search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Preventive measures"

    • தொடர் மழை, சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களால் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
    • தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மதுரை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுத் தொல்லையும் அதிகரித்து உள்ளது. மழைக்காலம் என்பதால் தற்போது மதுரையில் பொதுமக்கள் பலருக்கும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் அதிகரித்து வருகின்றனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் காய்ச்சல், உடல் வலி, சளி, தொடர் இருமல் போன்ற பாதிப்புகளால் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் தீவிர பாதிப்பு உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இதில் கடந்த வாரம் மட்டும் 17 பேருக்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள தனிவார்டில் 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையில் நேற்று 15 பேருக்கும், இன்று 8 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மதுரை நகரில் நாளுக்குநாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர் மழை, சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களால் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் மாநகராட்சியும் இணைந்து மதுரையில் டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கிய இடங்களில் மருத்துவ முகாம், டெங்கு விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் வார்டு வாரியாக கொசுமருந்து அடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஆனாலும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்து நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

    • மாவட்டத்தில் 10 நாட்களுக்கு முன் தொற்று பரவல் 4.8 சதவீதமாக இருந்த நிலையில் இரு வாரம் முடிவதற்குள் 11.4 ஆக உயர்ந்துள்ளது .
    • மாவட்டம் முழுவதும் வீடு மற்றும் ஆஸ்பத்திரிகளில் 206 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருப்பூர்,ஏப்.27-

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் வீடு மற்றும் ஆஸ்பத்திரிகளில் 206 பேர் தனிமை ப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 நாட்களுக்கு முன் தொற்று பரவல் 4.8 சதவீதமாக இருந்த நிலையில் இரு வாரம் முடிவதற்குள் 11.4 ஆக உயர்ந்துள்ளது . இதன் மூலம் தொற்று பரவல் சதவீதத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி திருப்பூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

    திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. இதனால் வேலை தேடி வெளிமாநிலத்தில் இருந்து பலர் திருப்பூர் வருவதாலும், பலர் பிற மாவட்டங்களில் இருந்து வேலைக்கு வந்து செல்வதாலும் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரி வித்துள்ளது.

    இதையடுத்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடி க்கைகள் தீவிரப்படுத்த ப்பட்டுள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு ள்ளனர். மேலும் வெளி யிடங்களுக்கு செல்லும் போது பொதுமக்கள் முககவசம் அணிந்து செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ×