என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரிபாபு, மதன், உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொதுச் செயலாளர் ரவி தலைமை தாங்கினார். இதில் பொன்னேரி வட்ட தலைவர் ரவிக்குமார், பொன்னேரி வட்ட செயலாளர் செல்வகுமார், மாவட்ட துணைத்தலைவர் சங்கர், பொன்னேரி வட்ட துணைத் தலைவர் ஸ்டாலின், பொன்னேரி வட்ட துணை செயலாளர் கணேசன், மாவட்ட இணை செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரிபாபு, மதன், உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Next Story






