என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்"

    • ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்தியாவுக்கு பின்னால் இருக்கும் இந்த போட்டி மிகவும் கடினமாக இருக்கப் போகிறது.
    • இது மிகவும் உற்சாகமான வாய்ப்பாகும். அதே சமயத்தில், இந்தியாவுக்கு அதிக அளவில் நெருக்கடியை உண்டாக்கும்.

    மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் போட்டியில் தென்ஆப்பிரிக்கா இந்தியாவை தோற்கடித்திருந்தது.

    லீக் போட்டியில் இங்கிலாந்து தென்ஆப்பிரிக்காவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. ஆனால் அரையிறுதியில் தென்ஆப்பிரிக்கா அபாரமாக இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது.

    இந்தியா லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்திருந்தாலும், அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது.

    நாளை இந்தியாவை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், நாக்அவுட் போட்டி லீக்கில் இருந்து முற்றிலும் மாறுபட்டது, எனவே, ப்ரஷாக தொடங்குவோம் என தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் லாரா வால்வார்த் தெரிவித்துள்ளார்.

    இறுதிப் போட்டி குறித்து தென்ஆப்பிரிக்கா கேப்டன் லாரா வால்வொர்த் கூறியதாவது:-

    நாக்அவுட் கிரிக்கெட் லீக் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரராக ஜெமிமா ரோட்ரிக்ஸ் விளையாடியதை நாம் பார்த்ததுபோன்று, சிலர் நாக்அவுட் போட்டியில் விளையாடும் திறமையை பெற்றுள்ளனர் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

    லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை பார்த்து நாங்கள் செல்வோம் என்று நினைக்கவில்லை. நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடியுள்ளோம் என்பது எங்களுக்கு தெரியும். இந்தியா மிகவும் வலுவான அணி. அவர்கள் சிறந்த ஆட்டத்தை விளையாடியுள்ளனர். இதனால் அவர்கள் மிகப்பெரிய அளவிலான நம்பிக்கையில் இருப்பார்கள்.

    நாங்கள் இறுதிப் போட்டியில் தோற்ற வரலாறு, லீக்கில் இந்தியாவை வீழ்த்தியது போன்ற வரலாற்றை கொண்டு வர முடியாது. நாங்கள் அவை அனைத்தும் அப்புறப்படுத்திவிட்டு முற்றிலும் ப்ரெஷயாக தொடங்க முயற்சிக்கிறோம்.

    ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்தியாவுக்கு பின்னால் இருக்கும் இந்த போட்டி மிகவும் கடினமாக இருக்கப் போகிறது. ஏறக்குறைய டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. இது மிகவும் உற்சாகமான வாய்ப்பாகும். அதே சமயத்தில், இந்தியாவுக்கு அதிக அளவில் நெருக்கடியை உண்டாக்கும்.

    இவ்வாறு லாரா வால்வார்த் தெரிவித்துள்ளார்.

    • 2 நாள் ஓய்வுக்குப் பிறகு இறுதிப்போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஓய். படேல் ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது.
    • இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் முதல் முறையாக கோப்பையை வெல்ல உள்ளனர்.

    நவிமும்பை:

    13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தொடங்கியது.

    இந்தியா, இலங்கையில் நடைபெற்ற இந்த போட்டியில் 8 நாடுகள் பங்கேற்றன. கடந்த 26-ந்தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகியவை முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின. இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின.

    29-ந்தேதி கவுகாத்தியில் நடந்த முதல் அரை இறுதியில் தென்ஆப்பிரிக்கா 125 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும் நேற்று முன்தினம் நவிமும்பையில் நடைபெற்ற 2-வது அரை இறுதியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவையும் தோற்கடித்தன.

    2 நாள் ஓய்வுக்குப் பிறகு இறுதிப்போட்டி நவிமும் பையில் உள்ள டி.ஓய். படேல் ஸ்டேடியத்தில் நாளை (2-ந்தேதி) மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்க அணிகள் சாம்பியன் பட்டத்துக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இறுதிப்போட்டிக்கு முன் இரு அணி கேப்டன்களும் போட்டோஷூட் நடத்துவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் நாளை நடக்கவுள்ள இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் அணி கேப்டனும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி கேப்டனும் கோப்பையுடன் போட்டோஷூட் எடுத்துக் கொண்டனர்.

