என் மலர்
நீங்கள் தேடியது "Puducherry government"
- ஊழியர்கள் கூட்டுப் போராட்டக் குழு மூலம் 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.
- தொழிற்சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை பி.ஆர்.டி.சி.யில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரியும், நிரந்தர ஊழியர்கள் 7-வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தியும் கடந்த 28-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால் இன்று 12-வது நாளாக பஸ்கள் ஓடவில்லை. இதனால் புதுச்சேரியை சுற்றி உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே, ஊழியர்கள் கூட்டுப் போராட்டக் குழு மூலம் 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த நிர்வாகம் முன் வந்தது. இதனை எழுத்து பூர்வமாக உறுதிமொழியாக அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என, போராட்ட குழு தெரிவித்தனர்.
இந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும் என பி.ஆர்.டி.சி. நிர்வாகம் எச்சரித்தது.
இந்த நிலையில் புதுவை சட்டமன்றத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் சிவா, நேரு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் தொழிற்சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களுக்கான சம்பளத்தை ரூ.10 ஆயிரம் உயர்த்துவதாகவும், நிரந்தர ஊழியர்களுக்கு அகவிலைப்படியை படிப்படியாக உயர்த்தி தருவதாகவும் உறுதி அளித்தார்.
இதனையடுத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
இன்று மாலை முதல் பஸ்களை இயக்குவதாக கூறி முதலமைச்சர் ரங்கசாமியிடம் தெரிவித்து சென்றனர். முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தையில் பி.ஆர்.டி.சி மேலாண் இயக்குனர் சிவக்குமார் இருந்தார்.
- ஊழியர்களின் குறைந்தபட்ச ஊழியத்தை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- போராட்டத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த சம்பளத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 28-ந் தேதி முதல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பி.ஆர்.டி.சி. மேலாண் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்த நிலையில் எழுத்துப் பூர்வமான உறுதிமொழி கடிதம் கேட்டனர். ஆனால் நிர்வாகம் தரப்பில் உறுதிமொழி கடிதம் வழங்காததால் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 11-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது.
இந்தநிலையில் போரட்டத்தில் ஈடுபட்டு வரும் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் சிவக்குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக விதிகளின்படி குறைந்தபட்ச ஊதிய கொள்கைளை முறையாக அமல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊழியத்தை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தரம் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு எதிராக கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
கடந்த 28-ந் தேதியில் இருந்து 11 நாட்களாக ஒப்பந்த விதிகளை மீறி தொடர்ந்து சட்ட விரோதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தின் ஒப்பந்த உடன்படிக்கை மற்றும் கொள்கையின்படி, முன் அனுமதியின்றி தொடர்ந்து 8 நாட்களுக்கு மேல் பணிக்கு வராத ஊழியர்களின் மீது பணி நீக்கம் போன்ற ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். மீறினால் 'எஸ்மா' (அத்தியாவசிய சேவை பராமரிப்பு சட்டம்) எந்த முன்னறிவிப்பு இன்றி பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார். எனவே விரைவில் அவர்கள் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
- பந்த் காரணமாக புதுச்சேரியில் ஆட்டோ, டெம்போ, தனியார் பேருந்துகள் ஓடவில்லை.
புதுச்சேரி:
நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
புதுச்சேரி, தமிழ்நாட்டில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உட்பட மற்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இந்தநிலையில், புதுச்சேரியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யு., தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம் தொடங்கியது. பந்த் காரணமாக புதுச்சேரியில் ஆட்டோ, டெம்போ, தனியார் பேருந்துகள் ஓடவில்லை.
முழு அடைப்பு போராட்டத்தின்போது அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க மாணவ, மாணவிகளின் நலன் கருதி புதுவையில் பல தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.
- அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- உரிய அனுமதியின்றி பணிக்கு வராத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், படிகள் வழங்கக்கூடாது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
புதுச்சேரி, தமிழ்நாட்டில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உட்பட மற்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
முழுஅடைப்பின்போது புதிய பஸ் நிலையம், அரியாங்குப்பம், கன்னியக்கோவில், பாகூர், வில்லியனூர், திருக்கனூர், மதகடிப்பட்டு, சேதராப்பட்டு உள்ளிட்ட இடங்களில் மறியல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பந்த் போராட்டத்தின்போது பஸ், ஆட்டோ, டெம்போ போன்றவற்றை இயக்கமாட்டோம் என்று ஏ.ஐ.சி.டி.யு., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோ, டெம்போக்கள் ஓடாது. அதேநேரத்தில் அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்பு போராட்டத்தின்போது அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க மாணவ, மாணவிகளின் நலன் கருதி புதுவையில் பல தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.
போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து புதுவை அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் அரசுத் துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்தத்துக்கு புதுவை அரசு ஊழியர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். உரிய அனுமதியின்றி அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடுவது நியமன விதிகளுக்கு எதிரானது ஆகும்.
எனவே அரசுத்துறைகள், சார்பு நிறுவனங்கள், கழகங்கள், சங்கங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு அவசர தேவையின்றி விடுமுறை வழங்கக்கூடாது. உரிய அனுமதியின்றி பணிக்கு வராத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், படிகள் வழங்கக்கூடாது. அத்தகையவர்கள் மீது விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு பணியில் சட்டம் - ஒழுங்கு, இந்திய ரிசர்வ் பட்டாலியன், ஊர்க்காவல் படையினர் என 1,000 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்.
- வான்வழி தாக்குதலின் போது வெளியே செல்வதும், புகைப்படம் எடுப்பதும் கூடாது.
புதுச்சேரி:
புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தியா-பாகிஸ்தான் போர் பதட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வான்வழித் தாக்குதல் ஏதேனும் நடந்தால் உங்கள் வீட்டில பாதாள அறை இருக்க வாய்ப்பில்லை என்பதால் குளியல் அறையை தேர்வு செய்யலாம். தாக்குதலில் ஜன்னல் கதவுகள் நொறுங்காமல் இருக்க பிளாஸ்டிக் சீட் வைத்து ஒட்டி விடுங்கள்.
வீட்டில் உள்ள மெத்தை, மேஜை, புத்தகங்கள் வைத்து தற்காலிக குடில் அமைத்து கொள்ளுங்கள். வாய் சிறிதாக திறந்த நிலையில் பின்னந்தலையினை கைகளால் மறைத்தவாறு தரையில் குப்புறப்படுத்து கொள்ள வேண்டும்.
போதிய உணவு, குடிநீர் இருப்பை உறுதி செய்யுங்கள். குளியல் வாளி, டப் என அனைத்திலும் நீர் வைத்துக் கொள்ள வேண்டும். மின் இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்பை அனைத்து வையுங்கள். ஜன்னல் அருகே இருக்காதீர்கள். பறந்து வரும் இடிபாடுகளிடம் இருந்து காத்து கொள்ள போர்வை, விரிப்புகள் கொண்டு மூடி கொள்ள வேண்டும்.
அபாய சங்கு ஒலிப்பதன் மூலம் விடுக்கப்படும் விமான தாக்குதல் குறித்த எச்சரிக்கைகளை பின்பற்றவும். உங்கள் சுற்று வட்டாரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். வான்வழி தாக்குதலின் போது வெளியே செல்வதும், புகைப்படம் எடுப்பதும் கூடாது.
சுவர், ஜன்னல் அருகே நிற்க கூடாது. பெரும் கூட்டமாக நிற்க கூடாது. தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். அனைத்தும் சரியாகி விட்டதாக அரசு அறிவிக்கும் வரை வீட்டினுள் இருங்கள். வான்வழி தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஆபத்துக்கான சமிக்கை என்பதால் அதை அலட்சியப்படுத்த கூடாது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- புதுவை அரசு சார்பில் கொம்பாக்கம்பேட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது.
- சட்டசபை எதிர்கட்சி தலைவர் சிவா இசை கச்சேரிக்கு வந்த தவில், நாதஸ்வர வித்வான்களிடம் சென்று நலம் விசாரித்தார்.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் கொம்பாக்கம்பேட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது.
விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர்களை வரவேற்க சட்டசபை எதிர்கட்சி தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வான சிவா மங்கள இசைக்கு ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி வர காலதாமதமானது. அப்போது சட்டசபை எதிர்கட்சி தலைவர் சிவா இசை கச்சேரிக்கு வந்த தவில், நாதஸ்வர வித்வான்களிடம் சென்று நலம் விசாரித்தார்.
