search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தகம்"

    • புத்தகம் வாசிப்பதன் மூலம் மனிதர்களுக்கு கல்வி அறிவு , புரிதல் ,தெளிவு கிடைக்கிறது.
    • மனிதர்களை புதிய உலகத்துக்கு புத்தகங்கள் அழைத்து செல்கின்றன.

    மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

    புத்தக வாசிப்பால் கிடைக்கும் அளவற்ற மகிழ்ச்சியை குழந்தை பருவத்திலேயே ஏற்படுத்தினால் எழுத்து மீதான ஆர்வம் தூண்டப்பட்டு அவர்களின் எழுத்துகளை பின்னாளில் பிரசுரிக்கவும் உதவும் என நம்பப்படுகிறது.

    புத்தகம் வாசிப்பதன் மூலம் மனிதர்களுக்கு ஏராளமான நன்மைகள், கல்வி அறிவு , புரிதல் ,தெளிவு கிடைக்கிறது. மனிதர்களை புதிய உலகத்துக்கு புத்தகங்கள் அழைத்து செல்கின்றன.




    உலக புத்தக தினம் 1995 -ம் ஆண்டு ஏப்ரல் 23 - ந்தேதி முதன் முதலாக கொண்டாடப்பட்டது, அன்றைய தினம் தொடர்ந்து அங்கீகரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் மக்கள் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை தற்போது மேம்படுத்தி வருகிறார்கள்.வாசிப்பின் சக்தியை மக்கள் அடையாளம் காண இந்த நாள் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

    உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை கவுரவிக்கும் விதமாக உலக புத்தக தினம் யுனெஸ்கோ சார்பில் கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் வாசிப்பு மீதான காதல், எழுத்து மீதான ஆர்வம், மொழிப்பெயர்ப்பு, ஆகியவற்றை ஊக்கப்படுத்துவது இதன் நோக்கம்.


    ஒரு மனிதனுக்கு புத்தகம் சிறந்த தோழன் ஆக உள்ளது. உலகின் சிறந்த எழுத்தாளர்களான வில்லியம் சேக்ஸ்பியர், பிரபல ஸ்பானிஷ் வரலாற்று ஆசிரியர் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரின் நினைவு நாளாக இது அமைந்துள்ளது.

    புத்தக வாசிப்பு விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தில் யுனெஸ்கோ, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இலக்கிய பரிசுகளை வழங்கி வருகிறது.




    இந்த தினத்தில் புத்தகங்களை நன்கொடையாக வழங்குங்கள். நூலகங்கள், பள்ளிகள் அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக கொடுங்கள். புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க நண்பர்கள், உறவினர்களுக்கு உதவிடுங்கள்

    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
    • புத்தக கண்காட்சியை பார்த்து பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கலாம்.

    திருவள்ளூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டு முதல் மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கெனவே கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் திருவள்ளூர், ஆவடி ஆகிய இடங்களில் புத்தக கண்காட்சி நடை பெற்றுள்ளது.

    இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான புத்தக கண்காட்சி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக பதிப்பாளர் விற்பனையாளர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

    இந்த கண்காட்சி மார்ச் 4-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். இந்த கண்கட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பயன்படத்தக்க புத்தகங்கள் ஒரே கூரையின் கீழ் இந்த புத்தக கண்காட்சியில் கிடைக்கின்றன.


    இந்த கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் கண்காட்சி நடைபெறும் வளாகத்தில் தினமும் சிந்தனையை தூண்டும் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.

    மேலும் புத்தக வாசிப்பின் பயன்கள் குறித்து மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இந்த புத்தக கண்காட்சியை பார்த்து பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கலாம்.

    • “ஆழி சூழ் உலகு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
    • நான் எனது நிலத்துக்கான மக்களுக்கான பணிகளை செய்வதை பெருமையாகவும், சந்தோஷமாகவும் கருதுகிறேன்.

    நெல்லை:

    குடியரசு தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி பத்ம விபூஷன் விருது 5 பேருக்கும், பத்ம பூஷன் விருது 17 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 110 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜோ டி குரூஸ் கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    உவரி கிராமத்தில் பிறந்து வளர்ந்து பாளை புனித சவேரியார் பள்ளியில் அவர் தனது உயர்கல்வியை முடித்தார். இடையன்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் விஞ்ஞான பாடம் படித்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலையும், திருச்சி வளனார் கல்லூரியில் ஆய்வறிஞர் பட்டமும் பெற்றவர்.

