search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பூா்  அருகே பெயிண்டர் சுருண்டு விழுந்து சாவு
    X

    வேப்பூா் அருகே பெயிண்டர் சுருண்டு விழுந்து சாவு

    • அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது இதையடுத்து அவர் தனது வீட்டிற்கும் தகவலும் கொடுத்துள்ளார்.
    • இது குறித்து வேப்பூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுபதி(வயது56) . இவர் வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். நேற்று கழுதூர் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது இதையடுத்து அவர் தனது வீட்டிற்கும் தகவலும் கொடுத்துள்ளார். மேலும் மீண்டும் சரியாகி விட்டது என்று கூறி வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் அப்போது மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

    இதை அறிந்த கழுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அவரை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளார்கள். இது குறித்து வேப்பூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வேப்பூா் போலீசார் இறந்த ரகுபதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×