என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மிரிதி மந்தனா"

    • இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
    • உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

    உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    உலகக் கோப்பையை வென்றது தொடர்பாக இந்நாள் மற்றும் முன்னாள் வீராங்கனைகள் பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், உலகக் கோப்பை வென்றது தொடர்பாக தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி கூறியதாவது:

    இந்த உலகக் கோப்பைக்கு முன் எனக்காக அதைச் செய்வதாக அவர்கள் எனக்கு உறுதியளித்தார்கள்.

    2022-ம் ஆண்டு நாங்கள் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியவில்லை. அதன்பிறகு, ஹர்மனும் ஸ்மிருதியும் நள்ளிரவில் என் அறைக்கு வந்து, 'அடுத்த உலகக் கோப்பையில் நீங்கள் இருப்பீர்களா என எங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களுக்காக அந்தக் கோப்பையை நாங்கள் வெல்வோம் என சொன்னார்கள். இறுதியாக, அவர்கள் அதைச் செய்தார்கள், அதனால்தான் நாங்கள் அனைவரும் இப்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.

    • சமூக வலைத்தளத்தில் இருவரும் அடிக்கடி படங்கனை பரிமாறிக் கொண்டனர்.
    • விரைவில் இந்தூர் மருமகளாகப் போகிறார் என இசையமைப்பாளர தெரிவித்துள்ளார்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா. 29 வயதான இவர் தற்போது நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவர், துணைக் கேப்டனாக உள்ளார்.

    இவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மியூசிக் டைரக்டர் பலாஷ் முச்சல் உறுதிப்படுத்தியுள்ளார்.

    பி.டி.ஐ. நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் "ஸ்மிரிதி மந்தனா விரைவில் இந்தூர் மருமகளாக இருக்கிறார். இவ்வளவுதான் சொல்ல முடியும். நான் உங்களுக்கு தலைப்புச் செய்தி கொடுத்துவிட்டேன்" எனத் தெரிவித்துள்ளார். ஆனால், திருமணம் எங்கு நடைபெறும், எப்போதும் நடைபெறும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

    சமீப காலமாக இருவரும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் படங்கனை பகிர்ந்து கொண்டனர். இதனால் இருவருடைய தொடர்பு குறித்து வதந்தி பரவி வந்தது. இந்த நிலையில், பலாஷ் முச்சல் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

    பலாஷ் முச்சல் தனது சசோதரி பலாக் முச்சல் உடல் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    • ஒரே வருடத்தில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
    • 58 ரன்கள் எடுத்தபோது, 5 ஆயிரம் ரன்களை கடந்தார்.

    மகளிர் உலக கோப்பை தொடரில் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியாவின் பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்மிரிதி மந்தனா 66 பந்தில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்தியா 24.3 ஓவரில் 155 ரன்கள் குவித்துள்ளது.

    ஸ்மிரிதி மந்தனா 58 ரன்களை கடக்கும்போது, ஒருநாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை தொட்டார். இதன்மூலம் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை தொட்ட வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த வருடத்தில் மட்டும் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதன்மூலம் ஒரு காலண்டர் வருடத்தில் ஆயிரம் ரன்களை கடந்த முதல்  வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    112 போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.

    • ஸ்மிரிதி மந்தனா 125 ரன் விளாசினார்.
    • ஒரு கட்டத்தில் 46 பந்தில் 59 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

    இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவித்தது. பின்னர் 413 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹல்ரின் தியோல் 11 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு ஸ்மிரிதி மந்தனா உடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஸ்மிரிதி மந்தனா புயல் வேகத்தில் ஆடினார். 28 பந்தில் அரைசதம் அடித்த அவர், 50 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். மறுமுனையில் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் அடித்தார்.

