search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anbazhagan"

    • என் வளர்ச்சிக்கு ஊக்கம் வழங்கியவர் பெரியப்பா.
    • தமிழர் நலவாழ்வுக்காகவே வாழ்ந்து மறைந்த இனமானப் பேராசிரியரின் பிறந்தநாளில் அவரின் நீங்கா நினைவுகளை நெஞ்சிலேந்தி வணங்குகிறேன்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    "யாரோ சிறியர் நரியர்

    சூதோ வாதோ செய்திடத் துணிவரேல்

    பேராசிரியர் கூர்வேல் பிளக்கும்!

    தீராப் பிணியும் தீர்ந்து தமிழினம் பிழைக்கும்!

    பெரியாரின் பிள்ளைகள் நாம்

    பேரறிஞர் தம்பிகள் நாம் - என்றும்

    பிரியாத இருவண்ணக் கொடியே நாம்!"

    என முத்தமிழறிஞர் கலைஞர் கவிபாடிய கழகத்தின் கொள்கைத்தூண், என் வளர்ச்சிக்கு ஊக்கம் வழங்கிய பெரியப்பா, தமிழர் நலவாழ்வுக்காகவே வாழ்ந்து மறைந்த இனமானப் பேராசிரியரின் பிறந்தநாளில் அவரின் நீங்கா நினைவுகளை நெஞ்சிலேந்தி வணங்குகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • அன்பழகன் ஆரூடம்
    • அதேபோல கூட்டணி கட்சியை பலகீனப்படுத்தி, பிளவுபடுத்தி ஆட்சி மாற்றம் செய்வதாக பா.ஜனதா மீது ஏற்கனவே புகார் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமைச்சர வையில் ஒரு அமைச்சரை சேர்ப்பதும், நீக்குவதும் முதல்- அமைச்சரின் உரிமை. அந்தவகையில் தனது அமைச்ச ரவையில் இடம் பெற்றிருந்த பெண் அமைச்சரை முதல்-அமைச்சர் நீக்கினார்.

    இதற்கான அனுமதி ஜனாதிபதியிடம் இருப்பதாக தகவல் சொல்கின்றனர். கடந்த காலத்தில் முதல்-அமைச்சராக இருந்த சண்முகம், தனது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கண்ணனை நீக்கினார்.

    நீக்கிய ஒரு மணி நேரத்தில் அதற்கான உத்தரவு வெளி வந்தது. இதற்கு முதல்-அமைச்சரின் பரிந்து ரையும், கவர்னரின் ஒப்புதலும் போதும். புதிய அமைச்சரை நியமிக்கத்தான் ஜனாதிபதி வரை அனுமதி பெற வேண்டும்.

    அமைச்சரை நீக்க தனியாக கடிதமும், புதிய அமைச்சரை நியமிக்க தனியாக என 2 கடிதம் அளித்திருக்க வேண்டும். என்ஆர்.காங்கிரசுடன் கூட்டணியாக உள்ள பாஜக முதல்-அமைச்சருக்கு திட்டமிட்டு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.

    இதனால் முதல்- அமைச்சரின் செயல்பாட்டில் பலகீனம் ஏற்படுகிறது. மத்திய பா.ஜனதா மந்திரி ஒருவரும், மாநில பா.ஜனதா மந்திரி ஒருவரும் சந்திரபிரியங்கா நீக்கத்தை தடுத்து நிறுத்துவதாக அதிகாரப்பூர்வ தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது.

    இதேநிலை நீடித்தால் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்து விடும். ஏற்கனவே முதல்-அமைச்ச ருக்கு பல்வேறு இடையூறு களை பா.ஜனதா அளித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. அதேபோல கூட்டணி கட்சியை பலகீனப்படுத்தி, பிளவுபடுத்தி ஆட்சி மாற்றம் செய்வதாக பா.ஜனதா மீது ஏற்கனவே புகார் உள்ளது.

    இந்த புகார் புதுவையிலும் எழுகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி விழித்துக்கொள்வது நல்லது. ஒரு அமைச்சர் நீக்கத்துக்கு 15 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    இது நாகரீகமான அரசியலுக்கான வழி அல்ல. இதற்கு என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இரு கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும்.

