என் மலர்
நீங்கள் தேடியது "RCBvCSK"
- ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் 2 ஆம் இடத்தில் உள்ளது.
- இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக 10 போட்டிகளில் விளையாடிய படிக்கல் 247 ரன்கள் எடுத்திருந்தார்
நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் 2 ஆம் இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது. எளிதாக பிளேஆப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி அணி வீரர் படிக்கல் விலகியுள்ளார். படிக்கலுக்கு பதிலாக மயங்க் அகர்வாலை ஆர்சிபி அணி எடுத்துள்ளது.
இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக 10 போட்டிகளில் விளையாடியுள்ள படிக்கல் 247 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 94 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- பிரேவிஸ் LBW முறையில் டக் அவுட்டானார்.
ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 211 ரன்கள் 2 வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
ஒருகட்டத்தில் வெற்றிபெறும் நிலையில் இருந்த சி.எஸ்.கே. அணி இருந்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 94 ரன்னில் ஆட்டமிழந்தார். இதுதான் ஆட்டத்தை ஆர்.சி.பி. பக்கம் கொண்டு வந்தது.
இதற்கடுத்து இறங்கிய பிரேவிஸ் LBW முறையில் டக் அவுட்டானார். இதையடுத்து மற்றொரு முனையில் இருந்த ஜடேஜாவுடன் பிரேவிஸ் ரெவியூ செய்வது தொடர்பாக பேசினார். பின்னர் அவர் ரெவியூ கேட்டபோது, ரெவியூ எடுப்பதற்கான நேரம் முடிந்துவிட்டது என்று நடுவர் கூறினார். இதனால் பிரேவிஸ் மனம் உடைந்தார். இதனால் ஜடேஜா நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் பிரேவிஸ் விக்கெட்டை மறு ஒளிபரப்பு செய்தபோது பந்து லெக் சைடில் சென்று ஸ்டம்புகளைத் தவறவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் இதனை விமர்சித்து இணையத்தில் பதிவிட்டனர்.
- முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் குவித்தது.
- விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரொமாரியோ ஷெப்பர்ட் அரை சதமடித்தனர்.
பெங்களூரு:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் குவித்தது. விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரொமாரியோ ஷெப்பர்ட் அரை சதமடித்தனர்.
தொடர்ந்து ஆடிய சென்னை அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆர்.சி.பி. அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், தோல்விக்கு பிறகு கேப்டன் தோனி பேசியதாவது:
நான் பேட்டிங் செய்யத் தொடங்கியபோது தேவையான பந்து வீச்சுகள் மற்றும் ரன்கள் இருந்தது. அழுத்தத்தைக் குறைக்க இன்னும் சில ஷாட்களை மாற்றியிருக்க வேண்டும் என நினைத்தேன். தோல்விக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
பந்துவீச்சில் இன்று சொதப்பி விட்டோம். கடைசி கட்டத்தில் ஷெப்பர்ட் சிறப்பாக விளையாடினார்.
எல்லா பேட்டர்களும் யார்க்கரில் விளையாடவில்லை. நவீன யுகத்தில் பேட்டர்கள் பயிற்சி செய்ய வேண்டிய ஒன்று. ஆனால் எங்கள் பெரும்பாலான பேட்டர்கள் அதை விளையாட வசதியாக இல்லை. ஜடேஜா சிறப்பாக விளையாடுகிறார்.
பேட்டிங் என்பது நாங்கள் சற்று பின்தங்கிய ஒரு பகுதியாகும். ஆனால் இன்று ஒரு துறையாக பேட்டிங் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன் என தெரிவித்தார்.
- சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்.சி.பி. அணி திரில் வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது ஆர்.சி.பி. அணி.
பெங்களூரு:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆர்.சி.பி. அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது.
2வது இடத்தில் மும்பை இந்தியன்சும், 3வது இடத்தை குஜராத்தும், 4வது இடத்தை பஞ்சாப்பும், 5வது இடத்தை டெல்லியும், பிடித்துள்ளது.
சென்னை அணி 11 போட்டியில் 2 வெற்றி, 9 தோல்வி என கடைசி இடத்தில் நீடித்து வருகிறது.
- ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
- முதலில் ஆடிய ஆர்.சி.பி. 20 ஓவரில் 213 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு:
ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது. விராட் கோலி 62 ரன்னும், ஜேக்கப் பெத்தேல் 55 ரன்னும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ரொமாரியோ 14 பந்தில் 53 ரன்கள் விளாசினார்.
சிஎஸ்கே சார்பில் பதிரனா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீதும் இறங்கினர்.
ஆயுஷ் மாத்ரே தொடக்க முதல் அதிரடியில் இறங்கினார். குறிப்பாக, புவனேஷ்குமார் வீசிய 4வது ஓவரில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 26 ரன்கள் விளாசினார்.
முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில் ஷேக் ரசீது 14 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாம் கர்ரன் 5 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஆயுஷ் மாத்ரே 25 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
3வது விக்கெட்டுக்கு ஆயுஷ் மாத்ரேவுடன் ஜடேஜா இணைந்தார். இந்த ஜோடி 114 ரன்கள் சேர்த்த நிலையில் ஆயுஷ் மாத்ரே 94 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய பிரேவிஸ் டக் அவுட்டானார்.
இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 211 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 77 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி திரில் வெற்றிபெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
- ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது.
- முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு:
ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது. முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீதும் இறங்கினர்.
ஆயுஷ் மாத்ரே தொடக்க முதல் அதிரடியில் இறங்கினார். குறிப்பாக, புவனேஷ்குமார் வீசிய 4வது ஓவரில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 26 ரன்கள் விளாசினார்.
சிறப்பாக ஆடிய ஆயுஷ் மாத்ரே 25 பந்துகளில் அரை சதம் கடந்து ஆடி வருகிறார்.
- சிஎஸ்கே, ஆர்சிபி இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
- இதில் வென்றாலோ, மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சிஎஸ்கே அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
பெங்களூரு:
பிளே ஆப் சுற்றுக்கான 4வது அணியாக நுழையப் போவது யார் என்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே நீயா, நானா என போட்டி ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.
ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
உதாரணமாக, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன் எடுத்தால் குறைந்தபட்சம் 18 ரன் வித்தியாசத்திலும், 2-வது பேட்டிங் செய்தால் 200 ரன் இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்தும் வெற்றிபெற வேண்டும்.
இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெறவுள்ள ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 80 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தின் ஓவர்களும் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதன்படி, 5 ஓவர்கள் வரை கொண்ட ஆட்டத்தில் ஆர்சிபி அணி முதலில் களமிறங்கினால் 5 ஓவர்களில் 75 ரன்களை அடித்து, சிஎஸ்கேவை 57 ரன்களில் சுருட்ட வேண்டும்.
ஒருவேளை சேசிங் என்றால் சிஎஸ்கே 5 ஓவரில் 75 ரன்களை அடித்தால், ஆர்சிபி அணி 3.1 ஓவரில் இலக்கை சேஸ் செய்யவேண்டும். இது நடந்தால் மட்டுமே ஆர்சிபியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
- முதலில் ஆடிய பெங்களூரு 218 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய சென்னை 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பெங்களூரு:
ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை யாஷ் தயாள் வீசினார். அதில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து தோனியின் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். கடைசி ஓவரில் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தது.
இந்தப் போட்டியில் ஆர்.சி.பி. அணியின் கேப்டன் டூ பிளசிஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அப்போது அவர் கூறியதாவது:
லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்ததில் மகிழ்ச்சி. முதலாவதாக பேட் செய்ய நான் ஆடிய ஆடுகளங்களில் மிகவும் கடினமானதாக இந்த ஆடுகளம் இருந்தது. கடந்த 6 போட்டிகளாக எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். ஸ்ட்ரைக் ரேட்டும் சிறப்பாக இருந்தது.
இலக்கு சற்று நெருக்கமாக இருந்தபோது தோனி களத்தில் இருந்தார். பலமுறை வெற்றிகரமாக அதை அவர் செய்துள்ளார் என எண்ணினேன். ஈரமான பந்தில் எங்களது பந்துவீச்சை மாற்ற முயற்சித்தோம். ஆட்ட நாயகன் விருதை யாஷ் தயாளுக்கு வழங்க விரும்புகிறேன். அவர் பந்துவீசிய விதம் நம்ப முடியாததாக இருந்தது. அதற்கு அவர் தகுதியானவர்.