    தொடர்ந்து விளையாடி ஹர்மன்ப்ரீத் கவுர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்மிரிதி மந்தனா 125 ரன்னில் வெளியேறினார். அதன்பின் தீப்தி ஷர்மா நேர்த்தியாக விளையாடினார். அதன்பின் வந்த ரிச்சா கோஷ் (6), ராதா யாதவ் (18), அருந்ததி ரெட்டி (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனால் இந்தியா 289 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்தது. 8ஆவது விக்கெட்டுக்கு தீப்தி ஷர்மா உடன், ஷே்னே ராணா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கையுடன் விளையாடியது. இதனால் இந்தியா இலக்கை நோக்கி முன்னேறியது. இந்தியா 42.2 ஓவரில் 354 ரன்கள் எடுத்திருந்தது. 46 பந்தில் 59 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 42.3 ஆவது ஓவரில் தீப்தி ஷர்மா 58 பந்தில் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் இந்தியாவின் நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. ராணா 46ஆவது ஓவரில் 35 ரன்னில் ஆட்டமிழக்க, இந்தியா 47 ஓவரில் 369 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது, இதனால் ஆஸ்திரேலியா 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.

    • 28 பந்தில் அரைசதம் அடித்த ஸ்மிரிதி மந்தனா 50 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.
    • ஆஸ்திரேலியாவின் லேனிங் 2012ஆம் ஆண்டு 45 பந்தில் சதம் அடித்திருந்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவித்தது. பின்னர் 413 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹல்ரின் தியோல் 11 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு ஸ்மிரிதி மந்தனா உடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஸ்மிரிதி மந்தனா புயல் வேகத்தில் ஆடினார். 28 பந்தில் அரைசதம் அடித்த அவர், 50 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.

    இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த முதல் இந்திய பேட்டர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், சர்வதேச அளவில் 2ஆவது பேட்டர் என்ற பெருமையை பெற்றார். ஆஸ்திரேலியாவின் லேனிங் 2012ஆம் ஆண்டு 45 பந்தில் சதம் அடித்திருந்தார்.

    அத்துடன் 13 சதங்களுடன், பெண்கள் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசி பேட்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியின் ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசினார்.
    • அவர் 91 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவரில் 292 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசி அசத்தினார்.

    அவர் 77 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 91 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மந்தனாவின் 3-வது ஒருநாள் சதமாகும்.

    இந்த போட்டியில் சதம் அடித்ததன் பல சாதனைகளை மந்தனா படைத்துள்ளார். இது இந்த ஆண்டு மந்தனாவின் 3-வது சதம் ஆகும். மேலும் இரண்டு வெவ்வேறு காலண்டர் ஆண்டுகளில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்கள் அடித்த உலகின் முதல் வீராங்கை என்ற சாதனையை மந்தனா படைத்துள்ளார். 2024-ம் ஆண்டில் அவர் நான்கு சதங்களையும் அடித்திருந்தார்.

    அடுத்ததாக மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் விளாசியவர் என்ற சாதனையை ஸ்மிரிதி மந்தனா படைத்துள்ளார். ஸ்மிரிதி மந்தனா 15 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். 8 சதங்களுடன் மிதாலி ராஜ் ஹர்மன்ப்ரீத் கவுர் 2-வது இடத்தில் உள்ளனர். மேலும் ஆசிய நாடுகளில் அதிக சதங்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    ஸ்மிரிதி மந்தனா, ஒருநாள் போட்டியில் 12 சதங்களும், டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்களையும், டி20 போட்டிகளில் ஒரு சதத்தையும் அடித்துள்ளார்.

    இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் மந்தனா உள்ளார். முதல் இடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங் உள்ளார்.

    அதிக சதம் அடித்த வீராங்கனைகள்:-

    மெக் லானிங் - 17 சதங்கள்

    ஸ்மிருதி மந்தனா - 15 சதங்கள்

    சுசி பேட்ஸ் - 14 சதங்கள்

    டாமி பியூமண்ட் - 14 சதங்கள்

    சார்லோட் எட்வர்ட்ஸ் - 13 சதங்கள்

    மேலும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் மந்தனா 2-வது இடத்தில் உள்ளார்.

    மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியல்:-

    சூசி பேட்ஸ் - 12 சதங்கள்

    ஸ்மிருதி மந்தனா- 12 சதங்கள்

    டாமி பியூமாண்ட் - 12 சதங்கள்

    • 45 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
    • 77 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 2ஆவது போட்டி இன்று நியூ சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஆனால் ஸ்மிரி மந்தனா சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். 45 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்த நிலையில், 77 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 91 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வயிடைந்தது. 3ஆவது மற்றும் கடைசி போட்டி 20ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது.