    தற்போதைய அரசியல் சூழலால் பாராளுமன்ற தேர்தலோடு புதுவை சட்டமன்ற தேர்தலும் வரலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அன்பழகன் குற்றச்சாட்டு
    • மாநில அந்தஸ்தை மத்திய பா.ஜனதா அரசு வழங்காது என முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும் தெரியும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலஅ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்க ளிடம் கூறிய தாவது:-

    புதுவைக்கு மாநில அந்தஸ்து பெரும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் நாடகம் நடத்துகிறது.

    மத்தியில் காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தபோது புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை.

    பிரதமருக்கு நெருக்க மான இணை மந்திரியாக பதவியில் இருந்த நாராயண சாமி நினைத்திருந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றிருக்கலாம். மத்தியிலும், மாநிலத்திலும் 10 ஆண்டாக ஆட்சியில் இருந்த காங்கிரசும், தி.மு.க. வும் நினைத்திருந்தால் எப்போதோ மாநில அந்தஸ்து பெற்றிருக்கலாம்.

    ஆனால் இதை செய்யமால், இண்டியா கூட்டணி கட்சிகள் தற்போது கபடநாடகம் ஆடுகின்றன.

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய பா.ஜனதா அரசு வழங்காது என முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும் தெரியும். இப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டு மத்திய அரசை அனுகுவோம் என்கிறார். சபாநாயகர் இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறார்.

    புதுச்சேரி மாநில பா.ஜனதாவின் நிலைபாடு என்ன? என தெளிவாக கூற வேண்டும். மாநில அந்தஸ்துக்கு தேவையான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னெடுத்து செல்ல வேண்டும்.

    அனைத்து க்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். காவிரி நீரை பெறவும் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கேடு நினைப்பவர் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி.

    தமிழகத்தில் கடந்த மாதம் அ.தி.மு.க. பொதுக்குழுவில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றி னோம். வேறு எந்த கட்சிகளும் இதுபோன்று நிறைவேற்றியது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அன்பழகன் பேட்டி
    • புதுவையில் சட்டத்தின் ஆட்சி நடை பெறவில்லை தாதாக்களின் ஆட்சி நடை பெறும் சூழல் வந்து விட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் சுற்றுலா என்ற பெயரில் கலாச்சாரம், பெண்கள் பாதுகாப்பு முழுவதும் சீரழிக்கப்

    பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ரெஸ்டோபார், மசாஜ் கிளப்புகள், ஸ்பா, பப் மற்றும் கேபரே டேன்ஸ், அதன் தொடர்ச்சியாக விபச்சாரம் ஆகியவை எந்த விதமான தங்கு தடையுமின்றி நடத்தபடுகிறது.

    வெளியூரிலிருந்து புதுவையில் தங்கி படிக்கும் மாணவிகள், வேலை பார்க்கும் பெண்களை சிலர் அணுகி அவர்களை தவறான பாதையில் அழைத்து செல்கின்றனர்.கடந்த 2 ஆண்டு காலமாக இது நடைபெற்று வருகிறது. இவற்றை தடுக்க வேண்டிய காவல்துறை எதையும் தடுத்து நிறுத்தவில்லை.

    அரசு மற்றும் காவல்துறை யின் உயர் அதிகாரிகள் இவை அனைத்தையும பார்வையாளராக வேடிக்கை பார்த்து வரு கின்றனர்.

    எனவே காவல்துறை உயர் அதிகாரியும், கவர்ன ரும் இந்த கலாச்சார சீரழிவை தடுக்க கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவையில் சட்டத்தின் ஆட்சி நடை பெறவில்லை தாதாக்களின் ஆட்சி நடை பெறும் சூழல் வந்து விட்டது.

    சட்டப்பேரவை நிலம் விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் மீது சி.பி.ஐ. விசரணைக்கு அனுப்பி உள்ளேன் என சபாநாயகர் கூறினார். இதுவரை அது குறித்து எந்த தகவல் இல்லை.

    உண்மையில் சி.பி.ஐ. விசாரணைக்கு அவர் அனுப்பினாரா? அல்லது சமாதானம் செய்ய பணம் ஏதாவது கைமாறியதா.?

