search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school uniform"

    • தையல் தொழிலாளர்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களின் அளவை எடுத்து சீருடை தைக்க வேண்டும்.
    • கேன்வாஸ், பட்டன் காஜாவுக்கே ரூ.20 செலவாகும்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெண்கள் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு 1680க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகளை தைத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக சட்டைக்கு ரூ.22, கால்சட்டைக்கு ரூ.42 கூலி வழங்கப்படுகிறது. பெரும்பாலான சீருடைகள் மாணவர்கள் அணியும் நிலையில் இல்லை என்றும், தரமாக தைக்கப்படவில்லை என்றும் புகார் வந்ததையடுத்து சமூக நலத்துறை அலுவலர் சியாமளா தேவி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.

    அதன்படி தையல் தொழிலாளர்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களின் அளவை எடுத்து சீருடை தைக்க வேண்டும். கேன்வாஸ் வைத்து தரமான பட்டன் காஜா வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தார்.

    ஆனால் கேன்வாஸ், பட்டன் காஜாவுக்கே ரூ.20 செலவாகும். இந்த தொழிலை நம்பி ஏராளமான மாற்றுத் திறனாளிகள், விதவைகள் உள்ள நிலையில் அவர்களுக்கு இது கூடுதல் சுமையாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

    எனவே இந்த உத்தரவுகளை திரும்ப பெறுமாறு வலியுறுத்தினர். ஆனால் அதற்கு ஷியாமளா தேவி மறுத்ததுடன் சங்கத்தை பூட்டி விட்டார். உங்களுக்கு வேலை கிடைக்காது என்று தெரிவித்தார். இதனால் தையல் தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் முருகேஸ்வரி தலைமையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

    பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து தொழிலாளர்களின் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தால் அது குறித்து அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஷியாமளா தேவி உறுதியளித்தார். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • பள்ளி காலத்தில் நடைபெற்ற பசுமையான நினைவுகளை சிலாகிப்புடன் அசைபோட்டனர்.
    • பள்ளி ஆசிரியர்கள் மிகவும் நெகிழ்ச்சியோடு பழைய நினைவலைகளை மேடையில் பகிர்ந்து கொண்டனர்.

    கோவை:

    கோவை வின்சென்ட் ரோடு, கோட்டைமேடு பகுதியிலுள்ள நல்லஆயன் உயர்நிலைப்பள்ளியில் 1980-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புவரை படித்த முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி, போத்தனூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடிய பழைய மாணவர்கள் மீண்டும் ஒன்றுசேர்ந்தது, பலரது முகத்திலும் நெகிழ்ச்சி, மகிழ்ச்சி, பூரிப்பை ஏற்படுத்தியது.

    மேலும் அவர்கள் தங்களுக்கான அடையாளம், நட்பு, பாசத்தை ஒருவருக்கொருவர் புதுப்பித்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள்பள்ளி காலத்தில் நடைபெற்ற பசுமையான நினைவுகளை சிலாகிப்புடன் அசைபோட்டனர். மேலும் முன்னாள் மாணவர் சந்திப்புக்காக இதே பள்ளியில் கடந்த 1990-ம் ஆண்டு படித்த ஆர்.எஸ். புரத்தை சேர்ந்த கார்த்தி (வயது 54) என்பவர், கடந்த கால நினைவுகளை நினைவு கூறும் விதமாக, அன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த காக்கி அரைக்கால் டவுசர் மற்றும் வெள்ளைநிற சட்டை அணிந்து பள்ளிக்கு வந்தி ருந்தார்.

    இது அங்கு திரண்டு இருந்த பழைய நண்பர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கார்த்தி கூடலூர் பகுதியில் உள்ள கோவிலில் தலைமை குருக்களாக பணியாற்றி வருகிறார்.

