search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kiranbedi"

    என்.ஆர். காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படும் கவர்னர் கிரண்பேடியை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூ. வலியுறுத்தியுள்ளது. #governorkiranbedi

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதா வது:-

    தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த அசோக் ஆனந்த் தொடர்பான வழக்கில் கோர்ட்டு தண்டனை வழங்கியதை அடுத்து அவரது பதவி தானாக பறிபோனது.

    அவர் பதவி இழந்ததாக சபாநாயகர் விதிமுறைகள் படி அறிவிப்பு வெளியிட்டார். இப்போது அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் அசோக் ஆனந்த் தனது பதவி பறிப்பு சம்பந்தமாக கவர்னரிடம் கொடுத்த மனுவை கவர்னர் ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பி உள்ளார்.

    அதில் யூனியன் பிரதேச சட்ட விதியின்படி சட்டமன்ற உறுப்பினர் பதவியை தகுதி இழப்பு செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. ஜனாதிபதி இதனை விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது, புதுவை பிரதேச விதிகளுக்கு எதிரானது.

    புதுவை அலுவல் விதிகள்படி எம்.எல்.ஏ. தகுதி இழப்பு தொடர்பாக கேள்வி எழுமானால் அமைச்சரவையின் முடிவு படிதான் செயல்பட வேண்டும். ஆனால், முதல்-அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் தெரியாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல் 15.3.2019 அன்று ஜனாதிபதிக்கும், மத்திய உள்துறை செயலாளருக்கும் அனுப்பி உள்ளனர்.

    தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டது தேர்தல் விதிமுறைகளுக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும் மாறானதாகும்.எனவே, இந்திய தேர்தல் ஆணையமும், புதுவை தேர்தல் துறையும் விசாரித்து பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் கவர்னர் கிரண்பேடி பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள என்.ஆர். காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார். எனவே அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். அல்லது தேர்தல் முடியும் வரை அவரை விடுமுறையில் செல்ல உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறியுள்ளோம். இதுதொடர்பாக ஜனாதி பதிக்கும் புகார் மனு அனுப்ப உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

    புதுவை கவர்னர் கிரண்பேடி தேர்தல் விதிமுறைகளை மீறுகிறார் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி புகார் கூறியுள்ளார். #Narayanasamy #kiranbedi

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி நாள்தோறும் டுவிட்டர் வலைதளத்தில் சமூக கருத்துகளை பதிவிடுவது வாடிக்கை. இதேபோல கவர்னர் கிரண்பேடி டுவிட்டர் பக்கத்தில், ஜனநாயக கடமையில் ஓட்டளிப்பது முக்கியமான ஒன்று. இது நாட்டின் குடிமகன்கள் அனைவரின் கடமை. ஒவ்வொரு இந்தியனும் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக உரிமையை நிலைநாட்டும் இந்த கடமையை செய்ய வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

    இந்த பதிவை பிரதமர் மோடிக்கும் ஹேஷ்டாக் செய்திருந்தார். கிரண்பேடியின் பதிவை குறிப்பிட்டு பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில், மக்களின் குரலை வெளிப்படுத்துவதுதான் ஓட்டு. வாக்களிப்பது பற்றிய விழிப்புணர்வை முக்கிய பிரமுகர்கள் விரிவுபடுத்த வேண்டும். உங்கள் குரலை ஓங்கி ஒலியுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள புதுவை முதல்வர் நாராயணசாமியும் டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், கிரண்பேடி பிரதமர் யார்? பா.ஜனதா பிரதமர் யார்? என்பதை அறிந்துகொள்ள வேண்டும். டுவிட்டர் பதிவுகளை வெளியிடும்போது கவனம் வேண்டும். ஒரு அரசு பதவியில் இருந்துகொண்டு அரசியல் செய்யக்கூடாது. உங்களின் தலைவர் பிரதமர். பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் அல்ல. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது ஆகாதா? என குறிப்பிட்டுள்ளார். #Narayanasamy #kiranbedi

