என் மலர்
நீங்கள் தேடியது "Mithali Raj"
- தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
- முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கோப்பையை கையில் வாங்கி மகிழ்ச்சியில் கொண்டாடினார்.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.
299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.
45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இதனையடுத்து கோப்பையுடன் இந்திய அணி வீராங்கனைகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதன்பின்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கோப்பையை கையில் வாங்கி மகிழ்ச்சியில் கொண்டாடினார்.
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி 2005, 2017 என 2 முறை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால் அவரால் கோப்பையை வெல்லமுடியவில்லை. அப்போது கைநழுவி போன கோப்பை கனவு இப்போது நனவாகியுள்ளது.
மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் என்று போற்றப்படும் மிதாலி ராஜ், 23 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் ஆடியுள்ளார். குறிப்பாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் (232 ஆட்டத்தில் 7,805 ரன்) என்ற சாதனையை இப்போது அவர் தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது.
- ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.
நவி மும்பை:
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன.
முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையை முறியடித்தார். நடப்பு தொடரில் ஸ்மிருதி மந்தனா சிறப்பாக ஆடி வருகிறார்.
ஸ்மிருதி மந்தனா இறுதிப்போட்டியில் 21 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒரு உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஏற்கனவே, மிதாலி ராஜ் 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த தொடரில் 409 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது ஸ்மிருதி மந்தனா அந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஸ்மிருதி மந்தனா 9 இன்னிங்சில் 410 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு 12-ந்தேதி மோதுகிறது.
- ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக மிதாலி, கல்பனா பெயரிலான கேலரி திறக்கப்படுகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள கேலரிக்கு, இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கு பெரும் பங்காற்றிய ஆந்திராவைச் சேர்ந்த மிதாலிராஜ் மற்றும் ரவி கல்பனா ஆகியோரது பெயரை சூட்ட வேண்டும் என தற்போதைய இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ஆந்திர தகவல் நுட்பத்துறை மந்திரி நாரா லோகேசுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது கோரிக்கை விடுத்தார்.
இதை ஆந்திர அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. மிதாலி, ரவி கல்பனாவை கவுரவிக்கும் வகையில் அவர்களது பெயர் விசாகப்பட்டினம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள கேலரிக்கு சூட்டப்பட இருப்பதாக ஆந்திர கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு 12-ந்தேதி மோதுகிறது. இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக மிதாலி, கல்பனா பெயரிலான கேலரி திறக்கப்படுகிறது.
23 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய முன்னாள் கேப்டனான மிதாலிராஜ், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் (232 ஆட்டத்தில் 7,805 ரன்) என்ற சாதனைக்குரியவர். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான கல்பனா 7 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தாலும் அவரது பிரவேசம் இந்த மண்டலத்தில் இருந்து அருந்ததிரெட்டி, மேகனா, ஸ்ரீசரனி உள்ளிட்டோர் இந்திய அணிக்குள் நுழைய உத்வேகம் அளிப்பதாக அமைந்தது.
- விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர்.
- மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.80 கோடிக்கு எடுத்துள்ளது.
149 போட்டிகளில் விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 2992 ரன்களை எடுத்திருந்தார். இந்நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 8 ரன்கள் எடுத்தபோது 3 ஆயிரம் ரன்களை எடுத்தார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 3 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 150 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இந்த ரன்களை கடந்திருக்கிறார். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர்.
33 வயதாகும் ஹர்மன்ப்ரீத் கவுர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்சமாக 103 ரன்களை எடுத்துள்ளார். இது எந்தவொரு இந்திய வீராங்கனையும் செய்யாத சாதனையாகும். இதேபோன்று சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்சர்களை (70) அடித்த வீராங்கனை என்ற ரிக்கார்டையும் அவர் ஏற்படுத்தியுள்ளார்.
இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் டி20 உலகக்கோப்பை தொடரில் 13 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தார். இந்த சாதனையையும் ஹர்மன்ப்ரீத் கவுர் (14) முறியடித்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து அனைத்து டி20 உலகக்கோப்பை போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர். மொத்தம் 34 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 500 ரன்களை எடுத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.80 கோடிக்கு எடுத்துள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் மார்ச் 4ஆம் தேதி தொடங்கவுள்ளது.
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசினார்.
- மிதாலி ராஜ் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஏழு சதம், 64 அரைசதங்கள் அடித்துள்ளார்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசினார். இது அவரின் 6-வது ஒருநாள் சதம் ஆகும்.
இந்த நிலையில் இன்று 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியிலும் சதம் விளாசினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் விளாசிய இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் சாதனையை சமன் செய்துள்ளார்.