பின்னர் அவர்களிடம் கொடுங்கள் நானும் வாசித்து பார்க்கிறேன் என்று கூறி நாதஸ்வரத்தை வாங்கி வாசித்து பார்த்தார். இதைப்பார்த்த அவரது ஆதரவாளர்கள், விழாவுக்கு வந்தவர்கள் பாராட்டி, கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
- ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை தொட்டது.
- அடுத்த 3 மணி நேரத்திற்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இன்னும் 3 அல்லது 4 மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை தொட்டது.
மணிக்கு அதிகபட்சமாக 90 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும், அடுத்த 3- 4 மணி நேரத்தில் புயல் கரையை முழுமையாக கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கி உள்ளதால், பொது மக்களுக்கு புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, பொது மக்கள் இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை வரை அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
- புதுச்சேரியில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது.
- வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் புதுச்சேரியில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக அனைத்து ரேசன் கார்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும்.
மேலும், ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குதலா ரூ.4 லட்சம் வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ₹20,000 மற்றும் வீடுகளுக்கு ₹10,000 வழங்கப்படும்.
வெள்ளத்தால் பயிர் சேதம் ஏற்பட்ட நிலையில் ஒரு ஹெக்டேருக்கு 30,000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும்.
வெள்ளத்தால் உயிரிழந்த ஒரு மாட்டுக்கு ரூ.40,000, இளம் கன்றுக்கு ரூ. 30,000 நிவாரண தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் மாநில அளவிலான பெண் குழந்தையை காப்போம், கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் இன்று நடந்தது.
துறை இயக்குனர் யஷ்வந்தையா வரவேற்றார். முதல்-அமைச்சர் நாராயணசாமி குத்து விளக்கேற்றி பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
பெண் குழந்தைகள் அனைத்து துறைகளிலும் சாதனை செய்வதை பார்க்கிறோம். சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு வாய்ப்பளித்தால் அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.

பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாப்பதை புதுவை அரசு முதல் கடமையாக கொண்டுள்ளது. இதற்காக பல்வேறு திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.
வட மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் பார்க்க முடியாது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் சிசுக்கொலை நடக்கிறது. குழந்தை திருமணம் நடைமுறையில் உள்ளது.
கணவரை இழந்தால் உடன்கட்டை ஏறுவதும் தொடர்கிறது. பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லாத நிலையும், கற்பழிக்கப்படும் நிலையும் உள்ளது. இவற்றை ஒழித்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பும், சுதந்திரமும் கிடைக்கும்.
எங்கள் அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளில் பெண் குழந்தை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். பாலியல் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 23 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுவையில் பெண்கள் 85 சதவீதம் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். புதுவையில் பெண்கள் சுதந்திரமாக உள்ளனர். நகர பகுதி மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காக இந்த பயிற்சி முகாமில் விவாதித்து புதிய கருத்துக்களை, திட்டங்களை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சமூக நலத்துறை செயலர் ஆலிஸ்வாஸ் சிறப்புரையாற்றினார். பாலின சமத்துவம், பாகுபாடு குறித்து அதேகொம் நெட்வொர்க் லலிதாம்பாள், பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டம் குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை துணை இயக்குனர் வரலட்சுமி, பெண்கள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் குறித்து அன்னமேரி, தயாவதி ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். மகளிர் நல பிரிவு துணை இயக்குனர் வரலட்சுமி நன்றி கூறினார். #Narayanasamy
புதுச்சேரி:
அகில இந்திய வணிகர் சம்மேளன துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கருக்கு பாராட்டு விழா ஜெயராம் திருமண நிலையத்தில் நடந்தது.
புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு துணைத்தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், பழனி அடைக்கலம், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் பாலு வரவேற்றார்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவசங்கருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி பேசினார். அவர் பேசும்போது:-
புதுவை வியாபாரிகள் தாங்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை அரசுக்கு வரியாக செலுத்துகிறார்கள். இதன்மூலம் அவர்கள் அரசின் ஒரு அங்கமாகவே செயல்படுகிறார்கள். புதுவை அரசு வணிகர்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, தெற்குமாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வடக்குமாநில அமைப்பாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு விசுவநாதன், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர், பா.ம.க. முன்னாள் எம்.பி. தன்ராஜ், விடுதலை சிறுத்தை கட்சி தேவபொழிலன், தமிழ்ச்சங்க தலைவர் முத்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கூட்டமைப்பின் துணைத்தலைவர்கள் பாபு, அன்பழகன், சரவணன், கணேசன், ஆறுமுகம், அனில்குமார், கலீல் ரகுமான், சித்திக்ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் தங்கமணி நன்றி கூறினார். #narayanasamy #puducherrygovernment
புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். புதுவை மாநில அரசு ஆசிரியர் தினத்தை கொண்டாடும் தகுதியை இழந்துள்ளது.
