search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள்
    X

    அமைச்சர் பெரிய கருப்பன் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கினார்.

    மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள்

    • மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.
    • முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியை வள்ளியம்மை நன்றி கூறினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்செவபட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரே சுவரர் மேல்நிலைப் பள்ளி யில் தமிழக அரசின் விலை யில்லா சைக்கிள்கள் வழங் கும் நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் வெள்ளையன் செட்டியார் தலைமை வகித் தார். முன்னதாக பள்ளி செயலர் வெங்கடாசலம் செட்டியார் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பா ளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் களை வழங்கினார். பள்ளி யின் பொருளாளர் அம்மை யப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சி யர் செல்லமுத்து, நெற் குப்பை சேர்மன் பழனியப் பன், ஒன்றிய செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், பள்ளிக்கு சைக்கிள் நிறுத்தும் நிழல் கூடம் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து அமைத்து தருவதாக உறுதி அளித்தார். அதற்கு பள்ளியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    இவ்விழாவில் கிளைச் செயலாளர் சுந்தரம் செந் தில் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடி வில் பள்ளியின் தலைமை ஆசிரியை வள்ளியம்மை நன்றி கூறினார்.

    Next Story
    ×