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்ற பள்ளி ஆசிரியர்கள் மிகவும் நெகிழ்ச்சியோடு பழைய நினைவலைகளை மேடையில் பகிர்ந்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் பேசுகையில், இன்றைய தலைமுறை மாணவர்கள் இந்த நாட்டிற்காக தான் கற்ற கல்வியை பிறர் பயன்பட நடந்து கொள்ள வேண்டும் என்று உணர்வு பூர்வமாக பேசி, முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் பிள மின் மரியஜோசப் உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வேட்டி-சேலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    • இந்த பணி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையின் போது ஏழை எளியோருக்கு வழங்க அரசு சார்பில் இலவச சேலை -வேட்டி தயாரிக்கப்படுகிறது.

    மொத்தம் 1.68 கோடி வேட்டி, 1.68 கோடி சேலை தயாரிக்கும் பணி தமிழகம் முழுவதும் 228 விசைத்தறி சங்கங்களில் 60 ஆயிரம் விசைத்தறிகளில் நடந்து வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பு செயலாளர் தங்கவேல் கூறியதாவது:

    இலவச வேட்டி-சேலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. தற்போதைய நிலையில் 30 லட்சம் வேட்டிகள், 65 லட்சம் சேலைகள் மட்டும் தயாரிக்க வேண்டியுள்ளது.

    இந்த பணிகளும் 15 நாட்களுக்குள் முடிந்து விடும். இதன் பிறகு விசைத்தறிகளுக்கு வேலை இல்லாத நிலை ஏற்படும்.

    எனவே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சீருடை தயாரிப்பு பணியை முன்னதாகவே திட்டமிட்டு வழங்க வேண்டும். 96 லட்சம் மீட்டர் கேஸ்மெட் துணிகள் மட்டுமே விசைத்தறிக்கு வழங்கப்படும். மீதி 3 கோடி மீட்டர் துணி தானியங்கி தறிகளுக்கு வழங்கப்படுகிறது.

    பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான நீல நிற துணிகள் வெளியே ஆர்டர் போட்டு அரசு வாங்குகிறது. இது போன்றவற்றை விசைத்தறிகளுக்கே வழங்கினால் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலை கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆகஸ்ட் 10 தேதி லட்சத்தீவு நிர்வாகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது
    • இந்த அறிவுறுத்தல்களுக்கு இணங்காத செயல்கள் கல்வித்துறையால் தீவிரமாக பார்க்கப்படும்

    கேரளத்தின் கடற்கரையோரம் லக்கடிவ் கடல் பகுதியில் (Laccadive Sea) உள்ள 36 தனித்தனி தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக்கூட்டம், லட்சத்தீவு. இது இந்தியாவிற்கு சொந்தமானது.

    இந்தியாவின் யூனியன் பிரதேசங்களிலேயே சிறியதான இதில் வசிக்கும் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுபவரால் இது நிர்வகிக்கப்படுகிறது. இதன் தற்போதைய நிர்வகிப்பாளர் ப்ரஃபுல் கோடா பட்டேல்.

    பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 10 தேதி லட்சத்தீவு நிர்வாகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அங்கு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பெல்ட், டை, ஷூ மற்றும் சாக்ஸ் உள்ளிடக்கிய பள்ளி சீருடைகளின் புதிய வடிவம் ஒன்றை கட்டாயமாக்கியுள்ளது.

    அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

    "பள்ளி மாணவ மாணவியர்கள் சீருடை அணிவதால் அவர்களிடையே ஒரு உறுதித்தன்மை ஏற்படும். இதன் மூலம் மாணவர்களிடையே ஒழுக்க உணர்வும் வளரும். பரிந்துரைக்கப்பட்ட சீருடை வடிவங்களை தவிர வேறு உடைகளை அணிவது பள்ளி மாணவர்களை பாதிக்கும். இந்த முடிவு, மாணவர்கள், பெற்றோர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து சம்பந்தபட்டவர்களிடம் இருந்தும் பெரும் பாராட்டை பெற்றுள்ளது."

