர் , யானை புலி விநாயகர் என விதவிதமாக தயாராகி வருகின்றன.
இவை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இப்போதே ஏராளமானோர் தங்களுக்கு தேவையான விநாயகர் சிலைகளுக்கு முன்பணம் செலுத்தி உள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ரசாயனம் கலக்காமலும், நீரில் எளிதில் கரையக்கூடிய வகையிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது தயாரான சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பொன்னேரியை சேர்ந்த சரவணன் என்பவர் கூறும்போது, விநாயர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே சிலைகள் தயாரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
தினமும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது சிலைக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதத்தில் இருந்தே திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், மீஞ்சூர், பொன்னேரி, பகுதியை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகள் கேட்டு முன்பதிவு செய்து உள்ளனர். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு சிலைகளை தயாரித்து வருகிறோம் என்றார்.
- தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி சார்பில் கொண்டாடப்பட்டது. விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
- இதனைத்தொடர்ந்து நேற்று இரவு விநாயகர் சிலை வடபுதுப்பட்டியில் உள்ள வீதிகளை ஊர்வலமாக சுற்றி வரும் நிகழ்வு நடைபெற்றது.
தேனி:
தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி சார்பில் கொண்டாடப்பட்டது. விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி விழா கமிட்டி தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில், செயலாளர் மரக்கடை பாண்டி, பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பிரசாத், மனோஜ் உள்பட விழா கமிட்டியினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று இரவு விநாயகர் சிலை வடபுதுப்பட்டியில் உள்ள வீதிகளை ஊர்வலமாக சுற்றி வரும் நிகழ்வு நடைபெற்றது. இதனை அடுத்து தேனியில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை வடபுதுப்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
- விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியும், இந்து எழுச்சி முன்னணியும் இணைந்து 38-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். 1
- 12 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து பொன்னகரத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வழியாக முத்தாலம்மன் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
சின்னமனூர்:
சின்னமனூரில் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியும், இந்து எழுச்சி முன்னணியும் இணைந்து 38-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். 12 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து பொன்னகரத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வழியாக முத்தாலம்மன் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
சுண்டல், கொழுக்கட்டை, அவல் படைத்து வழிபட்டனர். விழாவிற்கு கவுரவத்தலைவர் குப்பமுத்து, வழிகாட்டுக்குழு தலைவர் பால்பாண்டி, ராஜபாண்டியன் ஆகியோர் தலைமையில் சின்னமனூர் நகர தலைவர் செந்தில்குமார் முன்னிலையில் நகர் ஒன்றிய வார்டு பொறுப்பாளர் சந்திரன், வெற்றிவேல், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று காலை முதல் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் மாவட்டம் முழுவதும் 1,915 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
சேலம்:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று காலை முதல் ெவகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதுபோல் சேலம் மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக தொடங்கியது.
1915 ஆயிரம் விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் மாவட்டம் முழுவதும் 1,915 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி சேலம் புறநகர் பகுதியில் உள்ள ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி ஆகிய 5 உட்கோட்டங்களில் 1050 சிலைகளும், சேலம் மாநகரில் 865 சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியைெயாட்டி 1,915 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைத்து இன்று அதிகாலை வழிபாடு தொடங்கியது. இதில் அழகு மிகுந்த சிறிய சிலைகள் முதல் வியக்க வைக்கும் வகையில் மிக பிரமாண்டமான சிலைகள் வரை இடம் பிடித்துள்ளன. இதற்காக பெரிய பந்தல் அமைத்து மின் விளக்குகள் அலங்காரம், ரேடியோ செட், வாழைதார்கள், பூக்கள் அலங்காரம் செய்துள்ளனர்.
எருக்கம் பூ அலங்காரம்
விநாயகருக்கு பிடித்தமான எருக்கம்பூ, அருகம்புல் உள்ளிட்ட மாலைகளை அணிவித்து விதவிதமான கொழுக்கட்டை, சுண்டல், பாயாசம், பழம், அவில், கரும்பு உள்ளிட்டவைகளை படையலிட்டும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ராஜகணபதி
சேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதையடுத்து கோவிலில் கணபதி ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து ராஜகணபதிக்கு 108 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், திரவியம், மஞ்சள், சந்தனம், விபூதி உள்பட மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராத னைகள் நடைபெற்றது.
