search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cm narayanasamy"

    இனிமேலும் தேர்தல் அரசியலை விரும்பவில்லை, இளைஞர்களுக்கு வழிவிட போகிறேன் என்று நாராயணசாமி திடீரென அறிவித்துள்ளார். #narayanasamy #congress #parliamentelection

    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: தலைமை தேர்தல் அதிகாரியை மாற்றும்படி அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் வலியுறுத்தி வருகிறதே?

    பதில்:- யார் தேர்தல் ஆணையராக இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. தேர்தல் ஆணையம்தான் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    கே:- நாளை முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருமா?

    ப:- இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேள்வி கேளுங்கள்.

    கே:- கட்சிதலைமை அறிவுறுத்தினால் பாராளு மன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?

    ப:- கட்சித்தலைமை என்ன சொன்னாலும் செய்வேன். இதன்பிறகு தேர்தல் அரசியல் தேவையா? இனிமேல் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டியதுதான். எனக்கு தனிப்பட்ட எந்த விருப்பமும், வெறுப்பும் கிடையாது. நான் ஒரு சாமியார்.

    இவ்வாறு அவர் கூறினார். #narayanasamy #congress #parliamentelection

    பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாப்பதை புதுவை அரசு முதல் கடமையாக கொண்டுள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் மாநில அளவிலான பெண் குழந்தையை காப்போம், கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் இன்று நடந்தது.

    துறை இயக்குனர் யஷ்வந்தையா வரவேற்றார். முதல்-அமைச்சர் நாராயணசாமி குத்து விளக்கேற்றி பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

    பெண் குழந்தைகள் அனைத்து துறைகளிலும் சாதனை செய்வதை பார்க்கிறோம். சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு வாய்ப்பளித்தால் அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.

    புதுவை மாநிலத்தை பொறுத்தவரை ஆயிரம் ஆண் வாக்காளர்களுக்கு ஆயிரத்து 50 பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக ஆண்களை விட 20 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இதன்மூலமே புதுவையில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.



    பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாப்பதை புதுவை அரசு முதல் கடமையாக கொண்டுள்ளது. இதற்காக பல்வேறு திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

    வட மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் பார்க்க முடியாது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் சிசுக்கொலை நடக்கிறது. குழந்தை திருமணம் நடைமுறையில் உள்ளது.

    கணவரை இழந்தால் உடன்கட்டை ஏறுவதும் தொடர்கிறது. பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லாத நிலையும், கற்பழிக்கப்படும் நிலையும் உள்ளது. இவற்றை ஒழித்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பும், சுதந்திரமும் கிடைக்கும்.

    எங்கள் அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளில் பெண் குழந்தை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். பாலியல் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 23 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுவையில் பெண்கள் 85 சதவீதம் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். புதுவையில் பெண்கள் சுதந்திரமாக உள்ளனர். நகர பகுதி மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காக இந்த பயிற்சி முகாமில் விவாதித்து புதிய கருத்துக்களை, திட்டங்களை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சமூக நலத்துறை செயலர் ஆலிஸ்வாஸ் சிறப்புரையாற்றினார். பாலின சமத்துவம், பாகுபாடு குறித்து அதேகொம் நெட்வொர்க் லலிதாம்பாள், பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டம் குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை துணை இயக்குனர் வரலட்சுமி, பெண்கள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் குறித்து அன்னமேரி, தயாவதி ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். மகளிர் நல பிரிவு துணை இயக்குனர் வரலட்சுமி நன்றி கூறினார். #Narayanasamy

    புதுவையில் விரைவில் தியாகிகள் ஓய்வூதியம் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.

    விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி தியாகிகளை கவுரவித்து இனிப்புகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    புதுவை மாநிலத்துக்கு வணிக வரி, கலால் வரி மூலம் நிதி கிடைக்கிறது. சுற்றுலாவில் இருந்து பெரிய அளவுக்கு வருமானம் இல்லை. புதுவை, இந்தியாவுடன் இணைந்தபோது 90 சதவீதம் மானியம் கிடைத்தது. அது படிப்படியாக குறைந்து தற்போது 26 சதவீதமாகி விட்டது.

    மத்திய அரசு நமக்கு கொடுக்க வேண்டிய ரூ.3 ஆயிரம் கோடி மானியத்தில் ரூ.1,650 கோடி மட்டுமே பெறுகிறோம்.



    மத்திய அரசிடம் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைப்பதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மக்களுக்கு பணியாற்ற வேண்டிய கடமை பொறுப்பு உள்ளது. அரசின் சிக்கன நடவடிக்கையால் மக்கள் நலத்திட்டங்களை முடிந்தவரை செயல்படுத்தி வருகிறோம்.

