என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KLRahul"

    • கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும் அவுட்டாகினர்.
    • கவாஸ்கரின் சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.

    மான்செஸ்டர்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது..

    அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 49.1 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், சுப்மன் கில் 12 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் ரன் குவித்ததன் மூலம் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    அதாவது, வெளிநாட்டு மண்ணில் ஒரு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்த 2வது துவக்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்குமுன், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீஸ் (1,404), இங்கிலாந்து (1,152), பாகிஸ்தான் (1,001) ஆகிய நாடுகளில் 1,000 ரன்களை விளாசி இருந்தார். தற்போது அவரது சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    லார்ட்ஸ்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலே, பென் டக்கெட் ஜோடி நிதானமாக ஆடியது.

    ஒல்லி போப் 44 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜாக் கிராலே 18 ரன்னில் வெளியேறினார். ஹாரி புரூக் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் அரை சதம் கடந்தார்.

    முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. பென் ஸ்டோக்ஸ் 44 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து 104 ரன்னில் அவுட்டானார். கிறிஸ் வோக்ஸ் டக் அவுட்டானார். 271 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது.

    ஜேமி ஸ்மித்துடன் பிரைடன் கார்ஸ் இணைந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். 8வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் ஜேமி ஸ்மித் அரை சதம் கடந்தௌ 51 ரன்களில் அவுட்டானார். கார்ஸ் 56 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 13 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து கே.எல்.ராகுலுடன் கருண் நாயர் இணைந்தார். 2வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில் கருண் நாயர் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன் சுப்மன் கில் 16 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 53 ரன்னும், ரிஷப் பண்ட் 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி சதம் விளாசி 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    நார்த்தம்ப்டன்:

    இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதும் 2-வது பயிற்சி ஆட்டம் நார்த்தம்ப்டனில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய ஏ அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 17 ரன்னும், கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 11 ரன்னும் எடுத்தனர். கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி சதம் விளாசி 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 15 பவுண்டரியும், ஒரு சிக்சரும் அடங்கும்.

    கருண் நாயர் 40 ரன்னில் அவுட்டானார். நடுவரிசையில் சிறப்பாக ஆடி அதிரடி காட்டிய துருவ் ஜூரல் 52 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 81 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்துள்ளது.

    • ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக இருந்தது.
    • இந்திய பந்து வீச்சாளர்கள் சரியான முறையில் பந்து வீசினார்கள்.

    ஹராரே: 

    ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அந்நாட்டின் ஹராரே நகரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

    இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கே.எல்.ராகுல், ஸ்விங் மற்றும் வேகப் பந்து வீச்சுக்கு சாதமாக ஆடுகளம் இருந்தது என்றார். இந்திய பந்து வீச்சாளர்கள் சரியான முறையில் பந்து வீசியதை பார்க்க சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.

    நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடுகிறோம், காயங்கள் அதன் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். நான் களத்தில் இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விளையாட்டிலிருந்து விலகி இருப்பது கடினம் என்றும்  அவர் கூறினார். நாங்கள் இந்திய டிரஸ்ஸிங் ரூமுக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, நாங்கள் தொடர்ந்து விளையாட விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

    ×