    போராட்டத்தின் பிரதிபலனாக புதுவை மக்கள் காங்கிரசுக்கு கை கொடுக்க வேண்டும் என்று நாராயணசாமி பேசியுள்ளார். #narayanasamy #congress #kiranbedi

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை மூலம் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு மாத ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    நெல்லித்தோப்பு தொகுதியில் புதிதாக 295 பேருக்கு முதியோர், விதவை உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது. இதற்கான பயனாளிகளுக்கு ஓய்வூதிய அட்டை மற்றும் முதல் மாத உதவித்தொகை வழங்கும் விழா கீர்த்தி மகாலில் நடந்தது. விழாவுக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். முதல்அமைச்சர் நாராயணசாமி பயனாளிகளுக்கு உதவித் தொகையை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    நான் 29 தொகுதியை ஒரு கண்ணாகவும், நெல்லித் தோப்பு தொகுதியை ஒரு கண்ணாகவும் பாவிப்பேன் என கூறியிருந்தேன். அதன்படி ஒரு கண்ணாக நெல்லித்தோப்பை பார்க்கிறேன். திட்டங்கள் அனைத்தையும் போராடி பெற வேண்டிய நிலையில் அரசு உள்ளது.

    முதியோர் பென்‌ஷனையே 2 ஆண்டுக்கு பிறகு புதிதாக தற்போதுதான் வழங்குகிறோம். அதையும் நெல்லித்தோப்பு தொகுதியில்தான் தொடங்கி உள்ளோம். இலவச அரிசி, சென்டாக் கல்வி உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு நிதி என பல திட்டங்கள் வழங்க வேண்டிய நிலை உள்ளது.

    கவர்னருக்கு எதிராக இரவு- பகலாக பனியில் போராடியதன் விளைவாகத்தான் இதற்கு அனுமதி கிடைத்தது. இன்னும் 2 மாதம் பொறுத்திருங்கள்.

    இந்த நிலைமை மாறும். போராட்டத்திற்கு பிரதிபலனாக எங்களோடு மக்கள் கைகொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் டெல்லி பிரதிநிதி ஜான்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர் பழனி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் யஷ்வந்தையா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். #narayanasamy #congress #kiranbedi

    புதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், கவர்னர் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #governorkiranbedi #narayanasamy

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் யூனியன் பிரதேசமாக உள்ளதால் மற்ற மாநிலங்களை போல் முழு அதிகாரம் வழங்கப்படவில்லை.

    மத்திய அரசின் உள்துறையின் கட்டுப்பாட்டில் புதுவை இயங்கி வருகிறது. எனவே, புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் புதுவை மாநிலம் மீது மத்திய அரசு சமீப காலமாக அதிக அதிகாரம் செலுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும் புதுவை கவர்னர் கிரண்பேடி தனக்குத்தான் கூடுதல் அதிகாரம் இருப்பதாக கூறி நிர்வாக வி‌ஷயங்களில் தலையிட்டு வருகிறார்.

    எனவே, புதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், கவர்னர் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்துவது என்று காங்கிரஸ் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தை எதிர்க் கட்சியான என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.

    டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து இருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 21 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

    இதற்காக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க விரும்பும் தொண்டர்களின் பட்டியல் பெறப்பட்டு அவர்கள் ரெயில் மூலம் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    புதுவையில் இருந்து டெல்லி செல்லும் ரெயிலில் நேற்று முன்தினம் 380 தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர்.

    அவர்களை புதுவை ரெயில் நிலையத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வழியனுப்பி வைத்தனர். இதே போல் காரைக்காலில் இருந்து 40 தொண்டர்கள் டெல்லி சென்றனர்.

    இதையடுத்து நேற்றைய தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் டெல்லி சென்றனர். அங்கு அவர்கள் கரோல் பார்க்கில் உள்ள தனியார் விடுதியில் தங்கினர்.


    இதற்கிடையே புதுவையில் இருந்து டெல்லி சென்ற ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் டெல்லியை அடைந்தது. அங்கு கட்சி தொண்டர்களை புதுவை காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர்.

