என் மலர்
நீங்கள் தேடியது "Australia A"
- இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.
- ஒருநாள் தொடரில் கேப்டனாக ஷ்ரேயஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன 2நிலையில், ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்திய 'ஏ' அணிஅணியின் கேப்டன் பதவியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் திடீரென விலகியதால் துருவ் ஜூரல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்தியா A அணியை பிசிசிஐ அறிவித்தது. ஒருநாள் தொடரில் கேப்டனாக ஷ்ரேயஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1வது ஒரு நாள் போட்டிக்கான இந்திய ஏ அணி:-
ஷ்ரேயாஸ் ஐயர் (C), பிரப்சிம்ரன் சிங் (WK), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சூர்யன்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், யுதிர் சிங், ரவி பிஷ்னாய், அபிஷேக் போரல், பிரியான்ஷ் ஆர்யா, சினுர்ஜீத் சிங்
இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணி:
ஷ்ரேயாஸ் லியர் (C), திலக் வர்மா (VC), அபிஷேக் ஷர்மா, ப்ரப்சிம்ரன் சிங் (WK), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சூர்யான்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகாம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், துதிஷ்னோ சிங், துதிஷ்னோ சிங், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங்,
- டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய ஏ அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 350 ரன்கள் எடுத்தது.
லக்னோ:
இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் இடையேயான அதிகாரப்பூர்வமற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இதனையடுத்து இரு அணிகளிக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லக்னோவில் இன்று தொடங்கியது.
இந்தப்போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய 'ஏ' அணி கேப்டன் பதவியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் திடீரென விலகினார். இதனால் துருவ் ஜூரல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய ஏ அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 350 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜாக் எட்வர்ட்ஸ் 88 ரன்கள் குவித்தார்.
இந்திய தரப்பில் மனவ் சுதர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இவர் 2024-25 துலீப் டிராபியில் இந்தியா சி அணிக்காக விளையாடிய இவர், இந்தியா பி அணிக்கு எதிராக 82 ரன்கள் அடித்தார் மற்றும் ஒரு இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியைப் பெற உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியா ஏ அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டி இன்று லக்னோவில் தொடங்கியது.
- இந்தப்போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஷ்ரேயாஸ் ஐயர் திடீரென விலகினார்.
லக்னோ:
இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் இடையேயான அதிகாரப்பூர்வமற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் இரு அணிகளிக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லக்னோவில் இன்று தொடங்கியது. இந்தப்போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய 'ஏ' அணி கேப்டன் பதவியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் திடீரென விலகினார்.
அவர் அணியை விட்டு வெளியேறி மும்பை திரும்பினார். இதற்கான காரணம் தெரியவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் துருவ் ஜூரல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- துருவ் ஜூரெல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா ஏ அணிக்கு எதிராக, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்(4 நாட்கள்) மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி வருகிற 16-ம் தேதி லக்னோவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணி உடனான இரண்டு 4 நாள் டெஸ்ட் போட்டிக்கான இந்தியா ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான தகவலின் படியே, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துருவ் ஜூரெல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில், இந்திய அணி கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர், துணை கேப்டன், விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி விவரம்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், என் ஜெகதீசன், சாய் சுதர்சன், துருவ் ஜூரல், தேவ்தத் படிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் பதோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், கலீல் அகமது, யாஷ் தாகூர்.
- ருதுராஜ், நிதிஷ் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டக் அவுட்டில் வெளியேறினர்.
- ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் பிரெண்டன் டோகெட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்திய ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தொடராக அமைந்துள்ளது பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது.
இந்தத் தொடருக்கு முன்னதாக ருதுராஜ் தலைமையில் இந்திய ஏ அணியும் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. அதிகாரப்பூர்வமற்ற இந்த டெஸ்ட் தொடர் இந்திய வீரர்களுக்கு பயிற்சி போட்டிகளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ்- அபிமன்யூ ஈஸ்வரன் களமிறங்கினர்.
ருதுராஜ் கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் அபிமன்யு 7 ரன்னிலும் சாய் சுதர்சன் 21, இந்திரஜித் 9, இஷான் கிஷன் 4, படிக்கல் 36, நிதிஷ் ரெட்டி 0, மனோவ் சுதர் 1, பிரசித் கிருஷ்ணா 0, சைனி 23 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால் இந்தியா ஏ அணி 47.4 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக படிக்கல் 36 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் பிரெண்டன் டோகெட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- அபிமன்யூ, சாய் சுதர்சன் ஆகியோர் 0 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
- ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் நேசர் 4 விக்கெட்டும் வெப்ஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.
மெல்போர்ன்:
இந்தியா 'ஏ'-ஆஸ்திரேலியா 'ஏ'அணிகள் இடையே 4 நாள் போட்டிக் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய 'ஏ' அணியின் தொடக்க வீரர்களாக அபிமன்யூ- கேஎல் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே அபிமன்யூ டக் அவுட் ஆனார். அடுத்து வந்த சாய் சுதர்சன் கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 2-வது ஓவரில் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து கேப்டன் 4 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.
இதனால் இந்திய அணி 11 ரன்னில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து படிக்கல் மற்றும் ஜூரெல் நிதானமாக விளையாடி விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். ஆனால் ரொம்ப நேரம் அது தொடரவில்லை. படிக்கல் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் நிதிஷ் ரெட்டி 16, தனுஷ் கோட்யான் 0, கலீல் அகமது 1, பிரசித் கிருஷ்ணா 14 என விக்கெடுகளை பறிகொடுத்தனர். ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜூரெல் அரை சதம் அடித்ததுடன் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்திய ஏ அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் நேசர் 4 விக்கெட்டும் வெப்ஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.
