search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry Government"

    • புதுவை அரசு சார்பில் கொம்பாக்கம்பேட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது.
    • சட்டசபை எதிர்கட்சி தலைவர் சிவா இசை கச்சேரிக்கு வந்த தவில், நாதஸ்வர வித்வான்களிடம் சென்று நலம் விசாரித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் கொம்பாக்கம்பேட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது.

    விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர்களை வரவேற்க சட்டசபை எதிர்கட்சி தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வான சிவா மங்கள இசைக்கு ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி வர காலதாமதமானது. அப்போது சட்டசபை எதிர்கட்சி தலைவர் சிவா இசை கச்சேரிக்கு வந்த தவில், நாதஸ்வர வித்வான்களிடம் சென்று நலம் விசாரித்தார்.

    பின்னர் அவர்களிடம் கொடுங்கள் நானும் வாசித்து பார்க்கிறேன் என்று கூறி நாதஸ்வரத்தை வாங்கி வாசித்து பார்த்தார். இதைப்பார்த்த அவரது ஆதரவாளர்கள், விழாவுக்கு வந்தவர்கள் பாராட்டி, கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாப்பதை புதுவை அரசு முதல் கடமையாக கொண்டுள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் மாநில அளவிலான பெண் குழந்தையை காப்போம், கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் இன்று நடந்தது.

    துறை இயக்குனர் யஷ்வந்தையா வரவேற்றார். முதல்-அமைச்சர் நாராயணசாமி குத்து விளக்கேற்றி பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

    பெண் குழந்தைகள் அனைத்து துறைகளிலும் சாதனை செய்வதை பார்க்கிறோம். சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு வாய்ப்பளித்தால் அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.

    புதுவை மாநிலத்தை பொறுத்தவரை ஆயிரம் ஆண் வாக்காளர்களுக்கு ஆயிரத்து 50 பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக ஆண்களை விட 20 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இதன்மூலமே புதுவையில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.



    பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாப்பதை புதுவை அரசு முதல் கடமையாக கொண்டுள்ளது. இதற்காக பல்வேறு திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

    வட மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் பார்க்க முடியாது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் சிசுக்கொலை நடக்கிறது. குழந்தை திருமணம் நடைமுறையில் உள்ளது.

    கணவரை இழந்தால் உடன்கட்டை ஏறுவதும் தொடர்கிறது. பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லாத நிலையும், கற்பழிக்கப்படும் நிலையும் உள்ளது. இவற்றை ஒழித்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பும், சுதந்திரமும் கிடைக்கும்.

    எங்கள் அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளில் பெண் குழந்தை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். பாலியல் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 23 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுவையில் பெண்கள் 85 சதவீதம் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். புதுவையில் பெண்கள் சுதந்திரமாக உள்ளனர். நகர பகுதி மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காக இந்த பயிற்சி முகாமில் விவாதித்து புதிய கருத்துக்களை, திட்டங்களை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சமூக நலத்துறை செயலர் ஆலிஸ்வாஸ் சிறப்புரையாற்றினார். பாலின சமத்துவம், பாகுபாடு குறித்து அதேகொம் நெட்வொர்க் லலிதாம்பாள், பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டம் குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை துணை இயக்குனர் வரலட்சுமி, பெண்கள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் குறித்து அன்னமேரி, தயாவதி ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். மகளிர் நல பிரிவு துணை இயக்குனர் வரலட்சுமி நன்றி கூறினார். #Narayanasamy

    புதுவை அரசு வணிகர்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று பாராட்டு விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசினார். #narayanasamy #puducherrygovernment

    புதுச்சேரி:

    அகில இந்திய வணிகர் சம்மேளன துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கருக்கு பாராட்டு விழா ஜெயராம் திருமண நிலையத்தில் நடந்தது.

    புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு துணைத்தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், பழனி அடைக்கலம், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் பாலு வரவேற்றார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவசங்கருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி பேசினார். அவர் பேசும்போது:-

    புதுவை வியாபாரிகள் தாங்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை அரசுக்கு வரியாக செலுத்துகிறார்கள். இதன்மூலம் அவர்கள் அரசின் ஒரு அங்கமாகவே செயல்படுகிறார்கள். புதுவை அரசு வணிகர்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

    விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, தெற்குமாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வடக்குமாநில அமைப்பாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு விசுவநாதன், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர், பா.ம.க. முன்னாள் எம்.பி. தன்ராஜ், விடுதலை சிறுத்தை கட்சி தேவபொழிலன், தமிழ்ச்சங்க தலைவர் முத்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    கூட்டமைப்பின் துணைத்தலைவர்கள் பாபு, அன்பழகன், சரவணன், கணேசன், ஆறுமுகம், அனில்குமார், கலீல் ரகுமான், சித்திக்ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் தங்கமணி நன்றி கூறினார்.  #narayanasamy #puducherrygovernment

    நிதியுதவி மூலம் பள்ளிகள் நடத்திவரும் சிறுபான்மையினருக்கு புதுவை அரசு திட்டமிட்டு துரோகம் இழைத்து வருவதாக அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். புதுவை மாநில அரசு ஆசிரியர் தினத்தை கொண்டாடும் தகுதியை இழந்துள்ளது.