    தியாகிகள் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்து அரசு கவர்னருக்கு கோப்பு அனுப்பியது. அந்த கோப்பு நிலுவையில் உள்ளது. விரைவில் தியாகிகள் ஓய்வூதியம் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார். #Narayanasamy

    புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை கவர்னர் கிரண்பேடியுடன் மேலும் 4 கவர்னர்கள் செயல்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டி உள்ளார். #CMNarayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் 2019 புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    2018-ம் ஆண்டு மத்திய அரசில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நிதி முறையாக கிடைக்காவிட்டாலும், மாநிலத்தில் இருந்து நாம் திட்டத்திற்காக, திட்டமில்லா செலவினங்களுக்காக ஒதுக்கிய தொகையை செலவிட தடைகள் இருந்தாலும், அதையெல்லாம் மீறி பல துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளோம்.

    நம் மாநிலத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாத தன்மை, மாநிலத்தில் கவர்னர் அதிகார வரம்பு மீறி செயல்படுவது. இதனால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டாலும், பொதுத்துறை, கூட்டுறவு நிறுவனங்களின் சம்பளத்தை தவிர மற்றவற்றை முறையாக நிறைவேற்றி வருகிறோம்.

    விவசாயம், கல்வி, மருத்துவம், சுற்றுலா, சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, நகர சுத்தம் என பல விருதுகளை பெற்றுள்ளோம். மத்திய அரசின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளோம். இந்த அங்கீகாரமானது மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் செய்ய முடியாது.

    இப்போது நிதி அயோக், உலக வங்கி இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் புதுவை மாநிலம் மக்கள் நிம்மதியாக வாழ அனைத்து வசதியும் பெற்ற மாநிலங்களில் இந்திய அளவில் 5-வது இடம் பெற்றுள்ளது. இது நிர்வாகத்தை எப்படி செம்மைப்படுத்தியுள்ளோம்? என்பதை தெளிவாக காட்டுகிறது.

    திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படாவிட்டால், கோப்புகளை திருப்பி அனுப்பியிருக்காவிட்டால் 2018-ல் இன்னும் பல சாதனைகளை படைத்திருப்போம். தடைகளை உடைத்தெறிந்து 2019-ல் மாநில வளர்ச்சிக்கு அயராது பாடுபடுவோம்.

    சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டு கிடைக்காததால், புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை வைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். தற்போது இவ்வி‌ஷயம் தீவிரமாகியுள்ளது.

    முன்பு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும், அரசியல் கட்சிகள் வலியுறுத்துவார்கள், பொதுக்கூட்டத்தில் பேசுவார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல முயற்சி எடுத்தாலும் மாநில அந்தஸ்து தரப்படவில்லை.

    தற்போது என்.ஆர். காங்கிரஸ் தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சியினரை சந்தித்து மாநில அந்தஸ்து தேவை பற்றி எடுத்துக்கூறியுள்ளோம். மத்திய அரசு நிதி கமி‌ஷனில் சேர்க்காத நிலை, நமக்கு கிடைக்க வேண்டிய வரி விகிதாச்சாரப்படி கிடைக்காதது. அதிகாரம் இருந்தும் திட்டங்களை செயல்படுத்த தடை என பல கஷ்டங்கள் உள்ளன. புதுவைக்கு மாநில அந்தஸ்து தருவது ஏற்புடையது என சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார். இதையெல்லாம் நாங்கள் வலியுறுத்தினோம்.

    முதல் முறையாக அனைத்து அரசியல் கட்சியினரையும் டெல்லிக்கு அழைத்துச்சென்று மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதை எங்கள் ஆட்சியில் ஏற்படுத்தியுள்ளோம். இது மத்திய அரசுக்கு அழுத்தம் தரும்.

    அரசியல் கட்சியினர், எம்.எல்.ஏ.க்கள், சமூக அமைப்புகள் இணைந்து வருகிற 4-ந்தேதி பாராளுமன்றம் முன்பு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. 21 அரசியல் கட்சிகள் கலந்துகொள்கிறது. பா.ஜனதா, சிவசேனா தவிர அனைத்து அரசியல் கட்சிகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தர கடிதம் அனுப்பியுள்ளோம்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள், திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, ராஷ்ட்ரிய ஜனதாதளம், பகுஜன்சமாஜ் போன்ற அரசியல் கட்சிகளுக்கும் கோரிக்கை வைத்துள்ளோம்.



    ஜனாதிபதி 2016-ம் ஆண்டு கவர்னர் கிரண்பேடியை புதுவை மாநிலத்திற்கு கவர்னராக நியமித்தார். துணை நிலை ஆளுநர் அலுவலகம் அரசு ஒப்புதல் இல்லாமல் துணைநிலை ஆளுநர் செயலகம் என மாற்றி கடிதம் அனுப்புகிறார். கிரண்பேடி கவர்னரா? அல்லது 5 கவர்னர்கள் அங்கு பணிபுரிகிறார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    தேவநீதிதாஸ் பதவிக்காலம் முடிந்ததும் அவரை பதவி நீட்டிப்பு செய்ய உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் கடிதம் அனுப்பினார். உள்துறை அமைச்சகம் அதற்கு அனுமதி தரவில்லை. அதை மறைத்து கவர்னர் தேவநீதிதாசை ஆலோசகராக நியமித்துள்ளதாக எனக்கு கடிதம் அனுப்பினார். அதை நான் மறுத்து கன்சல்டன்டாகவே தேவநீதிதாசை நியமிக்க வேண்டும் என நான் கூறினேன்.

