search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chest Pain"

    • அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • சவுக்கு சங்கர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

    பிரபல அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கர் திடீர் நெஞ்சுவலியால் காரணமாக சென்னை வடபழனி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    கடந்த ஏப்ரல் மாதம் பெண் காலவர்கள் குறித்து நேர்காணலில்  அவதூறாக பேசியது உட்பட பல்வேறு வழக்குகளில்  கைதாகி சிறையில் இருந்த சவுக்கு சங்கர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பரிசோதனைக்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரையை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டார்.
    • இ.சி.ஜி., எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வௌியானது.

    இதையடுத்து, செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதைதொடர்ந்து, செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பரிசோதனைக்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரையை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டார்.

    ஏற்கனவே அவர் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால் அது தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர். இ.சி.ஜி., எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

    இதில் செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பரிசோதனைகள் அனைத்தும் முடிந்த பிறகு அவரது டிஸ்சார்ஜ் பற்றி முடிவு செய்யப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் 2 நாள் சிகிச்சைக்கு பிறகு இன்று மாலை செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீரானதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மீண்டும் அவர் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • மதிய உணவு சாப்பிட்ட பிறகு, நெஞ்சு வலிப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

    இதையடுத்து, செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மதிய உணவு சாப்பிட்ட பிறகு, நெஞ்சு வலிப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

    இதைதொடர்ந்து, செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பரிசோதனைக்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரையை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டார்

    இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை காலை இருதயவியல் மூத்த மருத்துவர்கள் மீண்டும் பரிசோதனை செய்த பின்னர் அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    • மதிய உணவு சாப்பிட்ட பிறகு, நெஞ்சு வலிப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
    • செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

    இதையடுத்து, செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மதிய உணவு சாப்பிட்ட பிறகு, நெஞ்சு வலிப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

    இதைதொடர்ந்து, செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பரிசோதனைக்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரையை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டார்

    • மதிய உணவு சாப்பிட்ட பிறகு, நெஞ்சு வலிப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
    • செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

    இதையடுத்து, செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மதிய உணவு சாப்பிட்ட பிறகு, நெஞ்சு வலிப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

    இதைதொடர்ந்து, செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

    • வாய்வுத் தொல்லை, மாரடைப்பைத் துல்லியமாக வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
    • தீவிரமான வலியையோ, அசவுகரியத்தையோ ஏற்படுத்தும்.

    லேசாக நெஞ்சு வலித்தால்கூட அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ, இதயக் கோளாறாக இருக்குமோ என்கிற அச்சம் பலருக்கும் உள்ளூர எழுகிறது. அது மாரடைப்புதான் என்கிற பயம் வரத்தான் செய்கிறது. ஆனால், சாதாரண வாய்வுத் தொல்லையால்கூட நெஞ்சுவலி ஏற்படலாம்.

    நெஞ்சுவலிக்கு வாய்வுத் தொல்லையும் காரணமாக இருக்கலாம், மாரடைப்பும் காரணமாக இருக்கலாம். இவற்றை எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்று பார்க்கலாம்.

    வாய்வுத் தொல்லை, மாரடைப்பைத் துல்லியமாக வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஆனாலும், அறிகுறிகளை வைத்து ஓரளவு வகைப்படுத்தலாம்.

    மாரடைப்பாக இருந்தால், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அவை பரவும். உதாரணமாகத் தோள்பட்டை, கை, முதுகுத் தண்டுவடம், கழுத்து, பற்கள், வாயின் தாடைப் பகுதிக்கு வலி பரவும். குறிப்பிட்ட ஒரே பகுதியில் மட்டும் தீவிரமான வலியையோ, அசவுகரியத்தையோ ஏற்படுத்தும்.

    வாய்வுத் தொல்லை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் அப்படியல்ல. வாய்வுத் தொல்லை அல்லது நெஞ்செரிச்சலின்போது குறிப்பிட்ட பகுதியின் உள்ளே இருந்து யாரோ குத்துவது போன்ற உணர்வும், இழுப்பதுபோன்ற உணர்வும் ஏற்படும். அதேபோல் மூச்சுத்திணறலோ, தோள்பட்டையில் வலியோ, தொண்டையில் அழுத்தமோ ஏற்படாது.

    வாய்வுத் தொல்லையின்போது வாய்நாற்றம், பற்சிதைவு, உணவு விழுங்குவதில் சிக்கல், வாந்தி, எதுக்களித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். சிலருக்கு, நெஞ்சுப் பகுதியில் இல்லாமல், பின்முதுகு அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ளே இருந்து ஏதோவொன்று இழுப்பதுபோன்ற உணர்வு ஏற்படலாம்.