மிதாலி ராஜ் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஏழு சதம், 64 அரைசதங்கள் அடித்துள்ளார். 27 வயதான ஸ்மிரிதி மந்தனா 84 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் ஏழு சதங்கள் அடித்துள்ளார். இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டனான ஸ்மிரிதி மந்தனா 27 அரைசதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேப்டனை மாற்ற விரும்பினால் நான் இளைய தலைமுறையை தேர்வு செய்வேன்.
- இந்திய மகளிர் அணியில் எந்த முன்னேற்றமும் இல்லை.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது.
இந்நிலையில் கடந்த 2- 3 வருடமாக இந்திய அணியில் ஒரு முன்னேற்றமும் இல்லை என இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தேர்வுக்குழு அணியின் கேப்டனை மாற்ற விரும்பினால் நான் இளைய தலைமுறையை தேர்வு செய்வேன். இதுதான் மாற்றத்துக்கான நேரம். அடுத்தாண்டு மீண்டும் ஒரு உலகக் கோப்பை (ஒருநாள் உலகக் கோப்பை 2025) இருக்கிறது. இப்போது மாற்றம் செய்யாவிட்டால் பிறகு செய்யாதீர்கள். ஏனெனில் அடுத்த உலகக் கோப்பை விரைவில் வரவிருக்கிறது.
ஸ்மிருதி மந்தனா 2016-ல் இருந்து துணை கேப்டனாக இருக்கிறார். ஆனால், நான் இன்னும் இளமையான 24 வயதாகும் ஜெமிமா மாதிரி ஆள்களை தேர்வு செய்வேன். ஜெமிமா எல்லோரிடமும் கலந்துரையாடுகிறார். அவரது செயல்பாடுகள் இந்தத் தொடரில் சிறப்பாக இருந்தது. கடந்த 2-3 வருடமாக இந்திய அணியில் ஒரு முன்னேற்றமும் இல்லை. எந்த அர்த்தத்தில் என்றால் சிறந்த அணியை வீழ்த்த தயாராக வேண்டும்.
ஆடவர் அணி எப்படி நன்றாக விளையாடுகிறது? ஒரு பெரிய தொடரை இழந்த பிறகு அணியில் மாற்றத்தை கொண்டு வருகிறார்கள். ஆழமாக பேசினால், மற்றவர்களுக்கு நாம் எப்போது வாய்ப்பளிப்போம்? அதிலும் ஆஸி.க்கு எதிராக ராதா யாதவ், ஜெமிமா தவிர்த்து யாரும் சரியாக விளையாடவில்லை. 11இல் 2 நபர் மட்டுமே விளையாடுவது நல்லதல்ல.
ஃபிட்னஸ் சார்ந்து நாம் ஒரு புதிய அளவுகோலை முன்வைக்க வேண்டும். ஒரு தொடருக்கு முன்பு மட்டுமே பயிற்சி எடுக்கக் கூடாது. ஆண்டு முழுவதும் பயிற்சி செய்தால் நிச்சயமாக களத்தில் வித்தியாசம் தெரியும்.
இவ்வாறு மிதாலி ராஜ் கூறினார்.
- சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனையாக சுசி பேட்ஸ் வரலாறு படைத்தார்.
- மகளிர் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டி துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டி20 உலகக் கோப்பை கைப்பற்றி அசத்தியது.
இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் (334 போட்டிகள்) விளையாடிய வீராங்கனையாக சுசி பேட்ஸ் வரலாறு படைத்தார். 37 வயதான இவர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையை முறியடித்துள்ளார். மிதாலியின் 23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில், இந்திய அணிக்காக மொத்தம் 333 போட்டிகளில் விளையாடினார்.
அதிக போட்டிகள் விளையாடிய வீராங்கனைகள் பட்டியலில், பேட்ஸ் மற்றும் மிதாலிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் எலிஸ் பெர்ரி, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸ் உள்ளனர்.
சுசி பேட்ஸ், ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமானதில் இருந்து இதுவரை நியூசிலாந்து அணிக்காக மொத்தம் 163 ஒருநாள் மற்றும் 171 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இவர், மகளிர் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவர் 168 இன்னிங்ஸ்களில் மொத்தம் 4584 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் 5178 ரன்கள் எடுத்து நியூசிலாந்துக்காக அதிக ரன்கள் எடுத்தவர் மற்றும் ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
பேட்டிங் மற்றும் இல்லாமல் பந்து வீச்சிலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முறையே 78 மற்றும் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மிதாலி ராஜ் முதலிடத்தில் உள்ளார்.
