search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pondicherry assembly"

    தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் பிளாஸ்டிக்கை தடை செய்யக்கோரி பா.ஜனதா எம்எல்ஏ புதுவை சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். #Plastic #BJPMLA
    புதுச்சேரி:

    தமிழகத்தில் நாளை முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு, நீர் நிலை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.



    புதுவையில் ஏற்கனவே 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை உள்ளது. ஆனால் இந்த தடை கடுமையாக அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டதால் புதுவையில் பிளாஸ்டிக் விற்பனை, தயாரிப்பின் கள்ளச்சந்தையாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் பிளாஸ்டிக்கை தடை செய்யக்கோரி பா.ஜனதா எம்எல்ஏ புதுவை சட்டமன்ற வளாகத்தில் மைய மண்டபம் செல்லும் வழியில் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் தனது கையில் பதாகைகளை பிடித்தபடி அமர்ந்திருந்தார். அந்த பதாகைகளில் தடை செய், தடை செய் புதுவை நகரை மாசுபடுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை கெடுக்கும் பிளாஸ்டிக்கை புதுவையில் தடை செய் என்ற பதாகைகளை கையில் பிடித்தபடி கோ‌ஷம் எழுப்பினார்.

    பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் திடீர் போராட்டம் சட்டசபை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தையை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து போராட்டத்தை கைவிட்டார்.  #Plastic #BJPMLA

    புதுவை சட்டசபை இன்று கூடியது. சட்டமன்றத்தில் முதல் நிகழ்வாக மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் முன்மொழியப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. #PondicherryAssembly
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது.

    சபாநாயகர் வைத்திலிங்கம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். சட்டமன்றத்தில் முதல் நிகழ்வாக மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி, மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத்சாட்டர்ஜி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஐ.நா. பொதுச்செயலாளர் கோபிஅன்னான், புதுவை முன்னாள் அமைச்சர் காசிலிங்கம் ஆகியோருக்கான இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

    இரங்கல் தீர்மானத்தின் மீது தி.மு.க. உறுப்பினர் சிவா, சுயேச்சை உறுப்பினர் ராமச்சந்திரன், அ.தி.மு.க. உறுப்பினர் வையாபுரி மணிகண்டன், காங்கிரஸ் உறுப்பினர் பாலன், பா.ஜனதா உறுப்பினர் செல்வகணபதி, தி.மு.க. உறுப்பினர் கீதாஆனந்தன், பா.ஜனதா உறுப்பினர்கள் சங்கர், சாமிநாதன், அ.தி.மு.க. உறுப்பினர் அசனா, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயமூர்த்தி, அனந்தராமன், அமைச்சர் நமச்சிவாயம், அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன், எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பேசினர்.

    இதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கமும், இரங்கல் தீர்மானத்தின் மீது தனது கருத்துக்களை குறிப்பிட்டு பேசினார். இதைத்தொடர்ந்து சபை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தும் படி சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் மவுனமாக எழுந்து நின்று 2 நிமிடம் மறைந்த தலைவர்களுக்காக மவுன அஞ்சலி செலுத்தினர். #PondicherryAssembly
    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக புதுவை சட்டப்பேரவை வருகிற 14-ந்தேதி கூட்டப்படுவதாக சட்டசபை செயலாளர் தெரிவித்துள்ளார். #MekedatuDam #PondicherryAssembly
    புதுச்சேரி:

    கர்நாடக மாநிலம் மேகதாது என்ற பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.

    அணை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட ஆய்வு நடத்த மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் காவிரியில் தண்ணீர் வருவது தடைபடும். இதனால் தமிழகம், புதுவையில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என தமிழக அரசியல்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

    தமிழகத்தில் சிறப்பு சட்டமன்றத்தைக்கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து நேற்றைய தினம் தமிழக சட்டமன்றம் கூடியது.



    இந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும், நீர் வள ஆணைய அனுமதியை திரும்ப பெறக்கோரியும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானத்தை பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதத்துடன் அனுப்பி வைத்துள்ளார். புதுவையிலும் சிறப்பு சட்டமன்றத்தைக்கூட்ட வேண்டும் என அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கடிதம் கொடுத்தனர்.