    புதுவை அரசு பட்ஜெட்டில் சுமார் ரூ.600 கோடிக்கு மேல் கல்விக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அரசு பள்ளிகளின் தரம் உயரவில்லை. 10 ஆண்டுக்கு முன்பு ஒரு லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் படித்தனர்.

    படிப்படியாக இது குறைந்து தற்போது 74 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் படிக்கும் நிலையில் உள்ளது. இதற்கு அரசு பள்ளியின் கல்வித்தரம், உள் கட்டமைப்பு வசதி, ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவற்றை தீர்க்காததுதான் காரணம்.

    மாணவர்களுக்கு பள்ளி திறந்து 3 மாதமாகியும் இதுவரை சீருடைகூட வழங்கப்படவில்லை. சைக்கிள், குடை, மழைக் கோட், உதவித்தொகை என எதையும் அரசு வழங்கவில்லை.

    அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆசிரியர் தினத்தை புறக்கணித்து கறுப்பு தினமாக அறிவித்துள்ளனர். போராட்டத்தை அவர்கள் மீது அரசு திணித்துள்ளது. 6 மாதமாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. 7-வது சம்பள கமி‌ஷனை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமல்படுத்தியும், நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அமல்படுத்தவில்லை.

    சிறுபான்மையினர்தான் நிதியுதவி பெறும் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். அரசு திட்டமிட்டு சிறுபான்மையினருக்கு துரோகம் செய்கிறது. கவர்னரிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சமீபத்தில் வெளி நாட்டில் படிக்கும் மாணவி விமானத்தில் வரும்போது தமிழிசை சவுந்தரராஜனையும், அவர் சார்ந்த கட்சியையும் விமர்சித்தார். மலிவு விளம்பரம் தேடும் நோக்கத்தில் அந்த மாணவி செயல்பட்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

    எந்த அரசியல் கட்சி தலைவராக இருந்தாலும் அவரின் முகத்திற்கு எதிரே அவரைப்பற்றியோ, அவர் கட்சியை பற்றியோ விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இதே ஸ்டாலின் ரெயிலில் தன்னுடன் பயணம் செய்தவர் செல்பி எடுத்தபோது கன்னத்தில் அறைந்தார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும் டுவிட்டரில் அந்த பெண்ணுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலின் போது அரியாங்குப்பத்தில் விமர்சித்தார் என்பதற்காக வேட்டியை மடித்து கொண்டு இறங்கி சென்றவர் நாராயணசாமி. தனக்கென்றால் ஒன்று, பிற கட்சிகளுக்கு என்றால் ஒன்று என இவர்கள் பேசி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.250 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை கட்டுமானர் (ஒப்பந்ததாரர்கள்) சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை சுமார் ரூ.250 கோடி வரை உள்ளது.

    ஆனால், இந்த நிதியாண்டில் ரூ.55 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த ஏமாற்றத்துக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகி உள்ளோம்.

    இந்த நிலையில் பொதுப்பணித்துறை காண்டிராக்டராகிய முகில் வண்ணன், பொதுப் பணித்துறையில் இருந்து வரவேண்டிய தொகை வராத காரணத்தினால் அவர் வெளியில் வாங்கிய கடனுக்கு பதில் சொல்ல முடியாமல் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார்.

    எனவே, முகில்வண்ணன் தற்கொலை செய்து கொண்டது போன்ற துயர சம்பவம் தொடராமல் இருக்க, புதுவை அரசு கடந்த மாதம் அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எப்படி பேர்க்கால அடிப்படையில் அவசரகால நிதியில் இருந்து மாத ஊதியத்தை வழங்கியது போல் ஒரு மாதத்துக்குள் நிலுவையில் உள்ள முழு தொகையையும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டும்.

    இந்த ஆண்டு ஒதுக்கிய குறைந்தபட்ச நிதியை கூட 20 நாட்கள் ஆகியும் பொதுப்பணித்துறையில் இழுத்தடித்துக்கொண்டு இருப்பதை ஓரிரு நாட்களுக்குள் நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
    புதுச்சேரி அரசு நிர்வாகத்தை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
    கீழ்வேளூர்:

    நாகை அடுத்த நாகூரில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசை எதிர்பார்க்க தேவையில்லை. வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது

    தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை, அரசுத் துறைகளில் இணை செயலாளர்களாக நியமிக்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    மேலும், நிர்வாக சீர்கேட்டிற்கு வழி வகுக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ்.,மற்றும் சங்பரிவார அமைப்புகளை அரசு துறைகளில் உள்ளே கொண்டு வரவே மத்திய அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளது. புதுச்சேரி அரசு நிர்வாகத்தை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது. இதை ஒருபோதும் புதுச்சேரி அரசு ஏற்றுக்கொள்ளாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×