search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor kiran bedi"

    புதுவை கவர்னர் கிரண்பேடி அவசரமாக டெல்லி சென்றுள்ள நிலையில் அவர் வேறு மாநிலத்தில் நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக கிரண்பேடி 2016 மே 29-ந்தேதி பதவியேற்றார்.

    கிரண்பேடி பதவியேற்ற பிறகு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றது. பதவியேற்றது முதல் கவர்னர் கிரண்பேடிக்கும், புதுவை அமைச்சரவைக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வந்தது.

    கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளங்களில் ஆட்சியாளர்களை விமர்சித்து வந்தார். இதற்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். யூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக்கும் பொருந்தும் என நாராயணசாமி கூறினார். ஆனால், கவர்னர் இதை ஏற்க மறுத்தார். இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


    இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதிசெய்தது. இனியாவது கவர்னர் கிரண்பேடி தீர்ப்பை ஏற்று மாநில அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என அமைச்சரவை வலியுறுத்தியது.

    இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கவர்னருக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது.

    இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தல் குறுக்கிட்டது. தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக கவர்னர் தனது செயல்பாடுகளை குறைத்து அமைதியாக இருந்து வந்தார். தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் நேற்றோடு முடிவுக்கு வந்தது. அகில இந்திய அளவில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று வரும் 30-ந் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார்.

    இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க கவர்னர் கிரண்பேடிக்கு அழைப்பு வந்துள்ளது. விழாவில் பங்கேற்க கவர்னர் கிரண்பேடி இன்று காலை புதுவையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி புறப்பட்டு செல்லும் முன்பாக புதுவை மக்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

    அதில், புதுவையின் வளர்ச்சிக்கு மேற்கொண்ட பணிகள், எடுத்த முயற்சிகள் குறித்து எழுதியுள்ளார். இதில் தனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இதனால் புதுவையில் இருந்து கவர்னர் கிரண்பேடி விடைபெறுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    கவர்னர் கிரண்பேடி மாநில கவர்னராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கம் அல்லது கேரளாவில் கிரண்பேடி கவர்னராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

    டெல்லி புறப்பட்டு செல்லும் முன்னர் கவர்னர் மாளிகையில் உள்ள தனது பொருட்களை பார்சல் செய்து வைக்கும்படி ஊழியர்களிடம் கிரண்பேடி கூறி இருக்கிறார். எனவே, அவர் மாற்றப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

    கிரண்பேடிக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் புருஷோத்தமன் புதுவை கவர்னராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    புதுவையில் அதிக அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக எனக்கு கோப்புகள் வரவில்லை என்று கவர்னர் கிரண் பேடி கூறி உள்ளார்.
    புதுச்சேரி:

    டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்றும் கவர்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக்கும் பொருந்தும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார்.

    ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம், கவர்னருக்கு தனி அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்டு ஒரு உத்தரவையும் பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இவ்வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்தும் தீர்ப்பளித்தது.

    இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. ஜூன் 6-ந் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

    இதற்கிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் அனைத்து செயலர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி செயல்படுங்கள் என்றும், அவ்வாறு செயல்படாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனால் கவர்னருக்கு எந்தவித கோப்பும் அனுப்பப்படவில்லை என தெரிகிறது.

    இந்த நிலையில் கவர்னர் கிரண் பேடி விதிகள் ஏதும் மாறாத நிலையில் தனக்கு கோப்புகள் ஏதும் வரவில்லை என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கவர்னர் கிரண் பேடி தனது பதிவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை நிர்வாகி என்ற கடமையில் பொதுமக்களுக்கு சில கருத்துக்களை தெரிவிக்க வேண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அரசு எந்த கோப்பையும் கவர்னர் மாளிகைக்கு அனுப்பவில்லை.

    புதுவை யூனியன் பிரதேச சட்டம், அலுவல் விதிகள், நிதி சட்டம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. இதுதொடர்பாக எந்த திருத்தமும் செய்யப்படாமல் அப்படியேதான் உள்ளது.

    இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    புதுச்சேரியில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வரும் நிலையில், காக்கை யோகா என்ற தலைப்பில் கவர்னர் கிரண்பேடி வெளியிட்ட டுவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Narayanasamy #GovernorKiranbedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார். தற்போது போராட்டம் மேலும் விரிவடைந்து நிலைமை மோசமாகி வரும் நிலையில், கவர்னர் கிரண்பேடி தனது டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று புதுவை திரும்பினார்.