    நேற்று முன்தினம் சபாநாயகரை முற்றுகையிட்டு அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் தர்ணா போராட்டமும் நடத்தினர். இதையடுத்து வரும் 14-ந்தேதி சிறப்பு சட்டமன்றத்தைக்கூட்ட அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதுவை சட்டப்பேரவை வருகிற 14-ந்தேதி காலை 10 மணிக்கு கூட்டப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

    ஒரு நாள் மட்டும் நடைபெறும் இந்த கூட்டத்தில் கர்நாடகாவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. #MekedatuDam #PondicherryAssembly

    3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் சட்டசபையில் அனுமதி அளித்ததன் மூலம் புதுவையில் ஒரு ஆண்டாக நீடித்து வந்த அரசியல் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. #NominatedMLAs #PondicherryAssembly
    புதுச்சேரி:

    புதுவையில் மாநில அரசின் சிபாரிசு இல்லாமலேயே மத்திய அரசு பாரதிய ஜனதா நிர்வாகிகள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது.

    அவர்களை அங்கீகரிக்க சபாநாயகர் மறுத்து விட்டார். இதனால் அவர்களை சட்டசபைக்குள் அனுமதிக்கவில்லை.

    இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கில் 3 எம்.எல்.ஏ.க்களின் நியமனமும் செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதன்பிறகும் அவர்களை சபாநாயகர் அனுமதிக்க மறுத்துவிட்டார்.

    சுப்ரீம் கோர்ட்டில் இதன் அப்பீல் வழக்கு நடந்து வருகிறது. அதில் நீதிபதிகள் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை எதுவும் விதிக்கப்படாததால் 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்கலாம். அதற்கு சபாநாயகர் அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

    இந்த நிலையில் புதுவை சட்டசபை கூட்டம் கடந்த 19-ந்தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் பட்ஜெட்டுக்கு அனுமதி தராததால் பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்படவில்லை.

    அதன்பிறகு கவர்னர் பட்ஜெட்டுக்கு அனுமதி அளித்தார். அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து இருந்தார்.

    அதன்படி இன்று சட்டசபை கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் பங்கேற்க செய்வது என்றும் முடிவெடுத்தனர்.

    இதற்காக சட்டசபை செயலாளர் மூலம் 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

    பட்ஜெட் மசோதாவை நிறைவேற்றுவதற்காக இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியது. கூட்டம் தொடங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்குள் வந்தனர்.


    அவர்கள் நேராக சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து பேசினார்கள். பின்னர் 9.25 மணியளவில் சட்டசபை கூட்ட அறைக்குள் 3 எம்.எல்.ஏ.க்களும் வந்தனர். அவர்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு சென்று அமர்ந்தனர். சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

    சட்டசபையில் பட்ஜெட் மசோதாவை நிறைவேற்ற ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. குரல் ஓட்டெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் சபை காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டது.

    3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் அனுமதி அளித்ததன் மூலம் புதுவையில் ஒரு ஆண்டாக நீடித்து வந்த அரசியல் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. #NominatedMLAs #PondicherryAssembly
    புதுவை சட்டசபை கூட்டத்தை வருகிற 30-ந் தேதி நடத்தலாம் என்று திட்டமிட்டு உள்ளனர். அன்று எம்.எல்.ஏ.க்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்படும். #PondicherryAssembly
    புதுச்சேரி:

    புதுவைக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி வர தாமதம் ஆனதால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.

    4 மாத காலத்துக்கு தேவையான பணத்தை மட்டும் ஒதுக்கீடு செய்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    பின்னர் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கிடைத்ததை அடுத்து கடந்த 2-ந் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த பட்ஜெட்டுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகு பட்ஜெட் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வரும்.

    ஆனால், கவர்னர் கிரண்பேடி இதற்கு ஒப்புதல் அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே பட்ஜெட் நிறைவேற்றப்படாமலேயே கடந்த 19-ந் தேதி சட்டசபை கூட்டம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

    அதன் பின்னர் கவர்னர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தார். ஆனால், அதில் ஒரு நிபந்தனை விதித்து இருந்தார்.

    புதுவையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று அதில் கூறி இருந்தார்.

    ஏற்கனவே சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு தலைவர்களை சந்திப்பதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் டெல்லி சென்றனர்.

    இதனால் உடனடியாக சட்டசபை கூட்டத்தை நடத்த முடியவில்லை. டெல்லி சென்ற எம்.எல்.ஏ.க்களில் பாதி பேர் இன்று புதுவை திரும்பினார்கள். மற்றவர்கள் இன்று இரவு திரும்புகிறார்கள்.

    எனவே, நாளை சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டு பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எம்.எல்.ஏ.க்கள் 3 நாட்களாக டெல்லியில் இருந்ததால் தங்களுக்கு ஓய்வு தேவை என்று கூறி இருக்கிறார்கள்.