- 2-வது இடத்துக்கு மந்தனா- ஹர்மன்பிரீத் கவுர் இடையே போட்டி நிலவுகிறது.
நியூசிலாந்து மகளிர் அணி 3 ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 259 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய இந்தியா 183 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்டர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் மிதாலி ராஜ் முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இரண்டு இடங்கள் முறையே ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் உள்ளனர். ஸ்மிருதி மந்தனா 87 போட்டியில் விளையாடி 3590 ரன்கள் குவித்து 2-வது இடத்தில் உள்ளார். கவுர் 115 போட்டிகளில் விளையாடி 3589 ரன்கள் எடுத்து 3-வது இடத்தில் உள்ளனர்.
ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 1 ரன்னில் இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. மிதாலி ராஜ் 7805 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
- மிதாலி ராஜ் சர்வதேச போட்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
- மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் நம் இந்திய திருநாட்டின் பெருமையை நிலைநாட்டிய அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுனர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
23 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி மிளிரச் செய்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீராங்கனையுமான மிதாலி ராஜ் சர்வதேச போட்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் நம் இந்திய திருநாட்டின் பெருமையை நிலைநாட்டிய அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா கால கட்டத்தில் தெலுங்கானா ராஜ்பவனுடன் இணைந்து புலம்பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவளித்து தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியதை இந்நேரத்தில் நினைவு கூறுகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
வெஸ்ட்இண்டீசில் கடந்த நவம்பர் மாதம் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 36 வயதான மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்படவில்லை. அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து அவரை சேர்க்காதது சர்ச்சையாக உருவெடுத்தது. பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் இந்த நடவடிக்கையால் அணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதுடன் இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்தனர். இதனால் பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. இதேபோல் இந்த ஆட்டத்தில் மிதாலி ராஜ் மீண்டும் ஓரங்கட்டப்பட்டது சர்ச்சையாகவில்லை என்றாலும் டெலிவிஷன் வர்ணனையாளர்கள் அனுபவம் வாய்ந்த மிதாலி ராஜ்க்கு வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தனர்.
மிதாலி சேர்க்கப்படாதது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அளித்த விளக்கத்தில் ‘இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது வெளிநாட்டு மண்ணில் எங்களுக்கு இந்த 3 ஆட்டங்கள் தான் இருக்கிறது. அதன் பிறகு நாங்கள் அதிகம் இந்திய சூழ்நிலையில் தான் விளையாட இருக்கிறோம். அந்த ஒரு காரணத்துக்காகத் தான் இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளித்தோம்’ என்றார். #HarmanpreetKaur #MithaliRaj
மிதாலி ராஜ் அணியில் இடம்பெறாததற்கு கேப்டன்தான் காரணம் என்று கூறப்பட்டது. பின்னர் பயிற்சியாளர் ரமேஷ் பவார் - மிதாலி ராஜ் இடையே ஏற்பட்ட மோதல்தான் காரணம் என்று தெரியவந்தது.
இந்நிலையில் மிதாலி ராஜிற்காக தான் வருந்துகிறேன் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘நான் மிதாலி ராஜிற்கான வருந்துகிறேன். அவர் சிறந்த வீராங்கனை. கடந்த 20 ஆண்டுகளாக அவர் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்தார். இரண்டு போட்டியிலும் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
அவர் ஒரு போட்டியில் காயம் அடைந்த போதிலும், அடுத்த போட்டிக்கு தகுதி பெற்றார். இதை அப்படியே ஆண்கள் அணியுடன் ஒப்பிட்டு பார்த்தோம் என்றால், விராட் கோலி ஒரு போட்டியில் காயம் அடைந்து, அதன்பின் உடற்தகுதி பெற்று அடுத்த போட்டிக்கு தயாரானா், அவரை நீங்கள் நீக்கி விடுவீர்களா?.

நாக்அவுட் போட்டியில் நீங்கள் சிறந்த வீரர்களை களம் இறக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த மிதாலி ராஜ் ஆட்டம் அணிக்கு முக்கியமானது. ரமேஷ் பவார் உடன் என்ன நிகழ்ந்தது என்பது குறித்து இங்கிருந்து கருத்து கூறுவது மிகக்கடினம். ஆனார், எந்தவொரு காரணமாக இருந்தாலும் அவரை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மிதாலி ராஜ் இல்லாத 11 பேர் கொண்ட அணியில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இது சரியான காரணம் என்று என்னால் நினைக்க இயலவில்லை. மிதாலி ராஜ் போன்ற ஒருவரை நீக்கக்கூடாது’’ என்றார்.






