search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourism Officer"

    • லட்சத்தீவுகள் அதிக கப்பல் நிறுவனங்களை ஊக்குவிக்க முயல்கிறது.
    • லட்சத்தீவு பயணத்திற்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து நிறைய அழைப்புகள் வருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜனவரி மாதத்தில் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் எதிராலியால், தீவுப் பகுதிக்கு படையெடுக்கும் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அதிகாரி இம்தியாஸ் முகமது டிபி தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடியின் வருகையின் தாக்கம் குறித்து இம்தியாஸ் மேலும் கூறுகையில், " பிரதமர் மோடியின் லட்சத்தீவு வருகைக்கு பிறகான தாக்கம் மிகப்பெரியது. லட்சத்தீவு பயணத்திற்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து நிறைய அழைப்புகள் வருகிறது.

    தேசிய சுற்றுலா அரங்கம் மற்றும் சர்வதேச சுற்றுலா சந்தை ஆகிய இரண்டிலும் லட்சத்தீவு விசாரணைகளைப் பெறுகிறது.

    லட்சத்தீவுகள் அதிக கப்பல் நிறுவனங்களை ஊக்குவிக்க முயல்கிறது. லட்சத்தீவில் சில விமான நிறுவனங்கள் செயல்படுவதால், இந்தியாவுடனான இணைப்புச் சிக்கல் பற்றி, விமான இணைப்பு நெறிப்படுத்தப்பட்டால், அது சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும்.

    இதற்கிடையில், மும்பையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி அமன் சிங், "நாங்கள் லட்சத்தீவுக்கு வர நீண்ட நாட்களாக விரும்பினோம், ஆனால் தீவுடன் தொடர்புடைய பல கட்டுக்கதைகள் இருந்தன, ஆனால் பிரதமர் மோடியின் வருகையால் செல்வது சாத்தியமாகும்" என்று கூறினார்.

    இதற்கிடையே, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட லட்சத்தீவு தொகுதிக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    543 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும்.

    • திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரியாக இருந்த ஆனந்தன் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரியாக இருந்த ஆனந்தன் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரியாக அரவிந்த்குமார் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அலுவலக அறையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

    இவர் இதற்கு முன் மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை உள்ளடக்கிய பூம்புகார் சுற்றுலா அதிகாரியாக இருந்தார். கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட சுற்றுலா அதிகாரியாக ஏற்கனவே பணியாற்றியுள்ளார். திருப்பூர் மாவட்ட சுற்றுலா அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வகித்தபோது, மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டார்.

    திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அரவிந்த்குமார் கூறும்போது, 'ஆண்டிப்பாளையத்தில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் முதன்மை சுற்றுலா தலங்களாக உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும் சுற்றுலா தொழில் ஆபரேட்டர்கள், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு சுற்றுலா தொழில் மூலம் வாழ்வாதாரம் பெருக்குவதற்கு உரிய அறிவுரைகள் வழங்க கூட்டம் நடத்தப்படும்' என்றார்.

    ×