search icon
என் மலர்tooltip icon

    லட்சத்தீவு

    • லட்சத்தீவுகள் அதிக கப்பல் நிறுவனங்களை ஊக்குவிக்க முயல்கிறது.
    • லட்சத்தீவு பயணத்திற்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து நிறைய அழைப்புகள் வருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜனவரி மாதத்தில் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் எதிராலியால், தீவுப் பகுதிக்கு படையெடுக்கும் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அதிகாரி இம்தியாஸ் முகமது டிபி தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடியின் வருகையின் தாக்கம் குறித்து இம்தியாஸ் மேலும் கூறுகையில், " பிரதமர் மோடியின் லட்சத்தீவு வருகைக்கு பிறகான தாக்கம் மிகப்பெரியது. லட்சத்தீவு பயணத்திற்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து நிறைய அழைப்புகள் வருகிறது.

    தேசிய சுற்றுலா அரங்கம் மற்றும் சர்வதேச சுற்றுலா சந்தை ஆகிய இரண்டிலும் லட்சத்தீவு விசாரணைகளைப் பெறுகிறது.

    லட்சத்தீவுகள் அதிக கப்பல் நிறுவனங்களை ஊக்குவிக்க முயல்கிறது. லட்சத்தீவில் சில விமான நிறுவனங்கள் செயல்படுவதால், இந்தியாவுடனான இணைப்புச் சிக்கல் பற்றி, விமான இணைப்பு நெறிப்படுத்தப்பட்டால், அது சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும்.

    இதற்கிடையில், மும்பையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி அமன் சிங், "நாங்கள் லட்சத்தீவுக்கு வர நீண்ட நாட்களாக விரும்பினோம், ஆனால் தீவுடன் தொடர்புடைய பல கட்டுக்கதைகள் இருந்தன, ஆனால் பிரதமர் மோடியின் வருகையால் செல்வது சாத்தியமாகும்" என்று கூறினார்.

    இதற்கிடையே, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட லட்சத்தீவு தொகுதிக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    543 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும்.

    • பிரதமர் மோடியின் வருகைக்கு பிறகு, லட்சத்தீவு செல்பவர்களின் வருகை அதிகரிப்பு
    • மாலத்தீவுகளுக்கான விமானங்கள் மற்றும் டிக்கெட்டுகளை ரத்துசெய்யுமாறு பயணர்கள் கமெண்ட்

     பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சமீபத்தில் லட்சத்தீவு சென்றிருந்தார். அப்போது அந்த தீவின் அழகிய கடற்கரைகள், சாகச பொழுதுப்போக்கு தொடர்பான வீடியோ, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டார். இந்த வீடியோ, புகைப்படங்கள் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலரது கவனத்தை ஈர்த்தது. உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடியின் வீடியோ, புகைப்படங்களை லைக்' செய்துள்ளனர்.

    அதனை தொடர்ந்து, ஆன்லைன் பயண நிறுவனமான மேக் மை ட்ரிப் தனது எக்ஸ் பக்கத்தில், பிரதமர் மோடி லட்சத்தீவு வந்ததை தொடர்ந்து, லட்சத்தீவு தொடர்பான தேடல்கள் 3,400 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    மேக் மை ட்ரிப்-ன் இந்த பதிவு, ஒரு மணி நேரத்திற்குள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. பிரதமரின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் விமர்சனம் தெரிவித்ததால், "மாலத்தீவுகளுக்கான விமானங்கள் மற்றும் டிக்கெட்டுகளை ரத்துசெய்யுமாறு பயணர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த மேக் மை ட்ரிப்-ன் தலைமை நிர்வாக அதிகாரி நிஷாந்த் பிட்டி, "எங்கள் நிறுவனம் முற்றிலும் உள்நாட்டு நிறுவனம். பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்த மாலத்தீவு அதிகாரிகளின் சர்ச்சை கருத்துக்கு மத்தியில், மாலத்தீவுக்கான எந்த முன்பதிவையும் ஏற்க மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம். அயோத்தி மற்றும் லட்சத்தீவுகள் சர்வதேச இடங்களாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.

    இந்தியாவில் சர்வதேச சுற்றுலா பயணிகளின் விருப்பத் தேர்வாக கோவா கடற்கரை உள்ளது. தற்போதைய சூழலில் துபாய், மாலத்தீவு, கோவா கடற்கரைகளை பின்னுக்குத் தள்ளி உலகத்தின் கவனத்தை லட்சத்தீவு ஈர்த்துள்ளது.

    • திருச்சி பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றடைந்தார்.
    • அங்கு பேசிய பிரதமர் மோடி, லட்சத்தீவின் வளர்ச்சிக்கு இந்தியா துணைநிற்கும் என்றார்.

