search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்னார்குடியில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
    X

    மன்னார்குடியில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

    மன்னார்குடியில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சுந்தரக்கோட்டை:

    பணியிடங்களை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். அலுவலகங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இணையதளம் மூலம் சான்றிதழ்களை வழங்க வசதியாக கணினி வழங்க வேண்டும். இணையதள பணிகளுக்கு ஆகும் செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    பணிபுரியும் கிராமத்தில் தங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையொட்டி தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சற்குணம் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் ராஜ்குமார், கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகள் 164 பேர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
    Next Story
    ×