search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mithali Raj"

    • விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர்.
    • மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.80 கோடிக்கு எடுத்துள்ளது.

    149 போட்டிகளில் விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 2992 ரன்களை எடுத்திருந்தார். இந்நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 8 ரன்கள் எடுத்தபோது 3 ஆயிரம் ரன்களை எடுத்தார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 3 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 150 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இந்த ரன்களை கடந்திருக்கிறார். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர்.

    33 வயதாகும் ஹர்மன்ப்ரீத் கவுர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்சமாக 103 ரன்களை எடுத்துள்ளார். இது எந்தவொரு இந்திய வீராங்கனையும் செய்யாத சாதனையாகும். இதேபோன்று சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்சர்களை (70) அடித்த வீராங்கனை என்ற ரிக்கார்டையும் அவர் ஏற்படுத்தியுள்ளார்.

    இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் டி20 உலகக்கோப்பை தொடரில் 13 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தார். இந்த சாதனையையும் ஹர்மன்ப்ரீத் கவுர் (14) முறியடித்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து அனைத்து டி20 உலகக்கோப்பை போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர். மொத்தம் 34 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 500 ரன்களை எடுத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.80 கோடிக்கு எடுத்துள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் மார்ச் 4ஆம் தேதி தொடங்கவுள்ளது.

    • மிதாலி ராஜ் சர்வதேச போட்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
    • மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் நம் இந்திய திருநாட்டின் பெருமையை நிலைநாட்டிய அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுனர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    23 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி மிளிரச் செய்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீராங்கனையுமான மிதாலி ராஜ் சர்வதேச போட்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் நம் இந்திய திருநாட்டின் பெருமையை நிலைநாட்டிய அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கொரோனா கால கட்டத்தில் தெலுங்கானா ராஜ்பவனுடன் இணைந்து புலம்பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவளித்து தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியதை இந்நேரத்தில் நினைவு கூறுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளை தேடித் தந்தவர் என்ற சாதனை படைத்தவர் மிதாலிராஜ்.
    துபாய்:

    பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

    இதில், பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் 738 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறார்.

    தென் ஆப்பிரிக்காவின் லிசல் லீ (761 புள்ளி) முதலிடமும், ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலே (750 புள்ளி) 2-வது இடமும் வகிக்கின்றனர்.

    ஒட்டுமொத்த சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியை சேர்த்து) அதிக ரன்கள் குவித்த இந்தியர்கள் பட்டியலில் மிதாலிராஜ் முதலிடத்தில் உள்ளார் (10 ஆயிரத்துக்கும் மேல்) என்பது குறிப்பிடத்தக்கது.

    இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மிதாலி ராஜூக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விளக்கம் அளித்துள்ளார். #HarmanpreetKaur #MithaliRaj
    வெலிங்டன்:

    வெஸ்ட்இண்டீசில் கடந்த நவம்பர் மாதம் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 36 வயதான மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்படவில்லை. அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து அவரை சேர்க்காதது சர்ச்சையாக உருவெடுத்தது. பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் இந்த நடவடிக்கையால் அணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதுடன் இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்தனர். இதனால் பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. இதேபோல் இந்த ஆட்டத்தில் மிதாலி ராஜ் மீண்டும் ஓரங்கட்டப்பட்டது சர்ச்சையாகவில்லை என்றாலும் டெலிவிஷன் வர்ணனையாளர்கள் அனுபவம் வாய்ந்த மிதாலி ராஜ்க்கு வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தனர்.

    மிதாலி சேர்க்கப்படாதது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அளித்த விளக்கத்தில் ‘இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது வெளிநாட்டு மண்ணில் எங்களுக்கு இந்த 3 ஆட்டங்கள் தான் இருக்கிறது. அதன் பிறகு நாங்கள் அதிகம் இந்திய சூழ்நிலையில் தான் விளையாட இருக்கிறோம். அந்த ஒரு காரணத்துக்காகத் தான் இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளித்தோம்’ என்றார். #HarmanpreetKaur #MithaliRaj

    பெண்கள் உலகக்கோப்பை அரையிறுதியின்போது நடைபெற்ற விவகாரத்தில் மிதாலி ராஜிற்காக நான் வருந்துகிறேன் என்று கவாஸ்கர் தனது கவலையை தெரிவித்துள்ளார். #MithaliRaj
    பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. லீக் சுற்றில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறினார்கள். இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிதாலி ராஜ் அரையிறுதிக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

    மிதாலி ராஜ் அணியில் இடம்பெறாததற்கு கேப்டன்தான் காரணம் என்று கூறப்பட்டது. பின்னர் பயிற்சியாளர் ரமேஷ் பவார் - மிதாலி ராஜ் இடையே ஏற்பட்ட மோதல்தான் காரணம் என்று தெரியவந்தது.