    ஆனால் கவர்னர் உள்துறை அமைச்சக உத்தரவை மீறி தேவநீதிதாசை நியமித்துள்ளார். நான் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியும் பதில் வரவில்லை.

    ஓ.எஸ்.டி. அண்ட் கன்சல்டன்ட் என தேவநீதிதாசை நியமித்தது தவறானது. கவர்னர் அலுவலகத்திற்கு செயலாளர் இல்லை. புதுவையில் உள்ள எந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியையும் செயலாளராக நியமிக்கலாம் என கடிதம் அனுப்பினேன். ஆனால் கவர்னர் யாரையும் நியமிக்காமல் தேவநீதிதாசை செயலாளர் போல நியமித்துள்ளார். அதிகாரிகளை அழைப்பது, கூட்டம் நடத்துவது என கவர்னர் வேலையை தேவநீதி தாஸ் செய்ய முடியாது. அவர் 2-வது கவர்னராக செயல்படுகிறார்.

    மற்றொரு அதிகாரியான ஸ்ரீதர் அரசு அதிகாரிகளுக்கு தேர்வு வைக்கிறார். இவர் 3-வது துணைநிலை ஆளுநர். 4-வது துணைநிலை ஆளுநராக காவல்துறை அதிகாரி உள்ளார். 5-வதாக கேர்டேக்கர் ஒருவர் உள்ளார். அவர் 5-வது துணைநிலை ஆளுநராக செயல்படுகிறார். அதிகார துஷ்பிரயோகம் மிகப்பெரும் அளவில் நடக்கிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வரும்.

    கவர்னர் கிரண்பேடி 3 மாதம் இருப்பார். அதன்பிறகு மற்ற அதிகாரிகள் எங்கே செல்வார்கள்? புதுவை சிறிய மாநிலம். அவர்கள் பணியை அவரவர் செய்ய வேண்டும். இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு 3 மாதத்தில் விடை கிடைக்கும். புதுவையில் அரசு ஆட்சி நடக்கிறதா? கோமாளிகள் ஆட்சி நடக்கிறதா? என தெரியவில்லை.

    பொய்யான தகவல்களை மக்களுக்கு கொடுக்கின்றனர். ஆனால் கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடு வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறது என்பதை புதுவை மக்கள் உணர்ந்துள்ளனர்.

    கவர்னரால் திட்டத்தை தள்ளிப்போட முடியும். தடுத்து நிறுத்திவிட முடியாது. மக்களுக்கு செய்ய முடியவில்லையே என்றுதான் நாங்கள் வருந்துகிறோம்.

    புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் கவர்னர் கிரண்பேடியை எதிர்த்து வருகின்றன. எனவே 2019-ம் ஆண்டு புதுவை மாநில மக்களுக்கு நன்மைகளை அளிக்கும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #CMNarayanasamy

    தலைவர்கள் போராடி புதுவைக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தது அடிமையாக இருக்க அல்ல என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #narayanasamy

    புதுச்சேரி:

    புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு கம்பன் கலையரங்கில் நடந்த கருத்தரங்கில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    நாட்டிலேயே டெல்லியும், புதுவையும்தான் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசங்களாகும். டெல்லியை விட புதுவைக்கு நிலம், நிர்வாகம், நிதி, சட்ட ஒழுங்கு என 4 அதிகாரங்கள் பிற மாநிலங்களைப்போல கொடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த காலங்களில் நமது உரிமைகளை வலியுறுத்தாததால் நமது ஆட்சியின் உரிமைகளை நமக்கு தெரியாமல் சிலர் திருத்தியுள்ளனர். இதை முறியடிக்க மாநில அந்தஸ்து தேவை.

    டெல்லி முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது, அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். அரசு எடுக்கும் முடிவுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    அரசியலமைப்பு பிரிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் இந்த தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆனால் டெல்லிக்கு அளித்த தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது என கவர்னர் கிரண்பேடி தொல்லை கொடுத்து வருகிறார். மாநில நிர்வாகத்தில் தலையிட்டு அதிகாரிகளை மிரட்டியும் வருகிறார்.

    தலைவர்கள் போராடி புதுவைக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தது அடிமையாக இருக்க அல்ல. நமது மாநிலத்திற்கு பிரச்சினை என்றால் யார் இடையூறாக இருந்தாலும் அவர்களை எதிர்கொள்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கருத்தரங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:-

    மாநில சட்டசபைகளை மத்திய பா.ஜனதா அரசு மதிக்கவில்லை. தமிழகத்திலும், புதுவையிலும் இரட்டை ஆட்சி நடக்கிறது. இதை எதிர்த்து போராடும் துணிவில்லாமல் தமிழக அரசு உள்ளது.

    ஆனால் நாராயணசாமி தலைமையிலான அரசு எதிர்த்து போராடுகிறது. கவர்னரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் திரும்பிச் செல்லமாட்டார்.