    நெஞ்செரிச்சலின்போது, புளித்த ஏப்பம் அதிகமாக ஏற்படும். மூச்சுக் குழாயில் ஏற்படும் எரிச்சலால், உடலில் அமிலத்தன்மை அதிகரிப்பதை உணர முடியும். அதேபோல நெஞ்செரிச்சல், சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிடாத நேரங்களில்தான் அதிகம் ஏற்படும். அமிலத்தன்மை அதிகம் இருக்கும் என்பதால், ஆரோக்கியமான உணவு உண்டதும் இந்தப் பிரச்னை உடனடியாகச் சரியாகிவிடும்.

    இவற்றை அடிப்படையாக வைத்து, உங்களுக்கு ஏற்படும் நெஞ்சு வலி மாரடைப்பா அல்லது வாயுத் தொல்லையா என்பதை நீங்களாகவே கணித்துக்கொள்ளலாம். சிலருக்குப் பதற்றம் அதிகரிக்கும்போது, அதன் காரணமாகக்கூட நெஞ்சு வலி ஏற்படலாம். இது, மருத்துவ மொழியில் பேனிக் அட்டாக் (Panic Attack) எனப்படும்.

    நெஞ்சுப்பகுதியின் நடுப்பகுதியில் வரக்கூடிய வலி இதயத்தில் ஏற்படும் வலியாக இருக்கும். இடது பக்கம் வரக்கூடிய வலி பெரும்பாலும் வாயுப்பிடிப்பாகத்தான் இருக்கும். ஏனென்றால் இதயத்துக்கும், இரைப்பைக்கும் இடையில் டயாப்ரம் என்ற ஒரு சவ்வு தான் இருக்கும். இது நாம் இரவு நேரம் கடந்து சாப்பிடும் போதோ அல்லது நிறையை தண்ணீர் குடிக்கும் போதோ அல்லது வயிறு நிறைய சாப்பிடும் போதோ இந்தமாதிரி வாயுப்பிடிப்பு ஏற்படும். சாப்பிட்ட சாப்பாடு சரியாக செரிமானம் ஆகாத போது கூட வாயுப்பிடிப்பு ஏற்படும்.

    இதற்கு சிறந்த வழி என்னவென்றால் ஆரோக்கியமான சாப்பாடு, அளவான தண்ணீர் தான். இந்த வாயுப்பிடிப்பு பிரச்சனை இருப்பவர்கள் கடைகளில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுவும் இரவு சாப்பாடு 7 மணியில் இருந்து 7.30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அதுவும் அளவான தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும், வயுறு முட்ட நீர் அருந்தக்கூடாது. இவ்வாறு செய்தால் மட்டுமே வாயுப்பிடிப்பை தவிர்க்க முடியும்.

    • பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை வழக்கு.
    • காவல்நிலையத்தில் வைத்து ராஜேஷ் தாசிடம் போலீசார் விசாரணை.

    தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, அவரது முன்னாள் மனைவியும் தமிழக அரசின் எரிசக்தித்துறை செயலாளருமான பீலா வெங்கடேசன், தனக்கு சொந்தமான பங்களாவின் காவலாளியை தாக்கியதாக அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் ராஜேஸ் தாஸை இன்று கேளம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து காவல்நிலையத்தில் வைத்து ராஜேஷ் தாசிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசை திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலர்களை மிரட்டியதாக ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஏற்கனவே 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மேலும் காவலர்களை வேலை செய்யாமல் மிரட்டியதாக பிரிவு 353-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உடல் நிலையை கருத்தில் கொண்டு முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    • இதயத்தில் நோய் இருந்தால் நெஞ்சில் வலி ஏற்படுவது தான் ஒரே அறிகுறி எனும் தவறாக புரிதல் பலரிடம் உள்ளது.
    • கொழுப்புச்சத்து, சோடியம், இனிப்பு உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

    மனித உடலில் இன்றியமையாத உறுப்பு இதயம் ஆகும். உடல் முழுவதும் குருதியை விநியோகம் செய்யும் பிரதான உறுப்பான இதயத்திற்கு வரும் ஆபத்துகளில் பெரும்பாலானவற்றை நாம் கட்டுப்படுத்த முடியும். உண்ணும் உணவும், வாழ்க்கை முறையுமே இருதய நோய்களை கட்டுப்படுத்தும் கருவிகளாகும்.