    இந்நிலையில் மிதாலி ராஜிற்காக தான் வருந்துகிறேன் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘நான் மிதாலி ராஜிற்கான வருந்துகிறேன். அவர் சிறந்த வீராங்கனை. கடந்த 20 ஆண்டுகளாக அவர் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்தார். இரண்டு போட்டியிலும் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    அவர் ஒரு போட்டியில் காயம் அடைந்த போதிலும், அடுத்த போட்டிக்கு தகுதி பெற்றார். இதை அப்படியே ஆண்கள் அணியுடன் ஒப்பிட்டு பார்த்தோம் என்றால், விராட் கோலி ஒரு போட்டியில் காயம் அடைந்து, அதன்பின் உடற்தகுதி பெற்று அடுத்த போட்டிக்கு தயாரானா், அவரை நீங்கள் நீக்கி விடுவீர்களா?.



    நாக்அவுட் போட்டியில் நீங்கள் சிறந்த வீரர்களை களம் இறக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த மிதாலி ராஜ் ஆட்டம் அணிக்கு முக்கியமானது. ரமேஷ் பவார் உடன் என்ன நிகழ்ந்தது என்பது குறித்து இங்கிருந்து கருத்து கூறுவது மிகக்கடினம். ஆனார், எந்தவொரு காரணமாக இருந்தாலும் அவரை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    மிதாலி ராஜ் இல்லாத 11 பேர் கொண்ட அணியில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இது சரியான காரணம் என்று என்னால் நினைக்க இயலவில்லை. மிதாலி ராஜ் போன்ற ஒருவரை நீக்கக்கூடாது’’  என்றார்.
    மிதாலிராஜ் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. #MithaliRaj
    வெஸ்ட் இண்டீஸில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலகக்கோப்பை அரைஇறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. இப்போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை.

    இதற்கு பயிற்சியாளர் ரமேஷ்பவார்தான் காரணம் என்று மிதாலிராஜ் குற்றம்சாட்டினார். அவர் தன்னை அவமானப்படுத்தி வேண்டுமென்றே நீக்கினார் என்று கூறினார்.

    இதற்கு பதில் அளித்த ரமேஷ்பவார், மிதாலிராஜ் தன்னை தொடக்க வீராங்கனையாக ஆட அனுமதிக்காவிட்டால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று மிரட்டி நெருக்கடி கொடுத்தார் என்று தெரிவித்தார்.



    இருவரின் இந்த மோதல்போக்கு கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் ரமேஷ் பவாரின் பயிற்சியாளர் பதவியின் காலம் இன்றுடன் முடிவடைகிறது. அவருக்கு பதவி காலம் நீட்டிப்பு வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
    ரமேஷ் பவாரின் குற்றச்சாட்டால் வேதனைக்குள்ளாகி இருக்கும் மிதாலிராஜ் இது எனது வாழ்க்கையின் கருப்பு நாள் என்று கூறியிருக்கிறார். #DarkestDay #MithaliRaj #RameshPowar
    புதுடெல்லி:

    சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரைஇறுதியில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணியில் அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் ஓரங்கட்டப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. பயிற்சியாளர் ரமேஷ் பவார் வேண்டுமென்றே தன்னை நீக்கியதாகவும், பலமுறை அவர் அவமதித்ததாகவும் 35 வயதான மிதாலிராஜ் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்த ரமேஷ் பவார், மிதாலியை நீக்கியது அணியின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என்று கூறினார். மேலும் ‘பயிற்சி ஆட்டங்களில் மிதாலி அதிரடியாக ரன்கள் எடுப்பதில் தடுமாறினார். அவரிடம் 20 ஓவர் கிரிக்கெட்டுக் குரிய உத்வேகமும் இல்லை’ என்பது போன்ற விஷயங்களையும் சுட்டிகாட்டி அறிக்கையை சமர்பித்தார்.