    டெல்லியில் உள்ள புதுவை, சத்தீஸ்கார், மத்திய பிரதேசம் அரசு விடுதிகள் மற்றும் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

    அங்கிருந்து இன்று காலை 10 மணி அளவில் பஸ்கள் மூலம் ஜந்தர் மந்திர் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். ஜந்தர் மந்திரில் காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

    ஆர்ப்பாட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, கலக்கண்ணன், தி.மு.க. அமைப்பாளர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ. பொழிலன், புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம் மற்றும் கட்சி தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

    சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தனபால், விஜயவேணி ஆகியோரும் பங்கேற்றனர்.

    தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் ராஜா மற்றும் பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையையும், கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆங்கிலத்தில் பதாகைகள் வைத்திருந்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மத்திய மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர். #governorkiranbedi #narayanasamy

    மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய பா.ஜனதா அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்று டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார். #kanimozhi #dmk #centralgovernment

    புதுச்சேரி:

    புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது:-

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றவர். பாராளு மன்றத்தில் சிறப்புடன் பணியாற்றியவர். கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சி தலைவர்களோடு நட்புணர்வோடு பழகக்கூடியவர். அவர் புதுவைக்கு முதல்- அமைச்சராக வருவதை பெருமையாக நினைத்தோம்.

    அவர் மூலம் புதுவைக்கு பல முன்னோடி திட்டங்கள் கிடைக்கும். மத்திய அரசிடம் பேசி பெற்றுத்தருவார் என எதிர்பார்த்தோம். ஆனால் யானைக்கு அங்குசம்போல நாராயாணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி திகழ்கிறார்.

    நடைமுறையில் உள்ள திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை. புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டுவர முடியவில்லை. நாராயணசாமி தனது சாதுர்யத்தால் கவர்னரை எதிர்த்து திறம்பட செயல்பட்டு வருகிறார்.

    கல்வி, சுகாதாரம், சட்டம்- ஒழுங்கு, வளர்ச்சி பெறும் மாநிலம் ஆகியவற்றில் புதுவைக்கு விருது பெற்றது நாராயணசாமியின் திறமைக்கு சான்று.

    தனக்கு சால்வை கொடுத்த அதிகாரியிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டவர் கிரண்பேடி. வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பிய அதிகாரியை கண்டித்து கீழ்த்தரமாக நடந்து கொண்டவர். பா.ஜனதா நாடு முழுவதும் தாங்களே ஆள வேண்டும் என்ற மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர். இதற்காக பா.ஜனதா அல்லாத மாநில அரசுகளை செயல்பட விடாமல் தடுக்கின்றனர்.


    யூனியன் பிரதேசமான புதுவை மத்திய அரசை சார்ந்துதான் உள்ளது. ஆனால் மத்திய அரசு புதுவை, தமிழகத்திற்கு தர வேண்டிய எந்த முக்கியத்துவத்தையும் அளிக்கவில்லை. மாற்றாந்தாய் மனப் பான்மையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய பா.ஜனதா அரசை இதே ஒற்றுமையுடன் வீறுகொண்டு எதிர்ப்போம், வீழ்த்துவோம், வீட்டுக்கு அனுப்புவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #kanimozhi #dmk #centralgovernment

    மாநில அந்தஸ்து கோரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நாளை டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. #narayanasamy #kiranbedi

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவைக்கு நீண்ட பல ஆண்டுகளாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

    நாட்டிலேயே டெல்லியும், புதுவையும் மட்டுமே சட்ட மன்றம் உள்ள யூனியன் பிரதேசமாக திகழ்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் இருந்தாலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அங்கமாகவே புதுவை யூனியன் பிரதேசம் கருதப்படுகிறது.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதுவை சட்ட சபைக்கு மத்திய அரசு நேரடியாக 3 எம்.எல்.ஏ.க் களை நியமித்தது. மத்திய அரசின் நேரடி நியமனம் செல்லும் என ஐகோர்ட்டு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. அதோடு நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் உண்டு என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இது தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொடர்ந்து நீடிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். சட்ட மன்ற ஜனநாயகத்தை கேள்வி குறியாக்கியுள்ளது. அதே நேரத்தில் புதுவை கவர்னராக இருக்கும் கிரண்பேடியும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தனக்கே அதிகாரம் உள்ளது என கூறி மாநில நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார்.


