என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்- முக ஸ்டாலின் வேண்டுகோள்
Byமாலை மலர்28 Nov 2018 7:57 AM GMT (Updated: 28 Nov 2018 7:57 AM GMT)
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான பணிகளில் ஈடுபட வேண்டியதிருப்பதால், ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைக்கும்படி முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #DMK #MKStalin #JactoJio #GajaCyclone
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பல்வேறு நியாயமான நடைமுறைக்கேற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தியும், அப்போராட்டங்களை அ.தி.மு.க. அரசு காதில் போட்டுக் கொள்ளவோ கண்டு கொள்ளவோ செய்யாமல் முற்றிலும் அலட்சியப்படுத்தியதன் விளைவாக, வருகின்ற டிசம்பர் 4-ந் தேதியிலிருந்து காலவரையற்றப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
அ.தி.மு.க. அரசு யாருடையை கோரிக்கைகளையும் அழைத்துப் பேசி நிறைவேற்றும் அரசு அல்ல. போராடினாலும் இந்த அரசு திருந்தப் போவதில்லை. அடிப்படையிலேயே இந்த அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரான அரசு. ஆகவே எத்தனை முறை போராடினாலும் எந்தவகைப் போராட்டமானாலும் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைத்திடப் போவதில்லை; மாறாக மனித சக்தி விரயம் தான் ஏற்படும். இது போன்ற பிரச்சனைகள் அனைத்திற்கும் ஆட்சிமாற்றம் ஒன்றே ஜனநாயக வழி என்பதை மனதில் நிறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், சூழ்நிலைகளின் பின்னணியில் நான் விடுக்கும் இந்த அன்பான வேண்டுகோளை கனிவுடன் ஆராய்ந்து பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதே நேரத்தில், கழக ஆட்சி அமைந்திடும் நல் வாய்ப்பு செயலாக்கம் பெற்றதும், இதுமாதிரி எவ்வித போராட்டங்களும் நடத்தாமலேயே ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் நியாயமான கோரிக்கைகள் குறித்துக் கலந்துபேசி நிறைவேற்றித் தரப்படும் என்பதையும் தி.மு.க.வின் சார்பில் உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #MKStalin #JactoJio #GajaCyclone
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பல்வேறு நியாயமான நடைமுறைக்கேற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தியும், அப்போராட்டங்களை அ.தி.மு.க. அரசு காதில் போட்டுக் கொள்ளவோ கண்டு கொள்ளவோ செய்யாமல் முற்றிலும் அலட்சியப்படுத்தியதன் விளைவாக, வருகின்ற டிசம்பர் 4-ந் தேதியிலிருந்து காலவரையற்றப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் அறவழிப் போராட்டம் முழுக்க முழுக்க நியாயமானது என்றாலும், கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான பணிகளில் ஈடுபட வேண்டியதிருப்பதால், வருகிற டிசம்பர் 4-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அதே நேரத்தில், கழக ஆட்சி அமைந்திடும் நல் வாய்ப்பு செயலாக்கம் பெற்றதும், இதுமாதிரி எவ்வித போராட்டங்களும் நடத்தாமலேயே ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் நியாயமான கோரிக்கைகள் குறித்துக் கலந்துபேசி நிறைவேற்றித் தரப்படும் என்பதையும் தி.மு.க.வின் சார்பில் உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #MKStalin #JactoJio #GajaCyclone
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X