    இவ்வாறு அன்பழகன் கூறினார்

    • அன்பழகன் வழங்கினார்
    • கண்ணம்மா தோட்டம் ரைஸ் மில் எதிரில் பாண்டுரங்கனின் உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தந்தையும், புதுவை மாநில அ.தி.மு.க. முன்னாள் அவைத் தலைவருமான பாண்டுரங்கனின் 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

    இதனையொட்டி அரியாங்குப்பம் தொகுதி அருந்ததிபுரம் கண்ணம்மா தோட்டம் ரைஸ் மில் எதிரில் பாண்டுரங்கனின் உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    இங்கு புதுவை மாநில அ.தி.மு.க. பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமையில் மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் பாண்டுரங்கன் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    இதன் தொடர்ச்சியாக 1000-க்கும் மேற்ப்பட்ட ஏழைகளுக்கு சேலை உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப் பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர், மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், திருநாவுக்கரசு.மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில துணை செயலாளர்கள் பி.எல் கணேசன், எம்.ஏ.கே.கருணாநிதி, நாகமணி, , காந்தி,

    உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் மருதமலையப்பன், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன்,

    மாநில இலக்கியணி செயலாளர் ராமசாமி,மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் பரசுராமன், மாநில இலக்கியணி துணை தலைவர் தட்சணாமூர்த்தி, தொகுதி செயலாளர்கள் ராஜா, பாஸ்கரன், சிவக்குமார், நடேசன், சம்பத், கருணாநிதி, கமல்தாஸ், வேலவன், கோபால், குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் பாலன் நாக.லோகநாதன்,

    உழவர்கரை நகர அவைத் தலைவர் டாக்டர் கணேஷ் , உழவர்கரை நகர முன்னாள் துணை செயலாளர் விமலா ஸ்ரீ, மாநில மாணவர் அணி முன்னாள் பொருளாளர் பார்த்தசாரதி, தொகுதி தலைவர்கள் ராஜேந்திரன், மூர்த்தி, உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • அன்பழகன் தாக்கு
    • இந்து மதத்தை அவமானப்படுத்தி பேசுவது தி.மு.க.வினரின் வழக்கமாகும். ஓட்டு வங்கிக்காக திட்டமிட்டு மத துவேசத்தை மக்களிடம் தி.மு.க கொண்டு செல்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க சார்பில் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதிய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் நடந்தது.

    அ.தி.மு.க. அவை தலைவர் அன்பானந்தம் தலைமை தாங்கினார். உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் கோபால், பொதுக்குழு உறுப்பினர் நாக.லோகநாதன், முன்னாள் தொகுதி தலைவர் துரைசாமி, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகுமாறன், புதுவை மாநில செயலாளர் அன்பழகன் ஆகியோர் 500-க்கும் மேற்பட்ட ஏழை பெண்களுக்கு புடவை வழங்கினர்.

    தொடர்ந்து மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    ஆட்சியில் இருந்த போதுதான் சாராத எந்த மதத்தையும் புன்படுத்தும் கருத்துக்களை உயிர் மூச்சு உள்ளவரை பேசாதவர்கள் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. அவர்கள் வழியை பின்பற்றுவர் எடப்பாடி பழனிசாமி.

    பிற மதம் சுப நிகழ்ச்சிகளில் இந்து மதத்தை அவமானப்படுத்தி பேசுவது தி.மு.க.வினரின் வழக்கமாகும். ஓட்டு வங்கிக்காக திட்டமிட்டு மத துவேசத்தை மக்களிடம் தி.மு.க கொண்டு செல்கிறது.

    ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக சேவை செய்யும் ஒரு மாபெரும் இயக்கம் அ.தி.மு.க.

    புதுவையில் செயல்படுத்தப்படும் பல்வேறு நல்ல திட்டங்களுக்கு கோரிக்கை வைப்பதும், அதனை செயல்படுத்த போராட்டம் நடத்துவதும் அ.தி.மு.க. மட்டுமே. இதனை மக்கள் நன்கு உணர வேண்டும்.2024-ல் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் மகத்தான வெற்றியை பெறும். எடப்பாடி பழனிசாமி இந்திய அரசியலில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக வர இருக்கிறார். அதற்கு புதுவை தொகுதி தேர்தல் வெற்றி அவசியமானது.