    இது தொடர்பான புகைப்படங்களை ஐசிசி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று நாடே ஆவலுடன் எதிா்பார்க்கிறது.

    3-வது தடவையாக இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.இதற்கு முன்பு 2005-ல் ஆஸ்திரேலியாவிடமும் (98 ரன்), 2017-ல் இங்கிலாந்திடமும் (9 ரன்) தோற்று கோப்பையை இழந்தது.

    இந்திய அணி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு பதிலடி கொடுத்து சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 339 ரன் இலக்கை எடுத்து சாதனை படைத்ததால் இறுதிப் போட்டியில் இந்தியா நம்பிக்கையுடன் விளையாடும்.

    பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா (1 சதம், 2 அரை சதத்துடன் 389 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (1 சதம், 1 அரை சதத்துடன் 268 ரன்), கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர் (2 அரை சதத்துடன் 240 ரன்), ரிச்சா கோஷ் (1 அரை சதத்துடன் 201 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் தீப்தி சர்மா (17 விக்கெட்), ஸ்ரீசரணி (13 விக்கெட்) , கிராந்தி கவூட் (9 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    லாரா வால்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் முதல் தடவையாக உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. அந்த அணி முதல் முறையாக இறுதி ஆட்டத்தில் ஆடுகிறது.

    இந்தியாவை ஏற்கனவே வீழ்த்தி இருப்பதால் நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா சமபலத்துடன் திகழ்கிறது.

    இரு அணிகளும் 34 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 20-ல், தென் ஆப்பிரிக்கா 13-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

    • 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர்.
    • ஜெமிமா ரோட்ரிக்ஸ் குறித்த பழைய எக்ஸ் தள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நவிமும்பையில் நடந்த பரபரப்பான அரைஇறுதியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை விரட்டியடித்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன் இலக்கை ஜெமிமா ரோட்ரிக்ஸ் (127 ரன், 14 பவுண்டரி), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (89 ரன்) ஆகியோரது அசாத்தியமான பேட்டிங்கால் இந்திய அணி 48.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இதன் மூலம் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை விரட்டிப்பிடித்த அணி என்ற புதிய சாதனையை இந்தியா படைத்தது.

    கடைசி வரை களத்தில் நின்று வெற்றிக்கு அழைத்து சென்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளப்பூரிப்பில் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட நேரம் தேம்பி தேம்பி அழுதார்.

    இதையடுத்து அவர் பேசுகையில், முதலில் நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எல்லாம் கனவு போல் இருக்கிறது. இந்தியாவை வெற்றி பெறச் செய்வதே எனது எண்ணமாக இருந்தது. கடந்த ஆண்டு உலக கோப்பையில் இருந்து நீக்கப்பட்டேன். அந்த வலி இன்னும் மனதில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அழுதிருக்கிறேன். நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன். கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுப்பார். தன்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி என்று கூறி நெகிழ்ந்தார்.

    127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் குறித்த பழைய எக்ஸ் தள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

    2018ம் ஆண்டு ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் செய்த வலைப்பயிற்சிக்கு பின், 'ஜெமிமா ரோட்ரிக்ஸ் என்ற பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இன்று அவள் சில தோல்விகளைச் சந்தித்தார். ஆனால் ஜெமிமா இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவெடுப்பார்' என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் பதிவிட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.



    • இந்த இலக்கை நிர்ணித்த போது பாதி வேலை முடிந்து விட்டது என்று தான் நினைத்தேன்.
    • தோல்வி அடைந்து பேசும் இடத்தில் நான் இருப்பது கொஞ்சம் வினோதமாக தான் இருக்கின்றது.

    மும்பை:

    ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.

    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிசா ஹெலி,

    இந்த போட்டி மிகவும் அற்புதமாக இருந்தது. ஆனால் இந்த தோல்விக்கு நாங்கள் தான் காரணம் எங்களுடைய அணியின் பேட்டிங்கை நாங்கள் சிறப்பாக முடிக்கவில்லை. இதே போல் எங்களுடைய பந்துவீச்சும் சிறப்பாக இல்லை. சில கேட்ச்களையும் நாங்கள் தவறவிட்டோம்.

