என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ICU"
- தனது அணியினருடன் விமானத்தில் ஏறினார் மயான்க் அகர்வால்.
- மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் மயான்க் அகர்வால் தற்போது ரஞ்சி தொடரில் விளையாடி வருகிறார். கர்நாடக அணி கேப்டனான மயான்க் அகர்வால் தனது அணியினருடன் டெல்லி புறப்பட விமான நிலையம் சென்றார். அணியினருடன் விமானத்தில் ஏறிய மயான்க் அகர்வாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
விமானத்தில் இருந்த படி சில முறை அவர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தில் இருந்து அவசரஅவசரமாக வெளியேறிய மயான்க் அகர்வால் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும், எதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உடல்நலக்குறைவு காரணமாக மயான்க் அகர்வால் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
விரைவில் தனது 33-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் மயான்க் அகர்வால் இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். நேற்று திரிபுரா அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் கர்நாடகா அணி வெற்றி பெறவும் மயான்க் அகர்வால் முக்கிய பங்காற்றியுள்ளார்.
- தீராத நோயால் பாதிக்கப்பட்டு, மேற்கொண்டு சிகிச்சைக்கான வாய்ப்பு இல்லாதவர்கள், சிகிச்சை அளித்தாலும் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் ஆகியோரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கக்கூடாது.
- தீவிர சிகிச்சை பிரிவில் சேர காத்திருக்கும் நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, இதய துடிப்பு, ஆக்சிஜன் அளவு, சுவாச நிலவரம், நரம்பியல் நிலவரம் பரிசோதிக்க வேண்டும்.
புதுடெல்லி:
ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு.) நோயாளிகளை சேர்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவற்றை 24 நிபுணர்கள் தொகுத்துள்ளனர்.
அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒரு நோயாளிக்கு உறுப்புகள் செயல் இழந்தாலோ அல்லது அவருக்கு மாற்று உறுப்பு தேவைப்பட்டாலோ அல்லது அவரது உடல்நிலை மேலும் மோசமடையும் நிலை இருந்தாலோ அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கலாம்.
சுவாச கருவிகளின் உதவி தேவைப்பட்டாலோ அல்லது டாக்டர்களின் தொடர் கண்காணிப்பு தேவைப்படும் அளவுக்கு கடுமையான நோயாக இருந்தாலோ அத்தகைய நோயாளியையும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கலாம்.
இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள், வேறு பெரிய அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர்கள், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பவர்கள் ஆகியோரையும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கலாம்.
ஆனால், நோயாளியோ அல்லது அவருடைய குடும்பத்தினரோ தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்க மறுப்பு தெரிவித்தால், அத்தகைய நோயாளியை அப்பிரிவில் சேர்க்கக்கூடாது.
தீராத நோயால் பாதிக்கப்பட்டு, மேற்கொண்டு சிகிச்சைக்கான வாய்ப்பு இல்லாதவர்கள், சிகிச்சை அளித்தாலும் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் ஆகியோரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கக்கூடாது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட இடங்களில் படுக்கை, ஆக்சிஜன் உள்ளிட்ட கட்டமைப்புகள் குறைவாக இருக்கும் நிலையில், அத்தகைய நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கக்கூடாது.
தீவிர சிகிச்சை பிரிவில் சேர காத்திருக்கும் நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, இதய துடிப்பு, ஆக்சிஜன் அளவு, சுவாச நிலவரம், நரம்பியல் நிலவரம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும்.
நோயாளியின் நோய் நிலவரம் சீராகிவிட்டால், குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டால், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக பதவி வகித்தபோது, கால்நடை தீவனம் வாங்குவதில் ஊழல் செய்த குற்றத்துக்காக 3 வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். சமீபத்தில் மருத்துவ காரணங்களுக்காக 6 வார கால ஜாமீன் கோரியிருந்த லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், உடல் நிலை மோசமடைந்த காரணத்தினால், பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ளார். #laluprasadyadav #admittedinICU
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்