தொடர்ந்து ராஜகணபதிக்கு தங்ககவசம் சாத்தப்பட்டது. அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று ராஜகணபதியை தரிசனம் செய்து வழிபட்டனர். இதையொட்டி சேலம் டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தென்னந்தோப்புக்குள் விநாயகர்
அதனை தொடர்ந்து நெடுஞ்சாலை நகர் சித்தி விநாயகர் கோயில், செவ்வாய்ப்பேட்டை சித்தி, மேயர் நகர் வரசித்தி விநாயகர், ராஜாராம் நகர் விநாயகர் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. செவ்வாய்பேட்டை அப்பு செட்டி தெரு அரச மரம் பகுதியில் ஸ்ரீ சித்தி புத்தி சமேத கல்யாண கணபதி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கன்னங்குறிச்சி பெருமாள் கோவில் திடலில் 10 அடி உயரத்தில் சிறப்பு விநாயகர் சிலை அமைத்து பூஜை நடந்தது.
ஆனந்த சயன அலங்காரம்
அய்யந்திருமாளிகை பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் ஆனந்த சயன அலங்காரத்தில் விநாயகர் அருள் பாலித்தார். செவ்வாய்பேட்டை வாசவி மஹாலில் தென்னந்தோப்புக்குள் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தாதுபாய்குட்டை வேம்பரசர் விநாயகர் கோவிலில் மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. கந்தாஸ்ரமம் மற்றும் சிவன், பெருமாள் கோவிலில்களிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அரிசிப்பாளையம் தெப்பக்குளம் அருகே உள்ள சித்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சேலம் சங்கர் நகரில் உள்ள வரசித்தி விநாயகர், பெரமனூரில் உள்ள சிதம்பர விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.
பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் அருகே வைக்கப் பட்டுள்ள விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதேபோல் சேலம் மாநகரில் ஜங்சன், அஸ்தம்பட்டி, குகை, செவ்வாய்பேட்டை, ரத்தினசாமிபுரம், சங்கர் நகர், பெரமனூர், கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, கொண்டலா ம்பட்டி, சூரமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
இேதா போல் ஆத்தூர், தலைவாசல், பெத்தநாயக்கன் பாளையம், வாழப்பாடி, அயோத்தியப்பட்டணம், கெங்கவல்லி, நங்கவள்ளி, மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர், காடையாம்பட்டி, ஏற்காடு, எடப்பாடி, சங்ககிரி, தேவூர், மகுடஞ்சாவடி, காகாபாளையம், இடங்கணசாலை, வீராணம், வீரபாண்டி உள்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள விநாயகர் கோவிலில்களிலும் இன்று விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இக்கோவில்களில் பக்தர்கள், பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து வழிப்பட்டனர். ஒரு சில கோவில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
3500 போலீஸ் பாதுகாப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் சேலம் மாநகர், மாவட்டம் முழுவதும் 3500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு
- சாமி தரினம் செய்தனர்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு, கொழுக்கட்டை, சுண்டல், கரும்பு பொறி உள்ளிட்ட உணவு பொருட்களை வைத்து படையிலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினம் செய்தனர்.
- நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகுவிம ரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் சிறிய சிலைகள் முதல் பெரிய சிலைகள் வரை 730 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகுவிம ரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் சிறிய சிலைகள் முதல் பெரிய சிலைகள் வரை 730 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்காக பந்தலில் மின் விளக்குகள் அலங்காரம், ரேடியோ செட் ஆகியவை அமைத்துள்ளனர். பந்தலில் வாழைதார்கள், பூக்கள் அலங்காரம் செய்துள்ளனர்.
சக்தி விநாயகர்
இன்று காலை முதல் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் விநாயகர் சதுர்த்தி யையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்க ளிலும் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
நாமக்கல் கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சாமிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன் உள்பட 21 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.
நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
இதேபோல் நாமக்கல் கோட்டை பிள்ளையார் கோவில், கணேசபுரம் விநாயகர் கோவில் உள்பட பல்வேறு விநாயகர் கோவில்களில் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் பஞ்சமுக ஹேரம்ப விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு பஞ்சமுகஹேரம்ப விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகர், பேட்டை விநாயகர், பாண்ட மங்கலம் விநாயகர், கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர், ஆனங்கூர் விநாயகர், அய்யம்பாளையம் விநாயகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள்பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பள்ளிப்பாளையம்
பள்ளிபாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், சாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதேபோல் ராஜவீதியில் உள்ள ராஜகணபதி, காந்திபுரம் முதல் தெருவில் உள்ள விநாயகர் கோவில், காவிரி ஆறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில், அக்ரஹாரம் விநாயகர் கோவில், எஸ்.பி.பி. காலனியில் உள்ள விநாயகர் கோவில்களில் சதுர்த்தியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
ராசிபுரம்
ராசிபுரம் இ.பி. காலனியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னர் சாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டதுடன் பொறி, லட்டு, கொழுக்கட்டை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து வலம்புரி விநாயகர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
இதேபோல் பட்டணம் ரோட்டில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடத்தப்பட்து. கடைவீதியில் உள்ள இரட்டை விநாயகர் கோவில், சிவானந்தசாலை சக்தி விநாயகர் கோவில் உள்பட ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதேபோல் வெண்ணந்தூர் தினசரி மார்க்கெட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையடுத்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே சிறிய அளவிலான சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். அவர்கள் புத்தாடைகள் அணிந்து, பொறி, கொழுக்கட்டை உள்ளிட்ட பலகாரங்களை படைத்து விநாயகரை வழிபட்டனர்.
வயர்லெஸ் கேமரா அமைப்பு
விநாயகர் சிலை ஊர்வலத்தை சென்னையில் இருந்து கண்காணிக்கும் வகையில் வயர்லெஸ் கேமரா அமைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்து கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு 938 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள் ளனர். 8 சோதனை சாவடிகள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன. விநாயகர் சிலை உரிய அனுமதி பெற்றுள்ளனவா? என்பது குறித்தும் கண்காணித்து வருகின்றனர்.
மோகனூர், பரமத்தி வேலூர், இறையமங்கலம், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இதுவரை 730 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி பெற்றுள்ளனர்.
பதட்டமான பகுதிகள்
குறிப்பாக பதட்டமான பகுதிகளாக கருதப்படும் பரமத்தி வேலூர், பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமரா அதிகப்படுத்தப்பட்டுள்ளன. விநாயகர் சிலை வைத்துள்ள வர்களே கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளோம்.
விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் போது டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு விழா கொண்டாட அறிவுறுத்தப் பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை சென்னையில் இருந்து கண்காணிக்கும் வகையில் வயர்லெஸ் கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட உள்ளனர்.
- மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட உள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்துக்களுக்கு முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட முஸ்லீகள் விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களான மாலை, ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு, கற்பூரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி அடுத்த ராசுவீதி பகுதியில் உள்ள வீடுகளுக்கு சிலை மற்றும் பூஜை பொருட்களை அவர்கள் வழங்கினார்கள். மேலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியின் போது ரியாஸ், நதிம், அஷ்ரப், ஏஜாஸ், ஜாபர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- சித்தம்பலம் அங்கன்வாடி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
- பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் அங்கன்வாடி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் விநாயகர் மற்றும் முருகன் வேடம் அணிந்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் அங்கன்வாடி ஆசிரியை பிருந்தா, மற்றும் உதவியாளர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- சிவபெருமானுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
- பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று கற்பகவிநாயகர் சிவபெருமானுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
- மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
- சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
சென்னை:
சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மக்க ளாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடி நீர் ஆதாரத்தை தருகிறது.
நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எனவே, பொது மக்களுக்கு கீழ்க்கண்டவாறு வேண்டுகோள் விடப்படுகிறது.
* களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ் (பி.ஒ.பி.), பிளாஸ்டிக் மற்றும் தெர்மா கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச் சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
* சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
* ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
* சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தகுந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
* சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப் படவேண்டும்.
* விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
- விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் விநாயகர் சிலைகள் தயாரிப்பு, விற்பனை களை கட்டியுள்ளது.
வாழப்பாடி:
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் விநாயகர் சிலைகள் தயாரிப்பு, விற்பனை களை கட்டியுள்ளது.
பொதுவாகவே விநாயகர் சதுர்த்தியன்று பல்ேவறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி விதவிதமான விநாயகர் சிலைகளை வாங்கி பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வழிப்படுவார்கள். பின்னர் விழா முடிந்ததும் மேள, தாளம் முழங்க விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த நீர்முள்ளிக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் பட்டதாரி இளைஞர் பாலாஜி(36) மற்றும் இவரது சகோதரர் முத்துக்குமார் (34) உள்ளிட்ட குடும்பத்தினர், புதிய தொழில்நுட்பத்தில் விதமான விநாயகர் சிலைகளை வடிவமைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி நெருங்கியுள்ள நிலையில், விநாயகர் சிலைகளை வடிவமைத்து வண்ணம் தீட்டும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இவர்கள் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து விநாயகர் சிலை பாகங்களை கொள்முதல் செய்து கொண்டு வரும் இவர்கள் கைவினைக் கலைஞர் களுடன் ஒருங்கிணைந்து நவீன தொழில்நுட்பத்தில் பாகங்களை ஒட்டவைத்து, வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் விநாயகர் சிலைகளை வடிவமைத்து வண்ணம் தீட்டி அனுப்பி வைத்து வருகின்றனர்.
நவீன தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் விநாயகர் சிலைகளை பார்வையிட விநாயகர் சதுர்த்தி விழா குழுவினரும் இளை ஞர்களும் படைடுத்து வருகின்றனர்.
இது குறித்து கைவினைக் கலைஞர் பாலாஜி கூறியதாவது:-
எனது பெற்றோர்களுக்கு மண்பாண்டங்கள் செய்வது குலத்தொழிலாகும். தற்போது மண்பாண் டங்களுக்கு போதிய வரவேற்பும், வருவாயும் இல்லை. இருப்பினம் ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ள நானும், எனது சகோதரரும் குலத் தொழிலை கைவிட மனமின்றி, கைவினைக் கலைஞர்களை ஒருங்கி ணைத்து மண் பாண்டத் தொழிலுக்கு இணையான, நவீன தொழில் நுட்பத்தில் விநாயகர் சிலைகளை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறோம். ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே இத்தொழிலில் வருவாய் ஈட்ட முடியும் என்ற போதிலும், மன நிறைவு கிடைப்பதால் விநாயகர் சிலைகளை வடிவமைத்து விற்பனை செய்வதில் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறோம்.
விநாயகர் சிலைகளின் விலை உயர்ந்துள்ள நிலையிலும், வாடிக்கை யாளர்கள் விரும்பு வகையில், மிக நேர்த்தியாக விநாயகர் சிலை வடி வமைத்து கொடுப்பதால், தமிழகம் முழுவதும் இருந்துஆர்டர்கள் குவிந்து வருகிறது என்றார்.
- கூட்டத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
- சிலை 9 அடிக்கும் மேல் உயரம் இருக்கக் கூடாது.
பெருந்துறை:
பெருந்துறையில் விநாயகர் சதுர்த்தியை விழாவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறி முறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பெருந்து றை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
சிலை 9 அடிக்கும் மேல் உயரம் இருக்கக் கூடாது. சென்ற ஆண்டு சிலை வைத்தவர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படும். சென்ற ஆண்டு ஊர்வலம் நடத்தி யவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படும்.
சிலை வைக்கப்படும் நபர்கள் சிலையை பாதுகாப்பாகவும், அரசு வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி வைக்க வேண்டும் என்பது உட்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் பெருந்துறை, சென்னிமலை மற்றும் காஞ்சிக்கோவில் ஆகிய போலீஸ் நிலையம் பகுதிகளில் விழா ஏற்பாடு செய்பவர்கள் மற்றும் இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.