    இறுதியில் தோல்வியை தழுவியது மிகவும் ஏமாற்றமாக இருக்கின்றது. பல வாய்ப்புகளை உருவாக்கினோம். ஆனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை. அதற்கு நானும் ஒரு காரணம் என்று தான் சொல்வேன்.

    இந்த இலக்கை நிர்ணித்த போது பாதி வேலை முடிந்து விட்டது என்று தான் நினைத்தேன். கூடுதலாக சில ரன்ளை அடித்திருக்க வேண்டும். இந்தியா வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டார்கள். நெருக்கடியான சமயத்தில் அபாரமாக பேட்டிங் செய்து வெற்றியை தாண்டி விட்டார்கள்.

    தோல்வி அடைந்து பேசும் இடத்தில் நான் இருப்பது கொஞ்சம் வினோதமாக தான் இருக்கின்றது. இனி அடுத்த உலக கோப்பை நோக்கி திட்டங்களை தீட்ட வேண்டியது தான். அடுத்த உலகக்கோப்பை நிச்சயம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் கண்டிப்பாக அடுத்த உலகக் கோப்பையில் நான் விளையாட மாட்டேன்.

    மகளிர் கிரிக்கெட் விளையாடுவதில் எங்களுக்கு பெருமை . ஆனால் இந்த போட்டியில் தோல்விக்கு நாங்கள்தான் காரணம். கண்டிப்பாக எங்கள் தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம்.

    என்று அலிசா ஹெலி தெரிவித்துள்ளார்.

    • ஜெமிமா மற்றும் ஹாமன்பிரீத் கவுர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என சச்சின் கூறினார்.
    • ஆஸ்திரேலியா போன்ற வலிமையான எதிராளியை எதிர்த்து இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது என கோலி கூறினார்.

    மும்பை:

    இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இந்திய தரப்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது 3-வது சதத்தை அடித்தார். அட்டகாசமாக ஆடிய அவர் அணியை வெற்றிகரமாக கரைசேர்க்க வித்திட்டார்.

    இந்த நிலையில், இந்திய மகளிர் அணிக்கு சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக சச்சின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அற்புதமான வெற்றி. முன்னணியில் இருந்து வழிநடத்தியதற்காக ஜெமிமா மற்றும் ஹாமன்பிரீத் கவுர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா , நீங்கள் பந்தைக் கொண்டு ஆட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தீர்கள். மூவர்ணக் கொடியை உயரே பறக்க விடுங்கள். என தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக விராட் கோலி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஆஸ்திரேலியா போன்ற வலிமையான எதிராளியை எதிர்த்து இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. ஒரு பெரிய ஆட்டத்தில் ஜெமிமாவின் சிறப்பான ஆட்டம், உண்மையான மன உறுதி, நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் வெளிப்பாடு. சபாஷ் இந்தியா. என தெரிவித்துள்ளார். 

    • நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன்.
    • கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுப்பார்.

    மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்களுடனும் (134 பந்து, 14 பவுண்டரி), அமன்ஜோத் கவுர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். எக்ஸ்டிரா வகையில் 15 வைடு உள்பட 26 ரன்கள் கிடைத்தது.

    மகளிர் ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஒரு அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு (சேசிங்) இது தான். இதற்கு முன்பு இதே உலகக் கோப்பையில் இந்தியாவுக்குஎதிரான லீக்கில் 331 ரன் இலக்கை ஆஸ்திரேலியா துரத்திப்பிடித்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை முறியடித்ததுடன், அந்த தோல்விக்கும் இந்தியா சுடச்சுட பதிலடி கொடுத்து இருக்கிறது.

    மேலும் மகளிர் உலக கோப்பையில் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் வீறுநடையும் முடிவுக்கு வந்தது.

    இதனிடையே, 127 ரன்கள் திரட்டி ஆட்டநாயகியாக ஜொலித்த இந்திய மிடில் வரிசை பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் வெற்றி பெற்றதும் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர் விட்டார்.

    இதையடுத்து அவர் பேசுகையில், முதலில் நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எல்லாம் கனவு போல் இருக்கிறது. இந்தியாவை வெற்றி பெறச் செய்வதே எனது எண்ணமாக இருந்தது. கடந்த ஆண்டு உலக கோப்பையில் இருந்து நீக்கப்பட்டேன். அந்த வலி இன்னும் மனதில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அழுதிருக்கிறேன். நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன். கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுப்பார். தன்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி என்று கூறி நெகிழ்ந்தார்.

    • மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு 3-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
    • மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

    மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 127 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஜெமிமா ஆட்டநாயகி விருதை வென்றார்.

    மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு 3-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனை தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

    இந்த நிலையில், ஐ.சி.சி. உலக கோப்பை வரலாற்றில், நாக் அவுட் போட்டிகளில் முதல் முறையாக 300+ ரன்களை சேஸிங் செய்த அணி என்ற புதிய சாதனையை இந்திய மகளிர் அணி படைத்துள்ளது.

    இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 298 ரன்களை நியூசிலாந்து ஆண்கள் சேஸிங் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • தென்ஆப்பிரிக்க பேட்டர்கள் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள்.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 47 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கிய இந்த போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

    லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.

    இந்த நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், இலங்கை, இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக), ஒரு தோல்வி (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக), ஒரு முடிவில்லையுடன் (பாகிஸ்தானுக்கு எதிராக மழையால் பாதியில் ரத்து) 11 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது.

    அந்த அணியில் பேட்டிங்கில் ஹீதர் நைட், அமே ஜோன்ஸ், டாமி பீமோன்டும், பந்து வீச்சில் சோபி எக்லெஸ்டோன், லின்சே சுமித், சார்லி டீனும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆல்-ரவுண்டராக கேப்டன் நாட் சிவெர் அசத்துகிறார். கடந்த ஆட்டத்தில் தோள்பட்டையில் காயம் அடைந்த இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் பாதியில் வெளியேறினார். இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான். நடப்பு தொடரில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் அவர் ஆடமுடியாமல் போனால் இங்கிலாந்து அணிக்கு இழப்பாகும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாத்தில் இமாலய வெற்றியை ருசித்த இங்கிலாந்து அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும்.

    தென்ஆப்பிரிக்க அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் பணிந்தது. அதன் பிறகு நியூசிலாந்து, இந்தியா, வங்காளதேசம், இலங்கை, பாகிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து பதம் பார்த்தது. கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. 10 புள்ளிகள் எடுத்த தென்ஆப்பிரிக்க அணி புள்ளி பட்டியலில் 3-வது இடம் பெற்றது.

    தென்ஆப்பிரிக்க பேட்டர்கள் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். சுழலில் தகிடுதத்தம் போடும் அந்த அணி இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 69 ரன்னிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 97 ரன்னிலும் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இதனால் முக்கியமான இந்த ஆட்டத்துக்கு முன்னதாக சுழலுக்கு எதிரான பலவீனத்தை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் கேப்டன் லாரா வோல்வார்ட் (301 ரன்) கணிசமான பங்களிப்பை அளித்துள்ளார். ஆனால் தஸ்மின் பிரிட்ஸ், மரிஜானே காப், சுனே லூஸ் ஆகியோர் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். பந்து வீச்சில் மிலாபா (11 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார். அவருக்கு ஆல்-ரவுண்டர்கள் மரிஜானே காப், நடினே டி கிளெர்க் பக்கபலமாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்க முனைப்பு காட்டும் தென்ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்தின் சுழல் ஜாலத்தை தாக்குப்பிடிப்பதை பொறுத்தே ஏற்றம் காண முடியும்.

    தென்ஆப்பிரிக்க கேப்டன் வோல்வார்ட் கூறுகையில், 'எங்களது வீராங்கனைகள் அனைவரும் திறமைமிக்கவர்கள். நாளைய (இன்று) ஆட்டத்தில் பதற்றமின்றி நிதானமாக செயல்பட்டால் நாங்கள் வெற்றி பெற நல்ல வாய்ப்பு கிடைக்கும். எங்களை விட இங்கிலாந்துக்கு அணியினர் நிறைய நெருக்கடியில் இருப்பார்கள்' என்றார்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 47 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 36-ல் இங்கிலாந்தும், 10-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    போட்டி நடக்கும் கவுகாத்தியில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மழை பெய்வதற்கு 25 சதவீதம் வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளான மறுநாளில் நடைபெறும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இங்கிலாந்து: அமே ஜோன்ஸ், டாமி பீமோன்ட், ஹீதர் நைட், டேனி வியாட், நாட் சிவெர் (கேப்டன்), சோபியா டங்லி, அலிஸ் கேப்சி, சார்லி டீன், சோபி எக்லெஸ்டோன் அல்லது சாரா கிளென், லின்சே சுமித், லாரன் பெல்.

