search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலை இலக்கிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
    X

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    கலை இலக்கிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

    • கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் தங்க.குழந்தைவேலு தலைமை வகித்தார்.
    • இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழுடன் புத்தகம், எழுதுபொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு நக்கீரனார் பள்ளியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ -மாணவியர்களுக்கு பரிசளிப்பு பாராட்டு விழா நடைபெற்றது.கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் தங்க .குழந்தைவேலு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில்ஊராட்சி முன்னாள் தலைவர் சிவகுரு.பாண்டியன் , பள்ளிக் குழுத் தலைவர் தமிழரசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவராமன்,பள்ளியின் முகவர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பெருமன்ற அமைப்பின் மாவட்டத் தலைவர் கவிஞர் புயல் குமார், செயலாளர் அம்பிகாபதி, மாவட்ட துணைத் தலைவர் பார்த்தசாரதி, தலைமையாசியர் (பொ) உஷா, ஆசிரியர்கள் சத்தியசிவம், தருமலிங்கம், பூமிநாதன், கார்த்திகேயன், கவிஞர் கெளதம் - சுகிதா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழுடன் புத்தகம், எழுதுபொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    Next Story
    ×