    இவ்வாறு அன்பழகன் பேசினார்.

    கூட்டத்தில் மாநில ஜெ. பேரவை செயலாளர் பாஸ்கர், துணைத் தலைவர் ராஜாராமன், இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர்கள் கணேசன், மகாதேவி, ஆர்.வி.திருநாவுக்கரசு, பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணைச் செயலாளர்கள் உமா, குணசேகரன், எம்.ஏ.கே.கருணாநிதி, நாகமணி, வி.கே.மூர்த்தி, காந்தி, உழவர்கரை நகர செயலாளர் எஸ்.எஸ்.சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன் ,, மேற்கு மாநில ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உருளையன்பேட்டை தொகுதி அவைத் தலைவர் ராஜா நன்றி கூறினார்.

    • அ.தி.மு.க. வலியுறுத்தல்
    • 100-க்கணக்கான ஒட்டல் உரிமையாளர்கள் கடற்கரை மணல் பகுதிகளில் வேலி அமைத்து, டெண்ட் அமைத்து தங்களுக்கு சொந்தமானதாக அபகரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள காமாட்சி அம்மன் கோவில் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து, போலி பட்டா மாற்றம் செய்து முறைகேடுகள் நடத்தியதாக 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பத்திர பதிவுத் துறையில் கடந்த 2 ஆண்டுகளாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் பத்திர பதிவுத் துறை இணையதளத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக காணாமல் போய் உள்ளது.

    திட்டமிட்டு இந்த தவறை துறை அதிகாரிகள் தைரியத்துடன் செய்துள்ளதாக தெரிகிறது.

    இது புதுவை மாநிலத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுனிவு ஆகும். இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒரு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் தங்களது உயிரையும் துச்சமென நினைத்து ஒப்பந்த அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியில் அமர்த்தபட்டனர்.

    தற்போது செவிலியர் பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.

    இதில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு பணி வழங்க வேண்டும் அல்லது பணி நியமன விதிப்படி பணிக்கு ஆட்கள் எடுக்கும் போது ஏற்கனவே கொரோனா காலத்தில் பணிபுரிந்து வந்த செவிலியர்களுக்கு 25 சதவீதம் மதிப்பெண் கொடுத்து அவர்கள் பணியில் சேருவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    புதுவை மாநிலம் முழு வதும் தற்போது கடற்கரைப் பகுதிகள் தனியாரால் அபகரிக்கப்பட்டு வருகிறது. 100-க்கணக்கான ஒட்டல் உரிமையாளர்கள் கடற்கரை மணல் பகுதிகளில் வேலி அமைத்து, டெண்ட் அமைத்து தங்களுக்கு சொந்தமானதாக அபகரித்து வருகின்றனர்.

    அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூல் செய்து வருகின்றனர். போலி பத்திரம் மூலம் 15 கி.மீ தூரம் உள்ள கடற்கரையை அபகரிக்கும் சூழல் உள்ளது. வழக்கம் போல் அரசு பாராமுகம் போல் இல்லாமல் தனி யார்கள் ஆக்கிரமிப்பு செய்வது தடுத்து நிறுத்த வேண்டும்.

    ஒரு ஆட்டோவில் 6 மாணவர்களை மட்டுமே ஏற்றி செல்ல வேண்டும். அளவுக்கு அதிகமான மாணவர்கள் ஏற்றி செல்லக்கூடாது. என்ன சட்டம் உள்ளதோ அதனை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும். அதிகப்படியாக மாணவர்களை ஏற்றி செல்வது தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார்.
    • வார்டு செயலாளர்கள் ஜெயக்குமார், பாலு, பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க சார்பில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் எதிரில் மாநில கழக செயலாளர் அன்பழகன் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாநில பொரு ளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் அன்பானந்தம், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநிலத் துணைச் செயலாளர் நாகமணி, பொதுக்குழு உறுப்பினர் பாலன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ் வேந்தன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், , தொகுதி அவைத் தலைவர் ராஜேந்திரன், வார்டு செயலாளர்கள் ஜெயக்குமார், பாலு, பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொகுதி செயலாளர் ராஜா, ஜீவா ஏற்பாடு செய்தனர்.

