என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
டெல்லி போராட்டம் வெற்றி பெற கவர்னர் கிரண்பேடி வாழ்த்து
புதுச்சேரி:
புதுவை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கால்நடைத்துறை அலுவலகத்தில் கவர்னர் கிரண்பேடி இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் நிருபர்களிடம் கவர்னர் கிரண்பேடி கூறியதாவது:-
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே நியாய விலைக்கடைகள் மூலம் இலவச பொருட்கள் வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது. இதன்படியே, பொங்கல் இலவச பொருட்களும் வழங்க முடியும். அதனடிப்படையில் கோப்புகளை அனுப்பினால் மட்டுமே ஒப்புதல் வழங்க முடியும்.
இவ்வாறு கிரண்பேடி கூறினார்.
அவரிடம் கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 4-ந் தேதி முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற உள்ளதே? என கேட்டதற்கு என்னை திரும்ப பெறக் கோரி டெல்லியில் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
அவர்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டு வரட்டும். இன்று என்ன நடக்கிறது என்பதை மட்டுமே பார்க்க வேண்டும், நாளை நடப்பதை யாராலும் கணிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #GovernorKiranbedi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்