    எல்லா வகையான இருதய நோய்களுக்கும் அறிகுறிகள் தெளிவாக புலப்படுவதில்லை. அப்படியிருக்க, நம் இதயம் ஆரோக்கியமாக துடிக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது? குறிப்பிட்ட இடைவெளிகளில் உடற் பரிசோதனை செய்வதன் மூலம் இருதய நோய் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.


    இதயத்தில் நோய் இருந்தால் நெஞ்சில் வலி ஏற்படுவது தான் ஒரே அறிகுறி எனும் தவறாக புரிதல் பலரிடம் உள்ளது. இருதய நோய் உள்ளவர்களுக்கு நெஞ்சு வலி மட்டுமல்லாது மேலும் பல அறிகுறிகள் தென்படலாம். அவை கீழ்வருமாறு:

    சீரற்ற இதயத்துடிப்பு

    நெஞ்சில் அசௌகரியம்

    உடலின் இடப்புறத்தில் தோன்றும் வலி

    மயக்க உணர்வு

    தலைசுற்றல்

    தொண்டை அல்லது தாடை வலி

    உடற்சோர்வு

    தீராத இருமல்

    கால்கள், கணுக்கால், அடிவயிறு ஆகியவற்றில் வீக்கம்

    குறட்டை மற்றும் தூக்கக் கோளாறு


    துவக்கத்திலேயே கண்டறிந்தால் இருதய நோய்களை குணப்படுத்துவது எளிது. எனவே, இருதய நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். ஆரோக்கியமான உணவுடன் போதியளவு உடற்பயிற்சியும் மேற்கொண்டால் இதயம் நலமுடன் துடிக்கும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பயறு வகைகள் ஆகியவற்றை போதியளவு எடுத்துக்கொள்ள வேண்டும். கொழுப்புச்சத்து, சோடியம், இனிப்பு உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. சீரான உடல் எடை பேணுவதுடன், புகைப்பதை தவிர்த்து, மன இறுக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக் கொழுப்பு ஆகியவை இருதய நோய்களுக்கு வழிவகுக்கலாம் என்பதால் அவற்றை கட்டுக்குள் வைக்கவேண்டியது அவசியமாகும்.

    • கொழுப்பு என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் மெழுகு.
    • சிலருக்கு மரபு சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம்.

    இன்றைய காலகட்டத்தில் வைத்தியசாலையில் பிறக்கும் பச்சிளங்குழந்தைகள் மூன்று முதல் மூன்றேகால் கிலோ வரை இருந்தால் ஆரோக்கியமான குழந்தை என கருதுகிறோம். சில குழந்தைகள் பிறக்கும் போது ஐந்து கிலோ எடைக்கு மேல் இருக்கும்.

    இத்தகைய குழந்தைகள் வளர்ச்சி அடையும் போது உடற்பருமன் பாதிப்பிற்கு ஆளாகி, எதிர்காலத்தில் அதாவது நாற்பது வயதிற்குள்ளாகவே இதய பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.

    இருப்பினும் இந்த கொழுப்பு இயல்பான அளவைவிட கூடுதலாக உடலில் சேகரிக்கப்படும் போது அது ரத்த நாளங்களில் படிமங்களாக தங்கி, ரத்த ஓட்டத்தினை சீர்குலைத்து, இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மருத்துவர்கள் உங்களுடைய கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவு மீது எப்போதும் தீவிர கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கிறார்கள்.

    மேலும் நாற்பது வயதை கடந்த ஆண்களும், பெண்களும் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் காலகட்டத்தில் கொழுப்பின் அளவை அறிவதற்கான பிரத்தியேக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

    கொழுப்பு என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளாகும். இது தண்ணீரில் கரையாத காரணத்தால் தானாகவே கொழுப்பு புரதங்களாக மாறி, ரத்த நாளங்களில் படிவுகளாக படிகின்றன.

    கொழுப்புகள் புரதங்களாக மாறி ஹார்மோன்கள், விட்டமின்கள், செல் கட்டமைப்பை உருவாக்குதல், பராமரித்தல் போன்றவற்றிற்கு இன்றியமையாத பணியை மேற்கொள்கிறது. இதன் காரணமாக அனைவருக்கும் கொழுப்பு என்பது அவசியம்.