    தமிழ் நெய்தல் குடிகளின் வாழ்வை இலக்கியத்தில் பதிவுசெய்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சரக்குக் கப்பல் நிறுவனங்களில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலைமைப் பொறுப்பில் இவர் பணியாற்றினார். இவர் கொற்கை, ஆழிசூழ் உலகு உள்ளிட்ட பல நாவல்களையும், புலம்பல்கள் என்ற கவிதையையும், விடியாத பொழுதுகள் உள்ளிட்ட ஏராளமான ஆவண படங்களையும் வெளியிட்டுள்ளார்.

    இவரது கொற்கை என்ற புதினத்திற்காக 2013-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இவர் எழுதிய "ஆழி சூழ் உலகு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் பரத் பாலா இயக்கிய மரியான் திரைப்படத்துக்கு வசனங்களை இவர் எழுதி உள்ளார்.

    இந்நிலையில் அவருக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருது குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கடற்கரை மக்களுக்கான அங்கீகாரமாக இதனை நான் பார்க்கிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை.

    நான் எனது நிலத்துக்கான மக்களுக்கான பணிகளை செய்வதை பெருமையாகவும், சந்தோஷமாகவும் கருதுகிறேன். அந்த வகையில் அதனை மத்திய அரசு அங்கீகரித்திருப்பதில், கடலோர மக்களை அரசு மதிக்கிறது என்பதில் எனக்கு சந்தோஷம் என்றார்.

    • கடவுள் வழிபாட்டை திணிக்கக் கூடாது.
    • மக்களின் வாழ்வை அந்த திட்டங்கள் என்றும் மாற்றாது.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கில் 'இறுதி நாயகர்கள்' புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகமாக நம்பிக்கை வைத்து திருச்செந்தூர் கோவிலுக்கு செல்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் முருகன்தான் நம்முடைய தெய்வம் என்று வந்து கொண்டிருக்கிறார்கள்.

    வழிபாடு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு விஷயம். நீங்கள் வழிபாடுகளை மதத்தை, கடவுளை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்பது வேறு ஒரு விசயம்.


    ஆனால் அதைத் தாண்டி அந்த கடவுள் யார்? அந்த கடவுள் உருவம் எது? என்பதை ஒவ்வொருவரும் முடிவு செய்ய வேண்டும். அது தனிப்பட்ட ஒரு விசயம். அந்த உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. கடவுள் வழிபாட்டை திணிக்கக் கூடாது.

    மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் பெயரளவில் மட்டும்தான் உள்ளது. மக்களின் வாழ்வை அந்த திட்டங்கள் என்றும் மாற்றாது.


    மக்களுக்கு போய் சேரக் கூடிய எல்லா திட்டங்களையும் இன்று அழித்து விட்டு வேறு ஒரு விசயத்தை மக்களுடைய வாழ்க்கைக்கு சம்பந்தம் இல்லாமல் மக்களுடைய வாழ்க்கையை எந்தவிதத்திலும் மாற்ற முடியாத சில விசயங்களை எடுத்து வைத்துக் கொண்டு அதை இந்த தேசமாக தேசியமாக மக்களின் அடையாளமாக மாற்ற நினைத்து கொண்டிருக்க கூடியவர்களை நாம் மாற்ற முடியும். அவர்களுடைய இடத்தை வேறு ஒன்றாக மாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தபால் தலையை வெளியிட்ட பிரதமர் மோடி ராம பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
    • பால ராமர் சிலையை கருவறைக்குள் பீடத்தில் நிலைநிறுத்தப்பட்டன.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

    அயோத்தி ராமர் பிறந்து, வளர்ந்த இடம் என்பதால் அங்கு 5 வயதுடைய பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    மைசூரை சேர்ந்த சிற்பி இந்த பால ராமர் சிலையை செதுக்கி உள்ளார். இந்த சிலை பிரதிஷ்டை வருகிற 22-ந்தேதி பிரதமர் மோடி முன்னிலையில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

    நேற்று பால ராமர் சிலையை அயோத்தி கோவிலுக்குள் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, இன்று பால ராமர் சிலையை கருவறைக்குள் பீடத்தில் நிலைநிறுத்தப்பட்டன.

