என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது வேலை நிறுத்தம்"

    • இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
    • பேருந்தை இயக்கும் ஷிபு தாமஸ் என்பவர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டுள்ளார்.

    மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்று வரும் பொது வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை சார்ந்த ஓட்டுநர்கள் வராத நிலையில், தற்காலிக பணியாளர்கள் கொண்டு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், அரசு பேருந்நு ஓட்டும் ஓட்டுநர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேருந்தை இயக்குவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    கேரள மாநிலம் பத்தனம்திட்டாவிலிருந்து கொல்லம் செல்லும் பாதையில் பேருந்து சென்று கொண்டிருக்கிறது. அப்போது பேருந்தை இயக்கும் ஷிபு தாமஸ் என்பவர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தாக்குதலின்போது ஏற்படும் காயங்களில் இருந்து தப்பிக்க ஹெல்மெட் அணிந்திருப்பதாக கூறுகிறார்.



    • 13 தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.
    • பேருந்து சேவை பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சென்னை:

    17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்த பொது வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது.

    மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

    தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதனால் பேருந்து சேவை பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் முக்கிய தொழிற்சங்கங்களின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் சென்னையில் இன்று பேருந்து சேவை பாதிக்கப்படாது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே, அரசு பேருந்துகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    மேலும், தொழிற்சங்கள் பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், அதற்குரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று முழுமையாக பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். 

    ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிற்சங்கத்தினர் பொது வேலை நிறுத்தம் முன்னிட்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து பெல் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிற்சங்கத்தினர் பொது வேலை நிறுத்தம் முன்னிட்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து பெல் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் புதிய பணி நியமனம் செய்திட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுபடுத்திட வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்கிட வேண்டும், வேலையின்மையை போக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், குறைந்தபட்ச மாத பென்சன் ரூ.3000 வழங்க வேண்டும், பொதுதுறைகளை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, தொழிலாளர் நலசட்டங்களை திருத்தாதே உள்ளிட்ட 12அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்தனர்.

    இதில் தொழிற்சங்கத்தினர் பாண்டியன், சிவகுமார், கணேஷ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #tamilnews
    ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதன் நினைவு தினத்தை ஒட்டி காஷ்மீரில் போக்குவரத்து, தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. #Kahmir
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஜூலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதியான புர்ஹான் வானி சுட்டு கொல்லப்பட்டார். 

    அவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பயணிகள் பாதுகாப்பினை முன்னிட்டு ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    இதனால் ஸ்ரீநகர்-பத்காம் மற்றும் வடகாஷ்மீரின் பாராமுல்லா ஆகிய பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்படாது.  இதேபோன்று தெற்கு காஷ்மீரின் ஜம்மு பகுதியில் பத்காம்-ஸ்ரீநகர்-அனந்த்நாக்-குவாஜிகண்ட் பகுதியில் இருந்து பனிஹால் செல்லும் ரெயில் சேவையும் தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    காஷ்மீரில் இந்த ஜூலையில் ரெயில் சேவை ரத்து செய்யப்படுவது இது 2வது முறை ஆகும். கடந்த காலங்களில் கல் வீச்சுகள் மற்றும் பிற போராட்டங்களால் ரெயில்கள் பலத்த சேதமடைந்தன. 

    தேச விரோத செயல்களுக்காக துக்தர்-இ-மிலாத் அமைப்பின் தலைவியான ஆசியா அந்த்ரபி மற்றும் அவரது 2 உதவியாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாதிகள் நேற்று ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.  இந்நிலையில், இன்று 2வது நாளாக பொது வேலை நிறுத்தம் தொடருகிறது.
    ×