    இந்நிலையில் கவர்னர் கிரண் பேடி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், தர்ணா போராட்டம் தொடர்பாக ‘காக்கை தர்ணா’ என்ற பெயரில் புகைப்படங்களுடன் கருத்தை பதிவு செய்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



    கவர்னர் மாளிகை வளாகத்தில் உள்ள தரை விரிப்பில் பூனை ஒன்று உருண்டு புரள்கிறது. இதேபோல் மரக்கிளையில் இரண்டு காகங்கள் அமர்ந்திருக்கின்றன. இந்த படங்களுடன் தனது கருத்தை கிரண் பேடி பதிவு செய்துள்ளார். அதில், ‘யோகா அனைவருக்கும் பொதுவானது. தர்ணா செய்வதும் யோகாதான். ஆனால், எந்த நோக்கத்திற்காக தர்ணா செய்கிறோம் என்பதைப் பொருத்து, அது என்ன ஆசனம் என்பதை கூற முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Narayanasamy #GovernorKiranbedi
    கவர்னர் கிரண்பேடி டெல்லியிருந்து இன்று புதுவை திரும்புவதால் முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #Narayanasamy #GovernorKiranbedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார். 6 நாட்கள் அவர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு 20-ந் தேதி தான் புதுவை திரும்புவதாக இருந்தது.

    புதுவையில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் கவர்னர் ஊரில் இல்லாமல் இருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

    சபாநாயகர் வைத்திலிங்கம் மத்திய உள்துறை மந்திரிக்கு கடிதம் அனுப்பினார்.

    அதில், புதுவையில் அசாதாரண சூழ்நிலை நிலவும்போது, இதை கண்டு கொள்ளாமல் ஊரை விட்டே கவர்னர் வெளியேறி விட்டார். எனவே, அவருக்கு பதிலாக இடைக்கால கவர்னரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    மேலும் காங்கிரஸ் மேலிட தலைவர்களும் டெல்லியில் உள்துறை மந்திரியை சந்தித்து இதுபற்றி புகார் கூறி இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் புதுவையில் போராட்டம் மேலும் விரிவடைந்து உள்ளது. நிலைமை மோசமாகி வருகிறது.

    இதனால் கவர்னர் கிரண்பேடி தனது டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு இன்றே புதுவை திரும்புகிறார்.

    மதியம் 2 மணி அளவில் அவர் கவர்னர் மாளிகைக்கு வந்து விடுவார் என்று கவர்னர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி குமரன் தெரிவித்தார்.



    கவர்னர் அவசரமாக திரும்புவதால் அவர் முதல்-அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, முதல்-அமைச்சரின் தர்ணா போராட்டம் இன்றே முடிவுக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே கவர்னர் கிரண்பேடி மீண்டும் புதுவை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை தனது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றினார். #Narayanasamy #GovernorKiranbedi
    புதுவையில் தற்போது நிலவிவரும் பிரச்சனைகள் தொடர்பாக நாராயணசாமியுடன் பொதுமக்கள் மன்றத்தில் விவாதிக்க தயாராக உள்ளதாக கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். #Narayanasamy #Kiranbedi
    புதுச்சேரி:

    சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பேடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    புதுவையை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும், பசுமையாகவும் வைத்திருக்க கடந்த 2½ வருடங்களாக கவர்னர் மாளிகை முயற்சி எடுத்து பணிகளை செய்து வருகிறது. கண்டிப்பான நடவடிக்கைகளால் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாத நிலையை ஏற்படுத்தி உள்ளோம்.

    அனைத்து நிதியையும் சரியான ஏழைகள் பயன்பெற வழி ஏற்படுத்தினோம். அதை மாற்று பணிகளுக்கு அனுமதிக்கவில்லை. தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளரின் ஆதரவுடன் இவற்றை செய்ய பணம் ஒதுக்கப்படாததற்கு நிதியை எப்படி செலவிட முடியும்?

    நீர் நிலைகள், வாய்க்கால்களை தூர்வார நன்கொடை பெற்று செய்தோம். இதன் மூலம் வெள்ளம் மற்றும் ஏழைகளின் இழப்புகள் தவிர்க்கப்பட்டன. 216 கன ஆய்வுகளை மேற்கொண்டு மக்கள் தேவைகளை அறிந்து தீர்த்து வைத்தோம்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு முறையான நிதி நிர்வாகத்தின் காரணமாக சுற்றுலா வாரியத்தில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ரூ.1 கோடியை பெற முடிந்தது. நிதி விதிமுறைகளை மீறி மானியங்களை வழங்கவில்லை. இது முதல்- அமைச்சரை மிகவும் தொந்தரவுக்குள்ளாக்கியது.



    சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிக்காததால் உயிரிழிப்புகள் ஏற்படுகின்றன. சாதாரண மனிதனின் உழைப்பு தான் அந்த குடும்பத்தையே காப்பாற்றுகிறது. அதற்காக ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி அதை அமல்படுத்துவதை தீவிரமாக்கினோம்.

    போராட்டத்தையொட்டி கவர்னர் மாளிகையை சுற்றி சாலைகள் அடைக்கப்பட்டுள்ளதற்கும், சாவு மணி அடிக்கப்படுவதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கும் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தற்போது எழுந்துள்ள பிரச்சனைகள் தொடர்பாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் நான் பொதுமக்கள் மன்றத்தில் விவாதிக்க தயாராக உள்ளேன். குறிப்பாக ஏழைகளுக்கான அரிசு, ரோடியர், சுதேசி மில், சர்க்கரை ஆலை மற்றும் உள்ளவை பற்றி விவாதிக்கலாம்.

    இவ்வாறு கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். #Narayanasamy #Kiranbedi
    புதுவை கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதல்-அமைச்சர் நாராயணசாமியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டெலிபோனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். #congress #Narayanasamy #MKStalin
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது போராட்டத்தின் காரணம் குறித்தும், போராட்டத்தின் தன்மை குறித்தும் கேட்டறிந்தார்.



    இந்த போராட்டம் வெற்றி பெறுவதற்காக வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் நாராயணசாமியிடம் கூறினார்.

    இதேபோல் புதுவை காங்கிரஸ் மேலிட பார்வையாளரும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக், மேலிட தலைவர் சஞ்சய்தத் ஆகியோரும் நாராயணசாமியை தொடர்பு கொண்டு போராட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். #congress #Narayanasamy #MKStalin
    புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி, கவர்னர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து 8 மணி நேரத்துக்கு மேலாக கவர்னர் மாளிகை வாசலில் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். #KiranBedi #Narayanaswamy #RajNivas #Protest
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 11-ம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என விதிமுறை அமல்படுத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

    பொதுமக்கள் இந்த எச்சரிக்கையை புறக்கணித்ததால் 2 நாட்களில் 30 ஆயிரம் வாகன எண்கள் விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கோர்ட் மூலம் இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது என்ற தகவல் பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இதற்கு அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், காங்கிரஸ் கூட்டணி கட்சியான தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் சிவா எம்.எல்.ஏ. உள்பட பலரும் கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    இதற்கிடையே அரசு பயணமாக மாகி சென்றிருந்த முதல்-மந்திரி நாராயணசாமி இன்று காலை புதுவைக்கு திரும்பினார். ஹெல்மெட் விவகாரம் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியிருப்பதை நாராயணசாமி அறிந்தார். இதையடுத்து உடனடியாக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், காங்கிரஸ் முதல்-மந்திரி நாராயணசாமி மற்றும் அமைச்சர்களும் கருப்பு வேட்டி, சட்டை அணிந்தனர்.

    நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், 
    எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி, பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா ஆகியோர் கவர்னர் மாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். 



    கவர்னர் மாளிகை அருகே சாலையில் போலீசார் தடுப்பு ஏற்படுத்தினர். அதை தாண்டி முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்களை செல்லவிடாமல் தடுத்ததால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை கவர்னர் மாளிகை வாசல் வரை அனுமதித்தனர். அங்கு முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கவர்னர் மாளிகை அருகே பரபரப்பான சூழ்நிலையும், பதட்டமும் ஏற்பட்டது. 

    போராட்டம் தொடர்பாக முதல்-மந்திரி நாராயணசாமி கூறுகையில், கவர்னர் கிரண்பேடி இங்கு பதவி ஏற்றதில் இருந்தே அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வந்தார். எந்த பணியையும் செய்ய முடியவில்லை. கவர்னரால் புதுவை மாநிலமே ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப் படுகிறார்கள். எனவே, வேறு வழி தெரியாமல் நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து 8 மணி நேரத்துக்கும் அதிகமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #KiranBedi #Narayanaswamy #RajNivas #Protest
    புதுவையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதின் அவசியம் குறித்து கவர்னர் கிரண்பேடி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். #KiranBedi #Helmet
    புதுச்சேரி:

    புதுவையில் கட்டாய ஹெல்மெட் சட்டம் இன்று முதல் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வது அவசியம் குறித்து கவர்னர் கிரண்பேடி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    அவர் நேற்று மாலை ரெட்டியார்பாளையம் பகுதிக்கு சென்றார். மூலக்குளம் அருகே சென்ற போது அவர் தனது காரில் இருந்து இறங்கினார். பின்னர் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களை நிறுத்தி, ‘ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். அது உங்கள் உயிரை பாதுகாக்கும். போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்’ என்றார். அதன் பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு தட்டாஞ்சாவடி, கருவடிக்குப்பம் வழியாக கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

    புதுவை அமைதியான, தூய்மையான மாநிலம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு போக்குவரத்து குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை. இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும் மதிப்பதில்லை.

