search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ் டிரைவருக்கு நெஞ்சுவலி
    X

    சிகிச்சை பெற்று வரும் டிரைவர் கருப்பையா.

    அரசு பஸ் டிரைவருக்கு நெஞ்சுவலி

    • அரசு பஸ் டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • பஸ்சை சாமர்த்தியமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.

    சிங்கம்புணரி

    மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து பொன்னமராவதிக்கு 45 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டு வந்தது.

    இந்த பஸ்சை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா மதியாணி கிராமத்தை சேர்ந்த டிரைவர் கருப்பையா (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காவல்நிலையம் அருகே வரும்போது டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

    உடனே அவர் பஸ்சை மெதுவாக இயக்கி வந்து சிங்கம்புணரி பஸ் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தினார். பின்னர் கண்டக்டரிடம் நெஞ்சு வலிக்கிறது. அரசு மருத்துவ மனைக்கு போகலாம் என கூறிய டிரைவர் சிறிது நேரத்தில் ஓட்டுநர் இருக்கையிலேயே மயங்கி விழுந்தார்.

    இதை பார்த்த பயணிகள் ஆட்டோவை வரவழைத்து அருகில் உள்ள சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் டிைரவரை சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையிலும் சாமர்த்தியமாக பஸ்சை மெதுவாக இயக்கி பயனிகளின் உயிரை காப்பாற்றிய டிரைவர் கருப்பையாவிற்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×