search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
    X

    விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

    • விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
    • தலைமையாசிரியர் தண்டீஸ்வரன் (பொறுப்பு) தலைமை தாங்கினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. தலைமையாசிரியர் தண்டீஸ்வரன் (பொறுப்பு) தலைமை தாங்கினார்.

    கண்டுகொண்டான் மாணிக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் வேலம்மாள் ராஜேந்திரன், நரிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வரன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுவின் தலைவர் பாண்டியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். இதில் 11-ம் வகுப்பு படிக்கும் 78 மாணவர்கள்,71 மாணவியர்கள் என மொத்தம் 149 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×