என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நிதி அதிகாரத்தை பரவலாக்க மத்திய அரசு உத்தரவிடவில்லை- கவர்னர் கிரண்பேடி மறுப்பு
புதுச்சேரி:
புதுவையில் அரசு நிர்வாகம் செம்மையாகவும், விரைவாக மக்கள் பணிகளை மேற்கொள்வும், இயக்குனர், செயலர்கள், நிதியமைச்சர், அமைச்சரவை ஆகியவற்றுக்கு நிதி அதிகாரத்தை கூடுதலாக்கும் வகையில் நிதி அதிகாரத்தை கூடுதலாக்கி பரவலாக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
அதில் கவர்னரின் பொது நிதி விதிகள் 13(3)-ல் உள்ள அதிகாரங்களை, தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இதனால் புதுவை கவர்னரின் நிதி அதிகாரம் பறிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்படுமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனை கவர்னர் கிரண்பேடி மறுத்துள்ளார். அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள வாட்ஸ் அப்பதிவில் கூறியிருப்பதாவது:-
மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த கடிதத்தில் பல்வேறு துறைகளில் செலவீனங்களை மேற்கொள்ளும் வகையில் நிதி அதிகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய வெற்றி என போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருக்கிறது.
தவறான தகவல் பொதுமக்களுக்கு போய் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக இதனை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த கடிதத்தில் துணைநிலை ஆளுநரின் நிதி அதிகாரம் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
நிதி அதிகார விதிகள் 13(3) பின்பற்றுமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு கலந்துரையாடல் மட்டுமே. இந்த விதிகளை பின்பற்றியும் செய்யலாம். ஆனால், இது கட்டாயமில்லை.
நிதி தொடர்பாக சரியானவற்றை செய்யவும், முறைப்படுத்தவும் தேவையான முடிவுகளை எடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. இதில் எங்கே கவர்னர் மாளிகைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது?.
அதே நேரத்தில் நிதி தொடர்பான சரியான முடிவுகளுக்கும், தகுதியானவற்றை செய்வதற்கு பொறுப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறேன். நிதி அதிகார பரிசீலனை தொடர்பாக எந்த கோரிக்கையும் அரசிடமிருந்து வரவில்லை.
அது வரும்போது அதற்கேற்ப தகுந்த முடிவுகள் எடுக்கப்படும். சட்டபடி பொதுமக்களின் பணத்தை பாதுகாக்கும் கடமையும், பொறுப்பும் எனக்கு கட்டாயமாக இருக்கிறது.
நிதி அதிகாரங்களை பரவலாக்குவதை செய்யலாம் ( கட்டாயமில்லை) ஆனால் அந்த பணத்தை எப்படி பயன்படுத்துவது என்பது என்னுடை பொறுப்பு .
இவ்வாறு கவர்டனர் கிரண்பேடி கூறியுள்ளார். #kiranbedi #centralgovernment
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்