search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother death"

    • ரேவதி (வயது 21). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர்.
    • கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரண மாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமு டைந்த ரேவதி, கடந்த மாதம் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் சின்னம்மா ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவரது மனைவி ரேவதி (வயது 21). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரண மாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமு டைந்த ரேவதி, கடந்த மாதம் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

    இதனை பார்த்த உறவி னர்கள், அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கா மல் நேற்று இரவு ரேவதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் போலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சையில் தாய் இறந்த சோகத்தில் மகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 41). பழைய இரும்பு வியாபாரி. இவர் தனது தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். இவர் தாய் மீது அதிகம் பாசம் உடையவராக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் அவரது தாய் இறந்து விட்டார். இதனால் குமார் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வந்தனர். இருந்த போதிலும் அவர் சரியாக சாப்பிடாமல் சோகத்துடன் வீட்டிலேயே இருந்து வந்தார். நேற்று நள்ளிரவில் அனைவரும் தூங்கியதும் குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இதுபற்றி தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தஞ்சை கீழவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருமணம் செய்து வைக்காததால் மகன் தாக்கியதில் காயம் அடைந்த தாய் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் பால கங்கா தெருவை சேர்ந்தவர் தங்கபாய் (64). இவரது மகன் டார்வின் மனோகர். இவருக்கு திருமணமாக வில்லை. மனநலம் பாதிக்கப்பட்டு காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக அவர் வீட்டுக்கு வந்து இருந்தார். அப்போது தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி தாய் தங்கபாயிடம் தகராறு செய்தார்.

    அப்போது ஆத்திரம் அடைந்த அவர் தங்கபாயை அடித்து உதைத்து தலையை சுவரில் மோத வைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த தங்கபாய் மயக்கம் அடைந்தார்.

    ஆதம்பாக்கம் போலீசார் அவரை மீட்டு ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை தங்கபாய் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டார்வின் மனோகர் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் சிகிச்சைக்காக காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கோவை அருகே தாய் இறந்த துக்கத்தில் மிகுந்த மனவேதனை அடைந்த வாலிபர் சாணிப்பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை மதுக்கரை அருகே உள்ள தம்பாகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் அசோக்குமார் (வயது 21). இவரது தாய் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்தார். 

    தாய் இறந்ததால் அசோக்குமார் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அசோக்குமாரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அசோக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை முதலமைச்சர் நாராயணசாமியின் தாயார் மரணமடைந்ததையடுத்து மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம் ஆகியோர் அவரது தாயார் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி அவருக்கு ஆறுதல் கூறினர். #Narayanasamy #MKstalin
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள். 96 வயதான ஈஸ்வரி அம்மாள் தனது சொந்த கிராமமான பூரணாங்குப்பத்தில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரி அம்மாள் மரணமடைந்தார்.

    அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வந்தார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டிற்கு வந்தார். அங்கு ஈஸ்வரி அம்மாள் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அவருடன் தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி, புதுவை தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா, எஸ்.பி.சிவக்குமார், முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    பின்னர் மீண்டும் மு.க.ஸ்டாலின் லாஸ்பேட்டை விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் சேலத்திற்கு சென்றார்.

    அஞ்சலி செலுத்த வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் நாராயணசாமி தாயாரின் இறப்பு ஈடுசெய்ய முடியாதது. நேற்றைய தினமே நேரில் வந்து அஞ்சலி செலுத்த நினைத்தேன். ஆனால், சூழ்நிலை காரணமாக என்னால் வர இயலவில்லை.

    எனவே, இன்று வந்து முதல்-அமைச்சர் நாராயணசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளேன் என்றார்.

    முன்னதாக இன்று காலை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீட்டுக்கு வந்து ஈஸ்வரி அம்மாள் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்தனர்.  #Narayanasamy #MKstalin
    போச்சம்பள்ளி அருகே வீட்டில் இருந்து கடைக்கு சென்ற தாய்- மகள் மீது கார் மோதியது. இதில் தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம்  போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் மனைவி அலமேலு (வயது65). 

    இவரும் இவரது மகள் வைஜெயந்தியும் இன்று காலை வீட்டில் இருந்து கடைக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது போச்சம்பள்ளியில் இருந்து தருமபுரியை நோக்கி வந்த கார் அவர்கள் 2 பேர் மீதும் எதிர்பாராதவிதமாக மோதியது. பின்னர் அந்த கார் மின் கம்பத்தில் மோதி நின்றது. 

    இதில் 2 பேரையும் 500 மீட்டர் தூரத்திற்கு கார் இழுத்து சென்றது. அலமேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வைஜெயந்தியின் 2 கால்களும் முறிந்தன. அவர் படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அந்த வழியாக வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    இந்த விபத்து குறித்து பாரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாய் இறந்தது தெரியாமல் 2 நாட்கள் பிணத்துடன் இளம்பெண் இருந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கோவை புலியகுளம் சந்தியாகு வீதியை சேர்ந்தவர் தேவசகாயம். இவரது மனைவி பாக்கியமேரி (வயது 81). இவர்களுக்கு 2 மகள்கள். ஒரு மகள் திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருகிறார். மற்றொரு மகள் செல்வி (35) பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    தேவசகாயம் ஏற்கனவே இறந்து விட்டார். செல்விக்கு மனநல பாதிப்பு இருந்தது. இதனால் அவரை கவனித்துக்கொண்டு பாக்கியமேரி இருந்தார். இந்நிலையில் நேற்று இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது மூதாட்டி பாக்கியமேரி இறந்து 2 நாட்கள் ஆனது தெரியவந்தது. இது குறித்து ராமநாதபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தாய் இறந்த 2 நாட்கள் ஆகியும் அது தெரியாமல் அதே வீட்டில் மகள் 2 நாட்கள் இருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    ×