search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lakshadweep"

    • லட்சத்தீவுகள் அதிக கப்பல் நிறுவனங்களை ஊக்குவிக்க முயல்கிறது.
    • லட்சத்தீவு பயணத்திற்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து நிறைய அழைப்புகள் வருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜனவரி மாதத்தில் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் எதிராலியால், தீவுப் பகுதிக்கு படையெடுக்கும் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அதிகாரி இம்தியாஸ் முகமது டிபி தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடியின் வருகையின் தாக்கம் குறித்து இம்தியாஸ் மேலும் கூறுகையில், " பிரதமர் மோடியின் லட்சத்தீவு வருகைக்கு பிறகான தாக்கம் மிகப்பெரியது. லட்சத்தீவு பயணத்திற்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து நிறைய அழைப்புகள் வருகிறது.

    தேசிய சுற்றுலா அரங்கம் மற்றும் சர்வதேச சுற்றுலா சந்தை ஆகிய இரண்டிலும் லட்சத்தீவு விசாரணைகளைப் பெறுகிறது.

    லட்சத்தீவுகள் அதிக கப்பல் நிறுவனங்களை ஊக்குவிக்க முயல்கிறது. லட்சத்தீவில் சில விமான நிறுவனங்கள் செயல்படுவதால், இந்தியாவுடனான இணைப்புச் சிக்கல் பற்றி, விமான இணைப்பு நெறிப்படுத்தப்பட்டால், அது சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும்.

    இதற்கிடையில், மும்பையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி அமன் சிங், "நாங்கள் லட்சத்தீவுக்கு வர நீண்ட நாட்களாக விரும்பினோம், ஆனால் தீவுடன் தொடர்புடைய பல கட்டுக்கதைகள் இருந்தன, ஆனால் பிரதமர் மோடியின் வருகையால் செல்வது சாத்தியமாகும்" என்று கூறினார்.

    இதற்கிடையே, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட லட்சத்தீவு தொகுதிக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    543 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும்.

    • பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி அரசு முறை பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார்.
    • மாலத்தீவு அமைச்சர்கள் பேசியதை பிரதமர் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதாக மல்லிகார்ஜுன கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி அரசு முறை பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள கடற்கையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அத்துடன் "சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம்" என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பிரதமரின் பயணம் காரணமாக இரண்டு நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத்தீவு தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது

    இதனை தொடர்ந்து, மாலத்தீவு துணை அமைச்சர்கள் மரியம்ஷியுனா, அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப் ஆகியோர், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதனை தொடர்ந்து மூன்று அதிகாரிகளும் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

    இது தொடர்பாக, காங்கிரஸ்  தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வந்த பின்னர், அனைத்து விஷயங்களையும் தனிப்பட்ட முறையிலேயே எடுத்துக்கொள்கிறார் என தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச அளவில் நாம், நமது அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேண வேண்டும். காலத்துக்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும். அண்டை நாட்டினரை நம்மால் மாற்ற முடியாது" என்று தெரிவித்தார்.

    • பிரதமர் மோடியின் வருகைக்கு பிறகு, லட்சத்தீவு செல்பவர்களின் வருகை அதிகரிப்பு
    • மாலத்தீவுகளுக்கான விமானங்கள் மற்றும் டிக்கெட்டுகளை ரத்துசெய்யுமாறு பயணர்கள் கமெண்ட்

     பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சமீபத்தில் லட்சத்தீவு சென்றிருந்தார். அப்போது அந்த தீவின் அழகிய கடற்கரைகள், சாகச பொழுதுப்போக்கு தொடர்பான வீடியோ, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டார். இந்த வீடியோ, புகைப்படங்கள் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலரது கவனத்தை ஈர்த்தது. உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடியின் வீடியோ, புகைப்படங்களை லைக்' செய்துள்ளனர்.

    அதனை தொடர்ந்து, ஆன்லைன் பயண நிறுவனமான மேக் மை ட்ரிப் தனது எக்ஸ் பக்கத்தில், பிரதமர் மோடி லட்சத்தீவு வந்ததை தொடர்ந்து, லட்சத்தீவு தொடர்பான தேடல்கள் 3,400 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    மேக் மை ட்ரிப்-ன் இந்த பதிவு, ஒரு மணி நேரத்திற்குள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. பிரதமரின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் விமர்சனம் தெரிவித்ததால், "மாலத்தீவுகளுக்கான விமானங்கள் மற்றும் டிக்கெட்டுகளை ரத்துசெய்யுமாறு பயணர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த மேக் மை ட்ரிப்-ன் தலைமை நிர்வாக அதிகாரி நிஷாந்த் பிட்டி, "எங்கள் நிறுவனம் முற்றிலும் உள்நாட்டு நிறுவனம். பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்த மாலத்தீவு அதிகாரிகளின் சர்ச்சை கருத்துக்கு மத்தியில், மாலத்தீவுக்கான எந்த முன்பதிவையும் ஏற்க மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம். அயோத்தி மற்றும் லட்சத்தீவுகள் சர்வதேச இடங்களாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.

