என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health plan"

    • மருந்தை மற்ற ஆயுர்வேத மஹரிஷிகளும் பலவாறு கையாண்டுள்ளனர்.
    • நான்கு மூல பொருட்கள் இம்மருந்தில் கலக்கப்படுகிறது.

    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையானவையை பற்றி ஆரோக்கிய திட்டம் என்ற தலைப்பில் தினமும் காலை பொழுதில் செய்யவேண்டிய கடமைகளைப்பற்றி பார்த்து வருகிறோம். அதில் எலும்புகளை வலுவாக்கவும், தேய்மானத்தை தடுக்கவும் தினமும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று பார்த்தோம். அதிலும் மிக முக்கியமாக தலை, காது, பாதம் என்று மூன்று இடங்களில் கட்டாயம் எண்ணெய் தேய்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதை தனி தனி தலைப்புகளில் பார்த்தோம்.

    அதில் மிக முக்கியமாக கால் வலியை தடுக்க தினமும் பாதத்தில் எண்ணெய் தேய்க்க வேண்டும். அதற்கு நல்லெண்ணெய் மிக நல்லது என்றாலும், சில மூலிகை மருந்துகள் கலந்த எண்ணெய் மிக மிக நல்லது. அவற்றை குறித்து தான் தற்போது பார்க்க இருக்கிறோம். மூலிகை மருந்துகள் கலந்து செறிவூட்டப்பட்ட எண்ணெய்கள் பல வகையில் இருக்கின்றன. அவற்றை ஆயுர்வேத மருத்துவர் நோயாளின் உடல்வாகிற்கு தக்க வண்ணம், நோயின் தாக்கத்திற்கு தக்க வண்ணம் மூலிகை எண்ணெய்களை தேர்வு செய்வார்.

    மூட்டு வலி உடையவர்கள் வீட்டில் இருந்தாலும் சரி அல்லது கணுக்கால் வலி, பாத எரிச்சல், உணர்வு குறைவாக இருந்தாலும் சரி அல்லது நடைமுறை வாழ்க்கையில் அதிக அளவு வாகன பிரயாணம் செய்பவர்கள் இருந்தாலும் சரி, பாரம் தூக்கும் பணியாளர்கள், நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்கள் இருந்தாலும் சரி, உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய ஒரு அற்புத ஆயுர்வேத மூலிகை எண்ணெய் தான் பிண்ட தைலம் என்ற மருந்து. இந்திய முறை மருந்துகள் எடுத்துக்கொண்டவர்கள் அல்லது அதன் பால் ஆர்வம் கொண்டவர்கள் தெரிந்திருக்க அல்லது கேள்விபட்டுயிருக்க வாய்ப்பு இருக்கிறது.

    பொதுவாக தற்போது இருக்ககூடிய அனைத்து மருத்துவ முறைகளிலும் ஆயின்மெண்ட் என்ற மேற்பூச்சு பசை மருந்து மிக பிரபலம். பிண்ட தைலம் என்ற மருந்து தான் மருத்துவ துறையின் முதல் ஆயின்மெண்ட் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா... ஆம் இம்மருந்தை அக்காலத்தில் கூறியுள்ளது போல தயாரித்தால் அது ஆயின்மெண்ட் போல தான் இருக்கும். மேலும் இதனுடைய காரண பெயர் சொல்லே சுவாரஸ்யமாக இருக்கும்.

    ஆம் பிண்டம் என்றால் உருண்டை என்ற பொருள். அதாவது இம்மருந்தை பிரயோகப்படுத்தும் போது உருட்டி எடுத்து தேய்க்க வேண்டுமாம். அதனால் தான் இதற்கு பிண்ட தைலம் என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நடைமுறையில் எளிதாக பயன்படுத்தும் வண்ணம் எண்ணெய் போலவே தயாரித்து கொடுக்கப்படுகிறது. இதனை முதல் முதலில் அறிமுகபடுத்தியவர் ஆயுர்வேத பொது மருத்துவத்தின் தந்தை என கருதக்கூடிய மஹரிஷி சரகர் என்பவர்தான்.

     

    அவர் எழுதிய சரக சம்ஹிதை என்ற புத்தகத்தில் வாத சோணிதம் என்ற மூட்டுகளை பாதிக்கக்கூடிய சரவாங்கி நோய்பற்றிய சிகிட்சையில் இந்த தைலத்தை குறித்து பதிவு செய்துள்ளார். இந்த உன்னத மருந்தை மற்ற ஆயுர்வேத மஹரிஷிகளும் பலவாறு கையாண்டுள்ளனர். எப்படி எனில் காலத்திற்கு தக்க வண்ணம் இம்மருந்தின் மூலிகை கலவையில் ஒரு மருந்தை கூட்டியோ அல்லது குறைத்தோ, தயாரிக்கும் முறையில் சற்று வேறுபடுத்தி தயாரித்து பல வியாதிகளை குணப்படுத்தி உள்ளனர்.