    நியமன எம்.எல்.ஏ. விவகாரம், கவர்னர் கிரண்பேடி நடவடிக்கை ஆகியவற்றால் புதுவை மாநில உரிமைக்கு பங்கம் ஏற்பட்டிருப்பதாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன. மாநில உரிமைகளை பெற மாநில அந்தஸ்தே தீர்வு என ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையில் நடந்த அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    புதுவை மாநில அந்தஸ்து வழங்க வேண்டு. கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்த அனைத்து கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக டெல்லியில் ஜந்தர் மந்தர் முன்பு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு புதுவை அரசியல் கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க புதுவையில் இருந்து டெல்லி செல்லும் வாராந்திர டெல்லி ரெயிலில் 21 அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த 420 தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர். இவர்கள் நாளை அதிகாலை 3 மணியளவில் டெல்லியை அடைகின்றனர்.

    இதற்கிடையே இன்று (வியாழக்கிழமை) முதல்- அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர். டெல்லியில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய மந்திரிகள் மற்றும் எதிர்க் கட்சி தலைவர்களை சந்தித்து மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கின்றனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு டெல்லி சென்றுள்ள அரசியல் கட்சி தொண்டர்கள் தங்குவதற்கு விடுதி, உணவு, போக்குவரத்திற்கு பஸ் வசதி ஆகியவற்றை புதுவையை ஆளும் காங்கிரஸ் கட்சி செய்துள்ளது.

    ஆளும் கட்சிக்கு பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் மாநில அந்தஸ்து விவகாரத்தை பெரிதுபடுத்துவதாக புதுவை சட்டமன்றத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகள் என்.ஆர்.காங்கிரசும், அ.தி.மு.க.வும் குற்றம் சாட்டியது. அதோடு டெல்லி போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் எனவும் அறிவித்தன. இதன்படி என்.ஆர்.காங்கிரசும், அ.தி.மு.க.வும் டெல்லி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை. #narayanasamy #kiranbedi

    கடற்கரையில் குப்பைகளை வீசினாலோ, பொது இடத்தில் சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்க நேரிடும் என்று கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். #PondicherryGovernor #Kiranbedi

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி விட்டு செல்கின்றனர். அவ்வாறு வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பாறை குவியல்களுக்குள் சிக்கி கொள்கின்றன.

    மேலும் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் (கேரி பேக்குகள்) காற்றில் அடித்து செல்லப்பட்டு கடலில் கலக்கிறது.

    அதோடு கடற்கரை பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கலந்து அலங்கோலமாக காட்சி அளிப்பது அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. இதனால் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி நேற்று அதிகாலை கடற்கரை சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடற்கரை சாலை முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக துப்புரவு தொழிலாளர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களை வரவழைத்து துப்புரவு பணியில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து 3 மணி நேரம் கவர்னர் கிரண்பேடி துப்புரவு தொழிலாளர்களுடன் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    இதுகுறித்து கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    புதுவையில் தூய்மை, பாதுகாப்பு, பராமரிப்புக்காக கடற்கரையில் இனி கூடுதலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் கடற்கரையில் கூடுதலாக ஸ்வட்ச் பாரத் துப்புரவு தொழிலாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்.

    கடற்கரையில் குப்பைகளை வீசாமல் இருக்க, ரோந்து செல்லும் போலீசார் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்வார்கள். அதனையும் மீறி குப்பைகளை வீசினாலோ, பொது இடத்தில் சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்க நேரிடும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #PondicherryGovernor #Kiranbedi
    கவர்னர் மாளிகையில் ரூ.85 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி புகார் தெரிவித்துள்ளார். #cmnarayanasamy #puducherrygovernor

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அரசின் வளர்ச்சி திட்டங்களில் பங்கேற்கும் வகையில் சமூக பங்களிப்பு நிதி கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக முதல்-அமைச்சரும், செயலராக மாவட்ட கலெக்டரும் உள்ளனர்.

