search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடியின் லட்சத்தீவுப் பயணத்தின் தாக்கம் மிகப்பெரியது- லட்சத்தீவு சுற்றுலா அதிகாரி
    X

    "பிரதமர் மோடியின் லட்சத்தீவுப் பயணத்தின் தாக்கம் மிகப்பெரியது"- லட்சத்தீவு சுற்றுலா அதிகாரி

    • லட்சத்தீவுகள் அதிக கப்பல் நிறுவனங்களை ஊக்குவிக்க முயல்கிறது.
    • லட்சத்தீவு பயணத்திற்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து நிறைய அழைப்புகள் வருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜனவரி மாதத்தில் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் எதிராலியால், தீவுப் பகுதிக்கு படையெடுக்கும் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அதிகாரி இம்தியாஸ் முகமது டிபி தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடியின் வருகையின் தாக்கம் குறித்து இம்தியாஸ் மேலும் கூறுகையில், " பிரதமர் மோடியின் லட்சத்தீவு வருகைக்கு பிறகான தாக்கம் மிகப்பெரியது. லட்சத்தீவு பயணத்திற்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து நிறைய அழைப்புகள் வருகிறது.

    தேசிய சுற்றுலா அரங்கம் மற்றும் சர்வதேச சுற்றுலா சந்தை ஆகிய இரண்டிலும் லட்சத்தீவு விசாரணைகளைப் பெறுகிறது.

    லட்சத்தீவுகள் அதிக கப்பல் நிறுவனங்களை ஊக்குவிக்க முயல்கிறது. லட்சத்தீவில் சில விமான நிறுவனங்கள் செயல்படுவதால், இந்தியாவுடனான இணைப்புச் சிக்கல் பற்றி, விமான இணைப்பு நெறிப்படுத்தப்பட்டால், அது சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும்.

    இதற்கிடையில், மும்பையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி அமன் சிங், "நாங்கள் லட்சத்தீவுக்கு வர நீண்ட நாட்களாக விரும்பினோம், ஆனால் தீவுடன் தொடர்புடைய பல கட்டுக்கதைகள் இருந்தன, ஆனால் பிரதமர் மோடியின் வருகையால் செல்வது சாத்தியமாகும்" என்று கூறினார்.

    இதற்கிடையே, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட லட்சத்தீவு தொகுதிக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    543 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும்.

    Next Story
    ×