732 பள்ளி மாணவ, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

கந்தர்வகோட்டையில் 732 பள்ளி மாணவ, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் ரூ.36 லட்சம் மதிப்பிலான சைக்கிள்களை சின்னத்துரை எம்.எல்.ஏ. வழங்கினார்
732 பள்ளி மாணவ, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
Published on

கந்தர்வகோட்டை, 

கந்தர்வகோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கும் விழா மாவட்ட கல்வி அதிகாரி ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கந்தர்வகோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,பெண்கள் மேல்நிலைப்பள்ளி ,கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, தச்சங்குறிச்சி தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 732 மாணவ ,மாணவிகளுக்கு ரூ.36 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னத்துரை வழங்கி, பேசினார்.விழாவில் தி.மு.க. மாவட்ட கழக செயலாளர் கே.கே. செல்ல பாண்டியன், ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், தி.மு.க. நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி, சிவரஞ்சனி சசிகுமார், கவிதா மணிகண்டன், துணைத் தலைவர் வெங்கடேசன், தாமரை பழனிவேலு, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் அமிர்தம் மாலதி, பழனிவேல், செல்வராசு, ராணி புஷ்பம், இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக பள்ளியின் முகப்பில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளியின் நுழைவு வாயிலை எம்எல்ஏ சின்னத்துரை திறந்து வைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com