    புதுவை முதல்-அமைச்சர் அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் இதற்காக நிதி தருவார்கள். காசோலை வழியாக பெறப் படும் இந்த நிதிக்கு உடனடியாக அத்தாட்சி ரசீது வழங்கப்படும்.

    இந்த நிதியின் மூலம் கல்வித்துறையில் ஸ்மார்ட் வகுப்பறைகள், அரசு பள்ளிகளில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெங்கு பரிசோதனை கருவி வாங்குவதற்காக ரூ.13½ லட்சம் நிதியை இந்தியன் வங்கி நிர்வாகத்தினர் அளித்துள்ளனர்.

    கவர்னர் மாளிகையில் இருக்கும் ஊழியர்கள் போன் மூலம் சமூக பங்களிப்பு நிதி தரும்படி கட்டாயப்படுத்துவதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளது. பல தொழிற்சாலைகளிடம் இருந்து ரூ.85 லட்சம் நிதி கட்டாயமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

    இந்த பங்களிப்பு நிதியை பெற்றதற்காக எந்த அத்தாட்சி ரசீதும் தரப்படவில்லை. இந்த நிதியை எதற்காக செலவு செய்யப்போகிறார்கள்? என்ற கணக்கு விபரமும் தெரியவில்லை. இந்த நிதியை வசூலிக்க கவர்னருக்கும், கவர்னர் மாளிகைக்கும் அதிகாரம் கிடையாது.

    அப்படியிருக்க எந்த அடிப்படையில் எந்த விதியின் கீழ் இந்த நிதியை வசூலித்தனர்? இதற்கு கவர்னர் மாளிகையில் விளக்கம் தருவார்கள் என நம்புகிறோம். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் செய்யவுள்ளேன்.

    புதுவை கவர்னரின் செயலாளராக தேவநீதிதாஸ் பணியாற்றி வந்தார். இவர் பணி ஓய்வு பெற்றுவிட்டார். இவரை கவர்னர் சிறப்பு அதிகாரியாக நியமித்தார். இதற்காக உள்துறைக்கு கோப்பு அனுப்பினார்.

    இந்த கோப்பிற்கு உள்துறை அனுமதி தரவில்லை. அனுமதி பெறாமலேயே தேவநீதி தாசை தொடர்ந்து சிறப்பு அதிகாரியாக நியமித்து கொண்டார்.

    இதுதொடர்பாக கவர்னருக்கு கடிதம் எழுதினேன். ஆனால், இதுவரை எந்த பதிலையும் கவர்னர் அளிக்கவில்லை. சிறப்பு அதிகாரியாக நியமக்கப்பட்டுள்ள தேவநீதிதாஸ் செயலாளர் அறையையே பயன்படுத்திக்கொண்டு அதிகாரிகளுக்கு உத்தர விட்டு வருகிறார்.

    சிறப்பு அதிகாரிக்கு கவர்னருக்கு ஆலோசனை கூறும் பொறுப்பு மட்டும் தான் உள்ளது. கவர்னர், அதிகாரிகளுடன் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கவோ, அதிகாரிகளை நேரடியாக அழைத்து பேசவோ எந்த அதிகாரமும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி, டெல்லி பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் உடனிருந்தனர். #cmnarayanasamy #puducherrygovernor

    இன்னும் 4 அல்லது 5 மாதத்தில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தஞ்சையில் புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்தார். #PuducherryCM #Narayanasamy #BJP #Kiranbedi
    தஞ்சாவூர்:

    புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரியில் கழிவுநீர் ஓடையில் நான் இறங்கி சுத்தம் செய்த செய்தி வெளியானது. நான் கழிவுநீர் ஓடையில் இறங்கி சுத்தம் செய்தது பிரதமர் பாராட்டை பெறுவதற்காக அல்ல. 2 மாதங்களுக்கு முன்பே அந்த இடத்தை பார்வையிட்டேன். மணல், குப்பை மற்றும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் தான் நாம் களத்தில் இறங்கினால் எனக்கு பின்னால் உள்ள அதிகாரிகள் வேலை செய்வார்கள் என்ற கோணத்தில் சுத்தம் செய்தேன்.