    இந்நிலையில், ராமர் கோவில் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். தபால் தலைகளின் தொகுப்பு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

    தொகுப்பு புத்தகம் வெளியிட்ட பிரதமர் மோடி பின்னர் ராம பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    • புத்தகம் வாசிப்பதால் மட்டுமே முழுமையான அறிவு பெருகும் என தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசினார்.
    • காமராஜர் பிறந்த விருதுநகருக்கு பெருமை சேர்த்துள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 2ம் ஆண்டு புத்தக திருவிழாவில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் முன்னிலையில் ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தங்கபாண்டி யன் கலந்து கொண்டு புத் தக கண்காட்சியை பார்வை யிட்டார்.

    புத்தக விழாவில் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி வருவாய்த்துறை, நிதித்துறை அமைச்சர்களின் ஆலோசனை படி சிறப்பாக புத்தக திருவிழா நடை பெற்று வருவது கல்விகண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருது நகருக்கு பெருமை சேர்த் துள்ளது.

    பேரறிஞர் அண்ணா கூற்றுப்படி ஒரு நூலகம் திறந்தால் நூறு சிறைச் சாலைகள் மூடப்படும் என்பதை உணர்ந்து முன்னாள் முதல்- அமைச் சர் கருணாநிதி மிகப்பெரிய ளவில் அண்ணா நூலகம் திறந்து வைத்தார்.

    அவர்வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக திருவிழா நடத்தி புத்தகத்தின் முக்கியத்துத்தை இளை ஞர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். எத்தனை தொழில்நுட்பம் கணிணி செல்போனில் படித்தாலும் புத்தகத்தை படித்தல் மட்டுமே முழுமையான அறிவு பெருகும்.

    ராஜபாளையத்தில் பெண்களுக்கென தனியாக நூலக வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. தற்போது சட்ட மன்ற நிதியிலிருந்து கிருஷ்ணாபுரம் ஊராட்சி நூலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோல் தொகுதியில் வேறெங்கும் நூலக வசதி தேவைப்படுமேயானால் சட்ட மன்ற நிதியிலிருந்து செய்து தரப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்வில் சேத்தூர் பேரூர் சேர்மன்கள் ஜெய முருகன், பாலசுப்பிர மணியன், சேத்தூர் செட்டி யார்பட்டி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    மாணவ மாணவியர்கள் ஒவ்வொருவரும் புத்தகம் வாசி க்கும் பழக்கத்தினை தொடர்ந்து கடைபிடித்திட வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட நூலகத்தின் சார்பில் 56-வது தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார்விழாவில் மாவட்ட கலெக்டர் பழனி பேசுகையில், நூலக வார விழாவில் அதிகப்ப டியான மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்கள் வாசிப்பு திறனும் மேம்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை எழுதுதல் போன்ற பல்வேறு போட்டிகள் விழுப்புரம் மாவட்டத்தினை சேர்ந்த அரசு பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ மாணவர்க ளிடையே நடத்தப்பட்டது.

