என் மலர்
நீங்கள் தேடியது "Women world cup"
- மகளிர் உலக கோப்பையில் 2 சதங்களுடன் 571 ரன்கள் குவித்தார்.
- ஸ்மிரிதி மந்தனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்து தென்ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. அந்த அணியின் கேப்டனும், தொடக்க பேட்டருமான லாரா வால்வார்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராகவும், இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராகவும் சதம் அடித்தார். ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் 9 இன்னிங்சில் 571 ரன்கள் குவித்தார். இதில் 2 சதங்கள், 3 அரைசதங்கள் அடங்கும்.
இதன்மூலம் மகளிருக்கான ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் முன்னேறியுள்ளார். ஏற்கனவே முதல் இடம் பிடித்திருந்த ஸ்மிரிதி மந்தனா 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். லாரா வால்வார்த் 814 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார். ஸ்மிரிதி மந்தனா 811 புள்ளிகள் பெற்றுள்ளார்.
உலக கோப்பையில் ஸ்மிரிதி மந்தனா 9 போட்டிகளில் 1 சதம், 2 அரைசதங்களடன் 434 ரன்கள் விளாசியிருந்தார்.
- முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 319 ரன்கள் குவித்தது.
- இங்கிலாந்து 194 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது.
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் மகளிர் உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இதில் புள்ளிகள் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்த தென்ஆப்பிரிக்கா- 3ஆம் இடம் பிடித்த இங்கிலாந்து பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க பேட்டராக களம் இறங்கிய கேப்டன் லாரா வால்வார்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 143 பந்தில் 20 பவுண்டரி, 4 சிக்சருடன் 169 ரன்கள் குவித்தார்.
மற்றொரு தொடக்க பேட்டர் தஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்கள் சேர்த்தார். காப் 33 பந்தில் 42 ரன்களும், ட்ரைசன் ஆட்டமிழக்காமல் 26 பந்தில் 33 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் ஷோபி எக்லெஸ்டோன் 10 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். லாரன் பெல் 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 320 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் முதலிலேயே இங்கிலாந்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏமி ஜோன்ஸ், டேமி பியூமோன்ட், ஹீதர் நைட் ஆகியோர் ரன்ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த நாட் ஸ்சிவர்-ப்ருன்ட் 64 ரன்களும், அலிஸ் கேப்சி 50 ரன்களும், டேனி வையாட்-ஹோட்ஜ் 34 ரன்களும் அடித்தனர். என்றாலும், கடைநிலை பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து 42.3 ஓவரில் 194 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. தென்ஆப்பிரிக்காவின் தொடக்க பந்து வீச்சாளர் காப் 5 விக்கெட் சாய்த்தார்.
- நாளையுடன் ‘லீக்’ ஆட்டம் முடிகிறது.
- 11 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் (50 ஓவர்) 8 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளன. இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவை வாய்ப்பை இழந்து வெளியேறின.
இந்தூரில் இன்று நடைபெறும் 26-வது போட்டியில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும். நாளையுடன் 'லீக்' ஆட்டம் முடிகிறது. நாளை 2 போட்டிகள் நடக்கிறது. காலை 11 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து (விசாகப்பட்டினம்) அணிகளும், மாலை 3 மணிக்கு தொடங்கும் 2-வது போட்டியில் இந்தியா-வங்காளதேசம் அணிகளும் (மும்பை) மோதுகின்றன.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டங்களில் இலங்கை (59 ரன்), பாகிஸ்தானை (88 ரன்) வீழ்த்தியது. அதன்பிறகு தொடர்ச்சியாக தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா (3 விக்கெட்), இங்கிலாந்து (4 ரன்), அணிகளிடம் தோற்றது. 6-வது போட்டியில் நியூசிலாந்தை 53 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
நாளைய ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய மகளிர் அணி உள்ளது.
- 3 போட்டிகளில் மழையால் ரத்து செய்யப்பட்டன.
- 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் கொழும்பில் நடைபெற்றன.
ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். அதன்படி 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் 7 போட்டிகளில் விளையாடும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
பாகிஸ்தான் அணி இன்று இலங்கையை எதிர்கொண்டது. முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. மழை குறுக்கீடு செய்ததால், ஆட்டம் 34 ஓவராக குறைக்கப்பட்டது. 4.2 ஓவரில் 18 ரன்கள் எடுத்திருக்கும்போது, மீண்டும் மழை குறுக்கீட்டது. இதனால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டு, கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் 7 லீக் போட்டிகளிலும் விளையாடிவிட்டன. இலங்கை 7 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, 3 போட்டிகளில் முடிவு இல்லை ஆகிவற்றின்மூலம் 5 புள்ளிகள் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் ஒரு போட்டிகளில் கூட வெற்றி பெறவில்லை. 3 போட்டிகளில் முடிவு இல்லை என்பதன் மூலம் 3 புள்ளிகள் பெற்றுள்ளது.
இன்றைய போட்டியுடன் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- இங்கிலாந்து வீராங்கனை நைட் 109 ரன்கள் விளாசினார்.
- இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 4 விக்கெட் வீழ்த்தினார்.
50 ஓவர் ஐசிசி மகளிர் உலக கோப்பையை இந்தியா நடத்தி வருகிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடக்கிறது.
இந்தூரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் பெற்றால்தான் அரையிறுதி வாய்ப்பு பிரகாசித்துக் கொள்ள முடியும் என்பதால் வெற்றி பெறும் முனைப்போடு இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினர்.
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை ஏமி ஜோன்ஸ் 68 பந்தில் 56 ரன்கள் விளாசினார். அடுத்து வந்த ஹீதர் நைட் அபாரமாக விளையாடினார். அவர் 91 பந்தில் 15 பவுண்டரி, 1 சிக்சருடன் 109 ரன்கள் விளாசினார். கேப்டன் ஸ்சிவர்-ப்ரன்ட் 49 பந்தில் 38 ரன்கள் அடிக்க இங்கிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 10 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
- இந்தியாவின் தொடக்க ஜோடி 24.3 ஓவரில் 155 ரன்கள் குவித்தது.
- ஸ்மிரிதி மந்தனா 80 ரன்களும், பிரதிகா ராவல் 75 ரன்களும் விளாசினர்.
மகளிர் உலக கோப்பை தொடரில் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியாவின் பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்மிரிதி மந்தனா 66 பந்தில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்தியா 24.3 ஓவரில் 155 ரன்கள் குவித்தது.
ஸ்மிரிதி மந்தனா ஆட்டமிழந்ததும், பிரதிகா ராவல் 96 பந்தில் 75 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அடுதது வந்த ஹர்லீன் தியோல் 42 பந்தில் 38 ரன்கள் அடித்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 22 ரன்னில் வெளியேறினார்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் 21 பந்தில் 33 ரன்களும், ரிச்சா கோஷ் 22 பந்தில் 32 ரன்களும் சேர்க்க இந்தியா 48.5 ஓவரில் 330 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் சுதர்லேண்டு 5 விக்கெட் சாய்த்தார். ஷோபி மொலினக்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
- ஒரே வருடத்தில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
- 58 ரன்கள் எடுத்தபோது, 5 ஆயிரம் ரன்களை கடந்தார்.
மகளிர் உலக கோப்பை தொடரில் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியாவின் பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்மிரிதி மந்தனா 66 பந்தில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்தியா 24.3 ஓவரில் 155 ரன்கள் குவித்துள்ளது.
ஸ்மிரிதி மந்தனா 58 ரன்களை கடக்கும்போது, ஒருநாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை தொட்டார். இதன்மூலம் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை தொட்ட வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த வருடத்தில் மட்டும் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதன்மூலம் ஒரு காலண்டர் வருடத்தில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
112 போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
- ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்க 115 ரன்கள் எடுத்திருந்தது.
- 9ஆவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் குவித்தது.
மகளிர் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் சிறப்பாக பந்து வீசினர். முதல் மூன்று விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தினர்.