    ஆனால் இயல்பான அளவை விட கூடுதலாக அதிகரிக்கும்போது அவை பாதிப்பை ஏற்படுத்துகிறது. நெஞ்சு வலி, மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

     கொழுப்புகளில் நல்ல கொழுப்பு- கெட்ட கொழுப்பு என்ற இரண்டு வகை உள்ளது. இதில் கெட்ட கொழுப்பு அதிகரித்தால் பாதிப்புகள் உயர்கிறது. அதீத கொழுப்பு சேர்வது என்பது சிலருக்கு மரபு சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம். இவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி தங்களது உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

     நீரிழிவு நோயாளிகள், நாள்பட்ட சிறுநீரக தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள், ஹைபோதைராய்டிசம், புற்றுநோய், முகப்பரு, உயர் ரத்த அழுத்தம், சமசீரற்ற இதயத்துடிப்பு போன்ற பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி அதீத கொழுப்பு பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள பிரத்தியேக ரத்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

    இந்த பரிசோதனைகளின் முடிவுகளின் படி உங்களுக்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும். அதீத கொழுப்பு பாதிப்பை குறைப்பதற்காக முதலில் மருத்துவர்கள் உணவுப் பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துவர்.

    இதனைத் தொடர்ந்து உங்களது வயது, ஆரோக்கிய நிலை, மருந்துகளின் பக்க விளைவு ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து அதீத கொழுப்பு பாதிப்பை குறைப்பதற்காக பிரத்தியேக மருந்தியல் சிகிச்சைகளை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவர்.

    • விதவிதமான வடிவங்களில் இ-சிகரெட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.
    • இ-சிகரெட்டில் சில நச்சுப் பொருட்கள் உள்ளன.

    நிகோடின்:

    புகைப்பழக்கம் கொண்டவர்களை ஈர்க்கும் விதமாக விதவிதமான வடிவங்களில் இ-சிகரெட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அவை புகைப்பிடிப்பவர்களுக்கு உதவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும், அதற்கு பதிலாக இளைஞர்களிடத்தில் நிகோடினால் ஏற்படும் பாதிப்பை அதிகரிக்க செய்யும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இ-சிகரெட்டில் சில நச்சுப் பொருட்கள் உள்ளன. அவை புற்றுநோயை உண்டாக்கும். இதயம் மற்றும் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இ-சிகரெட்டுகள் ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்புகள் குறித்து பார்ப்போம்...

    வழக்கமான சிகரெட்டுகளில் காணப்படும் போதைப் பொருளான நிகோடின் பெரும்பாலான இ-சிகரெட்டுகளிலும் உள்ளது. மூச்சுக்குழாய் வழியாக ஊடுருவும் நிகோடின் நுரையீரலில் தங்கிவிடும். அது நுரையீரலை விட்டு நீங்காமல் நாளடைவில் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். இருமல், மூச்சுத்திணறல், சோர்வு, நெஞ்சு வலி ஆகிய பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். இறுதியில் மரணத்துக்கு வழிவகுத்துவிடும்.

    மூளை வளர்ச்சி:

    டீன் ஏஜ் பருவத்தினர் மற்றும் இளைஞர்களின் மூளை வளர்ச்சிக்கு நிகோடின் தடையாக அமையும். மூளைக்கு தீங்கு விளைவிப்பதோடு கற்றல் திறனை பாதித்துவிடும். கவனச்சிதறலையும் உண்டாக்கிவிடும்.

    மூச்சுக்குழாய் அழற்சி:

    இ-சிகரெட்டுகளில் ஏரோசோலில் டயசெடைல் போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. இவை கடுமையான நுரையீரல் நோயான மூச்சுக்குழாய் அழற்சிக்கு வித்திடும். ஆஸ்துமா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி உடல் நலனை மோசமாக்கிவிடும். மூச்சுப்பயிற்சி செய்வது போன்று தினமும் பலூன் ஊதி பயிற்சி செய்வதும் நல்லது. மூச்சுக்குழாய்க்கு சிறந்த பயிற்சியாக அமையும். அதன் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.

    இதய நோய்:

    இ-சிகரெட்டுகள் இதயம் மற்றும் ரத்த நாளங்களை சேதப்படுத்தும். மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதயம் சார்ந்த நோய் அபாயத்தை அதிகரிக்கச்செய்துவிடும்.

    மன ஆரோக்கியம்:

    நிகோடின் உடலில் சேரும் நச்சு வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உடலுக்குள் அதன் வீரியம் அதிகரிக்கும்போது கவலை, மனச்சோர்வு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

    கர்ப்பிணி:

    இ-சிகரெட்டுகளில் ஏரோசோலில் நிகோடின் மற்றும் தீங்கு விளைவிக்கும் சில ரசாயனங்கள் உள்ளன. அதனை கர்ப்பிணிகள் நுகர்வது கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.