    அவர் விலகிச்செல்ல 5 மாநில தேர்தலில் மணி அடிக்கப்பட்டுள்ளது. புதிய ஆண்டு பிரதமர் மோடிக்கு விடை கொடுக்கும் ஆண்டாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார். #narayanasamy 

    புதுவை சட்டசபை இன்று கூடியது. சட்டமன்றத்தில் முதல் நிகழ்வாக மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் முன்மொழியப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. #PondicherryAssembly
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது.

    சபாநாயகர் வைத்திலிங்கம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். சட்டமன்றத்தில் முதல் நிகழ்வாக மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி, மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத்சாட்டர்ஜி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஐ.நா. பொதுச்செயலாளர் கோபிஅன்னான், புதுவை முன்னாள் அமைச்சர் காசிலிங்கம் ஆகியோருக்கான இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

    இரங்கல் தீர்மானத்தின் மீது தி.மு.க. உறுப்பினர் சிவா, சுயேச்சை உறுப்பினர் ராமச்சந்திரன், அ.தி.மு.க. உறுப்பினர் வையாபுரி மணிகண்டன், காங்கிரஸ் உறுப்பினர் பாலன், பா.ஜனதா உறுப்பினர் செல்வகணபதி, தி.மு.க. உறுப்பினர் கீதாஆனந்தன், பா.ஜனதா உறுப்பினர்கள் சங்கர், சாமிநாதன், அ.தி.மு.க. உறுப்பினர் அசனா, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயமூர்த்தி, அனந்தராமன், அமைச்சர் நமச்சிவாயம், அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன், எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பேசினர்.

    இதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கமும், இரங்கல் தீர்மானத்தின் மீது தனது கருத்துக்களை குறிப்பிட்டு பேசினார். இதைத்தொடர்ந்து சபை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தும் படி சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் மவுனமாக எழுந்து நின்று 2 நிமிடம் மறைந்த தலைவர்களுக்காக மவுன அஞ்சலி செலுத்தினர். #PondicherryAssembly
    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Narayanasamy #BJP

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அதை வரவேற்பதையும், எதிர்ப்பாக தீர்ப்பு வந்தால் விமர்சிப்பதையும் காங்கிரஸ் அரசு பல்லாண்டு காலமாக வாடிக்கையாக வைத்துள்ளது. அலகாபாத் நீதிமன்றம் இந்திராகாந்திக்கு எதிராக தீர்ப்பளித்தபோது அதை எதிர்த்தனர். அன்று முதல் இதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    தற்போது சுப்ரீம் கோர்ட்டு நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என ஐகோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படிதான் தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும், அதில் திருத்தங்களை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் விளக்கியுள்ளது.

    ஆனால் தீர்ப்பில் ஓட்டை உள்ளது என முதல்-அமைச்சர் பொறுப்பு வகிக்கும் நாராயணசாமி கூறியுள்ளார். அவர் மீது கட்சித் தலைமையின் அனுமதி பெற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். ஏற்கனவே சபாநாயகர் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் நிலுவையில் உள்ளது.

     


    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை விமர்சித்து புதுவை முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். பாராளுமன்ற செயலாளர் பதவியை வைத்துக்கொண்டு சுப்ரீம் கோர்ட்டை விமர்சித்திருப்பது கண்டனத்திற்குரியது. அவரின் பாராளுமன்ற செயலாளர் பதவியை கவர்னர் பறிக்க வேண்டும். அவர் மீதும் நீதிமன்ற வழக்கு தொடரப்படும். சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கைகளை எடுப்போம்.

    மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி உண்மைக்கு மாறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருகிறார். மத்திய அரசு மீது திட்டமிட்டு பழியை சுமத்தி வருகிறார். கர்நாடகாவில் ஆட்சி செய்வது குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுதான். அந்த ஆட்சியில் அங்கம் வகிக்கும் நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர்தான் அணை கட்டுவதற்கான தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார். தொடர்ந்து அணை கட்டுவதில் உறுதியாக இருப்போம் என்றும் கூறி வருகிறார்.

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி அவரை சந்தித்து பேசினாலே அணை கட்டுவதை தடுத்துவிட முடியும். ஆனால் அவர் மத்திய அரசு மீது வீண் பழி சுமத்தி வருகிறார். இது நாராயணசாமியின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் புதுவை மாநிலம் மத்திய அரசின் சொத்து என கூறியதை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர். நமது பிள்ளையைக்கூட நாம் நமது சொத்து என்றுதான் கூறுவோம். அந்த அடிப்படையில்தான் உறவின் வலிமையை காட்ட புதுவை மத்திய அரசின் சொத்து என கூறியுள்ளனர். இதையறியாமல் தேவையற்ற விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.

    புதுவையில் உள்ள காங்கிரஸ் அரசை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்படவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தியால் வரும் காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Narayanasamy #BJP

    மேகதாது அணை விவகாரத்தில் சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து நீதிமன்றம் செல்வோம் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Mekedatudam #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவையில் 1957-ம் ஆண்டு முதல் இதுவரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95 சதவீத ஆசிரியர்களுக்கு சம்பளம், பென்‌ஷன் வழங்கப்பட்டு வருகிறது.

    விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. புதுவையில் 26, காரைக்காலில் 8, ஏனாமில் ஒரு பள்ளி என மாநிலம் முழுவதும் 35 பள்ளிகள் உள்ளது.

    இந்த பள்ளிகளில் 26 ஆயிரத்து 568 மாணவர்கள் படித்து வருகின்றனர். மாதந்தோறும் இந்த பள்ளிகளுக்கு ஆசிரியர்களின் சம்பளமாக ரூ.2 கோடியே 92 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

    பென்‌ஷனுக்காக மாதம் ரூ.58 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2 மாதத்திற்கு ஒரு முறை இதற்கான கோப்பு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.

    தற்போது கவர்னர் கிரண்பேடி இதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். இந்த நிதியை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். புதுவை மாநிலம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழ்வதற்கு அரசு உதவி பெறும் பள்ளிகளும் காரணம்.

    ஏழை மாணவர்களிடம் அவர்கள் கட்டணம் வசூலிப்பதில்லை. பெரும்பாலும் சிறுபான்மையினர்தான் இந்த கல்வி நிறுவனங்களை நடத்துகின்றனர்.

    இதனால் அவர்களுக்கு நிதியுதவி அளிப்பது பொருத்தமானதுதான். அரசை பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடமை உள்ளது. விதிமுறைகளை கவர்னர் தொடர்ந்து மீறி வருகிறார்.

    நிர்வாக விதிமுறைகளுக்கு மாறாகவும் செயல்பட்டு வருகிறார். இதுதொடர்பாக பல முறை நான் கடிதம் எழுதி உள்ளேன். அரசின் அன்றாட நடவடிக்கையில் கவர்னர் தலையிடக்கூடாது. அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடக்கூடாது.



    ஆனால், கவர்னர் கிரண்பேடி நேரடியாக அரசு அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளை மிரட்டி வருகிறார். சமீப காலமாக பல அரசு துறை அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

    கூட்டுறவு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.326 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். இதற்கான கோப்பையும் கவர்னர் திருப்பி அனுப்புகிறார். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை தடுக்க கவர்னருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

    அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் கவர்னர் தொடர்ந்து செயல்படுகிறார். ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு அரை சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. அந்த சம்பளத்தையும் வழங்கவிடாமல் தடுத்து விட்டார்.

    ரோடியர் மில்லுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய உள்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். இதற்கான கோப்பு 3 மாதமாக நிலுவையில் உள்ளது. இதற்கு விரைவில் முடிவு கிடைக்கும். இதன் பிறகு ரோடியர் மில்லில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவோம்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தை மத்திய குழு பார்வையிட்டது. பேரிடர்துறை மூலம் ரூ.10 கோடி இடைக்கால நிவாரணமாக அனுப்பியுள்ளோம்.

    மேலும் மத்திய அரசிடம் நீண்டகால திட்டங்களுக்காக ரூ.1,342 கோடி கேட்டுள்ளோம். புதுவை பகுதியில் சாலைகளை சீரமைக்கவும் நிதி கேட்டுள்ளோம்.

    கேரளா அதிரகண்டி நீர்தேக்கத்தில் இருந்து மாகிக்கு குடிநீர் வருகிறது. இதற்கு மாநில அரசு சார்பில் கேரளா அரசுக்கு பணம் செலுத்தி வருகிறோம். இத் தொகையை கேரளா அரசு திடீரென உயர்த்தியது. கேரளா முதல்வருக்கு கடிதம் அனுப்பி கேட்டுக்கொண்டதால் இத்தொகையை ரத்து செய்துள்ளனர். இதனால் கூடுதலாக செலுத்திய ரூ.2 கோடி திரும்பக்கிடைக்கும்.

    மேகதாதுவில் தடுப்பணை கட்டக்கூடாது என உத்தரவு உள்ளது. அதை மீறி தடுப்பணை கட்டினால் தமிழகத்தை மட்டுமின்றி புதுவையையும் பாதிக்கும். தேவைப்பட்டால் சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து நீதிமன்றம் செல்வோம்.

    தமிழக அரசும் காவிரி ஆணையம் கூறியபடி காரைக்காலுக்கு நீர் வழங்க முன்வர வேண்டும். வெள்ளத்தால் கேரளா பாதிக்கப்பட்டபோது புதுவையில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள் நிதி அளித்தனர். இந்த நிதியை அடுத்த மாதம் கேரளா முதல்-அமைச்சரிடம் நேரில் அளிக்க உள்ளேன்.

    தற்போது புதுவையில் காரைக்கால் மாவட்டம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கும் தாராளமாக நிதி வழங்க அனைவரும் முன்வர வேண்டும். இதற்காக முதல்-அமைச்சர் அலுவலகத்தில் வார வேலை நாட்களில் தனி பிரிவு செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அமைச்சர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். #Mekedatudam #Narayanasamy

    புதுவை முதலமைச்சர் நாராயணசாமியின் தாயார் மரணமடைந்ததையடுத்து மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம் ஆகியோர் அவரது தாயார் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி அவருக்கு ஆறுதல் கூறினர். #Narayanasamy #MKstalin
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள். 96 வயதான ஈஸ்வரி அம்மாள் தனது சொந்த கிராமமான பூரணாங்குப்பத்தில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரி அம்மாள் மரணமடைந்தார்.

    அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வந்தார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டிற்கு வந்தார். அங்கு ஈஸ்வரி அம்மாள் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அவருடன் தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி, புதுவை தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா, எஸ்.பி.சிவக்குமார், முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    பின்னர் மீண்டும் மு.க.ஸ்டாலின் லாஸ்பேட்டை விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் சேலத்திற்கு சென்றார்.

    அஞ்சலி செலுத்த வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் நாராயணசாமி தாயாரின் இறப்பு ஈடுசெய்ய முடியாதது. நேற்றைய தினமே நேரில் வந்து அஞ்சலி செலுத்த நினைத்தேன். ஆனால், சூழ்நிலை காரணமாக என்னால் வர இயலவில்லை.

    எனவே, இன்று வந்து முதல்-அமைச்சர் நாராயணசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளேன் என்றார்.

    முன்னதாக இன்று காலை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீட்டுக்கு வந்து ஈஸ்வரி அம்மாள் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்தனர்.  #Narayanasamy #MKstalin
    அரசு சார்பு நிறுவனங்களுக்கு சம்பளம் வழங்காததற்கு கவர்னர் கிரண்பேடி தான் காரணம் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். #cmnarayanasamy #governorkiranbedi

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ரோடியர், சுதேசி, பாரதி, கூட்டுறவு சர்க்கரை ஆலை, காரைக்கால் ஜெய பிரகாஷ் நாராயணன் ஆலை, பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு அரசு சார்ந்த சம்பள மானியமாக நடப்பாண்டில் ரூ.326 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் முதலீட்டு மானியம், நிர்வாக செலவுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.786 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் இந்த நிறுவனங்களில் தேவைக்கு அதிகமாக ஆட்களை நியமித்ததால் நஷ்டத்தை சந்தித்தது. இந்த நிறுவனங்களை தொடர்ந்து இயக்குவது தொடர்பாக ஐ.ஏ.எஸ் .அதிகாரி விஜயன் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

    இந்த குழுவினர் பாப்ஸ்கோ, பாசிக், கூட்டுறவு நிறுவனங்களில் ஆய்வு செய்து அரசுக்கு ஒரு அறிக்கை சமர்பித்துள்ளனர். இந்த அறிக்கையில் அரசு சார்பு நிறுவனங்களை லாபகரமாக இயக்க பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அளித்துள்ளது.

    இதை உடனடியாக நிறைவேற்ற முடியாது. படிப்படியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். மத்திய உள்துறை அமைச்சகம் கவர்னரின் நிதி அதிகாரங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடு பகிர்ந்துகொள்ளும்படி உத்தரவிட்டது.

    ஆனால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை கவர்னர் மதிக்கவில்லை. தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க அனுப்பிய கோப்புக்கு அனுமதியும் தரவில்லை.

    அரசு சார்பு நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தோடு இயங்க முடியாது. பல நிறுவனங்கள் சேவை நிறுவனங்களாக இயங்குகிறது.

    கதர் வாரியம், அரசு போக்குவரத்துக்கழகம், கூட்டுறவு நிறுவனங்கள் லாப நோக்கத்தை எண்ணாமல் மக்களுக்கான சேவை நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது. கவர்னர் லாபத்தில் செயல்படும் நிறுவனங்களுக்கு மட்டும் நிதி அளிக்க வேண்டும் என சொல்கிறார்.

    பிற அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிதி தர முட்டுக்கட்டையாக உள்ளார். விஜயன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த காலதாமதம் ஏற்படும்.

    சம்பந்தப்பட்ட துறைகளை அழைத்து பேசிதான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், கவர்னர் உடனடியாக அதை அமல்படுத்த சொல்கிறார். அந்த அறிக்கையில் ஆட்குறைப்பு மட்டுமல்ல, நிர்வாக சீர்திருத்தம், சிக்கனம் ஆகியவற்றையும் பரிந்துரை செய்துள்ளார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல கடமைகள் உள்ளது. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், முதல்-அமைச்சர் ஆகியோர் மக்களுக்கு பதில் சொல்லும் நிலையில் உள்ளனர். அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு பணி பாதுகாப்பும் உள்ளது.

    இதையெல்லாம் கருத்தில் கொண்டே அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கும். கவர்னருக்கு இதில் எந்த பொறுப்பும் இல்லை. இதனால்தான் அவர் அரசு நிர்வாகத்தை முடக்க நினைக்கின்றார்.

    அதிகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்பார்த்திருக்கிறோம். இதன்பிறகு கவர்னரின் அதிகார மீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

    புதுவை ஜிப்மரின் கிளை 50 ஏக்கரில் சேதராப்பட்டில் அமையவுள்ளது. இங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, உடனடி விபத்து மறுவாழ்வு சிகிச்சை, மறுவாழ்வு மையம், இதயநோய் சிகிச்சை, வான்வழி ஆம்புலன்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஜிப்மர் கிளை தொடங்கப்பட உள்ளது. இதற்கு ரூ.ஆயிரத்து 200 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும். இதற்கான தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டா தெரிவித்துள்ளார். புதுவையில் எம்பிபிஎஸ் படிப்பவர்கள் 10 ஆண்டுக்குள் படிப்பை முடிக்க வேண்டும் என்று கடந்த காலத்தில் இருந்தது.