    • தமிழக டெல்டா விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பினை வாபஸ் பெற்ற மத்திய அரசை அ.தி.மு.க. வரவேற்கிறது.
    • வருவாய்க்காக இரவில் கடை வைத்துக் கொள்ளலாம் என அரசு அனுமதித்துள்ளது மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை சீரழிந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக டெல்டா விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பினை வாபஸ் பெற்ற மத்திய அரசை அ.தி.மு.க. வரவேற்கிறது. இது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைநோக்கு பார்வையுடன் கொண்டு வந்த வேளாண் பாதுகாப்பு சட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

    புதுவை மாநிலம் முழுக்க இரவு நேர மதுபான பார்கள் மற்றும் ரெஸ்டோ பார்கள், கடைகள் திறந்திருப்பதால் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு உள்ளது. இரவு 2 மணி வரை ரெஸ்டோ பார்கள் திறந்திருப்பதால் இளைஞர், இளம்பெண்கள் மது, கஞ்சா போதைக்கு சர்வசாதாரணமாக அடிமையாகி உள்ளனர்.

    இதனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளால் மாநில மக்களை பாதுகாக்க முடியாத சூழல் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. வருவாய்க்காக இரவில் கடை வைத்துக் கொள்ளலாம் என அரசு அனுமதித்துள்ளது மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை சீரழிந்துள்ளது.

    அண்டை மாநிலத்தில் இருந்து விதவிதமாக போதை பொருட்கள் விற்பனை செய்யக் கூடிய கேந்திரமாக புதுவை மாறியுள்ளது. அரைகுறை ஆடையுடன் பெண்கள் நகரப்பகுதிகளில் சுற்றுகின்றனர். இதற்கு எல்லாம் அரசு அனுமதி கொடுப்பது என்பது நியாயமற்ற செயல்.

    பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தும் முதல்-அமைச்சர் ரங்கசாமி இதுபோன்ற செயல்களையும் அனுமதிக்கலாமா? இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். புதுவை கலாச்சார சீரழிவு மையமாக மாறுவதை தடுக்க நள்ளிரவில் ரெஸ்டோபார் திறப்பதை அரசு ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அ.தி.மு.க. மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    • அ.தி.மு.க. சார்பில் உப்பளம் கட்சி தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
    • பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் அமைந்து 23 மாதம் ஆகியும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் நிறைவேற்ற வில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் உப்பளம் கட்சி தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

    அ.தி.மு.க. மாநில அவைத் தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் அன்பழகன் பெண்களுக்கு தள்ளுவண்டி, இலவச புடவை, தையல் மிஷின் ஆகியவற்றை வழங்கி பேசியதாவது:-

    தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடுவது போன்று முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி தமிழக விடியா அரசின் முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு வென்சாரம் வீசுகிறார்.

    பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் அமைந்து 23 மாதம் ஆகியும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் நிறைவேற்ற வில்லை. ஆனால் புதுவையில் அந்தத் திட்டம் அறிவிக்கப்படாமலேயே நிறைவேற்றப்பட்டது.

    தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் முதியோர் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.1000 மட்டுமே நிதி உதவியாக வழங்கப்படுகிறது.

    ஆனால் புதுவையில் முதியோர் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ. 2500 வழங்குவதை மறந்து விட்டு நடக்கும் ஆட்சி டுபாக்கூர் ஆட்சி என்றும் முதல்-அமைச்சர் டம்மி முதல்-அமைச்சர் என்றும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார்.