புதுவை அரசு பட்ஜெட்டில் சுமார் ரூ.600 கோடிக்கு மேல் கல்விக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அரசு பள்ளிகளின் தரம் உயரவில்லை. 10 ஆண்டுக்கு முன்பு ஒரு லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் படித்தனர்.
படிப்படியாக இது குறைந்து தற்போது 74 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் படிக்கும் நிலையில் உள்ளது. இதற்கு அரசு பள்ளியின் கல்வித்தரம், உள் கட்டமைப்பு வசதி, ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவற்றை தீர்க்காததுதான் காரணம்.
மாணவர்களுக்கு பள்ளி திறந்து 3 மாதமாகியும் இதுவரை சீருடைகூட வழங்கப்படவில்லை. சைக்கிள், குடை, மழைக் கோட், உதவித்தொகை என எதையும் அரசு வழங்கவில்லை.
அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆசிரியர் தினத்தை புறக்கணித்து கறுப்பு தினமாக அறிவித்துள்ளனர். போராட்டத்தை அவர்கள் மீது அரசு திணித்துள்ளது. 6 மாதமாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. 7-வது சம்பள கமிஷனை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமல்படுத்தியும், நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அமல்படுத்தவில்லை.
சிறுபான்மையினர்தான் நிதியுதவி பெறும் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். அரசு திட்டமிட்டு சிறுபான்மையினருக்கு துரோகம் செய்கிறது. கவர்னரிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சமீபத்தில் வெளி நாட்டில் படிக்கும் மாணவி விமானத்தில் வரும்போது தமிழிசை சவுந்தரராஜனையும், அவர் சார்ந்த கட்சியையும் விமர்சித்தார். மலிவு விளம்பரம் தேடும் நோக்கத்தில் அந்த மாணவி செயல்பட்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
எந்த அரசியல் கட்சி தலைவராக இருந்தாலும் அவரின் முகத்திற்கு எதிரே அவரைப்பற்றியோ, அவர் கட்சியை பற்றியோ விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதே ஸ்டாலின் ரெயிலில் தன்னுடன் பயணம் செய்தவர் செல்பி எடுத்தபோது கன்னத்தில் அறைந்தார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும் டுவிட்டரில் அந்த பெண்ணுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலின் போது அரியாங்குப்பத்தில் விமர்சித்தார் என்பதற்காக வேட்டியை மடித்து கொண்டு இறங்கி சென்றவர் நாராயணசாமி. தனக்கென்றால் ஒன்று, பிற கட்சிகளுக்கு என்றால் ஒன்று என இவர்கள் பேசி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை கட்டுமானர் (ஒப்பந்ததாரர்கள்) சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை சுமார் ரூ.250 கோடி வரை உள்ளது.
ஆனால், இந்த நிதியாண்டில் ரூ.55 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த ஏமாற்றத்துக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகி உள்ளோம்.
இந்த நிலையில் பொதுப்பணித்துறை காண்டிராக்டராகிய முகில் வண்ணன், பொதுப் பணித்துறையில் இருந்து வரவேண்டிய தொகை வராத காரணத்தினால் அவர் வெளியில் வாங்கிய கடனுக்கு பதில் சொல்ல முடியாமல் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார்.
எனவே, முகில்வண்ணன் தற்கொலை செய்து கொண்டது போன்ற துயர சம்பவம் தொடராமல் இருக்க, புதுவை அரசு கடந்த மாதம் அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எப்படி பேர்க்கால அடிப்படையில் அவசரகால நிதியில் இருந்து மாத ஊதியத்தை வழங்கியது போல் ஒரு மாதத்துக்குள் நிலுவையில் உள்ள முழு தொகையையும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டும்.
இந்த ஆண்டு ஒதுக்கிய குறைந்தபட்ச நிதியை கூட 20 நாட்கள் ஆகியும் பொதுப்பணித்துறையில் இழுத்தடித்துக்கொண்டு இருப்பதை ஓரிரு நாட்களுக்குள் நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.