    அகாட்டி:

    திருச்சி பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றடைந்தார். அங்கு நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    லட்சத்தீவு பல வரலாற்று நிகழ்வுகளைச் சுமந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு நீண்ட காலமாக லட்சத்தீவுகளின் உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை.

    கப்பல் போக்குவரத்து இந்த இடத்தின் உயிர்நாடியாக இருந்தாலும் இங்குள்ள துறைமுக உள்கட்டமைப்பு பலவீனமாகவே உள்ளது. சுகாதாரம், கல்வி, பெட்ரோல், டீசல் என பல பிரச்சினைகளை இங்குள்ள மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

    இந்த சவால்களை எல்லாம் நம் அரசு இப்போது எதிர்கொள்கிறது. பல துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கி வருகின்றன. லட்சத்தீவின் வளர்ச்சிக்கு இந்திய அரசு எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்தார்.

    • ஆகஸ்ட் 10 தேதி லட்சத்தீவு நிர்வாகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது
    • இந்த அறிவுறுத்தல்களுக்கு இணங்காத செயல்கள் கல்வித்துறையால் தீவிரமாக பார்க்கப்படும்

    கேரளத்தின் கடற்கரையோரம் லக்கடிவ் கடல் பகுதியில் (Laccadive Sea) உள்ள 36 தனித்தனி தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக்கூட்டம், லட்சத்தீவு. இது இந்தியாவிற்கு சொந்தமானது.

    இந்தியாவின் யூனியன் பிரதேசங்களிலேயே சிறியதான இதில் வசிக்கும் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுபவரால் இது நிர்வகிக்கப்படுகிறது. இதன் தற்போதைய நிர்வகிப்பாளர் ப்ரஃபுல் கோடா பட்டேல்.

    பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 10 தேதி லட்சத்தீவு நிர்வாகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அங்கு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பெல்ட், டை, ஷூ மற்றும் சாக்ஸ் உள்ளிடக்கிய பள்ளி சீருடைகளின் புதிய வடிவம் ஒன்றை கட்டாயமாக்கியுள்ளது.

    அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

    "பள்ளி மாணவ மாணவியர்கள் சீருடை அணிவதால் அவர்களிடையே ஒரு உறுதித்தன்மை ஏற்படும். இதன் மூலம் மாணவர்களிடையே ஒழுக்க உணர்வும் வளரும். பரிந்துரைக்கப்பட்ட சீருடை வடிவங்களை தவிர வேறு உடைகளை அணிவது பள்ளி மாணவர்களை பாதிக்கும். இந்த முடிவு, மாணவர்கள், பெற்றோர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து சம்பந்தபட்டவர்களிடம் இருந்தும் பெரும் பாராட்டை பெற்றுள்ளது."

    "ஒவ்வொரு மாணவ மாணவியரும் குறிப்பிட்டுள்ள சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும். இந்த சீருடை முறையை தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பள்ளிகளில் அனைத்து வேலை நாட்களிலும் மாணவ மாணவியர் கண்டிப்பாக கடைபிடிப்பதை பள்ளி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த அறிவுறுத்தல்களுக்கு இணங்காத செயல்கள் கல்வித்துறையால் தீவிரமாக பார்க்கப்படும்," இவ்வாறு அந்த அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த புதிய உத்தரவின்படி, 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் செக் டிசைனில் அரை பேண்ட் மற்றும் வான் நீல நிறத்தில் அரைக்கை சட்டையும், அவ்வகுப்பு வரை உள்ள மாணவியர் செக் டிசைனில் பாவாடையும், வான் நீல நிறத்தில் அரைக்கை சட்டையும் அணிய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    அதே போல் 6-இல் இருந்து 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கடல் நீல நிறத்தில் முழு பேண்டும், வான் நீல நிற அரைக்கை சட்டையும், மாணவியர்கள் கடல் நீல நிறத்தில் பாவாடையும், வான் நீல நிறத்தில் அரைக்கை சட்டையும் அணிய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    "இது லட்சத்தீவில் வசித்து வருபவர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை அழிப்பதாக உள்ளது" என்று லட்சத்தீவு காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹம்துல்லா சயீத் குற்றம் சாட்டினார்.

    இந்த புதிய உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இதற்கு எதிராக மாணவ-மாணவியர்களின் துணையுடன் வகுப்பு புறக்கணிப்பு உட்பட கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க போவதாக எச்சரித்துள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பாக கர்நாடகாவில் பள்ளி சீருடையின் காரணமாக ஒரு போராட்டம் வெடித்ததும், அச்சிக்கல் தற்போது நீதிமன்றத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    ×