    இதனால் சட்டசபை கூட்டத்தை வருகிற 30-ந் தேதி நடத்தலாம் என்று திட்டமிட்டு உள்ளனர். அன்று எம்.எல்.ஏ.க்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்படும்.

    அதன் பின்னர் அந்த மசோதா கவர்னருக்கு அனுப்பப்படும். அவர் ஒப்புதல் அளித்து மத்திய உள்துறைக்கு அனுப்புவார். உள்துறை அனுமதி அளித்ததும் பட்ஜெட் அமலுக்கு வரும்.

    ஆனால், கவர்னர் 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனையில் கூறி இருக்கிறார். அதை சபாநாயகர் ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்வி எழுகிறது.

    அவ்வாறு அனுமதிக்கவில்லை என்றால், கவர்னர் அதை ஏற்றுக் கொள்ளாமல் பட்ஜெட் மசோதாவுக்கு அனுமதி கொடுக்க மறுக்கலாம். இதனால் பட்ஜெட்டை அமல்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

    அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது.

    பொதுவாக அந்தந்த மாத சம்பளம் அந்த மாதத்தில் இறுதி நாளில் வழங்கப்படும். அதன்படி இந்த மாதம் (ஜூலை) சம்பளம் 31-ந் தேதி வழங்கப்பட வேண்டும்.

    இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கிய 4 மாத சம்பளம் கடந்த பிப்ரவரி மாதத்துக்கும் சேர்த்து 4 மாதங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.

    எனவே, இந்த மாதத்துக்கான அரசு ஊழியர் சம்பளத்துக்கு பட்ஜெட்டில் இருந்துதான் நிதி எடுக்க வேண்டும். கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும்.

    அது மட்டும் அல்ல, கவர்னர் அனுமதி அளித்தாலும் கூட இனி இந்த மாதம் 31-ந் தேதி சம்பளம் வழங்குவதற்கு கால அவகாசம் இல்லை.

    30-ந் தேதி சட்டசபை கூட்டம் நடத்தி மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அன்றே அனுப்பி வைக்கப்படும். அதற்கு அன்றைய தினமே கவர்னர் ஒப்புதல் அளித்தாலும் பின்னர் உள்துறைக்கு செல்ல வேண்டும். அங்கிருந்தும் அனுமதி வர வேண்டும். இதற்கு ஓரிரு நாள் காலம் தேவைப்படலாம்.

    பொதுவாக மாத கடைசி நாளில் சம்பளம் வழங்குவதற்கு 25-ந் தேதியே சம்பள பட்டியல் தயாரிக்கும் பணியை கருவூலத்துறை மேற்கொள்ளும். 28-ந் தேதிக்குள் பணிகள் அனைத்தையும் முடித்து வங்கிக்கு பட்டியலை அனுப்பி வைத்து விடுவார்கள்.

    அதன்படி மாத இறுதி நாளில் சம்பளம் வழங்கப்படும். இனி 30-ந் தேதி அனுமதி கிடைத்தால் அதன் பிறகு சம்பள பட்டியலை அனுப்ப முடியாது. எனவே, ஒன்றிரண்டு நாட்கள் கால தாமதத்துக்கு பிறகே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

    ஒருவேளை கவர்னர் அனுமதி வழங்கவில்லை என்றால் அவர் எப்போது அனுமதி வழங்குகிறாரோ அதன் பிறகுதான் சம்பளம் வழங்க முடியும்.

    இது மட்டும் அல்ல, அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க முடியாது. அரசு திட்ட பணிகளுக்கும், மற்ற செலவுகளுக்கும் நிதி இருக்காது. எனவே, ஒரு நெருக்கடியான நிலை புதுவையில் உருவாகி இருக்கிறது.

    இதற்கிடையே அரசிடம் மீதமாக இருக்கும் வேறு ஏதாவது நிதியில் இருந்து அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கலாமா என உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    அவ்வாறு எந்தெந்த துறைகளில் உபரி நிதி இருக்கிறது என்பது பற்றிய கணக்கெடுப்பும் நடந்து வருகிறது. #PondicherryAssembly
    புதுவை சட்டசபை கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.50-க்கு முடிந்தது. மீண்டும் 4.30 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை நடந்தது. இதில் பட்ஜெட்டிற்கு சட்டசபையின் ஒப்புதலும் பெறப்பட்டது. #Pondicherryassembly #CMNarayanasamy
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 4-ந்தேதி தொடங்கியது.

