என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா?- தமிழக அரசு விளக்கம்
- வதந்தியை பரப்பாதீர் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.
- அப்படி எந்த ஒரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என தகவல்.
சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்ய உள்ளதாக வதந்தி பரவுவதாக தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
வதந்தியை பரப்பாதீர் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இது முற்றிலும் வதந்தியே.
அப்படி எந்த ஒரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார் என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
Next Story