    தற்போது புதுவை பல்கலைக்கழகம் 8 ஆண்டாக குறைத்துள்ளது. 8 ஆண்டுக்கு பிறகும் படிப்பை முடிக்காமல் 50 மாணவர்கள் உள்ளனர்.

    இவர்கள் என்னை சந்தித்து தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டனர். இதன்பேரில் பல்கலைக்கழக துணைவேந்தரோடு பேசி கூடுதலாக ஒரு ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்க கோரியுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #cmnarayanasamy #governorkiranbedi

    பா.ஜனதாவை நாட்டைவிட்டே விரட்ட வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேறும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக பேசினார். #narayanasamy #bjp #pmmodi #rahulgandhi

    புதுச்சேரி:

    புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் இந்திராகாந்தியின் நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

    நினைவுதினத்தை யொட்டி விழுப்புரம் சாலையில் உள்ள அவர் சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்தார்.

    சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ. விஜயவேணி, டெல்லி பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. நீலகங்காதரன், காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், தனுசு, கருணாநிதி, நிர்வாகிகள் சீனுவாசமூர்த்தி, கண்ணன், பாசிங்கம், இளையராஜா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாண சுந்தரம், சபாநாயகரின் தனி உதவியாளர் வினோத், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து சர்வமத பிரார்த்தனை நடத்தப்பட்டது.

    முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சி வாயம் தலைமையில் இந்திராகாந்தியின் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. அங்கு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தியின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் நாராயணசாமி பேசியதாவது:-

    நாட்டுக்காக உயிர் கொடுத்த தியாக தலைவி இந்திராகாந்தி. அவர் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தினார். அதேபோல ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியை நாமும் வலுப்படுத்த வேண்டும். நாட்டுக்காக வேறு எந்த கட்சியினராவது ரத்தம் சிந்தியது உண்டா? ராகுல்காந்தி நாடு முழுவதும் பயணம் செய்து கட்சியை வலுப்படுத்தி வருகிறார். அவரின் கரத்தை நாமும் வலுப்படுத்த வேண்டும். காங்கிரசாரை பொறுத்தவரை கட்சி இரண்டாம்பட்சம்தான். நாடுதான் முக்கியம்.

    இன்று மத்திய பா.ஜனதா ஆட்சியில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. எதிர்கட்சி ஆளும் மாநிலங்களை மத்திய பா.ஜனதா அரசு திட்டமிட்டு பழி வாங்குகிறது. இதுதொடர்பாக சோனியா காந்தியிடம் தெரிவித்தேன். அப்போது பா.ஜனதாவின் சதியை முறியடிக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்று சொன்னார்.

    டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தபோது பா.ஜனதாவின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெருவில் இறங்கி போராடுங்கள் என கூறினார். ரபேல் விமான ஊழல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சி.பி.ஐ. இயக்குனர் மாற்றம் ஆகியவற்றுக்காக புதுவையில் பிரம்மாண்ட போரட்டத்தை நாம் நடத்தியுள்ளோம்.

    இன்னும் 4 அல்லது 5 மாதங்கள்தான் உள்ளது. இடையில் 5 மாநில தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாட்டு மக்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். போராட வேண்டும்.

    விலைவாசி உயர்வு, வேலையின்மை, பாதுகாப்பின்மை ஆகியவற்றால் நாட்டு மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். ராகுல்காந்தி தலைமையில் நாட்டு மக்களை துன்பங்களில் இருந்து காப்பாற்ற ஒவ்வொரு காங்கிரசாரும் போராட வேண்டும். இன்று சர்தார் வல்லபாய் படேலின் பிறந்ததினம். இந்திரா காந்தியின் நினைவுதினத்தை முறியடிக்க பா.ஜனதா சர்தார் வல்லபாய் படேலை கையில் எடுத்துள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்தவரே அவர் தான். பா.ஜனதா சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறது. பா.ஜனதாவுக்கு கொள்கையோ, கோட்பாடோ கிடையாது, நாற்காலிதான் வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுவதும் காங்கிரசாரை கவர்னராக நியமிப்பதாக பா.ஜனதா பொய் பிரச்சாரம் செய்தது. ஆனால் இன்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் கவர்னர்களாக உள்ளனர். மத்திய அரசு நிர்வாகத்தையே ஆர்.எஸ்.எஸ்.தான் நடத்துகிறது. பா.ஜனதாவை நாட்டை விட்டே விரட்ட வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேறும்.


    பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்கிறார். அவர் அப்பாவோ, தாத்தாவோ வந்தாலும் இதை செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

    காங்கிரஸ் ஒரு பீனிக்ஸ் பறவை. அது மீண்டும், மீண்டும் எழும். ராகுல்காந்தியை பிரதமராக்கும் தேர்தல் 2019(ல் வருகிறது. அதற்கு காங்கிரசார் இரவு, பகலாக ஒற்றுமையோடு பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் திரளான காங்கிரசார் பங்கேற்றனர்.