    "ஒவ்வொரு மாணவ மாணவியரும் குறிப்பிட்டுள்ள சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும். இந்த சீருடை முறையை தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பள்ளிகளில் அனைத்து வேலை நாட்களிலும் மாணவ மாணவியர் கண்டிப்பாக கடைபிடிப்பதை பள்ளி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த அறிவுறுத்தல்களுக்கு இணங்காத செயல்கள் கல்வித்துறையால் தீவிரமாக பார்க்கப்படும்," இவ்வாறு அந்த அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த புதிய உத்தரவின்படி, 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் செக் டிசைனில் அரை பேண்ட் மற்றும் வான் நீல நிறத்தில் அரைக்கை சட்டையும், அவ்வகுப்பு வரை உள்ள மாணவியர் செக் டிசைனில் பாவாடையும், வான் நீல நிறத்தில் அரைக்கை சட்டையும் அணிய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    அதே போல் 6-இல் இருந்து 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கடல் நீல நிறத்தில் முழு பேண்டும், வான் நீல நிற அரைக்கை சட்டையும், மாணவியர்கள் கடல் நீல நிறத்தில் பாவாடையும், வான் நீல நிறத்தில் அரைக்கை சட்டையும் அணிய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    "இது லட்சத்தீவில் வசித்து வருபவர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை அழிப்பதாக உள்ளது" என்று லட்சத்தீவு காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹம்துல்லா சயீத் குற்றம் சாட்டினார்.

    இந்த புதிய உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இதற்கு எதிராக மாணவ-மாணவியர்களின் துணையுடன் வகுப்பு புறக்கணிப்பு உட்பட கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க போவதாக எச்சரித்துள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பாக கர்நாடகாவில் பள்ளி சீருடையின் காரணமாக ஒரு போராட்டம் வெடித்ததும், அச்சிக்கல் தற்போது நீதிமன்றத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • இந்து மேனிலைப்பள்ளியில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்து.
    • மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், நோட்டுகள், பள்ளி சீருடை அரசு வழங்கிய பொருட்களை வழங்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளியில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்து 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகம், நோட்டுகள், பள்ளி சீருடை ஆகிய விலையில்லா அரசு வழங்கிய பொருட்களை உதவி தலைமை ஆசிரியர்கள் எஸ்.முரளிதரன், என்.துளசி ரங்கன், ஏ.வரதராஜன் முன்னிலையில், பள்ளி தலைமையாசிரியர் எஸ்.அறிவுடைநம்பி வழங்கினார்.

    பொறுப்பாசிரியர் ஜே.கண்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் டி.முரளி, பி.மார்க்கண்டன், ச.ஹரிஹரன், ரராகேஷ் ஆகியோர் விலையில்லா பொருட்களை வழங்கும் ஏற்பாட்டினை செய்தனர்.

    திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பள்ளி சீருடையில் மதுபாட்டில்கள் விற்ற மாணவியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
    அரசூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 வயதுடைய மாணவி, 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், பள்ளி சீருடையுடன் ஒரு கைப்பையுடன், தெருத்தெருவாக சென்றார். அந்த மாணவியை கண்டதும், மதுபிரியர்கள் ஓடி வருகிறார்கள்.

    பின்னர் அந்த மாணவி, தான் பையில் வைத்திருந்த மதுபாட்டில்களை மதுபிரியர்களுக்கு விற்பனை செய்கிறார். அதனை மதுபிரியர்கள் போட்டி, போட்டு வாங்கிச்செல்கிறார்கள். இதை சிலர், தங்களது செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ வாட்ஸ்-அப், முகநூலில் வைரலானது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், வீடியோ தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார், மதுபாட்டில்கள் விற்பனை செய்த மாணவி குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அந்த மாணவி, திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், அவருடைய தந்தை மதுபாட்டில்கள் விற்பனை செய்யுமாறு மாணவியிடம் கொடுத்து அனுப்பி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 4 சீருடைகள் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள திட்டமலையில் ரூ.10 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.

    தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விழாவில் கலந்து கொண்டு கல்லூரி கட்ட அடிக்கல் நாட்டி பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய- மாநில அரசுகள் துணையுடன் நம்பியூர் அருகே  உள்ள கொளப்பலூரில் டெக்ஸ்டைல் பார்க் என சொல்லக் கூடிய ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது.