    யூனியன் பிரதேசமான புதுவைக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். உள்துறை அனுமதி கிடைக்காததால் கூட்டத்தொடரை தொடர்ந்து நடத்த முடியாமல் ஜூன் 5-ந்தேதி மீண்டும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    அதன்பிறகு மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 2-ந்தேதி கூடியது. அன்றைய தினம் நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.



    தொடர்ந்து கூட்டத் தொடரை இந்த மாதம் 27-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், மத்திய அரசு நேரடியாக நியமித்த 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருந்தது.

    இந்த வழக்கு கடந்த 13-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் நீதிபதிகள், எம்.எல்.ஏ.க்கள் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்காமல் வழக்கை 19-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    இதையடுத்து கடந்த 16-ந்தேதி சட்டசபைக்குள் நுழைய பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் முயன்றனர். ஆனால், சபை காவலர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை.

    ஒரு மணிநேரம் போராட்டம் நடத்திவிட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கலைந்து சென்றனர். இன்று சுப்ரீம் கோர்ட்டில் வரும் விசாரணையில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமான உத்தரவை பிறப்பிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.

    அப்படி உத்தரவு பிறப்பித்தால் நியமன எம்.எல். ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதை தவிர்க்க கூட்டத் தொடரை இன்று (வியாழக்கிழமையோடு) முடிப்பது என திட்டமிட்டனர்.

    இதனால் மானிய கோரிக்கை விவாதங்களை சுருக்கி 2 நாட்களில் நடத்துவது என முடிவெடுத்தனர். வழக்கமாக புதுவை சட்டசபை காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிக்கப்படும்.

    ஆனால், நேற்று முன் தினம் 9.30 மணிக்கு சட்டசபை நிகழ்வுகள் தொடங்கி மதியம் 2 மணி வரை நடந்தது. மீண்டும் மாலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடந்தது. நேற்றைய தினம் மானிய கோரிக்கை விவாதத்தை முடித்து சட்டசபையில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெற வேண்டும்.

    இதனால் காலை 9.30 மணிக்கு தொடங்கிய சட்டசபை கூட்டம் மதியம் 1.50-க்கு முடிந்தது மீண்டும் 4.30 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை நடந்தது. இதில் பட்ஜெட்டிற்கு சட்டசபையின் ஒப்புதலும் பெறப்பட்டது. #Pondicherryassembly #CMNarayanasamy

    சட்டசபைக்குள் நியமன எம்.எல்.ஏ.க்களை தடுப்பது நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகும் என்று கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். #GovernorKiranBedi #NominatedMLAs
    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர்கள் சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

    புதுவை கவர்னர் மாளிகையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.



    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

    மேலும் அவர்களை சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கவும் உத்தரவிட்டது. சட்டசபைக்குள் நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்து இருந்தார்.

    இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை கோரி கோர்ட்டில் தனலட்சுமி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி சமூக வலை தளத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நியமன எம்.எல்..ஏ.க்கள் நியமனம் செல்லும் எனவும், அவர்களை சட்டசபைக்கு அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டிலும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு தடை எதுவும் வழங்கப்படவில்லை.

    எனவே, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். அவர்களை தடுப்பது நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகும்.

    இவ்வாறு அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். #GovernorKiranBedi #NominatedMLAs
    புதுவை சட்டசபையில் வருகிற 2-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. #PondicherryBudget #PondicherryAssembly

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 4-ந் தேதி கூடியது. அன்று புதுவை அரசின் திட்டக்குழு கூடி 2018-2019-ம் ஆண்டுக்கான புதுவை மாநிலத்துக்கான ரூ.7530 கோடிக்கான திட்ட வரையரையை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

    ஆனால், மத்திய அரசிடம் இருந்து இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து கடந்த 5-ந் தேதி சட்டசபை கூட்டம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

     


    இதன் பிறகு முதல்- அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். இதையடுத்து கடந்த 19-ந் தேதி மத்திய அரசு புதுவை பட்ஜெட்டுக்கு அனுமதி அளித்தது.

    இதையடுத்து புதுவை சட்டசபை அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி மீண்டும் கூடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    புதுவை சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் சட்டசபை 2-ந் தேதி கூடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

    அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்- அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து பட்ஜெட்கூட்டத் தொடர் ஜூலை மாதம் முழுவதும் நடைபெறும் என்று தெரிகிறது. #PondicherryBudget #PondicherryAssembly

    ×