    கவர்னர் மாளிகையில் ஒரு போதும் பணபரிவர்த்தனை நடந்தது கிடையாது என்றும் இணைப்பு பாலமாக மட்டுமே செயல்படுவதாகவும் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார். #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் சமூக பங்களிப்பு நிதியை முறைகேடாக கவர்னர் மாளிகை வசூலித்ததாக முதல்- அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமியின் குற்றச்சாட்டிற்கு, கவர்னர் கிரண்பேடி பதில் அளித்தார். அதில் கவர்னர் மாளிகையில் எந்தவித பணபரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்று கூறினார்.

    இதனையடுத்து நேற்றைய தினம் முதல்-அமைச்சர் நாராயணசாமி மீண்டும் பேட்டி அளித்தார். அப்போது அவர் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பை வெளியிட்டு அதில் சமூக பங்களிப்பு நிதி பெற கவர்னர் மாளிகையில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

    மேலும், சமூக பங்களிப்பு நிதி வசூல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று கவர்னர் கிரண்பேடி மீது நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் கவர்னர் மாளிகையில் இருந்து ஒரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-


    முதல்-அமைச்சர் நாராயணசாமி அரசு அலுவலகங்கள் நிதி பரிமாற்றங்கள் இல்லாமல் சேவை செய்ய முடியும் என்பதை நம்பகூட முடியாமல் இருக்கலாம். புதர்களை கொண்ட 86 கி.மீ. உள்ள 23 கால்வாய்கள் நன்கொடையாளர்கள் மூலம் எந்திரத்தைக் கொண்டு தூர்வாரப்பட்டது. இதை செய்ய அரசுக்கு ரூ.10 கோடிக்கு மேல் செலவு பிடித்திருக்கும். இது அரசுக்கு ஒரு பைசா கூட செலவு இல்லாமல் சமூகத்தினால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இது அவர்களுக்கு நன்றி செலுத்தி கொண்டாடப்பட வேண்டிய தருணம். ஒரு வேளை முதல்-அமைச்சர் இவ்வளவு பெரிய சமுதாய ஆதரவை அரசு சேவைக்காக ஒரு போதும் அனுபவத்தில் கொண்டிருக்கமாட்டார் போலும். நீண்ட நாள் நீர் மிகு புதுவையாக மாற்றம் காண இது ஒரு எழுதப்படுகின்ற சரித்திரம்.

    நன்கொடையாளர்களில் பலர் அடுத்த ஆண்டு முதல் ஆண்டு பராமரிப்பை ஏற்றுக்கொள்ள தயாராகி வருகின்றனர். இது அவர்களுக்கு சொந்த செலவையே தரும். புதுவை இனி எப்போதும் நீர் மிகுந்தும் வளமாகவும், பசுமையாகவும் காணப்படும்.

    இதற்காக கவர்னர் மாளிகையில் ஒரு போதும் பணபரிவர்த்தனை நடந்தது கிடையாது. ஆனால், நமது முதல்-அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைக்கிறார். பொய் சொல்வது பாவம் என்பதை அவர் உணரவில்லை. அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு மாறாக நாங்கள், கவர்னர் மாளிகைக்கு வரும் பரிசு பொருட்களை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தினமும் கொடுத்து வருகிறோம்.

    இதில் கூட முதல்- அமைச்சர் பொய் கூறுவது வருத்தமளிக்கிறது. இவை அனைத்தும் என்னுடைய அறிவுறுத்தல்களின் படியே நடக்கிறது. இங்கு வாங்கப்படுகின்ற தனிப்பட்ட பரிசு முதற்கொண்டு அனைத்தும் திரும்ப வெளியே வழங்கப்படுகிறது. அல்லது கலைப் பொருட்களாக பாவிக்கப்படுகிறது.

    கவர்னர்மாளிகை தேவையானவர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் இடையே இணைப்பு பாலமாக செயல்படுகிறது. அரசின் நிதி பற்றாக்குறையை போக்க இது ஒரு சிறந்த வழியாக விளங்குகிறது.

    பொருளாதாரம் படைக்கப் பெற்றவர்களுக்கும், பொருளாதாரத்தில் வாடுபவர்களுக்கும் இடையே கவர்னர் மாளிகை தொடர்ந்து ஒரு பாலமாகவே செயல்படும். ஒரு வேளை, முதல்- அமைச்சர் சமுதாயமும், அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் ஒரு நேர்மறை சேவைக்கான கலாச்சார சந்தர்ப்பத்தை கடந்த கால அனுபவத்தில் பெற்றிருக்கமாட்டார் போலும்.

    இதை கற்றுக்கொள்ள இன்னும் இது தாமதமில்லை. முதல்-அமைச்சர் அவருடைய மக்களுக்காக தன்னை மாற்றி கொள்ள வேண்டுகிறோம்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #PondicherryGovernor #Kiranbedi #Narayanasamy
    ×