    இந்தியாவில் சர்வதேச சுற்றுலா பயணிகளின் விருப்பத் தேர்வாக கோவா கடற்கரை உள்ளது. தற்போதைய சூழலில் துபாய், மாலத்தீவு, கோவா கடற்கரைகளை பின்னுக்குத் தள்ளி உலகத்தின் கவனத்தை லட்சத்தீவு ஈர்த்துள்ளது.

    • லட்சத் தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் இந்தியாவின் முயற்சி என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.
    • 3 பேரை மாலத்தீ அரசு சஸ்பெண்டு செய்தது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக கடந்த 2-ந்தேதி லட்சத்தீவு சென்றிருந்தார். சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது கருதப்பட்டது.

    தன்னுடைய பயணம் குறித்த அனுபவத்தை எக்ஸ் தளத்தில் மோடி பகிர்ந்தார். லட்சத்தீவு என்பது அமைதியும், அழகும் நிறைந்த லட்சத்தீவு மனதை மயக்குவதாக உள்ளது. நீங்கள் சாகசத்தை விரும்புபவராக இருந்தால் உங்களின் பயண பட்டியலில் லட்சத்தீவு இடம் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார். அவர் கடற்கரையில் நடைப் பயிற்சி மேற்கொண்டது, கடலுக்கு அடியில் நீந்தும் சாகசம் ஆகியவற்றின் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

    இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதோடு இணைய தள தேடலில் லட்சத்தீவு கவனத்தை ஈர்த்தது. மாலத் தீவுக்கு போட்டியாக லட்சத் தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் இந்தியாவின் முயற்சி என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. இதையடுத்து மாலத்தீவு மந்திரிகள் பிரதமர் மோடியை விமர்சித்து இருந்தனர்.


    பிரதமர் மோடியை கோமாளி, பொம்மை என்று மாலத்தீவு மந்திரி மரியம் விமர்சித்து இருந்தார். மேலும் 2 மந்திரிகளும் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். இதற்கு இந்தியா தனது எதிர்ப்பை கடுமையாக தெரிவித்தது.

    இதை தொடர்ந்து பிரதமர் மோடியை இழிவாக விமர்சனம் செய்த மாலத்தீவு மந்திரிகளான மால்ஷா ஷெரீப், மரியம் சியுனா, அப்துல்லா மசூம் மஜித் ஆகிய 3 பேரை மாலத்தீ அரசு சஸ்பெண்டு செய்தது.

    இந்த நிலையில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தது தொடர்பாக மாலத்தீவு தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியில் உள்ள மாலத்தீவு தூதரான இப்ராகிம் ஷஹிப்புக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

    • இரு நாட்டு உறவுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி இருக்கிறது.
    • இந்தியர்கள் நியாயமான கோபத்தில் உள்ளனர்.

    மாலே:

    பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சத்தீவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். ஆழ்கடலில் நீச்சல் பயிற்சியிலும் ஈடுபட்டார். இதையடுத்து தனது பயண அனுபவம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்கள் தெரிவித்து இருந்தார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து இருந்தார்.

    இதனை விமர்சிக்கும் வகையில் மாலத்தீவு மந்திரிகள் மரியம் ஷியூனா, மல்சா ஷரீப், அப்துல்லா மஹ்சூம் மஜீத் ஆகிய 3 பேரும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். சுற்றுலாவை பொறுத்தவரை மாலத்தீவுடன் இந்தியா போட்டியிட முடியாது என்பது போன்ற கருத்துகளை தெரிவித்தனர். இது இரு நாட்டு உறவுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி இருக்கிறது.

    மந்திரிகளின் இந்த கருத்துக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத், மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு இந்தியா தரப்பில் விளக்கமும் கேட்கப்பட்டது. இது மாலத்தீவு அதிபர் முகமது முய்சுக்கு நெருக்கடியை கொடுத்தது.


    மந்திரிகளின் கருத்து அரசின் கருத்து இல்லை என்றும் அது அவர்களின் தனிப்பட்ட கருத்து என அந்நாட்டு அரசு தெரிவித்தது.

    இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை தெரிவித்த 3 மந்திரிகளையும் சஸ்பெண்டு செய்து மாலத்தீவு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த சூழ்நிலையில் மாலத்தீவின் முன்னாள் துணை சபாநாயகரும் தற்போதைய எம்.பி.யுமான ஈவா அப்துல்லா அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    கருத்துக்கள் மீதான சீற்றம் புரிகிறது. இந்தியர்கள் நியாயமான கோபத்தில் உள்ளனர். இந்த கருத்துக்கள் மூர்க்கத்தனமானது. வெட்கக் கேடானது. இந்திய மக்களிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். விடுமுறையை கழிக்க மாலத்தீவுக்கு திரும்பி வாருங்கள் என இந்திய மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார்.
    • மோடி பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் சர்ச்சை கருத்து.

    இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பயணம் குறித்த அனுபவத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார். அதில் "லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று அது" என பதிவிட்டிருந்தார்.

    மேலும், லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் அரவணைப்பையும் கண்டு நான் இன்னமும் பிரம்மிப்பில் இருக்கிறேன். அகத்தி, பயங்காரம், கரவட்டி ஆகிய இடங்களுக்கு சென்று மக்களோடு உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி கூறுகிறேன் என தெரிவித்திருந்தார்.

    பிரதமரின் இந்த பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் சர்ச்சைக்குரிய வகையில் எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டார். 

    அவர் கூறியதாவது, "இந்தியா மாலத்தீவை குறிவைக்கிறது என்றும், கடற்கரை சுற்றுலாவில் மாலத்தீவுடனான போட்டியில் இந்தியா பல சவால்களை சந்திக்க வேண்டியதிருக்கும்" என கூறினார். மேலும் சில மாலத்தீவு அமைச்சர்களும் மோடியின் பயணம் குறித்து கேலி செய்யும் விதமாக கருத்து பதிவிட்டிருந்தனர்.

    பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்த மாலத்தீவு அமைச்சரின் ட்வீட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் இந்தியர்கள் குறித்து விமர்சன பதிவுகளை வெளியிட்ட மரியம் ஷுயினா, மால்ஷா ஷரீப் மற்றும் ஹாசன் சிகான் ஆகிய 3 அமைச்சர்களை பணியிடை நீக்கம் செய்து மாலத்தீவு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    • பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு வந்து சென்றதை தொடர்ந்து மாலத்தீவு அமைச்சரின் எக்ஸ் பக்க பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது
    • மாலத்தீவுக்கு எதிராக லட்ச தீவை புகழ்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் திரை பிரபலங்கள்

    இந்தியாவில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பயணம் குறித்த அனுபவத்தை புகைப்படங்களுடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார். இதனைத்தொடர்ந்து, இந்தியா மாலத்தீவை குறிவைத்துள்ளது என சர்ச்சைக்குரிய வகையில் மாலத்தீவு அமைச்சர் பதிவிட்டிருந்தார்.

    இதன் எதிரொலியாக, திரை பிரபலங்கள் பலரும் மாலத்தீவுக்கு எதிராக லட்ச தீவை புகழ்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறி கருத்துகளை அனுப்பும் மாலத்தீவைச் சேர்ந்த முக்கிய பொது நபர்களின் கருத்துக்களைக் கண்டேன். அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாட்டுக்கு இப்படிச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் அவர்களிடம் நல்லவர்களாக இருக்கிறோம். அதேசமயம் இப்படியான வெறுப்பை நாம் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்? என பதிவிட்டிருந்தார். மேலும், நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். அதன் அழகை வியந்து பாராட்டியிருக்கிறேன். ஆனால், கண்ணியம் மிகவும் முக்கியமானது. இந்திய தீவுகளை ஆராய்ந்து நமது சொந்த சுற்றுலாவை ஆதரிப்போம்" என தெரிவித்திருந்தார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டூல்கர் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "சிந்துதுர்க் பகுதியில் எனது 50வது பிறந்தநாளை கொண்டாடி 250 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. நாம் கேட்பதை விட அதிகமாக கொடுக்கக்கூடியது இந்த கடல் நகரம். அற்புதமான விருந்தோம்பலுடன் இணைந்த அழகிய இடங்கள் நினைவுகளின் பொக்கிஷத்தை நமக்கு கொடுத்துச் செல்லும். இந்தியா அழகான கடற்கரைகள் மற்றும் அழகிய தீவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்

    நடிகர் சல்மான் கான், "லட்சத்தீவின் அழகான சுத்தமான மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளில் நமது பிரதமர் நரேந்திர மோடியைப் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. இதன் சிறப்பான அம்சம் என்னவென்றால், அது இந்தியாவில் உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

    நடிகை ஷ்ரத்தா கபூர், "பழமையான அழகிய கடற்கரையையும், உள்ளூர் கலாசாரத்தையும் உள்ளடக்கிய லட்சத்தீவில் எனது விடுமுறை நாட்களை செலவழிக்க ஆவலாக உள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.

    • சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார்
    • மாலத்தீவு அதிபராக முகமது முய்சு பொறுப்பேற்ற பிறகு இந்தியாவுக்கும் - மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது

    பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்த மாலத்தீவு அமைச்சரின் ட்வீட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பயணம் குறித்த அனுபவத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார். அதில் "லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று அது" என பதிவிட்டிருந்தார்.

    மேலும், லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் அரவணைப்பையும் கண்டு நான் இன்னமும் பிரம்மிப்பில் இருக்கிறேன். அகத்தி, பயங்காரம், கரவட்டி ஆகிய இடங்களுக்கு சென்று மக்களோடு உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி கூறுகிறேன் என தெரிவித்திருந்தார்.

    பிரதமரின் இந்த பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் சர்ச்சைக்குரிய வகையில் எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, இந்தியா மாலத்தீவை குறிவைக்கிறது என்றும், கடற்கரை சுற்றுலாவில் மாலத்தீவுடனான போட்டியில் இந்தியா பல சவால்களை சந்திக்க வேண்டியதிருக்கும் என கூறியுள்ளார்.

    இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் முக்கிய கடல்சார் அண்டை நாடாக மாலத்தீவு உள்ளது. இந்த நிலையில், மாலத்தீவு அமைச்சரின் இந்த பதிவின் மூலம் இந்தியாவுக்கும் - மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மாலத்தீவு அதிபராக  முகமது மூயிஸ் பதவியேற்ற பிறகு, இந்திய ராணுவத்தை வெளியேற்ற உறுதியளித்தது குறிப்பிடதக்கது. 

    • பிரதமர் மோடி புகைப்படங்களுடன் பதிவுகளும் வெளியிட்டுள்ளார்.
    • தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

    திருச்சி பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி கடந்த 2ம் தேதி லட்சத்தீவு சென்றடைந்தார். அங்கு நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    பின்னர், நாடு திரும்பிய பிரதமர் மோடி லட்சத்தீவில் தான் அனுபவித்த அழகிய தருணங்கள் குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். 

    மேலும், பிரதமர் மோடி புகைப்படங்களுடன் பதிவுகளும் வெளியிட்டுள்ளார்.

    அதில் பிரதமர் மோடி," சமீபத்தில், லட்சத்தீவு மக்கள் மத்தியில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அதன் மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன்.

    அகத்தி, பங்காரம், கவரத்தி போன்ற பகுதிகளில் மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

    அழகிய கடற்கரைகளில் அந்த அதிகாலை நடைப்பயணங்களும் தூய பேரின்பத்தின் தருணங்களாக இருந்தன.." என குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், "ஒருவருக்குள் உள்ள சாகச வீரரை வெளிக்கொள்ள விரும்புவோர், உங்கள் பட்டியலில் லட்சத்தீவு இருக்க வேண்டும். 

    அங்கு தங்கியிருந்தபோது, நானும் ஸ்நோர்கெல்லிங் முயற்சித்தேன் - அது என்ன ஒரு உற்சாகமான அனுபவம்!

    இவ்வாறு அவர் தனித்தனி பதிவாக குறிப்பிட்டிருந்தார்.

    • திருச்சி பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றடைந்தார்.
    • அங்கு பேசிய பிரதமர் மோடி, லட்சத்தீவின் வளர்ச்சிக்கு இந்தியா துணைநிற்கும் என்றார்.

    அகாட்டி:

    திருச்சி பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றடைந்தார். அங்கு நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    லட்சத்தீவு பல வரலாற்று நிகழ்வுகளைச் சுமந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு நீண்ட காலமாக லட்சத்தீவுகளின் உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை.

    கப்பல் போக்குவரத்து இந்த இடத்தின் உயிர்நாடியாக இருந்தாலும் இங்குள்ள துறைமுக உள்கட்டமைப்பு பலவீனமாகவே உள்ளது. சுகாதாரம், கல்வி, பெட்ரோல், டீசல் என பல பிரச்சினைகளை இங்குள்ள மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

    இந்த சவால்களை எல்லாம் நம் அரசு இப்போது எதிர்கொள்கிறது. பல துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கி வருகின்றன. லட்சத்தீவின் வளர்ச்சிக்கு இந்திய அரசு எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்தார்.