    மாணவ மாணவியர்கள் ஒவ்வொருவரும் புத்தகம் வாசி க்கும் பழக்கத்தினை தொடர்ந்து கடைபிடித்திட வேண்டும். ஏனென்றால், புத்தகம் ஒன்றே தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் என்பதால் ஒவ்வொருவரும் கட்டாயம் நூலகத்திற்கு சென்று வாசிப்பு திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட மைய நூலகத்திற்கு சாலை வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி அமைக்க விரைந்து நடவ டிக்கை மேற்கொள்ள ப்படும். மேலும், நூலகத்திற்கு மாணவ மாணவி யர்கள் டிஜிட்டல் முறையான கணினி நூலகம் அமைத்திடும் வகையில் தன்னார்வலர்கள் மூலம் அமைத்திட உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார். 2-ம் கருவறை நூலகம், வாசித்தேன் வளர்ந்தேன், மேல்நிலை வாழ்வுக்கு உயர்வு தருவது வாசிப்பு என்ற தலைப்புகளில் நடந்த கட்டுரை போட்டி, பசுமை இந்தியா கனவு இந்தியா என்ற துலைப்பில் நடந்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றி தழ்கள் வழங்கப்பட்டதுஇதில் கூடுதல் கலெக்டர் ஜெய் நாராயணன், விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செ ல்வி பிரபு, விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி, மாவட்ட மைய நூலகர் இளஞ்செழியன், நூலகர் வேல்முருகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில்2-வது புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
    • நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகம் வாசித்து பழக வேண்டும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விழாவில் பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகரில்2-வது புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சீனிவாசன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    பின்னர் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் பரதநாட்டியம், சிலம்பம், தப்பாட்டம், ஓவியம், நாதஸ்வரம், கரகாட்டம், தெருக்கூத்து, வாய்ப்பாட்டு, நாடகம், கிராமிய பாடல், மரக்கால் ஆட்டம், தவில், ராஜா ராணி ஆட்டம், தவில், வில்லிசை, எருது கட்டும் மேளம் உள்ளிட்ட கலை களில் சிறந்து விளங்கிய மொத்தம் 30 கலை ஞர்களுக்கு 2022-23-ம் ஆண்டு மற்றும் 2023-24-ம் ஆண்டுக்கான கலை இளமணி, கலை வளர்மணி, கலைச்சுடர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி ஆகிய விருதுகள், பொற்கிழிகளை அமைச்சர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 2-வது முறையாக கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள பொருட் காட்சி மைதானத்தில் 16.11.2023 முதல் 27.11.2023 வரை 12 நாட்களுக்கு மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. நமக்கு பொது அறிவு, பழைய நினைவுகள், நிகழ்ச்சிகள், புதிய கவிதைகள் இதெல்லாம் கிடைப்பதற்கு புத்தகங்கள் தான் சரியான ஒரு தேர்வு ஆகும். பய ணங்களின் போதும், நேரம் கிடைக்கும் போதெல் லாம் புத்தகங்கள் வாசித்து பழக வேண்டும்.இப்புத்தக திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் பல்வேறு துறைகள் சார்ந்த புத்தகங்கள், போட்டித்தேர்வு வழிகாட்டி புத்தகங்கள், பாடநூல் புத்தகங்கள் என, லட்சக் கணக்கான புத்த கங்கள் குவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பாரம்பரிய இசைப் பொருட்கள் கண் காட்சி, அறிவோம் பயில் வோம் பயிலரங்கம், தொல்லியல் துறை மூலம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக் கப்பட்ட தொல் பொருட்களின் கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. அனைவரும் இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு, புத்த கங்களை வாங்கி பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், திட்ட இயக்குநர் தண்டபாணி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், விருது நகர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி ராஜ சேகர், சிவகாசி மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
    • இலவச டிக்கெட்டுகளையும் வழங்கினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் அருணா அம்மா மக்கள் குறை தீர்க்க வழிகாட்டு மையம் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    வாடிப்பட்டி அ.தி.மு.க. நகர் செயலாளர், பேரூராட்சி கவுன்சிலர் அசோக் குமார் மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினார். மேலும் வருகிற 28-ந்தேதி ஆண்டிப்பட்டி பங்களா அருகே நடைபெறும் கண்காட்சியை பார்ப்பதற்கு மாணவிகளுக்கு இலவச டிக்கெட்டுகளையும் வழங்கினார்.

    இதேபோன்று வலையபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி பயிலும் 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கும் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    • புத்தகங்கள் வழங்கும் நடைமுறை இன்னும் 3 மாதங்களில் அமலுக்கு வர உள்ளது.
    • அதிக உறுப்பினர்களை ஈர்க்க, அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்டணத்தை ரூ.100-க்கு கீழ் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவிலேயே 2-வது பெரிய நூலகம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த நூலகம் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிறது.

    இதுவரை அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு செல்பவர்கள் அங்கிருந்தே புத்தகங்களை படிக்க முடியும். மேலும் பொது மக்கள் தங்கள் சொந்த நூல்கள் மற்றும் மடிக் கணினியை கொண்டு வந்து படிப்பதற்கான தனிப்பிரிவும் உள்ளது.