கடைசி ஓவர் வீசுவதற்கு முன் பந்தில் அதிகம் பேஸ் வேண்டாம் என அவரிடம் சொன்னேன். அவரது திறனை நம்புமாறு சொன்னேன். முதல் பந்தில் யார்க்கர் முயற்சித்தார். அடுத்தடுத்த பந்துகளில் வேகத்தை மட்டுப்படுத்தினார். அது பலன் தந்தது.
எங்களுக்கு பார்வையாளர்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி. எங்களது முதல் இலக்கு நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைவது. இதை இந்த நேரத்தில் அனுபவிப்பது அவசியம் என தெரிவித்தார்.
- 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
- ஆட்ட நாயகன் விருதை கேப்டன் பாப் டூ பிளசிஸ் வென்றார்.
பெங்களூரு:
ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருதை கேப்டன் பாப் டூ பிளசிஸ் வென்றார்.
இந்நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விஜய் மல்லையா தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மல்லையான எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், முதல் நான்கு இடங்களுக்குள் தகுதிபெற்று ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்.சி.பி. அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஏமாற்றமளிக்கும் தொடக்கத்திற்குப் பிறகு சிறந்த உறுதியும் திறமையும் வெற்றிகரமான வேகத்தை உருவாக்கியுள்ளன. கோப்பையை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள் என பதிவிட்டுள்ளார்.
- என்னை பொறுத்தவரை ஆட்டம் மாறியது டோனி அடித்த 110 மீட்டர் தூர சிக்சரால்தான்.
- மைதானத்திற்கு வெளியில் பந்து சென்றதால் யாஷ் தயாள் வீசுவதற்கு புதிய பந்து கிடைத்தது.
பெங்களூரு:
ஐபிஎல் தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில், போட்டி முடிந்ததும் வீரர்களின் ஓய்வறையில் தினேஷ் கார்த்திக் பேசியதாவது:
இந்தப் போட்டியின் சிறப்பான விஷயமே எம்.எஸ்.டோனி அந்த பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்தது தான். அதனால்தான் நனைந்து ஊறிய பந்திற்கு பதிலாக புதிய பந்து கிடைத்தது. நன்றாக வீச முடிந்தது.
பழைய பந்து ஈரமாக இருந்ததால், திட்டமிட்ட பகுதியில் பவுலிங் செய்ய முடியவில்லை. முதல் பந்திற்கு பின் யாஷ் தயாள் அசத்திவிட்டார். அப்படி ஒரு வெற்றியையும், கம்பேக்கையும் ஆர்சிபி அணி செய்துள்ளது.
அகமதாபாத் மைதானத்தில் ஒரு பணி காத்திருக்கிறது. அதனை வென்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவோம் என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
புதுடெல்லி:
ஐபிஎல் 2024 சீசனில் 68வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 191 ரன்கள் மட்டுமே எடுத்து
தோல்வி அடைந்தது. அத்துடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் சி.எஸ்.கே. இழந்தது.
போட்டியில் தோல்வி அடைந்ததால் எம்.எஸ்.டோனி கோபம் அடைந்ததாகவும், அதனால் போட்டி முடிந்ததும் அவர் எதிரணி வீரர்கள் யாருக்கும் கை கொடுக்காமல் சென்றார் என கூறப்பட்டது.
இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் யாரி என்ற யூடியூப் சேனலுக்கு ஹர்பஜன் சிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாக சுஷாந்த் மேத்தா என்பவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
எம்.எஸ்.டோனி ஏன் ஆர்.சி.பி. வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்றார் என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், டோனி கை குலுக்காமல் சென்றது மட்டுமின்றி அங்கு டிவி ஒன்றையும் உடைத்துள்ளார். அங்கிருந்த எதையோ ஒன்றை பலமாக குத்தியுள்ளார். அந்த ஷாட்டை அடிக்காததால் அவர் மிகவும் கோபமாக இருந்ததாக தெரிவித்தார் என பதிவிட்டுள்ளார்.