ஆனால் 4ஆவது வீராங்கனையாக களம் இறங்கிய பெத் மூனி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 114 பந்தில் 109 ரன்கள் விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி வீராங்கனை அலனா கிங் 49 பந்தில் 51 ரன்கள் எடுத்து அட்டமிழக்காமல் இருக்க ஆஸ்திரேலியா மகளிர் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 115 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 9ஆவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் குவித்துவிட்டது.
பின்னர் 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. சித்ரா அமினை (35) தவி மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் சானா (11), நஷ்ரா சாந்து (11), ரமீன் ஷமிம் (20) இரட்டை இலக்க ரன்கள் அடிக்க 36.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா அணியில் கிம் கார்த் 3 விக்கெட்டும், மேகம் ஸ்கட் மற்றும் சுதர்லேண்டு ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் விளையாடிய 3 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 3-ல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இலங்கைக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டது.
- வருகிற 30ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது.
- இந்தியா முதல் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது.
பெண்களுக்கான 50 ஓவர் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா நடத்துகிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடக்கிறது. கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் கொழும்பு ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற இருக்கிறது. நவம்பர் 2ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.
இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது. இந்த நிலையில் ஐசிசி உலக கோப்பைக்கான Anthem-ஐ ஐசிசி வெளியிட்டுள்ளது. இப்பாடலை இந்தியாவின் முன்னணி பின்னணி பாடகியான ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார். இந்த பாடலுக்கான வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.
தொடக்க விழாவிலும் ஷ்ரேயா கோஷலின் கலைநிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்திய பெண்கள் அணி இதுவரை ஐசிசி கோப்பையை வென்றதில்லை. 2005ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 98 ரன்னில் தோல்வியடைந்தது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உறுதிப் போட்டிகளில் 9 ரன்களில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.
கயானா:
10 நாடுகள் பங்கேற்ற மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கியது.
‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. அந்த அணி நியூசிலாந்தை 34 ரன்னில் வீழ்த்தியது.
முதலில் விளையாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் சதம் அடித்து சாதனை புரிந்தார். அவர் 51 பந்தில் 103 ரன்னும், (7 பவுண்டரி, 8 சிக்கர்) ஜெமீமா 45 பந்தில் 59 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர்.
பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன்னே எடுக்க முடிந்தது. தொடக்க வீராங்கனை பேட்ஸ் அதிகபட்சமாக 50 பந்தில் 67 ரன் (8 பவுண்டரி) எடுத்தார். பூனம்யாதவ், ஹேமலதா, தலா 3 விக்கெட்டும், ராதாயாதவ் 2 விக்கெட்டும், அருந்ததி ரெட்டி 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை எதிர்கொள்கிறது. பலவீனமான பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 2-வது வெற்றி பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
நேற்று நடந்த மற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 52 ரன்னில் பாகிஸ்தானையும், வெஸ்ட் இண் டீஸ் 60 ரன் வித்தியாசத்தில் வங்காள தேசத்தையும் வீழ்த்தின.
இன்று நடைபெறும் 4-வது ‘லீக்’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள இங்கிலாந்து- இலங்கை அணிகள் மோதுகின்றன. #HarmanpreetKaur #WomenWorldT20 #T20 #India
16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘டி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது. ஜப்பான் அணியில் ஒகவா, ஷிமிசூ தலா ஒரு கோல் அடித்தனர். ஆஸ்திரேலியா-பெல்ஜியம் இடையிலான மற்றொரு ஆட்டம் கோல் இன்றி ‘டிரா’ ஆனது.
இன்றைய ஆட்டங்களில் ஜெர்மனி-அர்ஜென்டினா, அமெரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 2-வது லீக்கில் அயர்லாந்தை நாளை சந்திக்கிறது. #WomenWorldCupHockey #Japan #NewZealand

இதற்கு முன் இத்தாலி 1991 மற்றும் 1999 உலகக் கோப்பையில் விளையாடியிருக்கிறது. அதன்பின் தற்போதுதான் அடுத்த வருடம் பிரான்சில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பையில் 20 வருடம் கழித்து பங்கேற்க இருக்கிறது. இத்தாலியுடன் ஸ்பெயின் அணியும் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.






