

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய பிரிட்டிஷ் தம்பதியை இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து லூயிஸ் கேப்ரியல் மற்றும் அவரது காதலி அனுஷி எம்மா கிறிஸ்டின் ஆகியோர் சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்துள்ளனர்.
ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் மாவட்டத்தில் பாலஸ்தீனம் விடுதலை பெறவேண்டும்,இஸ்ரேலை புறக்கணியுங்கள் (FREE PALESTINE, BOYCOTT ISRAEL) என்ற போஸ்டர்களை பிரிட்டிஷ் தம்பதி ஒட்டியுள்ளனர்.
இதனை கன்டுபிடித்த உளவுத்துறை, பிரிட்டிஷ் தம்பதியின் விசாவை ரத்து செய்து இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளனர்.