    தனது ஆட்சி காலத்தில் ரெஸ்ட்ரோ பார்களையும், அதில் பெண்களை வைத்து நடனம் நடத்தவும் அனுமதி வழங்கிவிட்டு தற்போது உத்தமர் போன்று அறிக்கை விடுகிறார்.அனைத்து துறைகளிலும் ஊழல் என தினம்தோறும் பேசும் நாராயணசாமி எந்த ஒரு ஊழலையாவது இன்று வரை ஆதாரத்துடன் கூறியுள்ளாரா.? இது போன்று முழு வேக்காட்டு அரசியல்வாதிகளின் உண்மை நிலையை மக்கள் உணர்ந்து உள்ளார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் வெற்றியை கட்சிக்கு பெற்று தருவார்.

    2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மலரும் போது, புதுவையிலும் அ.தி.மு.க. ஆட்சி மலரும். அதற்கு துணையாக மகளிர் இருக்க வேண்டும். இவ்வாறு அன்பழகன் பேசினார்.

    விழாவில், மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு,கணேசன், மகாதேவி, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள், கருணாநிதி, பி.எல்.கணேசன், நாகமணி ,காந்தி, கிருஷ்ணமூர்த்தி,குமுதன், மணவாளன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளர் தீபிகாவதி உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • முத்தமிழறிஞர் கலைஞருக்கு உறுதுணையாக இனமானம் காக்க அயராது பாடுபட்ட இனமான பேராசிரியரின் நினைவுநாளில் அவரைப் போற்றுகிறேன்.
    • அன்பழகனின் வாழ்வு ஒவ்வொருவரும் பயில வேண்டிய கொள்கை வகுப்பு.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    வாழ்நாளெல்லாம் கொள்கை உறுதியோடு, தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் காட்டிய பாதையில், முத்தமிழறிஞர் கலைஞருக்கு உறுதுணையாக இனமானம் காக்க அயராது பாடுபட்ட இனமான பேராசிரியரின் நினைவுநாளில் அவரைப் போற்றுகிறேன்.

    அவரது வாழ்வு ஒவ்வொருவரும் பயில வேண்டிய கொள்கை வகுப்பு.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உப்பளத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார்.
    • மின்விசிறி, சில்வர் பாத்திரம், எல்.ஜி.பி. அடுப்பு, ஹாட் பாக்ஸ், இட்லி குக்கர், சலவைப் பெட்டி, மற்றும் 750 நபர்களுக்கு இலவச வேட்டி, சேலை, மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

    உப்பளத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் அன்பானந்தம், ஜெ. பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அங்கு கட்சி கொடி ஏற்றி, பட்டாசு வெடித்து, அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவ படத்திற்கும்,

    எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலையணிவித்து, மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு தள்ளு வண்டி, தையல் மிஷன், கிரைண்டர், குக்கர், மிக்சி, மின்சார அடுப்பு, தவா வாணல், பில்டர் ஹீட்டர், மின்விசிறி, சில்வர் பாத்திரம், எல்.ஜி.பி. அடுப்பு, ஹாட் பாக்ஸ், இட்லி குக்கர், சலவைப் பெட்டி, மற்றும் 750 நபர்களுக்கு இலவச வேட்டி, சேலை, மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வீரம்மாள், கணேசன், மகாதேவி, பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், எம்.ஏ.கே. கருணாநிதி, கணேசன், நாகமணி, மூர்த்தி,

    காந்தி,கிருஷ்ணமூர்த்தி, குணசேகரன், குமுதன், சித்தானந்தம், பாண்டுரங்கன், சிவாலய இளங்கோ, பாப்புசாமி, மருதமலையப்பன், பிரதீப், ராமசாமி, செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முத்தியால்பேட்டை அ.தி.மு.க. அலுவலகத்தில் புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், பொது மக்களுக்கு இனிப்பும், ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பழனிசாமி, கஜேந்திரன், உதயசூரியன், மோகன், விஸ்வநாதன், அந்துவான், குப்பன், மண்ணாங்கட்டி, தனலட்சுமி,ராதா, ஹரிகிருஷ்ணன், முனியாண்டி, கார்த்திக், விநாயகமூர்த்தி, ஜான், பஞ்சவர்ணம், பச்சையப்பன் , வினோத்குமார், பிரபா, எத்திராஜ், முரளிதரன், ஆறுமுகம், மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஊர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×