    தென்ஆப்பிரிக்கா: லாரா வோல்வார்ட் (கேப்டன்), தஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ், அன்னெரி டெர்க்சன், மரிஜானே காப், சினாலோ ஜப்தா, குளோயி டிரையான், நடினே டி கிளெர்க், மசபதா கிளாஸ், அயாபோங்கா காகா, மிலாபா.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • 4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி 9-வது தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் ஆர்வத்தில் உள்ளது.
    • தென்ஆப்பிரிக்கா இதுவரை இறுதிப் போட்டிக்கு நுழைந்தது கிடையாது.

    கவுகாத்தி:

    13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த 30-ந் தேதி இந்தியா, இலங்கையில் தொடங்கியது.

    8 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் கடந்த 26-ந்தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.

    லீக் முடிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன. இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு முதல் அரைஇறுதி ஆட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை (புதன் கிழமை) நடக்கிறது. இதில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுப்போவது யார்? என்ற ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி 9-வது தடவையாக இறுதிப் போட் டிக்கு தகுதிபெறும் ஆர்வத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா இதுவரை இறுதிப் போட்டிக்கு நுழைந்தது கிடையாது. 3 தடவை அரை இறுதியில் தோற்றது. முதல் முறையாக இறுதிப்போட்டி வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் கடந்த 3-ந்தேதி கவுகாத்தியில் மோதிய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 69 ரன்னில் தென் ஆப்பிரிக்காவை சுருட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும். தென்ஆப்பிரிக்கா பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

    • 6 போட்டிகளில் 308 ரன்கள் விளாசியுள்ளார்.
    • நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்திருந்தார்.

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. பீல்டிங் செய்தபோது இந்திய வீராங்கனை பிரதிகா ராவலுக்கு காலில் பயங்கர காயம் ஏற்பட்டது. இதனால் வியாழக்கிழமை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

    இந்த நிலையில் மகளிர் உலக கோப்பையின் எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷஃபாலி வர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஒருநாள் போட்டியில் விளையாடி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது.

    பிரதிகா ராவல் ஸ்மிரிதி மந்தனாவுடன் இணைந்து தொடக்க பேட்டராக சிறப்பாக விளையாடி வந்தார். நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசினார். 6 போட்டிகளில் 308 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 51.33 ஆகும்.

    பிரதிகா ராவல் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷும் காயத்தில் அவதிப்பட்டு வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச அணிக்கெதிராக அவர் விளையாடவில்லை.

    • நாளையுடன் ‘லீக்’ ஆட்டம் முடிகிறது.
    • 11 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் (50 ஓவர்) 8 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளன. இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவை வாய்ப்பை இழந்து வெளியேறின.

    இந்தூரில் இன்று நடைபெறும் 26-வது போட்டியில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும். நாளையுடன் 'லீக்' ஆட்டம் முடிகிறது. நாளை 2 போட்டிகள் நடக்கிறது. காலை 11 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து (விசாகப்பட்டினம்) அணிகளும், மாலை 3 மணிக்கு தொடங்கும் 2-வது போட்டியில் இந்தியா-வங்காளதேசம் அணிகளும் (மும்பை) மோதுகின்றன.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டங்களில் இலங்கை (59 ரன்), பாகிஸ்தானை (88 ரன்) வீழ்த்தியது. அதன்பிறகு தொடர்ச்சியாக தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா (3 விக்கெட்), இங்கிலாந்து (4 ரன்), அணிகளிடம் தோற்றது. 6-வது போட்டியில் நியூசிலாந்தை 53 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

    நாளைய ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய மகளிர் அணி உள்ளது.

    • நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் மந்தனா 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • பிரதிகா ராவல் 134 பந்துகளில் 122 ரங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா - பிரதிகா ராவல் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினார்.

    95 பந்தில் 109 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழந்தார். பிரதிகா ராவல் 134 பந்துகளில் 122 ரங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி அரைசதம் அடித்தார்.

    இதற்கிடையே மழையால் ஆட்டம் பாதிக்கப்பட போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இறுதியில் 49 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது.

    ×