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • அம்மன் திருவீதி உலா நடந்தது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் நாராய ணமங்கலம் கிராமத்தில் பக்த ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று தமிழ் புத்தாண்டு பிறப்பு முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.

    பக்தர்கள் ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவித்தனர். கோவில் வளாகத்தில் லட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

    இதேபோல் கண்ணமங்கலம் அருகே அழகுசேனை சூளைமேடு பகுதியில் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவிலில் 23ம்ஆண்டாக லட்சதீபம், ஆஞ்சநேயர் வீதி உலா நடைபெற்றது. இரவில் நாடகம் நடைபெற்றது.

    மேலும் 5புத்தூரில் அடங்கிய சின்னப் புத்தூரில் மாரியம்மன் கோவலில் அம்மனுக்கு பால்குட அபிஷேகம், தீபாராதணை நடைபெற்றது.

    மாலையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் இரவில் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்காரம் செய்து அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.

    • பட்ஜெட்டுக்கேற்ப ஏசி, டீலக்ஸ் என தேர்ந்தெடுத்து பயணிக்கலாம்.
    • கொச்சியில் இருந்து 14 முதல் 20 மணி நேர பயணத்தில் இலக்கை அடையலாம்.

    சுற்றிலும் நீலவண்ணத்தில் வானமும், தண்ணீரும் போட்டி போட, அழகிய கடல் அலைகள் வந்து, வந்து செல்லும் அழகை காண இயற்கை பிரியர்களுக்கு எப்போதுமே சலிக்காது. இப்படி இந்தியாவில் உள்ள அழகிய மற்றும் அமைதியான இடங்களில் ஒன்று லட்சத்தீவு.

    இந்தியாவின் எட்டு யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவு ஒன்றாகும். மொத்தம் 36 தீவுகள், 12 பவளப்பாறைகள் மற்றும் மூன்று திட்டுகள் உள்ளன. ஆனால், இவற்றில் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.

    இங்குள்ள இயற்கை அழகை ரசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

    மினிகாய் தீவு, கல்பேனி தீவுகள், கத்மத் தீவுகள், பங்காரம் தீவு மற்றும் தின்னகர தீவு உள்ளிட்டவை மிகவும் பிரபலமான இடங்களாகும்.

    எப்படி அடைவது?

    கேரள மாநிலத்தின் கொச்சி வழியாகத்தான் லட்சத்தீவுக்கு செல்ல முடியும். கொச்சியிலிருந்து லட்சத்தீவுக்கு விமானம் மற்றும் கப்பல் வசதி உள்ளது.

    லட்சத்தீவுக்குள் நேரடியாக நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. கொச்சியில் உள்ள லட்சத்தீவு நிர்வாகத்தினரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.

    இதற்கு முதலில் அனுமதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து, உங்களின் அடையாள ஆவணங்கள் மற்றும் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை இணைத்து உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் உரிய அனுமதி பெற வேண்டும்.

    பின்னர், நுழைவு அனுமதியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அல்லது கொச்சியில் உள்ள வில்லிங்டன் தீவில் அமைந்துள்ள லட்சத்தீவு நிர்வாக அலுவலகத்தில் நேரிலும் பெறலாம்.

    லட்சத்தீவை அடைந்ததும், இந்த நுழைவு அனுமதிப்பத்திரத்தை அங்குள்ள அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    நீங்கள் விமானத்தில் செல்வதாக இருந்தால் முடிந்தளவு உங்களின் பேக்கிங்கை குறைவாக இருக்க திட்டமிடுங்கள்; இங்குள்ள விமானங்கள் சிறியவை மற்றும் குறைந்த திறன் கொண்டவை. எனவே, இதற்கேற்ப உங்களின் லக்கேஜ் இருக்க வேண்டும். கொச்சியில் இருந்து அகத்தி விமான நிலையத்தில் இறக்கி விடப்படுவீர்கள்.

    கப்பல்களில்...

    எம்.வி. கவரட்டி, எம்.வி. மினிகாய், எம்.வி. அமிண்டிவி, எம்.வி. கோரல்ஸ், எம்.வி. லகூன், எம்.வி.லட்சத்தீவு கடல் மற்றும் எம்.வி. அரபிக்கடல் உள்ளிட்ட ஏழு கப்பல்கள் கொச்சியில் இருந்து லட்சத்தீவுக்குச் செல்கின்றன.

    அவரவர் பட்ஜெட்டுக்கேற்ப ஏசி, டீலக்ஸ் என தேர்ந்தெடுத்து பயணிக்கலாம். கொச்சியில் இருந்து 14 முதல் 20 மணி நேர பயணத்தில் இலக்கை அடையலாம்.

    -எம்.எஸ். சீதாராமன்

    ×