search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ban plastic"

    • நெல்லை மாவட்டத்தில் நெல்லை நீர்வளம் சார்பில் தூய பொருநை நெல்லைக்கு பெருமை என்ற தலைப்பில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் 1200 நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் துணிப்பைகளை பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொணடார்.

    நெல்லை:

    பாளையில் உள்ள ஒரு மையத்தில் நடைபெற்ற குரூப்-4 தேர்வை மாவட்ட கலெக்டர் விஷ்ணு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் நெல்லை நீர்வளம் சார்பில் தூய பொருநை நெல்லைக்கு பெருமை என்ற தலைப்பில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் 1200 நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தாமிரபரணி ஆற்றங்கரையோரம் நடக்கும் திருவிழா, முக்கிய நிகழ்வுகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

    ஆடி அமாவாசை, சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக சப்-கலெக்டர் ரிஷாப், மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகபிரியா ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறை ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    ஏற்கனவே சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்தாலும், கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வனத்துறை, காவல்துறையினர் சோதனையில் ஈடுபட உள்ளனர்.

    எனவே ஆடி அமாவாசை சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஆடி அமாவாசைக்கு தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் கொடுப்பவர்கள், பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பைகளை கொண்டு வர வேண்டும். அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் துணிப்பைகளை பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சப்-கலெக்டர் சந்திரசேகர், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், பாளை தாசில்தார் ஆவுடையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி லட்சுமியூரில் நடைபெற்றது
    • மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி லட்சுமியூரில் ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமேஸ்வரி முன்னிலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

    ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்து பொது மக்களுக்கு எடுத்துக்கூறி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு மஞ்சள் பையை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். லட்சுமியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ ,மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மணிவண்ணன், சண்முகநாதன் விவேகானந்தன் , அன்ன புஷ்பம் ஆகியோர் கலந்து கொண்டனர் . ஊராட்சி மன்ற செயலர் பாரத் நன்றி கூறினார்.

    தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் பிளாஸ்டிக்கை தடை செய்யக்கோரி பா.ஜனதா எம்எல்ஏ புதுவை சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். #Plastic #BJPMLA
    புதுச்சேரி:

    தமிழகத்தில் நாளை முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு, நீர் நிலை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.



    புதுவையில் ஏற்கனவே 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை உள்ளது. ஆனால் இந்த தடை கடுமையாக அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டதால் புதுவையில் பிளாஸ்டிக் விற்பனை, தயாரிப்பின் கள்ளச்சந்தையாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் பிளாஸ்டிக்கை தடை செய்யக்கோரி பா.ஜனதா எம்எல்ஏ புதுவை சட்டமன்ற வளாகத்தில் மைய மண்டபம் செல்லும் வழியில் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் தனது கையில் பதாகைகளை பிடித்தபடி அமர்ந்திருந்தார். அந்த பதாகைகளில் தடை செய், தடை செய் புதுவை நகரை மாசுபடுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை கெடுக்கும் பிளாஸ்டிக்கை புதுவையில் தடை செய் என்ற பதாகைகளை கையில் பிடித்தபடி கோ‌ஷம் எழுப்பினார்.

    பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் திடீர் போராட்டம் சட்டசபை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தையை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து போராட்டத்தை கைவிட்டார்.  #Plastic #BJPMLA

    புதுவையில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் கந்தசாமி ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டுமுதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது குறித்து ஏற்கனவே அரசால் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முழுமையாக தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் பார்த்திபன், இயக்குனர் ஸ்மிதா, என்ஜினீயர் ரமேஷ், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பைகள், கப்புகள் போன்றவற்றை புதுவையில் தடை செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான வழிமுறைகள், சட்ட வழிகள் மற்றும் மாற்றுப்பொருட்களின் உற்பத்தி போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆணையர்கள் பரிசோதனை நடத்தி அத்தகைய பொருட்கள் உற்பத்தி செய்வதை தடுக்க வேண்டும் என்று அமைச்சர் கந்தசாமி உத்தரவிட்டார்.

    ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட் களின் உபயோகத்தை தடை செய்வதற்கான செயல் திட்டத்தை 15 நாட்களில் அளிப்பதாக துறை செயலாளர் பார்த்திபன் தெரிவித்தார். 
    ×