    நான் ½ மணி நேரம் தான் சுத்தம் செய்தேன். ஆனால் பொதுமக்களும், பொதுப் பணித்துறை அதிகாரிகளும் சுமார் 2 மணி நேரம் சுத்தம் செய்தனர். இது மக்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமை ஆகும். சில பேர் ஏற்கனவே குப்பைகளை கொட்டி விட்டு பின்பு அந்த இடத்தை சுத்தம் செய்கிறார்கள்.

    டெல்லியில் நிலம், காவல் துறை, சட்டம் ஒழுங்கு ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் புதுச்சேரியில் நிலம், நிர்வாகம், சட்டம் ஒழுங்கு ஆகியவை மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. ஆனால் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் அரசுக்கு ஒத்துழைக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுகிறார்.

    இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு கொடுத்துள்ளோம். விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    பல்வேறு திட்டங்கள் குறித்து கவர்னருக்கு கோப்புகள் அனுப்பியும் கையெழுத்து இடாமல் திருப்பி அனுப்பி விடுகிறார். இதுகுறித்து பிரதமரிடம் முறையிட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்.

    இன்னும் 4 அல்லது 5 மாதத்தில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது புதுச்சேரி மாநிலத்திலும் மாற்றம் உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PuducherryCM #Narayanasamy #BJP #Kiranbedi
    புதுவையில் நிதி அதிகாரத்தை பரவலாக்க மத்திய அரசு உத்தரவிடவில்லை என்று கவர்னர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் மறுப்பு தெரிவித்துள்ளார். #kiranbedi #centralgovernment

    புதுச்சேரி:

    புதுவையில் அரசு நிர்வாகம் செம்மையாகவும், விரைவாக மக்கள் பணிகளை மேற்கொள்வும், இயக்குனர், செயலர்கள், நிதியமைச்சர், அமைச்சரவை ஆகியவற்றுக்கு நிதி அதிகாரத்தை கூடுதலாக்கும் வகையில் நிதி அதிகாரத்தை கூடுதலாக்கி பரவலாக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

    அதில் கவர்னரின் பொது நிதி விதிகள் 13(3)-ல் உள்ள அதிகாரங்களை, தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இதனால் புதுவை கவர்னரின் நிதி அதிகாரம் பறிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்படுமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதனை கவர்னர் கிரண்பேடி மறுத்துள்ளார். அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள வாட்ஸ் அப்பதிவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த கடிதத்தில் பல்வேறு துறைகளில் செலவீனங்களை மேற்கொள்ளும் வகையில் நிதி அதிகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய வெற்றி என போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருக்கிறது.

    தவறான தகவல் பொதுமக்களுக்கு போய் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக இதனை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த கடிதத்தில் துணைநிலை ஆளுநரின் நிதி அதிகாரம் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

    நிதி அதிகார விதிகள் 13(3) பின்பற்றுமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு கலந்துரையாடல் மட்டுமே. இந்த விதிகளை பின்பற்றியும் செய்யலாம். ஆனால், இது கட்டாயமில்லை.

    நிதி தொடர்பாக சரியானவற்றை செய்யவும், முறைப்படுத்தவும் தேவையான முடிவுகளை எடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. இதில் எங்கே கவர்னர் மாளிகைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது?.

    அதே நேரத்தில் நிதி தொடர்பான சரியான முடிவுகளுக்கும், தகுதியானவற்றை செய்வதற்கு பொறுப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறேன். நிதி அதிகார பரிசீலனை தொடர்பாக எந்த கோரிக்கையும் அரசிடமிருந்து வரவில்லை.

    அது வரும்போது அதற்கேற்ப தகுந்த முடிவுகள் எடுக்கப்படும். சட்டபடி பொதுமக்களின் பணத்தை பாதுகாக்கும் கடமையும், பொறுப்பும் எனக்கு கட்டாயமாக இருக்கிறது.

    நிதி அதிகாரங்களை பரவலாக்குவதை செய்யலாம் ( கட்டாயமில்லை) ஆனால் அந்த பணத்தை எப்படி பயன்படுத்துவது என்பது என்னுடை பொறுப்பு .

