என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மூச்சு விடுவதில் சிரமம்- செந்தில் பாலாஜிக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை
    X

    மூச்சு விடுவதில் சிரமம்- செந்தில் பாலாஜிக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை

    • செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • மதிய உணவு சாப்பிட்ட பிறகு, நெஞ்சு வலிப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

    இதையடுத்து, செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மதிய உணவு சாப்பிட்ட பிறகு, நெஞ்சு வலிப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

    இதைதொடர்ந்து, செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பரிசோதனைக்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரையை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டார்

    இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை காலை இருதயவியல் மூத்த மருத்துவர்கள் மீண்டும் பரிசோதனை செய்த பின்னர் அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×