search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வீராம்பட்டினத்தில் ஜெயலலிதா சிலை- அன்பழகன் பணியை தொடங்கி வைத்தார்
    X

    ஜெயலலிதா சிலை அமைப்பதற்கான பணியை அன்பழகன் தொடங்கி வைத்த காட்சி.

    வீராம்பட்டினத்தில் ஜெயலலிதா சிலை- அன்பழகன் பணியை தொடங்கி வைத்தார்

    • அரியாங்குப்பம் வீராம்பட்டினம் தெப்பகுளம் அருகில் மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், அ.தி.மு.க. பொதுசெயலாளருமான ஜெயலலிதா உருவ சிலை அமைக்கப்படுகிறது.
    • ஏற்பாடுகளை மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன் செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் வீராம்பட்டினம் தெப்பகுளம் அருகில் மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், அ.தி.மு.க. பொதுசெயலாளருமான ஜெயலலிதா உருவ சிலை அமைக்கப்படுகிறது.

    இதற்கான பூமிபூஜை விழா நடந்தது. அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன் செய்திருந்தார்.

    நிகழ்ச்சியில்மா அ.தி.மு.க. அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில இணைச் செயலாளர்கள் திருநாவுக்கரசு, சாரம் கணேசன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள், கணேசன், ஜெய.சேரன், காந்தி, நாகமணி, மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலய இளங்கோ, மேற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், நகர தலைவர் கணேஷ், தொகுதி செயலாளர்கள் ராஜா, சம்பத், பொதுக்குழு உறுப்பினர் பாலன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் அன்பழகன். துணை செயலாளர்கள்கணபதி, சுந்தரமூர்த்தி, விவசாய அணி இணைச் செயலாளர் ராஜா, மாநில மீனவரணி இணைச் செயலாளர் சக்திவேல், துணைச் செயலாளர் ராஜவேல், மாவட்ட பிரதிநிதி செங்கேணி, வார்டு செயலாளர்கள் பன்னீர் செல்வம், ஜெயக்குமார், கார்த்தி,கண்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×