    விடுபட வழிமுறைகள்:

    புகைப்பழக்கத்தை கைவிடுவதற்கு முயற்சித்தாலும் சிகரெட்டில் இருக்கும் நிகோடின் அதற்கு இசைவு கொடுக்காது. அது உடலில் சேர்ந்து பழக்கப்பட்டுவிட்டதால் அதன் தேவையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும். அதனால் மீண்டும் புகைப்பழக்கத்துக்கு அடிமைப்படுத்திவிடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. புகைப்பிடிக்க வேண்டும் என்று நிகோடின் தூண்டிவிடும்போது கவனத்தை திசைதிருப்ப வேண்டும். உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். இசையை கேட்டு மகிழலாம்.

    புகைப்பிடிக்க வேண்டும் என்று தோன்றும் சமயங்களில் குடிநீர் பருகலாம். உடலை நீரேற்றமாக வைத்திருப்பது உடலில் சேர்ந்திருக்கும் நிகோட்டினை வெளியேற்ற உதவும். புகைப் பிடிக்கும் ஆசையை கட்டுப்படுத்தும். உடற்பயிற்சி செய்வதும் நிகோடின் ஏற்படுத்தும் புகைப்பழக்க பசியை கட்டுப்படுத்த உதவும். சூயிங்கம் போன்ற இனிப்பு இல்லாத மிட்டாய் வகைகளை சுவைத்தும் வரலாம்.

    புகைப்பழக்கத்தில் இருந்து சட்டென்று மீண்டு வருவது கடினமானது. புகைப்பிடிக்க வேண்டும் என்று விரும்பும் சமயங்களில் வேறு வேலைகளில் கவனம் செலுத்தலாம். அதற்கு மாற்றான பொருட்களை உபயோகப்படுத்தலாம்.

    அப்படியும் முடியாத பட்சத்தில் தினமும் ஒருமுறை மட்டும் புகைப்பிடிக்கும் வழக்கத்தை பின்பற்றலாம். ஒருவாரம் கடந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்று தீர்மானித்து படிப்படியாக புகைப்பழக்கத்தில் இருந்து மீண்டு வர முயற்சிக்கலாம்.

    • சரளம்மாள் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்
    • மருத்துவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலை திங்களூர் கிராமத்தில் உள்ள காடுபசுவமாளம் பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது 68). இவரது மனைவி சரளம்மாள் (55). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    சரளம்மாள் தனக்கு இடது தோள்பட்டையில் வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் சரளம்மாள் நேற்று அதிகாலை தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனடியாக அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சரளம்மாள் இறந்துவிட்டதாக கூறினார். பின்னர் இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • டிரைவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்தனர்.
    • மனைவி ராதாபுஷ்பம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    நெல்லையில் இருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவராக தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த பெத்தநாடார்பட்டி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கார்மேகம் (வயது 47) என்பவர் பணியில் இருந்தார். கண் டக்டராக வண்ணமுத்துக் குமரன் டிக்கெட் கொடுத்துக்கொண்டு இருந்தார்.

    இந்த பேருந்து ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, டிரைவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே பஸ்சை ஓரங்கட்டி நிறுத்திய அவர் தொடர்ந்து இயக்க முடியாமல் தவித்தார். இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து கண்டக்டர் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். சற்று தெளிவான நிலையில் இருந்த டிரைவர் கார்மேகன் தொடர்ந்து பஸ்சை இயக்கியவாறு ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் வந்து சேர்ந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் டிக்கெட் எடுத்திருந்த பயணிகள் மட்டும் வேறு பஸ்சில் ஏற்றிவிடப்பட்டனர்.

    பின்னர் டிரைவர் கார் மேகத்தை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு கண்டக்டர் வண்ணமுத்துக்குமரன் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். டிரைவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு இ.சி.ஜி. உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்து வந்தனர். இது பற்றிய தகவல் அவரது மனைவி ராதாபுஷ்பத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். இதற்கிடையே நேற்று இரவு சிகிச்சை பலனின்றி டிரைவர் கார் மேகம் பரிதாபமாக இறந் தார். உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தைரியமாக பஸ்சை ஓட்டி வந்து பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்ட டிரைவர் சிகிச்சையின்போது உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இறந்த டிரைவருக்கு கார்த்திக் என்ற மகனும், மோனிகா என்ற மகளும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து டிரைவரின் மனைவி ராதாபுஷ்பம் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×