    இவ்வாறு கவர்டனர் கிரண்பேடி கூறியுள்ளார். #kiranbedi #centralgovernment

    மாநில அந்தஸ்து தேவையில்லை என கூறுவதற்கு கவர்னர் கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். #kiranbedi #narayanasamy

    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

    நடந்த முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தவிர அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கும்படி வலியுறுத்தினோம்.

    அதுபோல் துணை ஜனாதிபதி உள்பட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து இது தொடர்பாக பேசினோம். அவர்கள் அனைவரும் புதுவைக்கு மாநில அஸ்தஸ்து பெற்று தருவதாக உறுதி அளித்தனர்.

    டெல்லி பயணம் வெற்றி என கூற முடியாவிட்டாலும் திருப்திகரமாக அமைந்தது. மாநில அந்தஸ்தை பெற்றால் மட்டுமே வெற்றி என்று கூற முடியும்.

    புதுச்சேரியில் 4 பிராந்தியங்களான புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகியவற்றை ஒருங் கிணைத்துதான் மாநில அந்தஸ்து கேட்டுள்ளோம். இதில், எந்தவொரு பிராந்தியத்தையும் மற்றொரு மாநிலத்துடன் சேர்த்து மாநில அந்தஸ்து அளித்தால் அதனை ஏற்க மாட்டோம்.

    புதுவைக்கு மத்திய அரசு போதிய நிதி அளிக்காததாலும் மத்திய நிதி கமி‌ஷனில் புதுவை சேர்க்கப்படாததாலும் புதுவை மாநில நிதி ஆதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரிடம் மாநில அந்தஸ்து பற்றி கவர்னர் கிரண்பேடி கூறிய கருத்து குறித்து நாராயணசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    அவரவர்கள் தங்களது அதிகாரத்துக்குட்பட்டு செயல்பட வேண்டும். கவர்னர் கிரண்பேடி என்ன அரசியல்வாதியா? மாநில மக்களின் விருப்பத்தை டெல்லியில் கூறி உள்ளோம்.

    மாநில அந்தஸ்து தேவையில்லை என கூறுவதற்கு கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அவர் அரசியல்வாதி என்றால் கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலுக்கு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    யூனியன் பிரதேசங்களில் அதிகாரம் யாருக்கு என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று வழங்கிய தீர்ப்பு டெல்லிக்கு பொருந்தாது என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். #KiranBedi
    புதுச்சேரி:

    நாட்டில் 7 யூனியன் பிரதேசங்கள் இருந்தாலும், புதுவை-டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டுமே சட்டசபை செயல்படுகிறது. ஆனால், இவை யூனியன் பிரதேசம் என்பதால் கவர்னருக்குத்தான் அதிகாரம் என்று கூறி புதுவை கவர்னர் கிரண்பேடி, டெல்லி கவர்னர் அனில் பைஜால் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.

    இதை எதிர்த்து டெல்லியில் ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

    இந்த தீர்ப்பு 100-க்கு 110 சதவீதம் புதுவைக்கும் பொருந்தும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். மேலும் கவர்னர் கிரண்பேடி இனிமேலும் இதை மீறும் வகையில் செயல்பட்டால் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொட ரப்படும் என்றும் கூறினார்.

    இது சம்பந்தமாக கவர்னர் கிரண்பேடி நேரடியாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் நேற்று கூறப்பட்ட தீர்ப்பில், புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு டெல்லி தீர்ப்பு பொருந்தாது என்று சுப்ரீம் கோர்ட்டே கூறி இருக்கிறது. 

    அதாவது டெல்லி மாநிலம் அரசியல் சாசன சட்டம் 239 ஏ.ஏ. பிரிவின் கீழ் செயல்படுகிறது. புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்கள் 239 ஏ. பிரிவின் கீழ் செயல்படுகிறது. எனவே, இப்போதைய தீர்ப்பு 239 ஏ.ஏ. பிரிவின் அடிப்படையில்  கூறப்பட்டுள்ளது. இதனால் புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருந்தனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை இன்று சந்தித்த கிரண்பேடி, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வாசித்து காட்டி, டெல்லியின் தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
    ×