- முதல் இன்னிங்சில் இந்திய ஏ அணி 161 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மெல்போர்ன்:
இந்தியா 'ஏ'-ஆஸ்திரேலியா 'ஏ'அணிகள் இடையே 4 நாள் போட்டிக் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய 'ஏ' அணி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. ஜூரெலின் அரை சதத்தின் மூலம் இந்திய அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் நேசர் 4 விக்கெட்டும் வெப்ஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது. முதல் இன்னிங்சை போலவே 2-வது இன்னிங்சிலும் இந்திய அணி தடுமாறியது. அபிமன்யூ 17, கேஎல் ராகுல் 10, சாய் சுதர்சன் 3, கேப்டன் ருதுராஜ் 11, படிக்கல் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி 31 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் எடுத்துள்ளது.
பார்டர் கவாஸ்கர் தொடருக்கு முன்னோட்டமாக நடைபெற்றுவரும் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணி கேப்டன் ருதுராஜ் சொதப்பி உள்ளார். அவர் 4 இன்னிங்ஸிலும் சேர்த்து 20 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
பார்டர்- கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் இடம்பெறாத நிலையில் இந்த தொடரில் சிறப்பாக ஆடினால் தொடரில் விளையாட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது
- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
- இந்தியா ஏ அணி 62 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான இரண்டாவது அன்-அஃபிஷியல் டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று (நவம்பர் 7) துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதனால் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா ஏ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய அபிமன்யூ ஈஸ்வரன் ரன் ஏதும் எடுக்காமலும், கே.எல். ராகுல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அடுத்து வந்த சாய் சுதர்சனும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
அடுத்து வந்தவர்களில் தேவ்தத் படிக்கல் 26 ரன்களும், துருவ் ஜூரெல் 80 ரன்களும் அடித்ததால் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 161 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா ஏ சார்பில் சிறப்பாக பந்துவீசிய மைக்கல் நாசர் 4 விக்கெட்டுகளையும், வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலண்ட் மற்றும் கோரெ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், இந்தியா ஏ அணி 62 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியா ஏ அணி தடுமாற அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இந்த இன்னிங்ஸில் கே.எல். ராகுல் அவுட் ஆன விதம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. கேரெ வீசிய ஓவரை எதிர்கொண்ட கே.எல். ராகுல் குறிப்பிட்ட பந்தை விளையாட மனமின்றி அதனை தவிர்க்க ஸ்டம்ப்களை விட்டு நகர ஆயத்தமானார். அப்போது பந்தின் திசை மாறியது. இதனால் பந்து ஸ்டம்ப்களை கடந்து சென்றுவிடும் என்று கே.எல். ராகுல் எதிர்பார்த்தார்.
ஆனால், பந்து அவரின் கால்களுக்கு இடையில் கடந்து சென்று ஸ்டம்ப்களை தகர்க்க கே.எல். ராகுல் களத்தில் இருந்து வெளியேறினார். கே.எல். ராகுல் அவுட் ஆன விதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
- ஆஸ்திரேலியா அணிக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா.
- இலக்கை ஆஸ்திரேலியா 47.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 169 ரன் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மெல்போர்ன்:
இந்தியா 'ஏ' - ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) மெல்போர்னில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா ஏ 161 ரன்னும், ஆஸ்திரேலியா ஏ 223 ரன்னும் எடுத்தன. 62 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 73 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஜூரெல் 19 ரன்னுடனும், நிதிஷ்குமார் ரெட்டி 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய துருவ் ஜூரெல் 68 ரன்னிலும், நிதிஷ்குமார் 38 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த பிரசித் கிருஷ்ணா 29 ரன்னும், தனுஷ் கோடியன் 44 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். 77.5 ஓவர்களில் இந்தியா ஏ 229 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் கோரி ரோச்சிசியோலி 4 விக்கெட்டும், வெப்ஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 47.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 169 ரன் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாம் கோன்ஸ்டாஸ் 73 ரன்னுடனும், வெப்ஸ்டர் 46 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும், முகேஷ் குமார், தனுஷ் கோடியன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடக்க வீராங்கனையும், இந்திய பெண்கள் அணியின் அனுபவம் வாயந்தவரும் ஆன மிதலி ராஜ் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 31 பந்தில் அரைசதம் அடித்த, மிதலி ராஜ், 59 பந்தில் சதம் அடித்தார். அவர் 61 பந்தில் 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் டி20 போட்டியில் ஒரே ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ஸ்மிரிதி 102 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது. அதை தற்போது மிதலி ராஜ் முறியடித்துள்ளார்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதன்பின் வந்த மெக்ராத் (58), கிரஹாம் (48), ஸ்டேலன்பெர்க் (47) சிறப்பாக விளையாடி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா ‘ஏ’.
பின்னர் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ வீராங்கனைகள் களம் இறங்கினார்கள்.
தொடக்க வீராங்கனை புனியா 4 ரன்னில் வெளியேற, அதன்பின் வந்த வைத்தியா, மற்றொரு தொடக்க வீராங்கனை ரவுத் ஆகியோர் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர். எஸ் பாண்டே 42 ரன்களும், ப்ரீத்தி போஸ் ஆட்டமிழக்காமல் 62 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 46.2 ஓவரில் 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா ஏ 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது போட்டி 17-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 19-ந்தேதி மும்பையில் நடக்கிறது.
இந்த ஆட்டங்கள் விசாகப்பட்டனத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால் போட்டி நடைபெறும் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிமை மையம் தெரிவித்துள்ளதால் இரண்டு ஆட்டங்களும் பெங்களூருவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

முதல் ஆட்டம் பெங்களூரு எம் சின்னசாமி மைதானத்திலும், 2-வது ஆட்டம் ஆளுரிலும் நடைபெறும் என பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.






