search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "badmniton"

    • பரிசோதித்த மருத்துவர்கள் அந்த நபர் மாரடைப்பால் இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
    • இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் நெய்டா செக்டார் 21ஏவில் உள்ள ஸ்டேடியத்தில் 52 வயதான நபர் ஒருவர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார்.

    அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக விளையாட்டு வீரர்கள் உடனடியாக ஸ்டடியம் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழு நபரின் உயிரை காப்பாற்ற முதலுதவி செய்தனர். அதற்குள், ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அந்த நபர் மாரடைப்பால் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து, நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து செக்டார் 24 காவல் நிலையத்தின் போலீஸ் அதிகாரி அமித் குமார் கூறுகையில், "இறந்தவர் நொய்டா, செக்டார் 11ல் வசிக்கும் மகேந்திர ஷர்மா என அடையாளம் காணப்பட்டார்.

    கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் தனது நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடுவதற்காக மைதானத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது" என்றார்.

    இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

    ×