    எல்லாவற்றுக்கும் மேலாக, ‘தொடக்க வீராங்கனையாக ஆட அனுமதிக்காவிட்டால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று மிதாலிராஜ் மிரட்டினார். அத்துடன் பயிற்சியாளருக்கு மிகுந்த நெருக்கடி கொடுக்கிறார். அணியின் நலனை பார்க்காமல் தனிப்பட்ட சாதனை மீதே அவரது நோக்கம் அதிகமாக உள்ளது. 50 ஓவர் போட்டி அணிக்கு கேப்டனாக இருக்கும் அவர் இத்தகைய போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்றும் பவார் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

    ரமேஷ் பவாரின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் மிதாலிராஜ் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு வருமாறு:-

    என்னை பற்றி தவறாக சித்தரித்து இருப்பதால் (பவாரின் கருத்து) மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கிறேன். கிரிக்கெட் மீதான எனது அர்ப்பணிப்பு உணர்வும், தேசத்திற்காக 20 ஆண்டுகள் வியர்வை சிந்தி கடினமாக உழைத்ததும் வீணாகி விட்டது. இன்று, என் தேசப்பற்றை சந்தேகிக்கின்றனர். எனது திறமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. என்னுடைய புகழை அழிக்க முயற்சிக்கிறார்கள். இது, எனது வாழ்க்கையின் கருப்பு நாள். காயப்பட்ட எனக்கு கடவுள் தான் மனவலிமையை கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு மிதாலி அதில் கூறியுள்ளார்.

    இதற்கிடையே மிதாலிராஜிக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ள இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘மிதாலிக்காக நான் வருத்தப்படுகிறேன். இந்திய கிரிக்கெட்டுக்காக 20 ஆண்டு காலம் பங்களிப்பை அளித்துள்ளார். நிறைய ரன்கள் குவித்து இருக்கிறார். 20 ஓவர் உலக கோப்பையில் இரண்டு ஆட்டங்களில் அடுத்தடுத்து அரைசதம் விளாசி ஆட்டநாயகி விருதை பெற்றார். ஒரு ஆட்டத்தின் போது காயமடைந்த அவர் அடுத்த ஆட்டத்திற்குள் குணமடைந்து தயாராகி விட்டார். ஆனாலும் அரைஇறுதிப்போட்டியில் அவரை சேர்க்கவில்லை. இதே சூழலை அப்படியே ஆண்கள் கிரிக்கெட்டுக்கு கொண்டு வந்து பாருங்கள். விராட் கோலி ஒரு ஆட்டத்தில் காயமடைந்து, அடுத்து நாக்-அவுட் சுற்றுக்கு அவர் உடல்தகுதியுடன் இருக்கும் போது அவரை சேர்க்காமல் விட்டு விடுவார்களா?

    எப்போதும் நாக்-அவுட் சுற்று ஆட்டங்களுக்கு சிறந்த ஆட்டக்காரர்களை தேர்வு செய்ய வேண்டும். இத்தகைய ஆட்டங்களில் மிதாலிராஜ் போன்ற வீராங்கனையின் அனுபவம் அவசியமாகும். எந்த காரணம் சொன்னாலும் மிதாலியை நீக்கியது தவறு தான்.’ என்றார். #DarkestDay #MithaliRaj #RameshPowar
    மிதாலிராஜ் நீக்கப்பட்டது தொடர்பாக பயிற்சியாளர் ரமேஷ் பவார் மும்பையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரிம் ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தார். #MitaliRaj #RameshPowar #BCCI
    மும்பை:

    வெஸ்ட் இண்டீசில் சமீபத்தில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னை பலமுறை அவமதித்து உதாசீனப்படுத்தியதாகவும், இதனால் மனம் உடைந்து கண்ணீர் சிந்தியதாகவும் மூத்த வீராங்கனை மிதாலிராஜ் பரபரப்பான புகார்களை தெரிவித்தார்.

    இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் தன்னை வேண்டுமென்றே அவர் நீக்கியதாகவும் கூறினார். இதனால் சிக்கலுக்குள்ளான பயிற்சியாளர் ரமேஷ் பவார் மும்பையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரிம் (கிரிக்கெட் ஆபரேட்டிங்) ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது தொழில்முறை ரீதியாக எங்களுக்கு இடையே நெருக்கமான உறவு இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். மிதாலிராஜ் எப்போதும் மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருந்ததால் அவரை கையாளுவது கடினமாக இருந்தது என்றும் பவார் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அவரது சந்திப்பு குறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-



    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணியை மாற்றமின்றி அப்படியே இறக்க வேண்டும் என்று முடிவு மேற்கொண்டோம். மேலும் அதிரடியாக ஆடுவதில் மிதாலியின் ‘ஸ்டிரைக்ரேட்’ மோசமாக இருந்தது. இதன் காரணமாகவே அவரை அரைஇறுதி ஆட்டத்தில் சேர்க்கவில்லை. மற்றபடி அவர் மீது எந்த வித பாகுபாடும் காட்டவில்லை என்று பவார் கூறியுள்ளார். மிதாலியை நீக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் யாரும் நெருக்கடி கொடுத்தார்களா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இல்லை என்று பதில் அளித்தார். அதே சமயம் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரமிக்க பதவியில் உள்ள ஒரு நபர், அணியின் மேலாளர் (திருப்தி பட்டாச்சார்யா) மற்றும் தேர்வாளர் (சுதா ஷா) ஆகியோருடன் தொடர்பில் இருந்தார் என்றும் கூறினார். இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பயிற்சியாளர் ரமேஷ் பவரால் பலமுறை அவமதிக்கப்பட்டதாக இந்திய வீராங்கனை மிதாலிராஜ் கூறியுள்ளார். #MithaliRaj #Coach #RameshPower #WorldT20
    புதுடெல்லி:

    சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரைஇறுதியுடன் வெளியேறியது. இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் இந்திய அணி 112 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

    லீக் சுற்றில் இரண்டு அரைசதங்கள் அடித்த இந்திய மூத்த வீராங்கனை மிதாலிராஜ், முக்கியமான இந்த ஆட்டத்தில் சேர்க்கப்படவில்லை. காயத்தில் இருந்து குணமடைந்த போதிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியது. அணியின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விளக்கம் அளித்தார். ‘ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வது குறித்து அணி நிர்வாகம் (கேப்டன், துணை கேப்டன், பயிற்சியாளர், தேர்வாளர்) எடுக்கும் முடிவில் நாங்கள் தலையிட முடியாது. விளையாட்டில் இது போன்று நடப்பது சகஜம்’ என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி கூறியிருந்தார்.



    இந்த நிலையில் 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரிய 35 வயதான மிதாலிராஜ், தனது தரப்பு விளக்கத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி மற்றும் பொது மேலாளர் (கிரிக்கெட் ஆபரேட்டிங்) சபாகரிம் ஆகியோருக்கு இ-மெயில் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இதில் மிதாலிராஜ் கூறியிருப்பதாவது:-

    எனது 20 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படியொரு மனவேதனையையும், அவமதிப்புகளையும் இதற்கு முன்பு சந்தித்ததில்லை. தேசத்திற்காக நான் ஆற்றும் சேவையையும், எனது புகழ் மற்றும் நம்பிக்கையையும் அதிகாரத்தில் உள்ள சிலர் சீர்குலைக்க முயற்சிக்கிறார்களோ? என்று நினைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

    இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி மற்றும் அவர் வகிக்கும் பொறுப்பு மீது எனக்கு எப்போதும் மிகுந்த மதிப்பு உண்டு. அவர் எனக்கு எதிராக தனது பதவியை பயன்படுத்துவார் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. அரைஇறுதி போட்டியில் என்னை வெளியே உட்கார வைத்த முடிவுக்கு அவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது வேதனை அளிக்கிறது. இத்தனைக்கும் நடந்த சம்பவம் குறித்து அவரிடம் நான் முன்பே பேசி இருக்கிறேன். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்ற எல்லா உண்மையும் அவருக்கு தெரியும்.

    நான் இந்த மாதிரி ‘இ-மெயில்’ அனுப்புவதால் நான் மேலும் பாதிப்புக்குள்ளாகலாம் என்பதை அறிவேன். ஏனெனில் அவர் அதிகாரம் கொண்ட கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியின் உறுப்பினர். நானோ சாதாரண ஒரு வீராங்கனை.

    நான் எப்போதும் கிரிக்கெட் வாரியத்தின் நடைமுறைகளை சரியாக கடைபிடிப்பவள். அதனால் தான் வெஸ்ட் இண்டீசில் இருந்த போது இந்த விஷயம் பற்றி ஊடகத்தினரிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனது விவகாரத்தை கிரிக்கெட் வாரியம் நியாயமாக கையாளும் என்று நம்பினேன். ஆனால் அணியில் இருந்து ஓரங்கட்டிய முடிவுக்கு கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர் ஆதரவு தெரிவித்ததன் மூலம் அவர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதும், எனக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதும் தெளிவாக தெரிகிறது.

    அரைஇறுதி ஆட்டத்தில் என்னை நீக்க பயிற்சியாளர் எடுத்த முடிவுக்கு ஆதரவு தந்ததை தவிர்த்து, இந்திய 20 ஓவர் போட்டி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத்சிங் மீது எனக்கு எந்த மனக்கசப்பும் கிடையாது. இந்த உலக கோப்பையை இந்தியாவுக்காக வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். அந்த பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது தான் வேதனையிலும் வேதனை. எங்களுக்குள் எந்த பிரச்சினைகள் எழுந்தாலும் அதை நானும், ஹர்மன்பிரீத் கவுரும் பேசி தீர்த்துக் கொள்ள முடியும். இந்திய 50 ஓவர் அணிக்கு நான் கேப்டனாக இருக்கிறேன். ஒரு நாள் போட்டி அணிக்கு அவர் எவ்வளவு அவசியம் என்பதை அறிவேன். உலகின் சிறந்த வீராங்கனைகளில் அவரும் ஒருவர்.

    எல்லா சர்ச்சைகளுக்கும் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவார் தான் காரணம். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் காலடி எடுத்து வைத்ததுமே பிரச்சினைகளும் உருவெடுத்து விட்டன. அவரது நடத்தைகள் எனக்கு எதிராகவே அமைந்தன. என் மீது பாகுபாடு காட்ட ஆரம்பித்தார்.

    உலக கோப்பை போட்டிக்கு முந்தைய தொடர்களிலும், உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்களிலும் நான் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடினேன். ஆனால் உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்திற்கு முந்தைய நாள், ‘பேட்டிங்கில் நடுவரிசையை வலுப்படுத்த வேண்டி உள்ளது. அதனால் நீ பின்வரிசையில் இறங்க வேண்டும்’ என்று பயிற்சியாளர் ரமேஷ் பவார் என்னிடம் கூறினார். அணியின் நலன் கருதி நானும் ஏற்றுக்கொண்டேன். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க ஜோடி சொதப்பியது. பவர்பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்களை மட்டுமே எடுத்தோம். ஆனாலும் தொடக்க ஜோடியை வெகுவாக பாராட்டியதோடு, அடுத்த ஆட்டத்திலும் (பாகிஸ்தானுக்கு எதிராக) அதே ஜோடியே தொடக்க வீராங்கனைகளாக விளையாடுவார்கள் என்று சொன்னார். இதை கேட்டு நான் அதிர்ச்சிக்குள்ளானேன். பாகிஸ்தானுக்கு எதிராக மிடில்வரிசையை பலப்படுத்த வேண்டிய தேவை இல்லை. அத்துடன் அந்த அணிக்கு எதிராக நான் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது உண்டு. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமையும் இருந்தது. அதனால் இது பற்றி தேர்வாளர்களிடம் பேசினேன். அவர்களது தலையீட்டின் பேரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீராங்கனையாக ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகியாக தேர்வானேன். ஆனால் ரமேஷ் பவார் என்னை ஊக்கப்படுத்தி ஒரு வார்த்தை கூட பாராட்டவில்லை. அதன் பிறகு அவரது நடவடிக்கை எனக்கு எதிராக முற்றிலும் திரும்பியது.

    உதாரணமாக வலை பயிற்சிக்கு அவர் வரும் போது நான் பேச முயற்சித்தால், உடனே அவர் செல்போனை பார்ப்பது போல் அங்கிருந்து சென்று விடுவார். நான் அருகில் உட்கார்ந்து இருந்தாலும் என்னை உதாசீனப்படுத்தும் வகையில், மற்றவர்களின் பயிற்சியை மட்டும் கவனிப்பது போல் செயல்படுவார். இத்தகைய அவமதிப்புகளால் மனம் காயப்பட்டது. ஆனாலும் நிதானத்தை இழக்கவில்லை. இது போன்ற பிரச்சினைகளால் அணியின் முன்னேற்றத்துக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்று கருதி அணியின் மேலாளரிடம் எனது வேதனைகளை கொட்டி தீர்த்தேன். மேலாளர், அணி வீராங்கனைகளின் கூட்டத்தின் போது இது பற்றி பேசினார். அப்போது ரமேஷ் பவார் சில விஷயங்களில் தவறு செய்ததை ஒப்புக் கொண்டார். நானும், அயர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இளம் வீராங்கனைகளை தொடக்க ஜோடியாக அனுப்பினால் தான் சரியாக இருக்கும் என்று நினைத்தால், அப்படியே செய்யுங்கள் என்று கூறினேன். இத்துடன் எங்களுக்குள் உள்ள கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வந்து விட்டதாக நம்பினேன்.

    ஆனால் அதற்கு பிறகு அவரது நடவடிக்கை மேலும் மோசமானது. என்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. அவரிடம் ஏதாவது யோசனை கேட்க முயற்சித்தால் உடனே வேறு பக்கம் திரும்பி தொடர்ந்து என்னை வெறுப்பேற்றும்படி நடந்து கொண்டார். இந்த சூழலில் அயர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடினமான ஆடுகளத்தில் களம் கண்டு அரைசதம் விளாசி மறுபடியும் ஆட்டநாயகி விருதை பெற்றேன். துரதிர்ஷ்டவசமாக பீல்டிங்கின் போது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. காய்ச்சலும் வந்து விட்டது. உடல்நிலை சரியாக சில நாட்கள் ஓய்வு தேவை என்று அணியின் உடல்தகுதி நிபுணர் அறிவுறுத்தினார்.

    இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ஆட முடியாமல் போனது. போட்டியை பார்க்க மைதானத்திற்கு வரக்கூடாது என்று ரமேஷ் பவார் திடீரென கட்டளையிட்டார். மிகப்பெரிய ஆட்டங்களில் ஒன்றில் இந்தியா விளையாடும் போது அணி வீராங்கனைகளுடன் நான் இருக்கக்கூடாது என்று சொன்னதும் திகைப்புக்குள்ளானேன். உடனடியாக அணி மேலாளரிடம் பேசினேன். ‘காயம் பயப்படும்படி இல்லை, உடல்நிலை தான் கொஞ்சம் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்’ என்று சொன்னேன். இதையடுத்து மேலாளர், நான் மைதானத்திற்கு செல்ல ஒப்புக் கொண்டார். அடுத்த சில நிமிடங்களில் ரமேஷ் பவாரிடம் இருந்து செல்போனில் ஒரு தகவல் வந்தது. வீராங்கனைகளுக்குரிய அறையை விட்டு வெளியே வரக்கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவரது நடவடிக்கை எல்லாமே வினோதமாகவே இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற பின்னர், மைதானத்தில் வீராங்கனைகள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு வரும்படி அழைப்பு வந்தது. நானும் வீராங்கனைகளுடன் இணைந்து வெற்றியை கொண்டாடினேன். இருப்பினும் போட்டி நடந்து கொண்டிருந்த போது அறையிலேயே முடங்கி கிடந்தது, ஏதோ சிறைபிடிக்கப்பட்டு போல தவித்தேன்.

    அரைஇறுதி சுற்றை எட்டிய பிறகு 3 நாட்கள் இடைவெளி இருந்தது. முதல் நாளில் யாரும் வலை பயிற்சியில் ஈடுபடவில்லை. பீல்டிங் பயிற்சி மட்டுமே நடந்தது. ஆனால் ரமேஷ் பவார் 5 வீராங்கனைகளுக்கு மட்டும் கூடுதல் பயிற்சி அளித்தார். இதை கேள்விப்பட்டு நான், ‘இரண்டு நாட்களாக பேட்டிங் பயிற்சி எதுவும் செய்யவில்லை. அதனால் நானும் கூடுதல் பயிற்சியில் இணைகிறேன்’ என்று பவாருக்கு செல்போனில் தகவல் அனுப்பினேன். அதற்கு அவரிடம் இருந்து பதில் இல்லை. மறுநாள் அவர் பின்வரிசையில் உள்ள வீராங்கனைகளுடன் சேர்த்து என்னை பேட்டிங் பயிற்சி செய்ய வைத்தார். இதில் இருந்தே அரைஇறுதியில் நான் விளையாடுவதில் அவருக்கு விருப்பம் இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.

    வழக்கமாக போட்டிக்கு முந்தைய நாளோ அல்லது போட்டி நாள் அன்றோ ஆடும் லெவன் அணியை அறிவிப்பார். ஆனால் அரைஇறுதியில் போட்டி நாள் அன்று காலையிலேயோ அல்லது மாலையிலேயோ அணி குறித்து அவர் வாய் திறக்கவில்லை. இரவில் அரைஇறுதியில் ஆடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். ‘டாஸ்’ போடுவதற்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மைதானத்திற்குள் நுழைந்த போது, என்னை நோக்கி ஓடி வந்தார். ‘கடைசி லீக்கில் ஆடிய அதே அணியுடன்தான் விளையாடப்போகிறோம்’ என்று கூறினார். அப்போது தான் அணியில் எனக்கு இடம் இல்லை என்பது தெரிந்தது. ஆடும் லெவன் அணியினர் தவிர மற்ற யாரும் வீராங்கனைகளின் பகுதியில் இருக்கக்கூடாது என்று சொன்ன போது மேலும் நொந்து போனேன். எனது அழுகையை அடக்க முடியவில்லை. கண்ணீர் சிந்தினேன். இவ்வளவு ஆண்டுகள் அளித்த பங்களிப்புக்கு என்ன மதிப்பு? என்று நினைக்கத்தோன்றியது.

    ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனாக இதுவரை எனது சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன். உங்களிடம் இருந்து நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். மீடியாக்களிடம் பேசக்கூடாது என்று சொன்னதால் தான் இ-மெயில் மூலம் நடந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    இவ்வாறு மிதாலி ராஜ் அதில் கூறியுள்ளார். #MithaliRaj #Coach #RameshPower #WorldT20 
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜை நீக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் எடுத்த முடிவை கேள்வி கேட்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி தெரிவித்தார். #MithaliRaj #DianaEdulji
    புதுடெல்லி:

    ‘20 ஓவர் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் ஆடும் லெவனில் இருந்து மிதாலி ராஜை நீக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் எடுத்த முடிவை கேள்வி கேட்க முடியாது’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி தெரிவித்தார்.

    வெஸ்ட்இண்டீசில் நடந்த 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது.



    லீக் ஆட்டங்களில் கம்பீரமாக செயல்பட்ட இந்திய அணி அரைஇறுதி ஆட்டத்தில் மோசமாக ஆடியது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் அரைசதம் அடித்த முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் உடல் தகுதியுடன் இருந்தும் முக்கியமான அரைஇறுதி ஆட்டத்தில் ஆடும் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.

    ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றோம். அந்த வெற்றி கூட்டணியை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்ததால் மிதாலி ராஜ்க்கு இடம் கிடைக்கவில்லை. எல்லா முடிவும் அணியின் நலனுக்காகவே எடுக்கப்படுகிறது. இதில் வருத்தப்பட எதுவுமில்லை’ என்று மிதாலி ராஜ் நீக்கம் குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விளக்கம் அளித்தார்.

    இதைத்தொடர்ந்து மிதாலி ராஜ் மேலாளர் அனிஷா குப்தா, ஹர்மன்பிரீத் கவுரை கடுமையாக சாடினார். இதனால் இந்த பிரச்சினை மேலும் வலுத்தது.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினரும், இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டனுமான டயானா எடுல்ஜி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி கண்ட அணியில் மாற்றம் செய்ய வேண்டாம் என்று இந்திய அணி நிர்வாகம் (கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பயிற்சியாளர் ரமேஷ் பவார், துணை கேப்டன் மந்தனா, தேர்வாளர் சுதாஷா) எடுத்த முடிவு பிரச்சினைக்கு உள்ளாகி இருக்கிறது. அந்த அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தால் அந்த முடிவு குறித்து யாரும் கேள்வி கேட்டு இருக்கமாட்டார்கள். ஆடும் லெவன் குறித்து அணி நிர்வாகம் எடுக்கும் முடிவை நாங்கள் கேள்வி கேட்க முடியாது. உதாரணமாக சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய வீரர் குருணல் பாண்ட்யா விக்கெட் எடுக்காமல் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தார். ஆனால் கடைசி 20 ஓவர் போட்டியில் அவர் வலுவாக மீண்டு வந்து விக்கெட்டுகள் சாய்த்தார். விளையாட்டில் இது போன்ற விஷயங்கள் நடக்க தான் செய்யும்.

    என்னை பொறுத்தமட்டில் அன்று இந்திய அணிக்கு மோசமான நாளாகும். நமது பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. இங்கிலாந்து அணி நன்றாக செயல்பட்டு இலக்கை சேசிங் செய்தது. பனிப்பொழிவு நமது பந்து வீச்சாளர்களுக்கு சிரமமாக அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் எதிர்பார்ப்புக்கு மாறாக நமது அணி பெரிய வெற்றியை ஈட்டியது. அரைஇறுதியில் ஏற்பட்ட தோல்வியை மறந்து அடுத்து வரும் நியூசிலாந்து தொடர் குறித்து வீராங்கனைகள் கவனம் செலுத்த வேண்டும். மிதாலி ராஜ் விவகாரம் குறித்து விவாதிக்க இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டம் நடத்தும் திட்டம் எதுவுமில்லை. அணி தேர்வு விஷயத்தில் நிர்வாக கமிட்டி தலையிட வேண்டிய அவசியமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் நேற்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரீம் ஆகியோரை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்ததாக கூறப்படுகிறது. #MithaliRaj #DianaEdulji
    மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் மிதாலி ராஜ் நீக்கப்பட்டது போல, தன்னையும் நீக்கியதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். #SouravGanguly #MithaliRaj

    கடந்த சில வாரங்களாக மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில், இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    இதில் பங்குபெற்ற இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து பரிதாபமாக வெளியேறியது. இந்தப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான மிதாலி ராஜை அணியில் சேர்க்காதது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மிதாலியின் மேனேஜரும், "இந்திய கேப்டன் பிரீத் கவூரை கேப்டன் பதவிக்கு தகுதியற்றவர்" என்று விமர்சித்தார். இந்நிலையில், இந்திய ஆண்கள் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இது குறித்த தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

    "உலகின் தலைசிறந்தவர்கள் சில நேரங்களில் இதனை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் " என்று கூறினார். மேலும் "நான் கேப்டனாக இருந்து பின்னர் அணியில் வீரராக தொடர்ந்த போதும் இது இருந்தது. நான் அணியிலிருந்து நீக்கப்பட்டேன். இப்போது மிதாலியை பார்க்கும்போது, அதேதான் தோன்றுகிறது. வெல்கம் டு த குரூப் மிதாலி" என்று கூறியுள்ளார்.



    ‘மிதாலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள். வாய்ப்பு தானாக வரும். அதனால் மிதாலியின் நீக்கத்துக்கு நான் வருந்தவில்லை. ஆனால் இந்தியா இவ்வளவு தூரம் உலகக் கோப்பையில் தோற்காமல் வந்து, கோப்பையை நூலிழையில் தோற்றதுக்கு வருந்துகிறேன்" என்றும் கங்குலி கூறியுள்ளார்.

    கிரேக் சேப்பல் காலத்தில் ஒருநாள் போட்டியின் சிறந்த வீரராக விளங்கிய கங்குலி 15 மாதங்கள் அணியில் இடம்பெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. #SouravGanguly #MithaliRaj
    மிதாலி ராஜ் நீக்கப்பட்ட விவாகரம் குறித்து கேப்டன் பிரீத்கவூர், மிதாலிராஜ், பயிற்சியாளர் ரமேஷ்பவார், ஆகியோருக்கு சம்மன் அனுப்ப கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. #MithaliRaj #HarmanpreetKaur
    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீசில் நடந்த மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்திடம் தோற்றது.

    ‘லீக்’ போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய மகளிர் அணி அரை இறுதியில் மோசமாக ஆடியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

    மிகவும் முக்கியமான ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் நீக்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. 2 அரை சதம் அடித்த பிறகு அவர் காயத்தில் இருந்து குணமடைந்தார். அப்படி இருந்தும் அவர் அரைஇறுதியில் சேர்க்கப்படாதது பூதாகரமானது.

    இதற்கு கேப்டன் ஹர்மித் கவூர் விளக்கம் அளித்து இருந்தார். அவர் கூறும்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றோம். அந்த கூட்டணியை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்ததால் மிதாலி ராஜூக்கு இடம் கிடைக்கவில்லை. எந்த முடிவும் அணியின் நலனுக்காகவே எடுக்கப்பட்டது என்றார்.

    ஆனால் மிதாலிராஜ் பயிற்சியாளர், ஹர்மன்பிரித் கவூரை கடுமையாக சாடினார். கவூர் சூழ்ச்சியாக செயல்படுகிறார். அவர் பொய் சொல்கிறார். கேப்டன் பதவிக்கு தகுதியற்றவர் என்று கூறி இருந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு விசாரணை நடந்த முடிவு செய்து உள்ளது.

    இதுபற்றி விளக்கம் அளிக்க கேப்டன் பிரீத்கவூர், மிதாலிராஜ், பயிற்சியாளர் ரமேஷ்பவார், மானேஜர் திருப்தி பட்டாச்சார்யா ஆகியோருக்கு சம்மன் அனுப்ப இருக்கிறது. அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத்ராய் கூறும்போது, “வீராங்கனைகளின் பயிற்சியாளர்கள் வெறுப்பூட்டும் கருத்துக்களை தேவையில்லாமல் தெரிவிக்கக்கூடாது. அணியில் உள்ள அனைவரும் கண்ணியத்தை காக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். #MithaliRaj #HarmanpreetKaur
    ×