    மதுபானம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது. இருசக்கர வாகனத்தில் 2 பேருக்கு மேல் செல்வது, வாகனங்களை நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்துவது போன்றவை குற்றமாக கருதப்படுகிறது. அதுபோல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவதும் குற்றம்தான். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி செல்வதால் விலை மதிப்பில்லாத உயிர் இழப்பு ஏற்படுகிறது. ஒருவர் உயிரிழக்கும் போது அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது.

    குழந்தைகள் பெற்றோரின்றி தவிக்கின்றனர். விபத்து வழக்கிற்கான கோர்ட்டுக்கு செல்லும்போது நேரம், பணம் வீணாகிறது. விபத்தால் உயிரிழக்கும் குடும்பங்களுக்கு விதவை பென்‌ஷன் வழங்குவது மூலம் அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது. சுகாதாரத்துறைக்கு மருத்துவ செலவும் ஏற்படுகிறது. முதல்-அமைச்சர் நாராயணசாமியின் மனைவி கூட வாகன விபத்தில் உயிரிழந்தார். அதுகூட ஹெல்மெட் அணியாதது தான் காரணம். எனவே கட்டாய ஹெல்மெட் சட்டத்துக்கு சமரசம் கிடையாது. அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்.

    அவ்வாறு அணியாமல் செல்வோர் மீது போக்குவரத்து போலீசார், பல்கலைக்கழக மாணவர்கள், தன்னார்வலர்கள் வாகன எண்ணை குறித்து வைத்து நீதிமன்றத்தில் புகார் அளிக்கலாம். நீதிமன்றம் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும். சட்டம்-ஒழுங்கை சீர்குலைப்பது, திருடுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை எச்சரிக்கை செய்து விடமுடியுமா? அதுபோல் தான் ஹெல்மெட் அணியாமல் செல்வோரை வெறுமனே விடமுடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #KiranBedi #Helmet
    பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று கவர்னர் கிரண்பேடி அறிவித்துள்ளார். #KiranBedi
    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் கவர்னர் கிரண்பேடி இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆந்திர மாநிலத்தின் கவர்னராக நான் நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஓராண்டாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இது வதந்தியாக இருக்கலாம்.



    பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். இனி நிர்வாகியாக மட்டுமே செயல்பட விரும்புகிறேன்.

    இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறினார்.  #KiranBedi



    டெல்லியில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் போராட்டம் வெற்றி பெற கவர்னர் கிரண்பேடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #GovernorKiranbedi

    புதுச்சேரி:

    புதுவை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கால்நடைத்துறை அலுவலகத்தில் கவர்னர் கிரண்பேடி இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் நிருபர்களிடம் கவர்னர் கிரண்பேடி கூறியதாவது:-

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே நியாய விலைக்கடைகள் மூலம் இலவச பொருட்கள் வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது. இதன்படியே, பொங்கல் இலவச பொருட்களும் வழங்க முடியும். அதனடிப்படையில் கோப்புகளை அனுப்பினால் மட்டுமே ஒப்புதல் வழங்க முடியும்.

    இவ்வாறு கிரண்பேடி கூறினார்.

    அவரிடம் கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 4-ந் தேதி முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற உள்ளதே? என கேட்டதற்கு என்னை திரும்ப பெறக் கோரி டெல்லியில் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    அவர்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டு வரட்டும். இன்று என்ன நடக்கிறது என்பதை மட்டுமே பார்க்க வேண்டும், நாளை நடப்பதை யாராலும் கணிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #GovernorKiranbedi

    தினமும் கால்வாயில் குப்பை கொட்டும் 100 பேருக்கு அதிக அளவில் அபராதம் விதிக்குமாறு கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். #PondicherryGovernor #Kiranbedi

    புதுச்சேரி:

    வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள புதுவை கவர்னர் கிரண்பேடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

    புதுவையின் கிராமப்புற பகுதிகளில் 23 வாய்க்கால்களை சுமார் 84 கி.மீ. தூரம் தூர்வாரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நகர பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க கழிவு நீர் வாய்க்கால்கள், கால்வாய்களை தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

    இந்த பணிகளை கவர்னர் கிரண்பேடி நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். பெரும் பாலும் வாய்க்காலில் பிளாஸ்டிக் குப்பைகள் அடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற முடியாமல் அடைக்கப்பட்டு இருந்தது.

    ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவர்னர் கிரண்பேடி வாய்க்கால்களை ஆய்வு செய்த போதும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் அடைத்து இருந்தது. இதனால், வாய்க்கால்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கும்படி கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

     


    ஆனால், இந்த அபராதம் விதிப்பு அமல் படுத்தப்படவில்லை. இதே நிலை தற்போதும் நீடிப்பது கவர்னர் கிரண்பேடியை கோபம் அடைய செய்துள்ளது. இதனால் தினமும் வாய்க்காலில் குப்பை கொட்டும் 100 பேருக்கு அதிக அளவில் அபராதம் விதிக்குமாறு கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

    புதுவை கவர்னர் மாளிகையில் பொதுப்பணித்துறை பல்நோக்கு ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள் ஆகியோரை அழைத்து கவர்னர் கிரண்பேடி மழைக் கால பணிகள் குறித்து கலந்துரையாடினார். அப்போது ஊழியர்களுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

    இதனையடுத்து எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி வாட்ஸ்அப்பில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

    தூர்வாரப்பட்ட கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் செல்கிறது. கால்வாயில் குப்பை கொட்டினால் திங்கள் முதல் அபராதம் விதிக்கலாம். நகராட்சி ஆய்வாளர்கள் இதை நடைமுறைப்படுத்தலாம். நாள்தோறும் 100 பேர் வரை இம்முறையில் அபராதம் விதிக்கலாம். குப்பை கொட்டுவோர் மீது அதிகளவு அபராதம் விதியுங்கள். இது இறுதி எச்சரிக்கை.

    இவ்வாறு கிரண்பேடி அந்த பதிவில் கூறியுள்ளார். #PondicherryGovernor #Kiranbedi

    எம்.எல்.ஏ. அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் உட்பட பல்நோக்கு ஊழியர்கள் அனைவரையும் மழை நிவாரண பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். #KiranBedi #PondicherryGovernor

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி வார இறுதி நாட்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று நீர்நிலைகளை ஆய்வு நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தர விட்டு வருகிறார்.

    அதன்படி கவர்னர் மாளிகையின் சார்பில் 204-வது வார இறுதிநாள் ஆய்வு இன்று நடந்தது. கவர்னர் கிரண்பேடி, பொதுப்பணித்துறை தலைமை என்ஜினியர் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகளோடு நகர பகுதியில் ஆய்வு செய்தார்.

    தன்னார்வலர்கள் உதவியுடன் நகரில் உள்ள 4 வாய்க்கால்களை தலா ரூ.7 லட்சம் செலவில் சீரமைக்க கவர்னர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

    நகர பகுதியில் உள்ள பெரியவாய்க்கால், சின்ன வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை அவர் இன்று ஆய்வு செய்தார்.

    தன்னார்வலர்கள் நிதியளித்தும் பணியை மேற்கொள்ள பொதுப் பணித்துறையின் பல்நோக்கு ஊழியர்கள் அங்கு இல்லாததை கண்டு கவர்னர் கோபம் அடைந்தார்.

    பருவமழைக்காலம் முடியும்வரை பல்நோக்கு ஊழியர்களை காலை 6 மணி முதல் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 10 மணி வரையும் 2 ஷிப்ட் முறையில் பணி செய்ய வைக்கும்படி பொதுப்பணித்துறை தலைமை என்ஜினியருக்கு உத்தரவிட்டார்.


    அப்போது பல்நோக்கு ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், ஊழியர்கள் சாலை பணி, நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு பணி, சட்டமன்ற அலுவலகம், எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளிட்ட மாற்று பணிகளில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதை ஏற்க மறுத்த கவர்னர் கிரண்பேடி எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளிட்ட மாற்று பணிகளில் உள்ள அனைத்து பல்நோக்கு ஊழியர்களையும் உடனடியாக துறைக்கு திரும்ப அழைக்கும்படியும், பருவமழைக்காலம் முடியும் வரை அவர்கள் கால்வாய் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் அதன்பின் மாற்று பணிகளுக்கு அனுப்பவும் உத்தரவிட்டார்.

    மேலும் வாய்க்கால் துப்புரவு பணியை செய்யாமல் காலம் கடத்தும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து வேறு ஒப்பந்ததாரருக்கு பணியை வழங்கும்படியும் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறும்போது, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுக்க வேண்டியது அவசியம். இதை செய்தால் மழை பாதிப்பு இருக்காது. நிவாரண நிதியும் வீணாகாது என்றார். #KiranBedi #PondicherryGovernor

    ×