    • 771 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேற்றம்.
    • ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா, ஐசிசி-யின் டி20 பேட்டர்ஸ் தரவரிசையில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிராக 62 பந்தில் 112 ரன்கள் விளாசி, இந்தியா 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக இருந்தார். இதன்மூலம் 771 புள்ளிகள் பெற்று 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 794 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீசின் ஹேலே மேத்யூஸ் 774 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.

    ஷபாலி வர்மா 13ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், ஹர்லீன் தியோல் 86ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    ஸ்மிரிதி மந்தனா ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 20 ஓவர் போட்டிகளில் ஒரே ஆண்டில் 68 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
    • இந்த ஆண்டில் இரு சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்களுடன், யாதவ் சிறந்த 20 ஓவர் பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.

    துபாய்:

    ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 2022 இல் முன்மாதிரியாக இருந்த வீரர்களான சிக்கந்தர் ராசா, சாம் குர்ரான் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருடன் பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்திய வீரர் சூர்யகுமார் மட்டுமே.

    சூர்யகுமார் யாதவ், 2022 ஆம் ஆண்டு ஆட்டத்தின் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரே வருடத்தில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் ஆவார். அவர் 187.43 என்ற அபத்தமான ஸ்டிரைக் ரேட்டில் 1164 ரன்களை எடுத்து, அதிக ரன் எடுத்தவராக இந்த ஆண்டை முடித்தார்.

    டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் 68 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டில் இரு சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்களுடன், யாதவ் சிறந்த 20 ஓவர் பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.

    கடந்த ஆண்டு ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை பெற்ற மந்தனா, குறுகிய வடிவிலான நிலைத்தன்மையை வெளிப்படுத்தினார்.

    இந்திய வீராங்கனைகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீராங்கனையாக மந்தனா திகழ்கிறார். (வெறும் 23 பந்துகளில்) அடித்து டி20களில் 2500 ரன்களை கடந்ததுள்ளார்.

    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசினார்.
    • மிதாலி ராஜ் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஏழு சதம், 64 அரைசதங்கள் அடித்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசினார். இது அவரின் 6-வது ஒருநாள் சதம் ஆகும்.

    இந்த நிலையில் இன்று 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியிலும் சதம் விளாசினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் விளாசிய இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் சாதனையை சமன் செய்துள்ளார்.

    மிதாலி ராஜ் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஏழு சதம், 64 அரைசதங்கள் அடித்துள்ளார். 27 வயதான ஸ்மிரிதி மந்தனா 84 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் ஏழு சதங்கள் அடித்துள்ளார். இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டனான ஸ்மிரிதி மந்தனா 27 அரைசதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்மிரி மந்தனா, ஷபாலி வர்மா ஆகிய இருவரும் சதம் விளாசினர்.
    • இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் குவித்தது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- ஸ்மிரிதி மந்தனா ஆகியோம் களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி சதம் விளாசினர். இந்தியா 292 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஸ்மிரிதி மந்தனா 161 பந்தில் 149 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இதற்கு முன்னதாக பெண்கள் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்கு 250 ரன்களுக்கு மேல் அடித்தது கிடையாது. தற்போது 292 ரன்கள் விளாசி மந்தனா- ஷபாலி வர்மா ஜோடி சாதனைப் படைத்துள்ளது. இதன்மூலம் 90 வருட பெண்கள் கிரிக்கெட்டில் அரிய சாதனையை படைத்துள்ளது.

    ஷபாலி வர்மா 150 ரன்களை கடந்து விளையாடி வருகிறார். 65 ஓவர் முடிந்த நிலையில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 365 ரன்கள் குவித்துள்ளது. ஷபாலி வர்மா 175 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • அடுத்து ஆடிய இந்தியா அதிரடியாக ஆடி வெற்றி பெற்றது.

    தம்புல்லா:

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புல்லாவில் இன்று தொடங்கியது. இன்று இரவு நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், ரேணுகா தாகூர் சிங், பூஜா வஸ்த்ராகர், ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 109 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர்.

    முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் குவித்த நிலையில் ஸ்மிரிதி மந்தனா 45 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ஷபாலி வர்மா 40 ரன்னில் வெளியேறினார். ஹேமலதா 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், நடப்பு தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    ×