    ஆமா அப்படி என்ன தான் அந்த மருந்தில் உள்ளது... மொத்தம் நான்கு மூல பொருட்கள் இம்மருந்தில் கலக்கப்படுகிறது. அவை மஞ்சட்டி, நன்னாரி, தேன் மெழுகு, குங்கல்யம் ஆகும். இவற்றில் மஞ்சட்டி நன்னாரியை கஷாயமாக வைத்து நல்லெண்ணெய்யில் கலந்து காய்ச்சி தைல பாகம் வந்த பின்பு, குங்கல்யம், தேன் மெழுகு இவை இரண்டையும் வடிக்கட்டும் பாத்திரத்தில் கலந்து, எண்ணெயை பத்திரப்படுத்த வேண்டும். இவை மூட்டு வலியை ஆபாகம் செய்வதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

     

    ரா. பாலமுருகன்


     

    ஆபாகம் என்ற சொல்லுக்கு வலியை ஆசுவாசப்படுத்தி குறைத்தல் என்று அர்த்தம், ஆகையால் வலியால் அவதியுறுபவர்களுக்கு இம்மருந்து ஒரு வரப்பிரசாதம். இதனை எப்போது பயன்படுத்தலாம் என்றால் ஒரு நாளைக்கு இருவேளை காலையில் குளிக்கும் முன்பு பிண்ட தைலத்தை சூடு செய்து வலியுள்ள இடத்தில் தேய்த்து சுமார் 30 நிமிடம் கழித்து சூடு தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலை நேரத்தில் சிறிதளவு எண்ணெய்யை சூடு செய்து தேய்த்த பின்பு சூடு தண்ணீரை வலியுள்ள இடத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

    இம்மருந்தில் கலக்கப்படும் நல்லெண்ணெய்க்குப் பதிலாக தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், வேப்பெண்ணெய் போன்ற எண்ணெய்கள் கலந்தால் பயன்படும் விதமும் மாறுபடும். இம்மருந்து பயன்படுத்தும் போது உணவு கட்டுப்பாடுகளில் புளிப்பு, உப்பு, காரத்தை சற்று குறைத்து கொண்டால் பலன் விரைவில் கிடைக்கும். அதோடுமட்டுமில்லாமல் வியாதியின் தீவிரத்தை கட்டுப்படுத்தும். வரும் முன் காப்பது போல வலி அதிகரிக்கும் முன் தடுக்க இம்மருந்து மிகுந்த உதவியாகயிருக்கும் என்பதில் ஐயமில்லை.

    • மத்திய அரசு ஆயுஷ்மான் பவா என்ற திட்டம் தொடங்கி உள்ளது.
    • இத்த திட்டத்தின் தொடக்க விழா குஜராத் ராஜ்பவனில் இன்று நடந்தது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் மக்களுக்கு சுகாதாரத் துறையின் செயல்பாடுகள், திட்டங்கள் சென்றடையும் விதமாக மத்திய அரசு ஆயுஷ்மான் பவா என்ற திட்டம் தொடங்கி உள்ளது.

    இத்த திட்டத்தின் தொடக்க விழா குஜராத் ராஜ்பவனில் இன்று நடந்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி காணொளி மூலம் இன்று கம்பன் கலையரங்கில் ஒளிபரப்பப்பட்டது.

    தொடர்ந்து புதுவை அரசின் சார்பில் சந்தி ராயன் என்ற ஆரோக் கியத்தை நோக்கி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. விழாவுக்கு கவர்னர் தமிழிசை, முதல்- அமைச் சர் ரங்கசாமி ஆகியோர் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். சுகாதாரதுறை செய்லாளர் முத்தம்மா வரவேற்றார்.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய் ஜெ. சரவணன் குமார், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, ஜான்குமார், சிவசங்கர், பாஸ்கர், கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, சுகா தாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, துணை இயக்குனர் முரளி, ரகுநாதன், திட்ட அதிகாரி துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் காசநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சத்துணவு வழங்கியவர்கள், அதிக ரத்தானம் வழங்கிய வர்கள், தொண்டு நிறுவனங்கள், மூளை சாவு அடைந்தவர்களின் உறுப்பு தானம் அளித்த குடும்பத்தினர், காப்பீடு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அதிகாரி, சிறந்த செவிலியர் அதிகாரி, அங்கன்வாடி ஊழியர்கள், ஆரோக்கிய குழந்தையின் பெற்றோர், சாலை விபத்து–களில் சிக்கியவர்களை தக்க நேரத்தில் மருத்துவ–மனையில் சேர்த்த தன்வார்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    புதிய சந்திரயான் திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரத்த–பரிசோதனை, ரத்தசோகை, சர்க்கரை நோய், உடல் பருமன், காச நோய், பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் வீடு தேடி வந்து சுகாதாரத் துறையினர் செய்ய உள்ள னர்.

    ×