search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cycle"

    • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.
    • புரவலர் மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளிகளுக்கு தலா ரூ.10, ஆயிரமும் அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உலகம்பட்டி, வி.புதூர், கட்டுகுடிப்பட்டி அரசு மாதிரிப்பள்ளி, கரிசல் பட்டி, முசுண்டப்பட்டி, புழுதிப்பட்டி மற்றும் கட்டுகுடிபட்டி ஆகிய அரசு மேல்நிலை பள்ளிகளில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:

    விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 68 அரசு பள்ளிகள் உள்ளிட்ட 105 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4 ஆயிரத்து 270 மாணவர்கள், 6ஆயிரத்து 323 மாணவிகள் ஆக மொத்தம் 10 ஆயிரத்து 593 பேருக்கு இந்த ஆண்டு சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 7 அரசு பள்ளிகளைச் சார்ந்த மொத்தம் 511 மாணவர்களுக்கு விலை யில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மாணவர்களின் உடல் நலம், சுற்றுச்சூழலை பேணிக் காத்திடும் நோக்கில், தமிழக அரசால் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடித்து, பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.

    நிகழ்ச்சியில், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்க தொகையும், புரவலர் மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளிகளுக்கு தலா ரூ.10, ஆயிரமும் அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்.மணிபாஸ்கரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெட்டன் விடுதி அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது
    • எம்.எல்.ஏ. முத்துராஜா, மாணவர்களுக்கு வழங்கினார்

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவ ட்டம் கறம்பக்குடி ஒன்றியம் வெட்டன் விடுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி யில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலை யில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுக்கோ ட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கலந்துகொண்டு பள்ளியில் பயிலும் 170 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவ ண்டியை வழங்கி பேசினார்.அப்போது அவர் கூறிய தாவது:- தமிழக முதல்வர் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்து வம் அளித்து மாணவ, மாணவியரின் நலனில் அக்கறை கொண்டு பல்வே று திட்டங்களை நடைமுறை ப்படுத்தி வருகிறார். அதனை நன்கு பயன்படு த்தி மாணவர்கள் தங்களு டைய கல்வித்தரத்தை உய ர்த்திக் கொள்ள வேண்டும். என்று கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலை வரும், கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாள ருமான தவ.பாஞ்சாலன், அறந்தாங்கி கல்வி மாவட்ட அதிகாரி ராஜேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் காசிநாதன், தலைமை ஆசிரியர் வின்செ ன்ட், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்கு மார், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், ராம சரவணன், தியாக இளஞ்செ ழியன் மற்றும் ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாணவ மாணவியர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தலைமை ஆசிரியா் யோகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    ஊட்டி,

    கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியா் யோகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கீா்த்தனா, ஸ்ரீமதுரை ஊராட்சி மன்ற தலைவா் சுனில், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் கங்காதரன், மேலாண்மை குழுத் தலைவா் மஞ்சு, துணைத் தலைவா் ரசாக் ஆகியோர் கலந்து கொண்டு, தமிழக அரசின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    • கந்தர்வகோட்டையில் 732 பள்ளி மாணவ, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
    • ரூ.36 லட்சம் மதிப்பிலான சைக்கிள்களை சின்னத்துரை எம்.எல்.ஏ. வழங்கினார்

    கந்தர்வகோட்டை, 

    கந்தர்வகோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கும் விழா மாவட்ட கல்வி அதிகாரி ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கந்தர்வகோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,பெண்கள் மேல்நிலைப்பள்ளி ,கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, தச்சங்குறிச்சி தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 732 மாணவ ,மாணவிகளுக்கு ரூ.36 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னத்துரை வழங்கி, பேசினார்.விழாவில் தி.மு.க. மாவட்ட கழக செயலாளர் கே.கே. செல்ல பாண்டியன், ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், தி.மு.க. நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி, சிவரஞ்சனி சசிகுமார், கவிதா மணிகண்டன், துணைத் தலைவர் வெங்கடேசன், தாமரை பழனிவேலு, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் அமிர்தம் மாலதி, பழனிவேல், செல்வராசு, ராணி புஷ்பம், இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக பள்ளியின் முகப்பில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளியின் நுழைவு வாயிலை எம்எல்ஏ சின்னத்துரை திறந்து வைத்தார்.

    • மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.
    • முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியை வள்ளியம்மை நன்றி கூறினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்செவபட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரே சுவரர் மேல்நிலைப் பள்ளி யில் தமிழக அரசின் விலை யில்லா சைக்கிள்கள் வழங் கும் நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் வெள்ளையன் செட்டியார் தலைமை வகித் தார். முன்னதாக பள்ளி செயலர் வெங்கடாசலம் செட்டியார் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பா ளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் களை வழங்கினார். பள்ளி யின் பொருளாளர் அம்மை யப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சி யர் செல்லமுத்து, நெற் குப்பை சேர்மன் பழனியப் பன், ஒன்றிய செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், பள்ளிக்கு சைக்கிள் நிறுத்தும் நிழல் கூடம் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து அமைத்து தருவதாக உறுதி அளித்தார். அதற்கு பள்ளியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    இவ்விழாவில் கிளைச் செயலாளர் சுந்தரம் செந் தில் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடி வில் பள்ளியின் தலைமை ஆசிரியை வள்ளியம்மை நன்றி கூறினார்.

    • அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மூலனூரில் நடைபெற்றது.
    • இந்த விழாவில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டார்.

    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சி கன்னிவாடி பேரூராட்சி,வடுகபட்டி ,புதுப்பை ,தலையூர் ,ஆகிய பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மூலனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    மாவட்ட வருவாய்துறை அலுவலர் ஜெய் பீம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை விளக்கி கூறி வரும் காலங்களில் மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கினார்.

    அதன் பின்னர் மூலனூர் பேரூராட்சி, கன்னிவாடி பேரூராட்சி, வடுகபட்டி, புதுப்பை, புஞ்சை தலையூர் ஆகிய பகுதிகளில் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளான மொத்தம் 269 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட கல்வித்துறை அதிகாரி கீதா, மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுமதி கார்த்திக், மூலனூர் பேரூராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, கன்னிவாடி பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதி சுரேஷ் மற்றும் மூலனூர் ஒன்றிய கிழக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி , மேற்கு ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு மற்றும் கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகள், பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி நன்றி கூறினார்.

    • கண்ணனூர் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது
    • மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்

    திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கண்ணனூர் அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் விலையில்லா மிதிவண்டிகளை  மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.ஸ்டாலின்குமார், ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • உடன்குடி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி யில் 112 மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் படி அதிகாரிகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி யில் 112 மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, 112 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் ஸ்டாலின், எல்லோரும் படிக்க வேண்டும் என்பதற்காக கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சத்தான சத்துணவு திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், கல்வி உபகரணங்கள் வழங்கல் இப்படி ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். படிக்கின்ற பருவத்தில், மாணவர்களாகிய நீங்கள் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கீழ்படிந்து மிகுந்த கவனத்துடனும், ஓழுக்கத்துடனும் கல்வி கற்க வேண்டும். கல்வி செல்வம் குறைவில்லா செல்வமாகும்.

    தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் படி அதிகாரிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருசந்திரன், தாசில்தார் வாமனன், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங், துணைத்தலைவி மீராசிராஜூதீன், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், பேரூராட்சி உறுப்பினர்கள் மும்தாஜ், ஜான்பாஸ்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் விங்ஸ்டன் வரவேற்றார். இதில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலர் உமரிசங்கர், இளைஞரணி ராமஜெயம், தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள் மதன்ராஜ், ஹீபர், சிராஜூதீன், மகாவிஷ்ணு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஜெசிபொன்ராணி, செல்வகுமார், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர்கள் முகமதுசலீம், அன்வர் சலீம், நிர்வாகிகள் கணேசன், தங்கம், திரவியம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
    • தலைமையாசிரியர் தண்டீஸ்வரன் (பொறுப்பு) தலைமை தாங்கினார்.

     திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. தலைமையாசிரியர் தண்டீஸ்வரன் (பொறுப்பு) தலைமை தாங்கினார்.

    கண்டுகொண்டான் மாணிக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் வேலம்மாள் ராஜேந்திரன், நரிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வரன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுவின் தலைவர் பாண்டியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். இதில் 11-ம் வகுப்பு படிக்கும் 78 மாணவர்கள்,71 மாணவியர்கள் என மொத்தம் 149 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 53 மாணவர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இலவச சைக்கிள்களை வழங்கினார்.
    • திருச்செந்தூர் நகராட்சியில் தூய்மைப்பணிக்காக தலா ரூ.2 லட்சம் மதிப்பில் 9 மின்கல வாகனங்களை வழங்கி, அதன் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர்:

    தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்றது.

    பள்ளி தலைமை ஆசிரியர் கங்கா கவுரி தலைமை தாங்கினார். திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன், நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 195 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ரூ.35 ஆயிரம் கோடியை முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஒதுக்கி உள்ளார். அரசுப்பள்ளி எல்லா வகையிலும் உயரவேண்டும் என்பதற்காகவும், புதிய கட்டிடங்களை கட்ட வேண்டும் என்பதற்காக முன்னாள் நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகனார் பெயரில் ரூ.7 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கி அந்தப்பணி பள்ளிகள் தோறும் நடைபெற்று வருகிறது.

    இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளதற்கு முதல்-அமைச்சர் ஸ்டாலினின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களே ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் ஆசிரியை ரீட்டா நன்றி கூறினார்.

    இதேபோல, திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் ஷிபாஜெனி அமுதா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் 53 மாணவர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இலவச சைக்கிள்களை வழங்கினார். 15-வது நிதிநிலை மானியக்குழு சார்பில் திருச்செந்தூர் நகராட்சியில் தூய்மைப்ப ணிக்காக தலா ரூ.2 லட்சம் மதிப்பில் 9 மின்கல வாகனங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கி, அதன் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கமலா, தி.மு.க. வர்த்தக அணி இணைச்செயலர் உமரிசங்கர், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், ஆவின் சேர்மன் சுரேஷ் குமார், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பிச்சம்மாள் ஆனந்த், துணைத்தலைவர் கவிதா, உறுப்பினர்கள் கிருஷ்ண வேணி, நகராட்சி உறுப்பினர்கள் ஆனந்த ராமச்சந்திரன், சுதாகர், கண்ணன், அந்தோணிட்ரூமன், ரேவதி கோமதிநாயகம், முத்து ஜெயந்தி, லீலா, நகர துணை செயலாளர் சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சிக்கு உடன்குடி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பாலசிங்கம் தலைமை தாங்கினார்.
    • இப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 80 பேருக்கு சைக்கிள்கள் வழங்கினார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள மணப்பாடு புனித வளன் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உடன்குடி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பாலசிங்கம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பிளாரன்ஸ், கவுன்சிலர் லெபோரி, ஊராட்சி மன்ற தலைவி கிரேன்ஸிட்டா வினோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களுக்கு ஆசிரியர்கள் அருள், டேனியல், ஜெசுரன், தலைமை ஆசிரியர் பிளாரன்ஸ் ஆகியோர் பொன்னாடை போர்த்தினர்.

    யூனியன் தலைவர் பாலசிங்கம் வாழ்த்துரை வழங்கினார். இப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 80 பேருக்கு சைக்கிள்கள் வழங்கினார். ஆசிரியர் வலன்றீன் இளங்கோ நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆய்வக உதவியாளர் அந்தோணி செய்திருந்தார்.

    • ஆரம்ப கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை அரசு பல்வேறு உதவிகளை உங்களுக்கு செய்து கொடுக்கிறது.
    • நன்றாக படித்து இந்த நாட்டின் பெருமையை வெளி உலகத்திற்கு நீங்கள் எடுத்துச்சென்று தாய் தந்தையர்களை மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சப்-கலெக்டர் கவுரவ்குமார் தலைமை தாங்கினார். இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு 950 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி மாணவ- மாணவிகளின் நலனில் அக்கறைக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கான ஆட்சி தி.மு.க. மட்டும் தான். எல்லா திட்டங்களும் மக்களுக்கு சென்றடையும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அன்னையும் பிதாவும் முன்னறிவு தெய்வம் என்பார்கள் உங்களுடைய பெற்றோர்கள் தெய்வமாக இருப்பதை போல் வாழ்க்கை தரம் உயர்வதற்கு மெழுகுவர்த்தியை போல் தன்னை உருக்கி கொண்டு நல்ல அறிவுரை வழங்கி உங்கள் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி கொடுக்கும் ஆசிரியர்களும் அதற்கு சமமானவர்கள் தான். ஆரம்ப கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை அரசு பல்வேறு உதவிகளை உங்களுக்கு செய்து கொடுக்கிறது. இதன் மூலம் நன்றாக படித்து இந்த நாட்டின் பெருமையை வெளி உலகத்திற்கு நீங்கள் எடுத்துச்சென்று தாய் தந்தையர்களை மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டும். கல்வி என்ற படிப்போடு பொது அறிவையும் வளர்த்துகொள்ள வேண்டும். நல்ல நூல்களையும் தினசரி நாளிதழ்களையும் படித்து நல்ல பல தகவல்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். நான் படித்த காலத்தில் இதுபோன்ற வசதி வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. இப்போது உள்ள மாணவ, மாணவிகள் எல்லா வகையிலும் கொடுத்து வைத்தவர்கள் இதைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் மெட்டில்டா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பாஸ்கர், மணி, அல்பட், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×