    இந்நிலையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பிறகு புத்தகங்களை வாசகர்களுக்கு வழங்க உள்ளது. இனி அண்ணா நூற்றாண்டு நூலக புத்தகங்களை வாசகர்கள் வீடுகளுக்கு எடுத்து சென்று படிக்கலாம். புத்தகங்கள் வழங்கும் நடைமுறை இன்னும் 3 மாதங்களில் அமலுக்கு வர உள்ளது. 6 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை கொண்டுள்ள இந்த நூலகம் அதில் இருந்து புத்தகங்களை வாசகர்களுக்கு கொடுக்கிறது. அங்குள்ள பிரதிகளின் எண்ணிக்கை, விலை மற்றும் கிடைக்கும் நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் புத்தகங்கள் பிரிக்கப்பட்டு வாசகர்களுக்கு வழங்கப்படும். மற்றும் புத்தகங்களில் இருந்து 1 லட்சம் புத்தகங்களை மட்டும் உறுப்பினர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    புத்தகங்களை தனித் தனியாக பிரித்த பிறகு ஒவ்வொரு தளத்திலும் உறுப்பினர்களுக்கு வழங்கும் பிரிவு தொடங்கப்படுகிறது.

    இந்த நூலகத்தில் சட்டம், மருத்துவம், பொறியியல், உளவியல், சமூகவியல், மதம், தத்துவம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் முன்னணி வெளியீட்டாளர்களின் புத்தகங்கள் அதிக அளவில் உள்ளன.

    பிரெய்லி பிரிவில் 1500 புத்தகங்கள் உள்ளன. தற்போது உறுப்பினர் கட்டணம் ரூ.2500 ஆகும். ஆண்டு சந்தா கட்டணம் ரூ.100 ஆகும்.

    இந்த நூலகம் குடும்ப உறுப்பினர்களுக்கு சலுகைகளையும், முதியோர்கள் மற்றும் மாணவர்களுக்கு குறைந்த கட்டணங்களையும் விதிக்க உள்ளது. அதிக உறுப்பினர்களை ஈர்க்க, அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்டணத்தை ரூ.100-க்கு கீழ் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.

    மேலும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 300 பேர் பார்க்கும் வகையிலான திறந்தவெளி தியேட்டரும் விரைவில் திறக்கப்பட உள்ளது.

    இதில் நாடகம், இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் நடத்த வசதியாக இருக்கும். விரைவில் கூடுதல் புத்தகங்களையும் அதன் இ-புத்த கங்களின் சேகரிப்பையும் தொடங்க உள்ளது. மேலும் இங்கு கேண்டீன் தொடங்குவதற்கான டெண்டர் பணிகளும் நடந்து வருகிறது.

    • ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.
    • மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்க ப்பட்டது.

    தஞ்சாவூர்:

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை செவித்திறன் குறைபா டுடையோர் மேல்நிலை ப்பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தலை மையாசிரியர் சக்கரவர்த்தி, ஜோதி அறக்கட்டளை குழுவினரிடம் இருந்து கல்வி உபகரணங்களை பெற்றுக்கொண்டனர்.

    முன்னதாக செவித்திறன் குறைபாடுடைய மாணவ- மாணவிகள், தங்களது ஆசிரியர்களுக்கு மலர்கள், இனிப்புகள் கொடுத்து ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்தனர்.

    பின்னர், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    மேலும், அனைத்து ஆசிரி யர்களுக்கும், பணியா ளர்களுக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து, மாணவர்கள் அனைவரு க்கும் நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்க ப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பா ர்வையாளர் கல்யாணசு ந்தரம் உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 900 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
    • நிகழ்ச்சியில் தமிழாசிரியர்கள் வே. சின்னராசு, ராசேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    உடுமலை:

    உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 900 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு பள்ளி நூலகத்தில் தமிழ் ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தேன் சிட்டு சிறார் இதழ் மூலம் வாசிப்புப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

    மாணவர்கள் படித்து பயன் பெறும் வகையில் பள்ளி நூலகத்திற்கு திருப்பூர் தமிழினி அமைப்பின் சார்பில் தமிழ் அறிவோம் என்னும் இலக்கண நூல்களின் தொகுப்பு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நூல்களை கவிஞர் நா. மகுடேஸ்வரன் வழங்கியுள்ளார். பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூல்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ப. விஜயா நூல்களை வழங்க நூலகப் பொறுப்பாசிரியர் மரகதம் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் தமிழாசிரியர்கள் வே. சின்னராசு ,ராசேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    ×