    இங்கு 8 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும்.

    மத்திய அரசு கொண்டு வரும் எந்தபொது தேர்வு ஆனாலும் அதை தமிழக மாணவர்கள் மிக எளிதாக அணுகக்கூடிய அளவில் தற்போதைய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலம் சரளமாக பேச, லண்டன், ஜெர்மனி நாடுகளில் இருந்து 600 சிறப்பு ஆசிரியர்கள் தமிழகம் வந்து ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு 6  வார காலம் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்த பயிற்சிகள் யாவும் அரசின் சார்பில் மாணவர்களுக்கு இலவசமாக கற்றுத்தரப்படும்.

    1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 4 சீருடைகள் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    மாணவர்கள் சீருடையில் இருந்தால் பஸ்சில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார். #mrvijayabhaskar #schoolstudents
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே ரூ. 137.18 மதிப்பில் அதிநவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சோதனைச்சாவடியில் ஆந்திரா மற்றும் வட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களுக்காக 10 வழித்தடங்களும், தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களுக்காக 6 வழித்தடங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

    கடத்தல் பொருட்களை மிக நுட்பமாக கண்டறியும் வகையில் ஒவ்வொரு வழித்தடத்திலும் ஸ்கேனிங் வசதியும், சரக்கு வாகனங்களுக்கான எடை மேடையும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இதனை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவிலேயே முதன் முறையாக முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து சோதனைச் சாவடியாக அமைந்துள்ளது. இதற்கான முழு பணிகளும் முடிவடைந்து விட்டன. முதல்-அமைச்சரால் மிக விரைவில் இது திறக்கப்பட உள்ளது.

    பள்ளிகள் திறந்திட இன்னும் 15 நாட்கள் உள்ளது. அதற்குள் போக்குவரத்து துறை அதிகாரிகள் அனைத்து பள்ளி வாகனங்களையும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு அந்த வாகனங்கள் இயக்குவதற்கு அனுமதிக்கப்படும்.

    நவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் கூடிய 5 ஆயிரம் புதிய பேருந்துகள் போக்குவரத்து துறையிலே கொண்டு வர இருக்கிறோம். மாணவர்கள் மற்றும் வயதானவர்களின் வசதிக்காக நவீன படிகட்டுகள் கொண்ட பேருந்துகளாக அவை அமைக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் 70 புதிய பேருந்து பணிமனைகளை திறக்க வேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதிகளின் படி அறிவித்து இருந்தார். அந்த வகையில் தற்போது சுமார் 54 பணிமனைகள் திறக்கப்பட்டு உள்ளன. சில பணிமனைகளுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

    சில பணிமனைகளுக்கு நிலங்களை கையகப்படுத்துவதில் பிரச்சினை உள்ளது. இவையெல்லாம் முடிவு பெற்று கூடிய விரைவில் அறிவிக்கப்பட்ட அத்தனை பணிமனைகளும் திறக்கப்படும்.

    மாணவ-மாணவிகளுக்கு விரைவில் இலவச பயண அட் டையை வழங்கிட ஏற்பாடு செய்து வருகிறோம். பள்ளிகள் திறக்கப்படக் கூடிய சூழலில், மாணவர்களின் பயணத்திற்கு அரசு போக்குவரத்தில் எந்தவித இடையூறும் இருக்காது.



    மாணவர்கள் சீருடையில் இருந்தால் போதும். அவர்களை பஸ்சில் இலவசமாக பயணம் செய்திட அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை போட்டு உள்ளோம்.

    இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

    அப்போது அவருடன் ஊரக தொழில்துறை அமைச் சர் பெஞ்ஜமின், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி, இணைஆணை யர் பிரசன்னா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தர வல்லி, பொன்னேரி எம். எல்.ஏ. சிறுனியம் பலராமன், கும் மிடிப்பூண்டி எம்.எல்.ஏ கே.எஸ். விஜயகுமார் ஆகியோர் உடன் வந்தனர். #mrvijayabhaskar #schoolstudents

    ×